Home செய்திகள் உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.,இந்த பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலை புரணமைப்பு செய்து, சுமார் 400 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழாவுடன் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இந்த ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.,பழமை வாய்ந்த இந்த ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்த கால் நடும் விழா இன்று 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகள் செய்து கால் கோல் ஊன்றி முகூர்த்தக்கால் நடப்பட்டு கும்பாபிஷேகம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கான பணிகளை துவக்கி வைத்தனர்.,

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com