Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபும் பாசனத்திற்கு திறப்பு….

பார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபும் பாசனத்திற்கு திறப்பு….

by ஆசிரியர்

தமிழக முதல்வர் உத்தரவின்படி, வைகை அணையிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று (03.12.2020) பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன் (இராமநாதபுரம்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தண்ணீரை மலர் தூவி வரவேற்று, பார்த்திபனூர் மதகணையிலிருந்து இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் , இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அதனடிப்படையில் வைகை அணையில் இருந்து 30.11.2020 முதல் 05.12.2020 வரையில் 1093.03 மில்லியன் கனஅடி தண்ணீர் படிப்படியாக திறந்து விடப்படுகிறது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மதகணையை வந்தடைந்துள்ளது. தற்போது பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து சுமார் ஒரு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் பெரிய கண்மாய் வரை உள்ள முறையான பாசன கம்பெனிகளுக்கு பாசன வசதி பெற்று பயனடையும் பொருட்டு இடதுபுறம் மற்றும் வலதுபுறம் கால்வாய் மூலமாக தண்ணீர் வழங்கப்படுறது. இதன் மூலம் 67,837 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் பயன்பெறும் என தெரிவித்தார். பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் மதன சுதாகரன்,  பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நிறைமதி, உதவி பொறியாளர் லதா, பரமக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன் உள்பட அரசு அலுவலர்கள்,  விவசாய பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com