Home செய்திகள்கீழக்கரை செய்திகள் புரெவி புயல் எச்சரிக்கை… இராமேஸ்வரம் தீவு பகுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆய்வு..

புரெவி புயல் எச்சரிக்கை… இராமேஸ்வரம் தீவு பகுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புரெவி புயல் எச்சரிக்கையையடுத்து ராமேஸ்வரம் தீவு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக வருவாய், பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (02/12/2020)ஆய்வு செய்தார்.

பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த சில மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கரையேற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் மண்டபம் பாம்பன் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள பேரிடர் மையங்கள் பேரிடர் மீட்பு பணிக்கு தயாராக வைத்திருந்த உபகரணங்களை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர்கள் M.மணிகண்டன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, மாவட்ட கணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com