சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில் ஏராளமான மசாஜ் செண்டர்கள் உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி அருகே தெற்குகுண்டல் பகுதியில் பொது மக்கள் அதிகம் வசிக்கும் பிஸ்மி நகரில் பிளாக் மூன் என்ற பெயரில் ஒரு மசாஜ் செண்டர் இயங்கிவருகிறது ஊரடங்கு காலத்தில் அணைத்து ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் செயல் படகூடாது என அரசு அறிவிப்பு இருக்கும்நிலையில் அதை பொருட்படுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக இந்த மசாஜ் பாலியல் தொழில் நடைபெறுவதாக அந்த ஊர்பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது தெரிய வந்தது. இதையடுத்து ஒரு பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கிருந்து இரண்டு ஆண்கள் தப்பி காரில் ஏறி தப்பி சென்றனர். மேலும் அங்கிருந்த பெண் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்துசென்றனர்.
செய்தியாளர் வி, காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.