Home செய்திகள் பாராட்டுக்குரிய முகம் தெரியாத நல் உள்ளங்கள்..

பாராட்டுக்குரிய முகம் தெரியாத நல் உள்ளங்கள்..

by ஆசிரியர்

இன்றைய காலகட்டத்தில் தான் செய்யும் சிறிய காரியத்திற்கும் பலனை எதிர்பார்த்தும், செய்தியாக்கி கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், கீழக்கரையில் தங்கள் அடையாளத்தை பிறருக்கு காண்பிக்காமலே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களையும் உணவுகளையும் தேவையைடையோருக்கு அனுப்பி மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தென் தமிழகத்தில் பல மாவட்டங்களில் புயல் தன் கோர முகத்தை காட்டி விட்டுச் சென்றது. இதனால் புயலால் பாதிப்புக்குள்ளானோர் பலர் சொல்ல முடியா துன்பத்தில் உள்ளனர். சமூக அக்கறை கொண்டு ஆள்பவர்களும், பல கட்சிகளும், சமூக ஆர்வலர் பலரும் தம்மால் முடிந்த நிதிகளையும் சேவைகளையும் செய்து வருகின்றனர்.

பட்டுக் கோட்டை, அதிராமப் பட்டிணம் அருகே உள்ள மவ்லிபட்டினம் என்ற கிராமத்துக்கு அருகே கடந்த 4 நாட்களாக மின்சாரமின்றி, குடிநீர், உணவின்றி, இருளில் தவித்து வருகின்றனர். இதை அறிந்து, பெயர் வெளியிட விரும்பாத அரசு பதவி வகிக்கும் மற்றும் ஸ்தாபனங்கள் வைத்திருக்கும் நல்லுள்ளம் கொண்ட 10 நபர்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 1000 நபர்களுக்கு காய்கறிகளாலான முட்டையுடன் கூடிய பிரியாணி, பிஸ்கட் பாக்கெட் மற்றும் 1லிட்டர் தண்ணீர் பாட்டில் இவற்றை அந்த ஊருக்கே எடுத்துச் சென்று வழங்கிவிட்டு வந்தனர்.

சமூக அக்கறை கொண்டு செய்யும் நற்காரியங்களுக்கு இறை ஆசி என்றும் உண்டு என்பதுடன் அவர்களை மனதார பாராட்டுவோம்.

தகவல்: மக்கள் டீம் ..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!