11
இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பொலையன் நகரில் உள்ள பனந்தோப்பில் மர்மத் தீ பற்றியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளைச் சேர்ந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இராமநாதபுரம் வட்டாட்சியர் முத்துலட்சுமி, வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் கேணிக்கரை காவல் சார்பு ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
You must be logged in to post a comment.