Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 3091 ஹெக்டேர், சிறுதானியங்கள் – 3208 ஹெக்டேர், பயறு வகைகள் 313 ஹெக்டேர், பருத்தி -1099, கரும்பு – 1140 ஹெக்டேர், எண்ணெய் வித்து – 1236 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் வேளாண்மை இணை இயக்குநரால் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை வரவேற்று பேசுகையில் ஆலங்குளம், கடையநல்லூர், மேலநீலிதநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டாரங்களைச் சார்ந்த 17,059 விவசாயிகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான ராபி பருவ வறட்சி நிவாரணமாக ரூ.13,81,65,466/- அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தார். வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் வட்டாரத்தைச் சார்ந்த இரண்டு விவசாயிகளுக்கு தலா ரூ.4000/- மதிப்பில் மின்கல தெளிப்பான் மற்றும் தார்பாலின் மாவட்ட ஆட்சியரால் இலவசமாக வழங்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு சின்ன வெங்காயம் பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.10000/- மதிப்பிலான விதைகளும், இரண்டு பயனாளிகளுக்கு மாமர பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.4920/- மதிப்பிலான மாங்கன்றுகளும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.150/- மதிப்பிலான பழ மரத் தொகுப்பு மானிய விலையில் தென்காசி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 185 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பெ.ஊமைத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச.கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!