Home செய்திகள் அடிப்படை வசதி செய்து தராத உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 13வது வார்டு பகுதிமக்கள் உசிலம்பட்டி நகாட்சி அலுவலகத்தை முற்றுகை…

அடிப்படை வசதி செய்து தராத உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 13வது வார்டு பகுதிமக்கள் உசிலம்பட்டி நகாட்சி அலுவலகத்தை முற்றுகை…

by ஆசிரியர்

அடிப்படை வசதி செய்து தராத உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 13வது வார்டு பகுதிமக்கள் உசிலம்பட்டி நகாட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 13வது வார்டை சார்ந்தது அருணாச்சலம்பட்டி. இப்பகுதியில் சாக்கடை வசதி சாலை வசதி குடிநீர் வசதி உள்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இந்த வார்டு பொதுமக்களுக்கு வார்டு கவுன்சிலராக இருக்கும் நாகஜோதி எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. நகராட்சி நிர்வாகம் மறறும் அப்பகுதி கவுன்சிலர் நாகஜோதியைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர.

மேலும் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதி சாக்கடை வசதி ரோடு வசதி எந்த ஒரு அடிப்பiடை வசதியும் இல்லாததால் இனிமேல் நகராட்சிக்கு வீட்டு வசதி குடிநீர் ரசீது உள்பட எந்த ஒரு ஒரு ரசீதும் அளிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் முற்றுகைப் போராட்டத்தல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!