12
திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ள பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பயன்பாட்டுக்கு 16 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களை கண்காணிக்கும் பொருட்டு அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலையில் நேற்று நடந்தது இந்த கருவி மூலம் அனைத்து வாகனங்களும் எங்கு உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
You must be logged in to post a comment.