உசிலம்பட்டி நகரப் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் தேனிபாரளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவு தெரிவித்து தொண்டர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரசெயலாளர் குனசேகரபாண்டியன் மற்றும் சேடபட்டி ஒன்றிய செயலாளர் துரைதனராஜ் தலைமையிலான கட்சியினர், தொண்டர்கள் இனைந்து பொதுமக்களிடம் தங்கதமிழ்செல்வனுக்கு பரிசுபெட்டகம் சின்னத்தில் ஓட்டளியுங்கள் என கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் எழுமலை பேருர் கழகசெயலாளர் பக்ருதின், தண்டியப்பன், மதுரை மாவட்ட மருத்துவசெயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணியினர் தனபாண்டி, ராஜேஸ்கண்ணன், எம்கேஜி பிரபு, எஸ்பி பிரபு, பணராஜா, மோகன், தீபா சண்முகபாண்டியன், மதன் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரபிரபாகரன், வழக்கறிஞர் காக்கிராஜா, பாலாமற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர்.
You must be logged in to post a comment.