வரும் 18.04.2019-ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்ட தினத்தன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டித்து இரவு 08.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சிரமமின்றி சென்று வாக்கு செலுத்த மதுரை மாநகர காவல்துறை சார்பாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் தேர்தல் நடைபெறும் தினமான 18.04.2019-ம் தேதியே தேரோட்டமும் நடைபெற இருப்பதால் நான்கு மாசி வீதிகள், அருள்மிகு கள்ளழகர் எதிர்சேவை வழித்தடங்களிலும் மற்றும் அதன் அருகாமையில் இருக்க கூடிய வீதிகளில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்கள் கூட்டத்தில் சிரமமின்றி வாக்களிக்கும் பொருட்டு 33 வாக்குச் சாவடி மையங்களில் (PSL) தனித்தனியாக மரத்தால் ஆன தடுப்பாண்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் மின்னனு வாக்கு பதிவு இயத்திரங்களை (EVM) சித்திரை திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி எடுத்து செல்லவும், வாக்கு பதிவு நிறைவுற்ற பின்னர் வாக்கு பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு எளிதாக எடுத்து செல்லவும் மற்றும் அவசர காலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறிப்பிட்ட வாக்குப் பதிவு மையத்திற்கு விரைந்து செல்லவும் பிரத்யேக வழித்தடங்கள் கண்டறியப்படுள்ளது. சித்திரை திருவிழா பாதுகாப்பிற்கும் தேர்தல் பணிக்கும் தனித்தனியாக காவல் உயர் அதிகாரிகள் தலைமையில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு சித்திரை திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கும் மற்றும் வாக்காள பெருமக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே வாக்காளர் மற்றும் சித்திரை திருவிழாவை காண வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி மதுரை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்று வர மதுரை மாநகர காவல்துறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., தலைமையில் அனைத்து முன்னேற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன.
செய்திகள் வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.