இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர்ச்ச்சியாக துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் வரும் 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தின் தொடர்ச்சியாக நடக்க இருக்கிறது. துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த ரத்ததான முகாம் துபாய் தேரா பகுதியில் அஸ்கான் ஹவுஸ் அருகில் நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய
தேவிபட்டினம் நிஜாம் : 050 3525 305 முதுவை ஹிதாயத் : 050 51 96 433 தேவிபட்டினம் சமீர் அஹமத் : 055 6577 168
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
You must be logged in to post a comment.