திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையின் படி தமிழகம் முழுதும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (23/12/2020) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு 20 வது வார்டு தெரு பகுதியில் அதிமுகவை நிராகரிப்பும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சேது கல்லூரி உரிமையாளரும், திமுக பிரமுகருமான முகம்மது ஜலில் தலைமையிலும் கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது மற்றும் இளைஞர் அணி பொருப்பாளர் வழகறிஞர் ஹமீது சுல்த்தான் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழக்கரை நகர் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளை (24/12/2020) முதல் தொடர்ந்து நகரில் மொத்தம் 10 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக நகர் திமுகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.