இராமநாதபுரம், ஆக.20- நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு, தமிழக ஆளுநரை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் அரண்மனை முன் உண்ணாவிரத அறப் போராட்டம் இன்று காலை நடந்தது. தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ, இளைஞரணி மாநில துணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆசிக் ரஹ்மான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, தௌபீக் ரஹ்மான், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், ராமநாதபுரம் நகர் வடக்கு, தெற்கு செயலாளர்கள் கார்மேகம் ( நகராட்சி தலைவர்), ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபாகரன், பிரவீன் தங்கம் (துணை தலைவர்) , மண்டபம் ஊராட்சி ஒன்றிய (வேதாளை) கவுன்சிலர் தௌபீக் அலி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் ஜீவானந்தம், மண்டபம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி நிறைவு உரைக்கப் பின் உண்ணாவிரத அறப்போராட்டம் நிறைவடைந்தது.
இப்போராட்டத்தில் திருமணம் செய்து கொண்ட திமுக இளைஞரணியை சேர்ந்த சக்கரக்கோட்டை மணிகண்டன் தனது மனைவியுடன் மாலையும், கழுத்துமாக வந்து கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். புதுமண தம்பதியை அறப்போரில் பங்கேற்றோர் வாழ்த்தினர். உண்ணாவிரத அறப்போராட்ட ஏற்பாடுகளை திமுக இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா உள்ளிட்ட இளைஞரணியினர் செய்தனர்.
You must be logged in to post a comment.