ஆத்தூர் தாலுகா பகுதிகளில் பொதுமக்களை அச்சுருத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான சித்தையன்கோட்டை, ஆத்தூர், செம்பட்டி பகுதிகளில் தெருநாய்கள்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நிலை உள்ளது. இவைகள் அவ்வப்போது மக்கள் வளர்த்துவரும் பசுவின் கன்று, ஆடு,கோழி ஆகிய பிரானிகளை கடித்து குதறி தின்று வரும் நிலை தொடர்கிறது. அதுசமயம் பிரானிகளை பாதுகாக்கும் வகையில் விறட்டும் மனிதர்களையும் தெருநாய்கள் விட்டுவைப்பதில்லை ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தற்போது தெருநாய்கள் பிராணிகளை மட்டும் வேடைடையாடி உண்பதை தவிர்த்து மனிதர்கள் மீது கவணம் செலுத்துவதற்கு முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதே அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
You must be logged in to post a comment.