Home செய்திகள் ஆத்தூர் தாலுகா சேடபட்டியில் சொத்து தகராறுகாரணமாக ஒருவர் அடித்து கொலை; தந்தை மகன் இருவர் கைது! 

ஆத்தூர் தாலுகா சேடபட்டியில் சொத்து தகராறுகாரணமாக ஒருவர் அடித்து கொலை; தந்தை மகன் இருவர் கைது! 

by Askar

ஆத்தூர் தாலுகா சேடபட்டியில் சொத்து தகராறுகாரணமாக ஒருவர் அடித்து கொலை; தந்தை மகன் இருவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி சேடபட்டியில் வசித்து வருபவர்கள் ஆணந்தன் இவரது தம்பி செல்வராஜ் தங்கை சாந்தி இவர்களின் தகப்பனார் சுயசம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை மூத்த மகன் ஆணந்தனுக்கும் மகள் சாந்திக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இவர்களுக்குள் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்த நிலையில் இன்று 29/05/20 வெள்ளிக்கிழமை காலை சுமார் 07 மணியளவில் ஆணந்தன் (வயது 57) என்பவர் காலை கடன்கழித்துவிட்டு வரும்போது இவரது தம்பி செல்வராஜ் (வயது 48) மற்றும் செல்வராஜ் மகன் மனிகண்டன் (வயது 22) ஆகிய இருவரும் ஆணந்தனை வழிமறித்து இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த மண்வெட்டி பிடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆணந்தன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலர்கள் தோட்டத்தில் பதுங்கி இருந்த தந்தை மகன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!