23
திண்டுக்கல் அரிமா சங்கத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் பல பேருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.
144 தடை உத்தரவின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் தொட்டனூத்து கிராமம் அண்ணை காலனியில் திண்டுக்கல் அரிமா சங்கத்தின் தலைவர் அ.பரமவேஸ்வரன், மூத்த வழக்கறிஞர் குப்புசாமி, ஆகியோர் 50 கற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இந்த பொருட்களின் செலவீனங்களை அரிமா சங்கத்தின் நிறுவனர் திரு.ஜெய பிரதேஷ் ராஜு பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் இந்திய உணவு பாதுகாப்பு கழக ஆலோசனை கமிட்டி உறுப்பினரும் சமூக ஆர்வலருமான A M முபாரக் அலி அவர்களும் கலந்து கொண்டார்.
You must be logged in to post a comment.