மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் வயது 45 மதுரையில் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று (23/12/2020) ஒத்தக்கடையில் உள்ள தனது நண்பரான ஆனந்தன் என்பவரை பார்ப்பதற்காக கூறி சென்றிருக்கிறார் (ஆனந்தன் என்பவரும் பூக்கட்டும் தொழில் செய்து வருபவர்).
இந்நிலையில் முருகன் மது அருந்தி இருப்பதால் நண்பரிடம் அனுமிதி கேட்டு அவருடைய அறையில் தங்ஙகியுள்ளார். இந்நிலையில் இன்று (24/12/2020) காலை வழக்கம்போல் ஆனந்தன், முருகனை சந்திப்பதற்காக கடைக்கு சென்றபோது அறை முழுவதும்தெரிந்த நிலையிலும் முருகன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்ட ஆனந்தன் ஒத்தக்கடை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தின் அடிப்படையில ஒத்தக்கடை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த மரணம் குறித்து விசாரணை செய்து வைக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.