13
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் 5,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல ஆண்டு தமிழ் காலத்துக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. இங்கு அனைத்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதால் சமுதாய கூடத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சமுதாய கூடத்தின் கற்கள் தானாக விழுவதால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி சமுதாய கூடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகின்றது..
You must be logged in to post a comment.