Home செய்திகள் கீழக்கரை கல்லூரியில் உணவுப் பொருள் பகுப்பாய்வு முறை கருத்தரங்கு..

கீழக்கரை கல்லூரியில் உணவுப் பொருள் பகுப்பாய்வு முறை கருத்தரங்கு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.26- இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில் உணவுப் பொருள் பகுப்பாய்வு முறைகள், உணவு தொழில்நுட்பத்தில் இன்றைய வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் முஹமது இப்ராஹிம் வரவேற்றார். உணவு பாதுகாப்பு முறைகள், பாரம்பரிய முறையில் உணவை பதப்படுத்துதல், உணவை பதப்படுத்தும் கருவிகளின் வகைகள், உணவு பதப்படுத்தும் துறையில் உள்ள எண்ணற்ற வேலை வாய்ப்புகள் குறித்து சூடான் நாட்டின் டால் உணவு ஆராய்ச்சி மைய மேலாளர் சதீஷ்குமார் விளக்கம் அளித்தார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியை ஷோபனா நன்றி கூறினார். உணவு பதப்படுத்தும் முறைகள் தொடர்பாக  பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவியர்  தங்கள் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். கல்லூரியின் வேதியல், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர்  ஏற்பாடுகளை செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!