16
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி மாநில கூடைப் பந்தாட்டக் கழக மாநில தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்து சிறப்புறையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலைராஜா, திருப்பரங்குன்றம் முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.