திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேரூராட்சி 18 வது வார்டில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த நலிவடைந்தோருக்கு அரிசி 5 கிலோ, கோதுமை மாவு, சீனி, பொரி கடலை, சேமியா, சாம்பார் தூள், சிக்கன் பொடி, குழம்பு பொடி,
பிஸ்கட் பாக்கெட் மற்றும் காய்கறி தொகுப்பை
திமுக தீவிர உறுப்பினர் சை. சரவணன் வழங்கினார். மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கூ.பூபதி உடன் இருந்தார்.
செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே,எஸ், அழகிரி கேட்டுக்கொண்டதின் பேரில் கொரானா ஊரடங்கு நேரத்தில் ஏழை,எளிய மக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்டத்தின் சார்பாக அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. இதில் மூத்த வழக்கறிஞர். நோட்டரி அட்வகேட்,R.குப்புசாமியின் சார்பாக 500 கிலோ அரிசி மற்றும் முகம்மது சித்திக் சார்பாக ரூ,10000 ம் மதிப்புள்ள மளிகை, காய்கறிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் முக கவசங்களுடன் கலந்துகொண்டனர் .இந்த நிகழ்வில் தொடர்ந்து பழநி , திண்டுக்கல் பகுதி மக்களுக்கு பல உதவிகள் செய்துவரும் மூத்தவழக்கறிஞர் மற்றும் மாநில PCC செயற்குழு உறுப்பினர் . நோட்டரி அட்வகேட் .R.குப்புசாமியின் சேவைகளை பாராட்டி மேற்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சிவசக்திவேல் சால்வை அணுவித்து பாராட்டினார்கள் . விழாவில் கொரானா ஊரடங்கு நேரத்தில் நிதியுதவி , பொருளுதவி கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடித்து பாடம் கற்றுக் கொடுக்கும் பாச்சல் கிராமம்…
சமூக இடைவெளியை சரியாக கடைப்பிடித்து பாடம் கற்றுக் கொடுக்கும் பாச்சல் கிராமம்…
செங்கம் அடுத்த பார்சல் ஊராட்சியில் சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் ஊராட்சியில் சுபகர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு பாச்சல் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மேல் பெண்ணாத்தூர் ஆயுர்வேத மருத்துவர் புனிதவதி , 300க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு சமூக இடைவெளியுன் சுபகர குடிநீர் வழங்கி நோய்த்தடுப்பு முறைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வின்போது ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், கிராம செவிலியர்கள் விஜயா, அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் மூலம் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அனைவரிடமும்
சமூக இடைவெளி விலகலோடு பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிகழ்வு அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி ஒன்றியம் 6 வது வார்டு உறுப்பினர் ஜெயப்பிரீத்தி மார்டின் பிரபு தனது வார்டில் வசிக்கும் கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், மிகவும் நலிந்தோர் குடும்பங்களுக்கு அரிசி பை வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“முழுமையான ஊரடங்கு நேரத்தில் அதிகாலை 4.00மணி முதல் 8.00மணி வரை பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்:-
“முழுமையான ஊரடங்கு நேரத்தில் அதிகாலை 4.00மணி முதல் 8.00மணி வரை பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்:
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5மாவட்டங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பாணையால் பால் விநியோகம் குறித்து பொதுமக்கள், பால் முகவர்கள், பால் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான குழப்பம் நிலவியது.
எனவே அது குறித்து விவாதிக்க இன்று பிற்பகல் 12.15மணியளவில் எங்களது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் தனியார் பால் நிறுவனங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து (Zoom Meeting) காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினோம்.
அப்போது மேற்கண்ட 5மாவட்டங்களில் நாளை முதல் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் வணிக நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்பதால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அதிகாலை 4.00மணி முதல் காலை 8.00மணி வரை பால் முகவர்கள் தங்களின் பால் விநியோக மையங்களில் மட்டும் ஆவின் மற்றும் தனியார் பாலினை விற்பனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில்லறை வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதால் முழுமையான ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்க வைத்து, முகக்கவசம் அணிந்து வந்து பாலினை வாங்கிக் கொள்ளுமாறும், பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பால் கிடைக்காது என அச்சப்படாமல் தங்களுக்கு தேவையான பாலினை மட்டும் வாங்கிக் கொள்ளுமாறும், தேவைக்கு அதிகமாக வாங்கி செயற்கையான பால் தட்டுப்பாடு உருவாக காரணமாக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பால் முகவர்கள் தங்களின் விநியோக மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை முற்றிலுமாக தவிர்த்து முறையான சமூக விலகலையும், அரசின் உத்தரவையும், தகுந்த பாதுகாப்பு விசயங்களையும் சரியான முறையில் பின்பற்றி ஆவின் மற்றும் தனியார் பாலினை விநியோகம் செய்ய வேண்டும் என பால் முகவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது என்பது பால் முகவர்களால் மட்டுமே சாத்தியம் என்பதால் பால் முகவர்களுக்கு காவல்துறையும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட உத்தரவிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டையில் முக கவசம் செய்து தருகிறோம் என்று ஏமாற்றி காலணி தயாரித்த கம்பெனிக்கு சீல்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஒரு ஷூ கம்பனி அரசிடம் ஊரடங்கு நேரத்தில் முக கவசம் செய்து வருகின்றோம் அதற்கு 10 பெண் தொழிலாளிகளை அனுமதிக்கும் படி ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெற்று சில நாட்களாக முக கவசம் தயாரிக்க 10 பெண் தொழிலாளிகளையும் 40 பேரை ஷூ (காலணி) தயாரிக்க பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷிணிக்கு ரகசிய தகவல் வந்தது உடனடியாக அந்தகம்பனியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார் – தகவல் உண்மை என்பதை அறிந்த வாலாஜாதாசில்தார் கம்பனிக்கு சீல் வைத்தார்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள்
இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் கொரானா வைரஸ் பரவல் கூடுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.அவர் தெரிவித்ததாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,233 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 14 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 1,125 பேருக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 94 நபர்களுக்கான பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 பேர் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கொரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் 11 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை தடுத்திடும் வகையில் சாலைகளில் பேரிகார்டு தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க கண்டிப்பாக முகக்கவசம் அணியவும் அறிறுவுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் பெ.இந்திரா, வட்டாட்சியர் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.இராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் ஆட்சியரிடம் 500 முகக்கவசங்கள் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் ஒப்படைப்பு
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.20 ஆயிரம் மதிப்பில் 500 முக கவசங்களை பட்டயத் தலைவர் வி.என்.நாகேஸ்வரன், தனது சொந்த செலவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார். தலைவர். எஸ்.ஏ.அபுதாஹிர், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 500 முககவசங்களை போலீசாருக்கு வழங்க உள்ளதாகவும் கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆன்லைன் தேர்வு சாத்தியமான அல்லது ஆஃப்லைன் தேர்வுகள் என்றால் எப்போ நடத்துவது யு.ஜி.சி.க்கு நிபுணர்கள் குழு பரிந்துரை.
ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தலைமையிலான இரண்டு குழுக்கள் பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளன.தேர்வு நடத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள பல்கலைக்கழகங்களால் ஆன்லைன் தேர்வுகளை நடத்தலாம் அல்லது பேனா மற்றும் காகித தேர்வு ஊரடக்கு பின் நடத்தலாம் என வெள்ளிக்கிழமை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த வாரம் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிடும்.பரீட்சைகளை நடத்துதல், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி அமர்வை எவ்வாறு திட்டமிடுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்வுகளை நடத்த முடியாவிட்டால், முந்தைய செமஸ்டர்களில் அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் மாணவர்களை ஊக்குவிப்பதே பரிந்துரைகளில் ஒன்றாகும். பல்கலைக்கழகங்கள் புதிய மதிப்பீட்டை நடத்த விரும்பினால், அவர்களின் கடந்தகால செயல்திறனின் அடிப்படையில் மாணவர்களை ஊக்குவிக்க விரும்பவில்லை எனில், தாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.
டெல்லி பல்கலைக்கழகம் ஆன்லைன் தேர்வுகளுடன் முன்னேற முடிவு செய்கிறதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக மூன்றாம் ஆண்டு மாணவர்களின் மனதில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த முன்மொழிவு கற்பித்தல் சமூகத்திலிருந்து சமமான எதிர்ப்பை ஈர்த்துள்ளது. மேலும் ஆன்லைன் தேர்வு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு பொதுவாக நீதி வழங்காது என்று கருதுகிறது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
களையிழந்து காணும் கீழக்கரை.. ரமலான் மாதம் போல் இல்லாமல் வெறிச்சோடிய சாலைகள்…
ரமலான் நோன்பு வந்தவுடன் உலக மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன், சந்தோஷமாகவும் இருப்பார்கள். ஐவேளைத் தொழுகை, தராவீஹ் தொழுகை, என்று பல்வேறு தொழுகை வணக்க வழிபாடுகளிலும் அனைத்து இஸ்லாமிய மக்களும் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள்.
நோன்பு திறப்பதற்காக மாலை 3.00 மணி முதல் கீழக்கரையில் ரமலான் சிறப்பு உணவான வடை, சமோசா, கட்லெட், ரோல், பழச்சாறு, சர்பத், கடல்பாசி, ஃபலூடா போன்ற எண்ணற்ற வகையான உணவுப் பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் ரமலானுக்காக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும்.
ஆனால் இந்த வருடம் வியாபாரிகள் தங்கள் வருமானத்தை இழந்து, சாமானியர்கள் சந்தோசத்தை இழந்து, குழந்தைகள் குதூகலம் மறைந்து வாடிய முகத்துடன் காணப்படுகிறார்கள். இந்த கொடிய கொரோனோ வைரஸை ஒழிக்க நம்மை படைத்த இறைவனிடம் இந்த புனித மாதத்தில் இரு கரம் ஏந்துவோம்.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4 லட்சம் செலவில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதிகளான சத்திரபட்டி, முறம்பு, கோபாலபுரம், மேலராஜகுலராமன் உள்ளிட்ட கிராமங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் 265 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ரூ.4லட்சம் செலவில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் கந்தகிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிணம் இருந்த கிணற்றில் தண்ணீர் குடித்த மக்கள்! உண்மை தெரிந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம்!
பிணம் இருந்த கிணற்றில் தண்ணீர் குடித்த மக்கள்! உண்மை தெரிந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம்!
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் (23). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு மாத காலமாக மறுவாழ்வு மையத்தில் இருந்தார்.
பின்னர் திரும்பிய இவர், மது கிடைக்காமல் புலம்பியபடி 23ஆம் தேதி வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறியுள்ளார்.
தொடர்ந்து, கமுதி அருகே உள்ள அய்யன் கோவில் பட்டி குடிநீர் கிணற்றில் 23ம் தேதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்தது, அந்த ஊர் மக்களுக்கு தெரியாத நிலையில் இன்று காலை பிணமாக மிதந்ததை கண்டு கமுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே, நேற்று இரவு வரை அய்யன் கோவில் பட்டி,கோவில்பட்டி ஆகிய 2 கிராம மக்கள் அந்த குறிப்பிட்ட கிணற்றில் குடிநீரை அள்ளி குடித்து வந்துள்ளனர்.
தற்போது, அந்த கிணற்றில் பிணம் இருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிணம் இருந்த குடிநீரை குடித்ததால், தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சுகாதார துறை அதிகாரிகள் தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டுப்புற கலைஞர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் நாட்டுப்புற கலைஞர்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அதிமுக சார்பில் கலைஞர்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள்,அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் 500 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூய்மை காவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் போடும் பணி
தமிழகமெங்கும் கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் முழுவதும் குணமடைந்து நோயின்றி வீடு திரும்பி வருகின்றனர். ஒருபுறம் தூய்மை காவலர்களின் பணி தினந்தோறும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது துப்புரவு காவலர்கள் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை தடுப்பூசிகள் போடும் பணி அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூய்மை பணிகளைப் பாராட்டி அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பாதுகாவலர்கள் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன இந்நிலையில் உத்திரங்குடி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேஷாக் அவர்கள் வழிநடத்தலில் உத்திரங்குடியில் ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளித்து வீடு வீடாக பிளிச்சிங் பவுடர் தூவியும் வீதிகளை தூய்மையாக பாதுகாப்பாகவும் இருக்கும்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களுக்கு பரிசோதனையும் 6️ மாதத்திற்கு ஒருமுறை போடும் தடுப்பூசியும் தூய்மை காவலர்களுக்கு போடப்பட்டது. இதேபோன்று ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை தடுப்பூசிகள் போடும் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராம மக்களும் தற்போதைய ஆட்சியானஆஇஆதிமுகவையும் சிறப்பான முறையிலும் ஆட்சிபுரிந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை வெகுவாக பாராட்டியும் வாழ்த்தியும் வணங்கியும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரமலான் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக உணவு தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் மக்களுக்கு இவ்வருட ரமலான் கொஞ்சம் நெருக்கடி கலந்த காலமாய் அமைந்து விட்டது. இதற்கு கொரோனா என்னும் வைரஸ் பரவலும் அதற்கான ஊரடங்குமாகும்.
ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர ஆடை விற்பனையகம் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
புத்தாடை உடுத்தாத தலைபிறையை நாங்கள் கண்டதில்லை, ஆனால் இவ்வருட ரமலான் புத்தாடை அணியாத தலைபிறையாகி விட்டது என்னும் கவலை கொண்ட மனிதர்களும் நம்மிடம் உண்டு.
ரமலான் காலத்து நோன்பு கடமையும் அதன் மூலம் நாம் செய்ய போகும் இன்னபிற வணக்கங்களும் நம்மை படைத்த இறைவனின் திருப்திக்கானதாகும், அதற்கான உயர்வான நற்கூலியை இறைவனே நமக்கு அருள்புரிய இருக்கிறான்.
இறைவன் எதிர்பார்ப்பது நாம் அணியும் புத்தாடைகளல்ல, நமது உள்ளத்தில் இருக்கும் புத்துணர்ச்சி கலந்த இறைச்சிந்தனை மட்டுமே, ரமலான் காலத்தில் நோன்பு வைப்பதற்கான உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் மக்களுக்கு மத்தியில் அல்லாஹ் நமக்கு உணவையாவது தடையின்றி தந்தானே என்ற திருப்தி புத்தாடையில்லையே என ஏங்கும் மக்களிடம் இருக்க வேண்டும்.
இருப்பதை கொண்டு திருப்தி கொள்வதும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் தான், ஒருமுறை அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் படுத்திருந்தார்கள்; அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் வீட்டினுள் அனுமதி பெற்று நுழைந்தார்கள்.
உமர்(ரலி) கண்டவுடன், நபியவர்கள் படுக்கையை விட்டு எழுந்தார்கள்; அவர்கள் படுத்திருந்த முரட்டு விரிப்பின் அடையாளம் அண்ணலாரின் உடலில் பதிந்திருக்கக் கண்டார்கள் உமர்(ரலி) அவர்கள்; தாம் வந்த பணியை மறந்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! இதைவிட மென்மையான விரிப்பு ஒன்றைக் கொண்டு வரட்டுமா? எனக்கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எனக்கும் இந்த உலகிற்கும் இடையில் இருக்கும் தொடர்பு, வழிப்போக்கன் ஒருவனைப் போன்றதாகும்; அவன் தன் பயணத்தின் போது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவான்; சிறிது ஓய்வெடுத்துவிட்டு அந்த மரத்தின் நிழலை விட்டு வெளியேறி மீண்டும் பயணத்தை தொடர்வான்; அது போன்றதே எனது வாழ்க்கையும் என்றார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள். (நூல்:முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், இப்னுஹிப்பான்)
நபிகளாரின் தகைமைக்கு வளமான வாழ்க்கை கிட்டும் தகுதியிருந்தது; ஆனால், அதை விரும்பாத அண்ணலார்(ஸல்) அவர்கள், தமக்கு எளிமையான வாழ்க்கையே போதும் என்று அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றார்கள்; இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டார்கள்.
தம்மிடம் இருந்தவற்றை ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, எஞ்சியதை சாப்பிட்டார்கள்; மற்றவர்களுக்கு கொடுத்து மீதமில்லாமல் போனால், நபிகளாருக்கும் அவர்களது வீட்டாருக்கும் அன்றைய பொழுது பட்டினியோடு தான் கழியும்.
பொறுமைக்கு பொருத்தமான முன்மாதிரியாக வாழ்ந்த அண்ணலாரின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஒருவர், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டபோது, நபியவர்களும் அவர்களது குடும்பத்தாரும் தொடர்ந்து மூன்று நாட்கள் கோதுமை ரொட்டியை சாப்பிட்டதில்லை என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்படியானால், அந்த மூன்று நாட்களும் எப்படி கழிந்தது? என்று வந்தவர் கேட்டார், கோதுமை ரொட்டிக்கு மாவு கிடைக்காத அந்த மூன்று நாட்களிலும் “பேரீச்சம் பழமும் தண்ணீரும் தான் எங்களின் உணவாக இருந்தது என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்.(புகாரி-6094, முஸ்லிம்-2972)
மக்காவின் சீமாட்டி அன்னை கதிஜா பிராட்டியாரிடம் இருந்த அளவில்லா சொத்துக்களை எல்லாம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்திய அண்ணலாரின் வாழ்க்கையும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்க்கையும் ஏழ்மையாகவும்,எளிமையாகவுமே இருந்ததை பல்வேறு வரலாற்றுகளில் காணலாம்.
இருப்பதை கொண்டு திருப்தி கொள்வதுதான் அண்ணலாரின் வாழ்வியல் நமக்கு கற்றுத்தந்த பாடமாகும்!
தற்போதைய கொரோனா ஊரடங்கினால் தினக்கூலிகளாய் வாழ்ந்து வந்த எத்தனையோ ஏழை எளிய மக்கள் வருமானமின்றி தங்களின் அன்றாட சஹருக்கு கூட உணவின்றி பரிதவிக்கும் சூழலை கவனத்தில் கொண்டு தம்மிடமிருக்கும் உணவில் சிலதையாவது அவர்களுக்கு வழங்கி கிடைத்ததைக் கொண்டு அவர்களும், இருப்பதைக் கொண்டு நாமும் திருப்தி கொள்ள வேண்டும்.
இந்த புனிதமான ரமலான் காலங்களில் ஏழைகளோடு நமது உணவுகளைப் பகிர்ந்து கொண்டு, அண்ணலாரின் அன்புக்கும் இறையோனின் அருளுக்கும் உரிய நன்மக்களாய் வாழ்வோம்!
–கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி 2-வதுமண்டலத்தில் சுகாதார பணியாற்றும் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் 100 பேருக்கு தர்பூசணி மற்றும் முலாம் பழங்களை வழங்கினர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நலிவடைந்த குடும்பங்களுக்கு அன்பு அறக்கட்டளை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சள்வாய்க்கால் கிராமத்தில் அன்பு அறக்கட்டளை சார்பில் அத்தியாவசியபொருட்கள் வழங்கப்பட்டது.கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக நலிவடைந்த குடும்பத்தினர் பலர் அத்தியாவசிப் பொருட்களுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை அருகில் கொரோனா தொற்று பாதுகாப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பல குடும்பங்களுக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பாக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மஞ்சள் வாய்க்கால் கிராமத்தில் சுமார் 100 குடும்பத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் அன்பு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு எதிரொலி! சென்னையில் அனைத்து சாலைகளுக்கும் சீல்!தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனை!
கொரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு எதிரொலி! சென்னையில் அனைத்து சாலைகளுக்கும் சீல்!தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனை!
கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வருகிற 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வேறு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 160க்கும் மேற்ப்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அனுமதி அளித்த நபர்கள், அவர்களுக்கு அரசு சார்பில் அளித்த அடையாள அட்டை மற்றும் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.அண்ணாசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சைதாப்பேட்டை சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை சுமார் 15 கிலோமீட்டர் நீளம் உள்ள அண்ணாசாலையில் எந்தவித போக்குவரத்துமின்றி தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை அண்ணாசாலையை இணைக்கும் இணைப்பு சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வரை உள்ள சிக்னல் வரையும் மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 26,27,28,29ம் தேதிகளில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் முதன்மை சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலைகளில் இணைப்பு சாலைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன.
அதே போல நேற்று பிற்பகல் 1 மணிக்கும் மேல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
கம்புகள், பேரிகார்டுகள் அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சிமென்ட் கற்களை கொண்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தடுப்புகளை மீறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் ஏன் வெளியே வந்தோம் என்று சங்கடப்படும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகியுள்ளது. அதே நேரத்தில் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு தண்டனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பல சாலைகளில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், வாகனத்தில் வந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனால், நேற்று ஒரு மணிக்கு மேல் வாகன போக்குவரத்து என்பது அடியோடு முடங்கியது. இதனால், அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. நாளை முதல் சென்னையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இன்று காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கூட்டம் அதிகமாக காணப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, காய்கறி, மளிகை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அழகர்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு முயற்சியாக மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி
தமிழகத்தில் பரவிவரும் கொடிய கொரோனா நோய்தொற்று நடவடிக்கையாக மதுரை உலகப் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் பகுதி முழுவதும் அ.வல்லாளப்பட்டி செயல் அலுவலர் தேவியின் தீவிர முயற்சியால் பேரிடர் மேலாண்மை வாகனத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் உதவியோடு கிருமி நாசினி தெளிக்கும் பணி செயல்படுத்தப் பட்டது. .மேலும் இந்நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா தங்கம் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, பேரிடர் மீட்பு துறை மேற்பார்வையாளர் அங்குராஜா, அழகர் கோவில் நிர்வாக அலுவலர்கள் அனிதா, கருப்பையா, சதீஷ், மற்றும் கோவில் நிர்வாகிகள் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பேரூராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அத்தியாவசிய பொருள் வாங்க குவிந்த மக்கள். பொருள்கள் கிடைக்காமல் விற்றுத் தீர்ந்ததால் அவதி.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாளுக்கு நாள் ஊரடங்கு உத்தரவு என தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் .இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் அதிக அளவில் அனைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக குவிந்தனர். அதிகாலையிலேயே காய்கறி உள்ளிட்ட பொருள்கள் பல பகுதிகளில் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் காய்கறிகளுடன் பல்வேறு பகுதிகளில் அலைந்து கொண்டு வாங்குவதாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மதுரை கல்லூரியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் முழுவதுமாக காய்கறி விற்று தீர்ந்துவிட்டது. மேலும் அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய மீன் ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் விலை கடுமையாக விலை உயர்ந்து வருகிறது. பல பகுதிகளில் பொருள்களை கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் புலம்பிக்கொண்டே பார்க்க முடிகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.