மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாளுக்கு நாள் ஊரடங்கு உத்தரவு என தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் .இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் அதிக அளவில் அனைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக குவிந்தனர். அதிகாலையிலேயே காய்கறி உள்ளிட்ட பொருள்கள் பல பகுதிகளில் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பொதுமக்கள் காய்கறிகளுடன் பல்வேறு பகுதிகளில் அலைந்து கொண்டு வாங்குவதாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மதுரை கல்லூரியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் முழுவதுமாக காய்கறி விற்று தீர்ந்துவிட்டது. மேலும் அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய மீன் ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் விலை கடுமையாக விலை உயர்ந்து வருகிறது. பல பகுதிகளில் பொருள்களை கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் புலம்பிக்கொண்டே பார்க்க முடிகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.