கீழை நியூஸ் செய்தி எதிரொலியால் மண்டபம் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் 453 குடும்பங்களுக்கு திமுக., ஏற்பாட்டில் வாழ்வாதார நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள் 453 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை, இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மார்ச் 25 முதல் அமலில் உள்ள தேசிய ஊரடங்கு உத்தரவினால் , முகாமிற்கு வெளியே வசிக்கும் மக்களைப் போல் தங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதித்ததாக கூறினார். வெளியே உள்ளோருக்கு வழங்கப்படும் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் வழங்கும் நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என அகதிகள் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக கீழை நியூஸ் இணைய தளத்தில் ஏப்.30 ல் படத்துடன் செய்தி வெளியானது.
இதனையடுத்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கக்கோரி திமுக., தலைமைக்கு மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மூலம் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க , மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம் ஏற்பாட்டில் 453 அகதிகள் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு இன்று வழங்கப்பட்டது.
திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சாமுத்துராமலிங்கம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி ஆகியோர்
தனித்துணை ஆட்சியர் (அகதிகள் மறுவாழ்வு) சி.சிவகுமாரி, துணை வட்டாட்சியர் ஷேக் ஜலாலுதீன் முன்னிலையில் வழங்கினர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் ஜீவானந்தம், நகர் செயலர் டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத்ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ஜெ.தௌபீக் அலி, மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆர். ராஜகோபால், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அயூப் கான்,மண்டபம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பா.ரவிசந்திரன், ஒன்றிய பிரதிநிதி கே.குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் நகர் தலைவர் கதியத் துல்லா, மருத்துவ சேவை அணி பாக்கர், நாடாளுமன்ற தனி உதவியாளர்கள் அப்துல் ஜப்பார், அன்சாரி திமுக மூத்த உறுப்பினர்
அழகன்குளம்செய்யது, செல்வமுனீஸ்வரன் (அமீரக திமுக), ரயில் டிக்கெட் மூத்த பரிசோதகர் (ஓய்வு) காளிதாஸ், கலீல் ரகுமான், மண்டபம் நகர் இளைஞரணி கீத்தானந்த், வார்டு செயலர் ரவி, மண்டபம் முகாம் அண்ணா குடியிருப்பு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.