வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு தன்பாத்திலிருந்த ஆலப்புழாவுக்கு (வண்டி எண் : 13351)நேற்று முன்தினம் இரவு வந்தது. காட்பாடி இருப்புபாதை காவல்துறையினர் பயணிகளின் பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது எஸ் – 6 கோச்சில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தபோது ஒரு கிலோ எடை கொண்ட 12 கஞ்சா பண்டல்களை கைப்பற்றினர்.அதை கடத்தி வந்த ஓடிஷா சேர்ந்த சந்திரகன்னார் (26) சுனில்துமானியன் (27) மோனோஜ் பீய் (15) ஆகிய 3 பேரை கைது செய்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Category:
செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்போலியான பெயரில் ரிட் மனு தாக்கல்: போலீஸ் விசாரணை
by mohan
written by mohan
சென்னை உயர் நீதிமன்றம்மதுரை பெஞ்சில் போலியான பெயரில் ,ரிட் மனு தாக்கல் செய்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் பூர்ண ஜெயா ஆனந்த் .இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 10ஆம் தேதி உயர்நீதிமன்றகிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது விசாரணைக்கு வரும்போது, போலியானது என்று தெரியவந்தது. இவ்வாறு போலியான பெயரில் ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின்படி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு/ஊராட்சி/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலை/தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்/பதவி உயர்வு/ பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 24.01.2022 முதல் 23.02.2022 வரை மதுரை, ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.24.01.2022 அன்று நடைபெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 22 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பயணிகள் வருகை குறைவால் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு,திருப்பதி ஊர்களுக்கு செல்லும் 5 விமானம் ரத்து..
by mohan
written by mohan
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 11 உள்நாட்டு விமான சேவைகளும்., துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.தற்போது கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் உள்நாட்டு விமான சேவையில் குறைந்த அளவு பயணிகள் வருகையாலும்.மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அறிவுறுத்தலின் பேரிலும். விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 5 விமான சேவைகளில் குறைந்த அளவிலான பயணிகளே முன்பதிவு செய்திருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதனால் மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேவூரில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் முன்னாள் அதிமுக ஆற்காடு எம்எல்ஏ மற்றும் அனைத்துலக எம்ஜிஆர்மன்ற இணை செயலாளர் சீனிவாசனின் இல்லத்திருமண வரவேற்பு காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதில்அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வாழ்த்தினார்.தில் வேலூர் மாநகர அதிமுக செயலாளர் அப்பு, புறநகர் செயலாளர் வேலழகன் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் ரவி எம்.எல்.ஏ. குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராமு, வண்றந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பிரம்மபுரம் பிரகாசம், சேவூர்ராஜேந்திரன் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் முன்பு இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்து இளைஞர் முன்னணி சார்பில் பிறந்தநாள் விழா ஒன்றிய தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. விழாவில் நேதாஜியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். அப்போது உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர துணைத்தலைவர் சாருகேஷ், நகரச் செயலாளர் நிஷாந்த், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்து இளைஞர் அணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சத்தியசீலன், இந்து முன்னணி மாவட்ட மேற்கு செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் நகர பொறுப்பாளர்கள் ராஜாராம், வாஞ்சிநாதன், கிஷோர், பாலா, அபிஷேக், ரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக ஒன்றிய செயலாளர் சித்தன் நன்றியுரை கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில்பணியில் இருந்த பெண் ஏட்டுமயங்கி விழுந்து பலி.போலீஸ் கமிஷனர் அஞ்சலி
by mohan
written by mohan
எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண்ஏட்டு மயங்கி விழுந்து திடீரென்று பலியானார். அவரது உடலுக்கு போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.தேனி மெயின் ரோடு எஸ் எம் எஸ் காலனி அமிர்தா நகர் 5வது தெரு வை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி கலாவதி 40 .இவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார்.இவர் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்தது. மயங்கிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி எஸ.ஐ.அழகு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஏட்டு கலாவதியின் உடல் பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உடலுக்கு போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா, துனை கமிஷனர்கள் ,உதவி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த இந்திய அணுக்கருவியலின் தந்தை, ஓமி பாபா நினைவு தினம் இன்று (ஜனவரி 24, 1966).
by mohan
written by mohan
ஓமி யெகாங்கிர் பாபா (Homi Jehangir Bhabha) அக்டோபர் 30, 1909ல் மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். ஹோமி பாபா குழந்தையாக இருந்தபோது குறைவான நேரத்திலேயே தூங்கினார். பிற குழந்தைகளைப் போல இயல்பான தூக்கம் இல்லாததால் அவரது பெற்றோர்கள் கவலை அடைந்தனர். உடல் அளவில் உள்ள ஏதோ பிரச்சனை தான் இதற்கு காரணம் என எண்ணி கவலை அடைந்த பெற்றோர்கள் பிரபல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தனர். ஆனால் அப்போதுதான் ஹோமி பாபாவின் இருப்பது குறை அல்ல என்பதையும், அவர் தனித்துவமானவர் என்பதையும் பெற்றோர்கள் புரிந்து கொண்டனர். அதிக சுறுசுறுப்புடன் இயங்கும் மூளை அருவியாய் கொட்டும் சிந்தனைகள் போன்றவற்றால் தான் குறைவான அளவிற்கு தூங்குவதாக எடுத்துரைத்தனர். தனது மகனிடம் குழந்தைப் பருவத்திலேயே அதீத அறிவியல் சிந்தனைகள் எடுப்பதை உணர்ந்த ஜஹாங்கீர் பாபா வீட்டில் ஹோமி பாபாவின் தனியாக ஒரு நூலகத்தை அமைத்து அதில் அறிவியல் புத்தகங்களை வாங்கி கொடுத்தார். தந்தை தனது மகன் ஒரு சிறந்த பொறியாளராக உருவாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் மகனோ சிறந்த இயற்பியல் அறிஞர் ஆக வேண்டும் என்று எண்ணினார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார். 1930ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய பின்னர் தனது கனவுகளை நோக்கி பயணித்தால் இயற்பியலில் ஆராய்ச்சி மாணவராக தனது மேற்படிப்பை தொடர ஹோமி பாபா தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இங்கிலாந்தில் உலக அளவில் தலைசிறந்து விளங்கிய அறிவியலாளர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் ஒருவர்தான் புரோட்டான் துகள்கள் இருப்பதை கண்டறிந்தது இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ரூதர்போர்டு. அவர் மட்டுமல்லாது டிராக், நீல்ஸ்போர், ஹைட்லர் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள் உடன் நண்பரானார். ஹோமி பாபா உங்கள் சிந்தனைகள் மேலும் செழித்தோங்கியது. அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.
1933ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது. தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய ஹோமிபாபா 1935ஆம் ஆண்டு எலக்ட்ரான் பாசிட்ரான் சிதறல் குறித்த தனது கணக்கீடுகளை வெளியிட்டார். அவரது இந்த ஆராய்ச்சியை பெருமைப்படுத்தும் விதமாக பிற்காலத்தில் இந்த துறை பாபா ஸ்கேட்டெரிங் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது. தொடர்ச்சியான அறிவியல் ஆய்வுக்கு பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்த வருவதற்காக 1939 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
இந்திய அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு நாட்டின் முதல் பிரதமர் என்கிற பெருமையுடன் இந்தியாவை பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டிய பண்டித ஜவகர்லால் நேருவிடம் இருந்தது. அந்த வகையில் சுதந்திர இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த ஆலோசனைகள் வழங்கிய அறிவுஜீவிகளில் பாபாவும் ஒருவர். பின்னிரவு நேரங்களில் கூட மணிக்கணக்கில் பாபாவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பது, பாபாவுடன் இருந்த நெருக்கமான நட்பை நேருவின் மகள் இந்திரா காந்தியே பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்திருக்கிறார். இந்திய அறிவியல் பயிற்சி மையத்தில் தலைசிறந்த விஞ்ஞானிகள் உருவாக அடித்தளம் போட்ட பாபா இயற்பியல் அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் தனது அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பயணித்து யுரேனிய ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்தவர். பாபாவின் தீவிர முயற்சியால் தான் இந்தியாவில் முதன்முதலாக அணுசக்தி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் என்கிற பெயரில் 1945ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் முதலில் சிறிய வாடகை கட்டிடத்தில்தான் இயங்கியது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அணுசக்தித் துறையில் இந்தியா எழுச்சி பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அணு மின்சார உற்பத்தி, அணுகுண்டு ஆகியவை இந்தியாவின் வல்லமையை உலகிற்கு பறைசாற்றும் என்று பாபா பக்குவமாக எடுத்து வைத்தார்.
பாபாவின் முயற்சியால் 1948ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது. அதன் தலைவராக பொறுப்பேற்றார் ஹோமிபாபா. அதிலிருந்து 1966ஆம் ஆண்டு தான் இறக்கும்வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக 18 ஆண்டுகள் நீடித்தார். இந்த காலகட்டத்தில்தான் மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு அடித்தளங்கள் போடப்பட்டன. சக்தியை பெற யுரேனியத்தை எரிபொருளாக உலக நாடுகள் பயன்படுத்தி வந்த நிலையில் அதற்கு மாற்றாக தோரியத்தை முன்னிறுத்தி உலக நாடுகள் இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார் பாபா. தொலைநோக்கு பார்வையுடன் நாட்டில் யுரேனியம் குறைவாக இருப்பதையும், தோரியம் அபரிமிதமான அளவில் இருப்பதையும் கணக்கிட்டுப் பார்த்து தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான மூன்று படிநிலைகளை உருவாக்கி கொடுத்தார். அணுமின் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் நிலையை நோக்கிச் செல்வதற்கு இது அடித்தளம்.
ஹோமி பாபா நோபல் பரிசு பெறவில்லை என்றாலும் அந்த பரிசைப் பெற 5 முறை பரிந்துரைக்கப்பட்ட என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய அரசு அவருக்கு 1954 ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருதை அளித்து கௌரவித்தது. ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், மைக்கேல் ஃபாரடே போன்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதைகள் பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின் பெல்லோஷிப் விருது பெற்றுள்ளார். அணுசக்தியை ஆக்கபூர்வமாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு சர்வதேச கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் ஹோமி ஜே பாபா. அவர் இந்த கருத்தரங்கை நடத்திய விதமும் அணுசக்தியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த ஊக்குவித்த விதமும் சர்வதேச அளவில் பெரும் மரியாதையை ஏற்படுத்தித் தந்தது. அணுசக்தி என்றாலே அது அழிவு சக்தி தான் என்கிற கருத்து நிலவி வந்த நிலையில் அணுசக்தியை அமைதி வழியிலும் பயன்படுத்தலாம் என ஜெனிவாவில் திறம்பட எடுத்துரைத்தார். ஒரு விஞ்ஞானி என்பவர் எந்தவொரு தேசத்திற்குமானவர் அல்ல. அவர்கள் உலகத்திற்கான மனித குலத்திற்காக பாடுபடுபவர். அறிவியல் உலகத்தின் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்று பாபா அடிக்கடி கூறுவதுண்டு. இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த அணுக்கரு இயற்பியலாளர் ஓமி பாபா ஜனவரி 24, 1966 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் தனது 56வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி லாக்டவுன் காரணமாக வெறிச்சோடி கிடந்த வேலூர் பழைய பஸ் நிலையம் முழுவதும் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரவை பேரூராட்சியில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சித் தலைவர் பதவியை ரத்து செய்ததை கண்டித்துபோராட்டம்.
by mohan
written by mohan
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாக அறிவிப்புமதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பரவை பேரூராட்சி இதில் 15. மற்றும் 16 வது வார்டு காட்டு நாயக்கர் சமூகத்தினர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது சுழற்சி முறையில் கடந்த தேர்தல் அறிவிப்பின் போது பேரூராட்சி தலைவர் பதவியும் பழங்குடியினர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பானையில் 15 மற்றும் 16 வது வார்டு பொது வார்டாக மாற்றப்பட்டது பேரூராட்சி தலைவர் பதவியும் பொது பட்டியலில் மாற்றப்பட்டது இதனால் இந்த விஷயம் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர் மத்திய மாநில அரசு மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக மரு பரிசீலனை செய்து பொதுப்பிரிவினருக்கு மாற்றிய பறவை பேரூராட்சி தலைவர் மற்றும் 15 மற்றும் 16 வது வார்டு உறுப்பினர் ஆகியவற்றை மீண்டும் பழங்குடியினர் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வரும் திங்கட்கிழமை தங்களது ஆதார் கார்டு ரேஷன் கார்டு தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாக கூறினார்.இதுகுறித்து காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சங்கத் தலைவர் அழகுராஜா கூறும்போது கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்தி காட்டு நாயக்கர் என சாதிச்சான்றிதழ் பெற்றோம். கடந்த நான்கு உள்ளாட்சி தேர்தல்களில் பரவை பேரூராட்சிக்குட்பட்ட 15 மற்றும் 16வது வார்டு பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் .கடந்த தேர்தல் அறிவிப்பின் போது பரவை பேரூராட்சி தலைவர் பதவியும் பழங்குடியினர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நாங்கள் அதற்காக தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்தோம். கொரானா நோய் தாக்கத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17
ஆம் தேதி அன்று வெளிவந்த அரசாணையின்படி 15 மற்றும் 16 வது வார்டு பொதுவாக மாற்றப்பட்டது. அதேபோல பேரூராட்சி தலைவர் பதவியும் பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவியை பறப்பது போலவும் எங்களின் உரிமையை பறிப்பது போல் உள்ளது. இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து, வேட்டைநாய் குடுகுடுப்பை உள்ளிட்டவற்றைக் கொண்டு நடைபயணமாக பரவை சத்தியமூர்த்தி நகரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மனு அளித்து பின்னர் மலையில் குடியேற இருப்பதாக கூறினார். மேலும் அங்கிருந்த பெண்கள் கூறும்போது எங்கள் எங்களின் உரிமையை பறிக்கும் யாராக இருந்தாலும் எங்கள் பகுதிக்கு வாக்குகள் சேகரிக்க இனி வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் அவர்களை விரட்டி அடிப்போம் என்றும் ஆவேசத்துடன் கூறினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைபொருள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி பல்வேறு நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.அதன்படி மதுரை சோழவந்தான் காவல் நிலையத்தில் தாக்கலான கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூவேந்திரன் (23), ஜெயசூர்யா (22), சுபாஷ் (21), சிவா (21) ஆகிய நான்கு நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவின்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்.தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி 4 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கி நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் மதுரை மாவட்டத்தில்இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக திமுக பேனர்கள் அகற்றகோரி அதிமுகவினர் போராட்டம்
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனநத் பிறந்தநாள் முன்னிட்டு நெடுஞ்சாலை ஓரமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் கடந்த ஒரு வாரமாக பேனர்கள் வைக்கப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது.இதை வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல உதவி ஆணையரும், காட்பாடி, விருதம்பட்டு காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே தலைமையில் காட்பாடி ஓடைப்பிள்ளையார்கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அமர்நாத், மாநகர இளைஞர் அணிசெயலாளர் ராகேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், அண்ணா தொழிற்சங்கம் ஆனந்தன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கழிஞ்சூர்ரவி, நவீன்குமார் உள்ளிட்ட கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முழு ஊரடங்கால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்
by mohan
written by mohan
தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றது.முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறும், தற்போது முழு ஊரடங்கு என்பதால் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தளவு உறவினர்களைக் கொண்டே கோவில் வாசலில் திருமணங்கள் நடைபெற்றது.இந்தத் திருமணங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது. அதிக அளவு கூட்டங்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில் வாசலில் ஒலிபெருக்கிகள் மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி; ஆணைய தலைவர் தகவல்..
by mohan
written by mohan
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதி மற்றும் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் கல்லூரி மாணவ, மாணவியருக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம், சமூக நீதி, சாதியற்ற தமிழகம், சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழர் பண்பாடு போன்ற உன்னத கொள்கைகளையும், லட்சியங்களையும் இன்றைய இளந்தலைமுறைக்கு அறிமுகப்படுத்திட இப்போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் நடத்தப்படுகின்ற போட்டிகளுக்கு முதல் பரிசாக ₹20ஆயிரமும், 2ம் பரிசாக ₹10ஆயிரமும், 3ம் பரிசாக ₹5ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மூலம் மாநில அளவிலான இறுதி போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் மாணவனுக்கு முதல் பரிசாக ₹ ஒரு லட்சமும், 2ம் பரிசாக ₹50ஆயிரமும், 3ம் பரிசாக ₹25ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆங்கில பேச்சு போட்டிகளுக்கும், பேராசிரியர் ஹாஜாகனி தமிழ் பேச்சு போட்டிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் போட்டி சம்பந்தமான அனைத்து விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இப் போட்டிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்துல் ரசாக் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அப்துல் ரசாக் ( 78 ). திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 22.01.22 பகல் 12 மணி அளவில் காலமானார். இவரது இறுதி சடங்கு நேற்று மாலை 4 மணி அளவில் அவரது சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள வடகரை கிராமத்தில் அரபாத் ஜும்ஆ பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் 1977-1980 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவருடைய பதவி காலத்தில் வடகரை ஆரம்ப சுகாதார நிலையம் ,வாவாநகரம் உயர் நிலை நீர் தேக்கத் தொட்டி, கடையநல்லூர் நகராட்சியில் விரிவாக்க கட்டிடம், கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதி, ஏராளமான படித்த இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரசாக்2001 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மை பிரிவு துணைத் அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். அவருக்கு ரஜப் முகம்மது, முஹம்மது செரிப் என்ற 2 மகன்கள் உள்ளனர். இறுதிச் சடங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பாளையங்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன் உட்பட திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 04 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதாபுரம் காலனி அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் சின்னத்துரை விசாரணை மேற் கொண்டு மேற்படி மணல் திருட்டில் ஈடுபட்ட இடைகால் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (50), பண்பொலியை சேர்ந்த கிருஷ்ணசாமி (38), குத்துக்கல் வலசையை சேர்ந்த மகேந்திரன் (29) மற்றும் இசக்கிதுரை (24) ஆகிய 04 நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 02 லாரிகள் மற்றும் 01 JCB இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலத்தில் வீட்டை உடைத்து திருடப்பட்ட 63 பவுன் சவரன் தங்க நகைகள் மீட்பு ஒருவர் கைது:
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்டியன் காலனியில், அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி பட்டப்பகலில் துணிகர கொள்ளைச்சம்பவம் ஒன்று அரங்கேறியது.இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து, திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ,மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருமங்கலம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்களின் படி ,விசாரணை மேற்கொண்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற 5 நாட்களில் விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துராஜ் என்ற சுஜித் (30). என்பவர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.இதனையடுத்து, குற்றவாளி முத்துராஜை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து பல்வேறு இடங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 63 பவுன் தங்க நகைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது. மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கெனவே, பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகள்உள்ளது என, தெரியவந்துள்ளது.மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட 63 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படையினரை, காவல் கண்காணிப்பாளர் வி பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1907).
by mohan
written by mohan
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932ல் ‘சுமிகோ’ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1947லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.
யுகாவா வலுவான அணுசக்தியின் வரம்பிலிருந்து (அணுக்கருவின் ஆரத்திலிருந்து), சுமார் 100 MeV / c2 நிறை கொண்ட ஒரு துகள் இருப்பதைக் கணித்தார். ஆரம்பத்தில் 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மியூயான் (ஆரம்பத்தில் “மு மீசன்” என்று அழைக்கப்பட்டது) இந்த துகள் என்று கருதப்பட்டது. ஏனெனில் இது 106 MeV / c2 நிறை கொண்டது. இருப்பினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், மியூயான் வலுவான அணுசக்தி தொடர்புகளில் பங்கேற்கவில்லை என்பதைக் காட்டியது. நவீன சொற்களில், இது மியூனை ஒரு லெப்டனாக ஆக்குகிறது. ஆனால் ஒரு மீசன் அல்ல. இருப்பினும், வானியற்பியலாளர்களின் சில சமூகங்கள் தொடர்ந்து மியூனை “மு-மேசன்” என்று அழைக்கின்றன.
1947 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிசில் பவல், சீசர் லேட்ஸ், கியூசெப் ஒச்சியாலினி மற்றும் பலர் இணைந்து முதல் உண்மையான மீசன்கள், சார்ஜ் செய்யப்பட்ட பியோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துகள் முடுக்கிகளின் வருகை இன்னும் வரவில்லை என்பதால், உயர் ஆற்றல் கொண்ட துணைத் துகள்கள் வளிமண்டல அண்ட கதிர்களிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன. புகைப்படத் தகடுகளின் வளர்ச்சியின் பின்னர், குழம்புகளின் நுண்ணிய பரிசோதனையானது சார்ஜ் செய்யப்பட்ட துணைஅணு துகள்களின் தடங்களை வெளிப்படுத்தியது. பியோன்கள் முதலில் அவற்றின் அசாதாரணமான “இரட்டை மீசன்” தடங்களால் அடையாளம் காணப்பட்டன. அவை அவற்றின் சிதைவால் ஒரு புட்டேடிவ் மீசனாக விடப்பட்டன. துகள் ஒரு மியூயானாக அடையாளம் காணப்பட்டது. இது பொதுவாக நவீன துகள் இயற்பியலில் மீசன் என வகைப்படுத்தப்படவில்லை.
ஜப்பானில் இருந்த அறிவார்ந்த கழகங்கள் இவருடைய திறமையை உணர்ந்தன. குறிப்பாக ஜப்பான் பல்கலைக் கழகம், இயற்பியல் கழகம், ஜப்பான் அறிவியல் குழு ஆகியவை இவரைத் தங்கள் உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. ஒசாக்கா பல்கலைக்கழகம் இவரை வருகை தந்து பாடம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக அமர்த்திக்கொண்டது. கியோட்டோ பல்கலைக்கழகம் அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக, இவருடைய பெயரிடப்பட்ட யுகாவா கூடத்தில் அமைந்துள்ள அதற்கான அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார். அமெரிக்க இயற்பியல் கழகம், அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்கள் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தன. 1940ல் ஜப்பான் கழகத்தின் இம்பீரியல் பரிசு 1943-ல் பண்பட்டை அலங்கரிக்கும் தகுதிப் பரிசு (Decoration of culturalment) ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன.
யுகாவா பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு சில நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ‘துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை’ (Introduction to Quantum Mechanics) 1946, ‘ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை’ (Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். ‘கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப் பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம், எடின்பர்க் ராயல் கழகம், இந்திய அறிவியல் கழகம், அனைத்துலக தத்துவ மற்றும் அறிவியல் கழகம், பான்டிபிசியா அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்களது அயல் நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்துக் கொண்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக ‘கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்’ (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன. யுகாவா அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும், எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். 1949ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா செப்டம்பர் 8,1981ல் தனது 74வது அகவையில் ஜப்பான், கியோட்டோ என்ற ஊரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி சுதந்திரப் போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1897).
by mohan
written by mohan
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose) ஜனவரி 23, 1897ல் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி “தத்” எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார். ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார்.
துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார். அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப்குமார் ராயிடம், யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது. அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன். இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (பிரம்மானந்தர்), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,” என்று குறிப்பிட்டுள்ளார். தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார். துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார். அக்காலத்தில், நாட்டுச் சூழ்நிலை பற்றி, அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார், இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது, லண்டனுக்கு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். தன் படிப்பைத் தொடர்ந்த போஸ், 1920ல் (லண்டனில் நடந்த) இந்திய மக்கள் சேவைப் படிப்புக்கான (“இந்தியக் குடிமைப் பணி” எனப்படும் ஐ.சி.எஸ்.) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர், இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார். வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாசும் மறுகடிதம் அனுப்பினார்.
இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921ல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக, 25 வயதே நிரம்பிய போசை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார். 1922ல், வேல்ஸ் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப, பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் சவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார். ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.
இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940 சூலையில், நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானியப் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரித்தானியாவின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி இரகசியக் காவலர்கள் சாதாரண உடையில், 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். ஜனவரி 26, 1941 அன்று இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும், இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.
ஜனவரி 15, 1941 ஆம் நாள், நேதாஜி ஒரு முசுலிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை அடைந்து, இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானித்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார்.
பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர். அக்டோபர் 21, 1943ல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.
போஸ், ‘இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும்’ என்ற உறுதியுடன், அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில், இந்திய காங்கிரஸ் சபை, ‘படிப்படியாக விடுதலை பெறுவதை’ ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில், பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக, இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது. போசு, இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும், கட்டுப்பாடுகள் தகர்ந்ததால், காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். ‘காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது’ என்றும், ‘பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதே விடுதலைக்கான வழி’ என்றும் கருதினார். இவர் ஃபார்வர்ட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். ‘இரத்தத்தைத் தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்’ என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போதும், இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, சப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்காசியாவில் இருந்த இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டும், நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும், இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.
சுபாஷ் சந்திர போஸ், பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார். சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும், தேசியவாத, சமூக சிந்தனையும், சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும், இவரிடம் மதவெறியோ, பழைமைவாதமோ இருக்கவில்லை. சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார். இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான ‘ஜான்சி ராணி படை’யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை, வேறு யாரோ என்று எண்ணி, கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல், அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகஸ்ட் 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, “நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!”. 1992ல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.
சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு செப்டம்பர் 17, 2015 ல் அன்று வெளியிட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பசும்பொன் தேவரின் அழைப்பை ஏற்று 1939 மதுரைக்கு வருகை புரிந்த சமயம் மேடையில் பேசும்போது நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என மேடையில் முழங்கியவர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேலவெள்ளைமலைப்பட்டியில் மர்ம விலங்கு கடித்து 15க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் பலியாகின.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலவெள்ளைமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாயி -ஒச்சம்மாள் தம்பதியினர்.விவசாயியான இவர் கிராம மலைஅடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்திலேயே வீடு அமைத்து; குடியிருந்து வருகின்றார்.இவர் 30க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை தனது தோட்டத்தில் ஆட்டுக்குடில் அமைத்து வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று ஆட்டுக் கொட்டகையில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது அங்கு 15க்கும் மேற்ப்பட்ட ஆட்டுக்குட்டிகள் வலியால் துடிதுடித்து அலறியபடி இறந்துள்ளன.ஏதேனும் மர்ம விலங்கோ அல்லது நாயோ கடித்தற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் அதனால் ஆடுகள் இறந்திருக்கலாம் என மாயி தெரிவித்தார்.இது குறித்து வனத்துறையினரிடம் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மர்ம விலங்கு தாக்கி ஒரே நேரத்தில் 15 ஆடுகள் பலியான சம்பவம்; உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.