திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி இராமச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறந்த கிடரி கன்றுகள் வளர்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் அம்மாபாளையம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். நித்யா தலைமையில், கால்நடை உதவியாளர் ஜாபர்சாதிக் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் சத்திய மூர்த்தி ஆகிய குழுவினர் 300 மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர்.
Category:
செய்திகள்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை – 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
by mohan
written by mohan
இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே இருப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகையின் போது வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டது.தொடர்ந்து ரயில் நிலையத்தில் பார்சல் சர்விஸ், கார்பார்கிங் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக மதுரை ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு மூன்று மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் வேதனை:
by mohan
written by mohan
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 120 க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 60 பேருக்கு பணம் வழங்கிய நிலையில் மீதி இருந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை பணம் வழங்காததால், விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, அங்கிருந்த விவசாயிகள் கூறும்போது:கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நெல் நடவுக்காக நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து நெல் விவசாயம் செய்திருந்தோம். மேலும், வட்டிக்கு பணம் வாங்கி நெல் விவசாயம் செய்து வந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை கல்வேலி பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் அருகில் இருந்த கொள்முதல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்து சென்றிருந்தனர். ஆனால், இன்றுவரை பணம் வழங்கவில்லை. இதுகுறித்து, தொடர்ந்து அதிகாரியிடம் தினமும் சென்று முறையிட்டும் இதுவரை எங்களுக்கு பணத்தை வழங்கவில்லை. மேலும், ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷனாக ரூபாய் 50 கொடுத்திருக்கிறோம். அதுவும் எங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்திருக்கிறோம். அதையாவது தாருங்கள் என்று கேட்டு வருகிறோம். அதற்கும் சரியான பதில் தர மறுக்கிறார்கள். அங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து, அதிகாரிகளிடம் சென்று கேட்டால், விவசாயிகளை ஒருமையில் திட்டி அனுப்புகின்றனர்.ஆகையால், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்த பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சர்க்கரை அளவை பரிசோதிக்கும் ஸ்டிக் ஆர்டர் செய்தவருக்கு காலாவதியான சாக்லேட்டை அனுப்பி வைத்த அமேசான் நிறுவனம்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் பசுமலை ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய் சிங் இராசையா வயது 74 இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் தினசரி வீட்டிலேயே சர்க்கரை அளவை தானே பரிசு வைத்துக் கொள்வார் இதற்காக இவர் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை இவரது மகன் அமேசான் நிறுவனத்தில்ACCU-CHEK என்னும் சர்க்கரை அளவை இரத்தத்தில் காட்டும் ஸ்டிக்கை செய்து வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார் வழக்கம்போல் இவரது மகன் கடந்த நான்கு நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து இவருக்கு சர்க்கரை அளவை சரி பார்க்கும். ACCU- U-CHEK ஸ்டிக்கை ரூபாய் 900 ஆர்டர் ஆர்டர் கொடுத்து உள்ளார்
அமேசான் நிறுவனத்தில் இருந்து காலையில் வந்த போது கையில் இருந்ததால் அப்புறமாக பிரிக்கலாம் என்று நினைத்து வைத்துவிட்டார் இந்த நிலையில் இரவு பிரிக்கும் பொழுது காலாவதியான இரண்டு சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் இதுகுறித்து யாரிடம் முறையிடுவது என்று புரியாமல் சர்க்கரை நோயாளியான எனக்கு மேலும் சக்கரையை அனுப்பி வைத்து கொடுத்து மேலும் நோயாளியாக பார்க்கிறாயா என நினைத்து நொந்து போய் உள்ளார் ஓய்வு பெற்ற ஆசிரியர் இணையத்தில் பொருட்கள் வாங்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும் என்பதே எடுத்துக்காட்டாக உள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விபத்தில் சிக்கிய சைக்கிள் ரிச்சாவை சரி செய்து உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டுமென ரிச்சாவை இல்லமாக வைத்து வாழ்ந்துவந்த கருப்புசாமி கோரிக்கை .
by mohan
written by mohan
தமிழகத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் பயண போக்குவரத்திற்கு முக்கிய பங்காற்றியது ரிக்ஷாக்கள்.இதுபோன்ற மிதிவண்டி ரிக்ஷாக்கள் சிரமத்தை குறைக்க ரிக்ஷா களில் மோட்டார்கள் பொருத்தப்பட்டது.காலச்சக்கரத்தின் ஓட்டத்தில்ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் அதிகரித்ததன் காரணமாக ரிக்ஷாகளை மக்கள் மெல்ல மெல்ல மறக்க தொடங்கினர்.இதனால் அதனை நம்பி வாழ்வாதாரம் ஈட்டி வந்த பலரும் ரிக்ஷா ஓட்டும் தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறினர். இந்த நிலையில்மதுரை மாவட்டம் செக்கானூரணி சேர்ந்த கருப்பசாமி இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.நர்சிங் படித்த மகளை திருமணம் முடித்து கொடுத்த நிலையில் இவரது மகன் பட்டதாரியாக தனியார் நிறுவனத்தில் வேலைபர்த்து வந்த நிலையில் கடந்த மாதம் திருநெல்வேலியில் உறவினர்இல்ல நிகழ்ச்சிக்கு சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.செக்கானூரணியை சேர்ந்த 54 வயதான கருப்புசாமி சுமார் 40 வருடங்களாக மதுரை மேலமாசி வீதி பகுதியில் ரிக்க்ஷா ஓட்டியும் செருப்பு தைத்து தனது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றார்.
இந்த ரிக்ஷாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீடாக கருப்புசாமி பயன்படுத்தி வருகின்றார்.மழை , பனி , வெயில் என எந்த தட்பவெட்ப காலத்திற்கும் கருப்புசாமிக்கு இந்த ரிக்ஷாவே வீடாக இருந்து வருகின்றது.தனக்கு வருவாயை ஈட்டித் தந்த ரிக்ஷா கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட சிறு விபத்தில் ஒரு சக்கரம் முழுமையாக சேதம் அடைந்து முடங்கி கிடப்பதால் தன்னுடைய வாழ்வாதாரமும் முடங்கி கிடப்பதாக செருப்பு தைப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து அன்றாடம் உணவு உட்கொண்டு வருவதாக கருப்பசாமி தெரிவிக்கின்றார்.ஆட்டோ மற்றும் டாக்ஸி வருகை அதிகரித்ததால் தனது ரிக்சாவில் பொதுமக்கள் பயணம் செய்ய விருப்பம் தெரிவிப்பது இல்லை எனவும் கொரோனா நோய் பரவலுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மதுரைக்கு வந்தால் அவர்களை மதுரையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றால் போதிய வருவாய் கிடைத்து வந்த நிலையில் கொரோனாவிற்குப் பின்னர் வெளிநாட்டு பயணிகள் வருகை முற்றிலும் குறைந்ததால் ரிக்சா மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டதாகவும் , செருப்பு தைப்பது மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மூன்று நேரத்தில் ஒரு சில வேலை உணவுகளை மட்டும் உட்கொண்டு கருப்புசாமி ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வருகின்றார் .ஒருவேளை உணவுக்காக யாரிடமும் கையேந்த யோசிக்கும் கருப்புசாமி தனது இறுதி நாள் வரை எனது உழைப்பில் சம்பாதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலேயே சாப்பிட வேண்டும் என்ற உயரிய லட்சியம் கொண்டுள்ளார்.விபத்தில் சேதமடைந்த தனது ரிக்ஷாவை நல்லுள்ளம் படைத்த நபர்கள் சரி செய்து கொடுத்தால் உதவியாக இருக்குமென தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின விழா…
by mohan
written by mohan
நெல்லை அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி 24.01.2022 திங்கள் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் “நமது தமிழ்ப் பாரம்பரியம் என்பது நீண்ட பெருமையுடையது. உலக நாகரிகத்திற்கே முன்னோடியாகத் திகழ்வதே நமக்குரியத் தனிச் சிறப்பாகும். இத்தகைய பெருமைமிகுந்த நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் இங்கு கூடியிருக்கும் இளைய தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும் “எனக் குறிப்பிட்டார். தூய யோவான் கல்லூரி மாணவர் சூரியா வரவேற்புரை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா “தேசிய வாக்காளர் நாள்” குறித்து சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “ஒவ்வொரு குடிமகனும் வாக்காளன் என்பதில் பெருமையடைய வேண்டும். நமது ஜனநாயகத்தின் ஆணிவேரே வாக்குரிமை தான். அதன் சிறப்புகளை இளைய சமுதாயத்தினர் வீடெங்கும், வீதியெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் பெருமைமிகு நாட்களான சுதந்திர நாள்,குடியரசு நாள் ஆகிய நாட்களைப்போல தேசிய வாக்காளர் நாளையும் கொண்டாட வேண்டும் ” எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வழங்கினார். திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நந்தினி,யமுனா,ஞான பெல்சியா,தூய யோவான் கல்லூரி மாணவி ரேணுகா,மீனாட்சி சுந்தரம்,தூய சவேரியார் கல்லூரி மாணவி ஆறுமுகவடிவு,உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலையாசிரியர் க.சொர்ணம் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நூதன முறையில் திருடப்பட்ட பணம்; தென்காசி சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் மீட்பு..
by mohan
written by mohan
அறியாமையை பயன்படுத்தி நூதன முறையில் திருடப்பட்ட பணம், ரூபாய் 3,64,999/- சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் சுந்தரவேல் ராஜஸ்தானில் சைட் ஆபீஸராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தரவேல் கடந்த 19.11.2021 அன்று அவரது தாயாருக்கு ரூபாய் 1,69,000 பணம் SBI YONO app ல் அனுப்பியுள்ளார். அனுப்பிய பணம் தொழில்நுட்ப கோளாறால் அவரது தாயாருக்கு சென்று அடையாத காரணத்தினால் சுந்தரவேல் Online ல் SBI வங்கியின் உதவி எண்ணை தேடி (960****967) என்று தவறான எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். SBI வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவது போல் ஏமாற்றிய மோசடி நபர் சுந்தரவேலை (Any Desk App) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யக்கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து 3,64,999 ரூபாய் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து சுந்தரவேலின் மனைவி சுமதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் (20.11.2021) அன்று புகார் அளித்தார்.அதன் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுரையின் படி காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை உடனடியாக ஃப்ரீஸ் செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி பணம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில், சுமதியிடம் தகுந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கி ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு.பிரம்மபுரத்தில் தங்கி இருக்க அனுமதி
by mohan
written by mohan
ராஜுவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தனது தாயார் நர்சு பத்மா உடல்நலத்தை கவனித்து கொள்ள இம்மாதம் 27-ம் தேதி வரை காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கி இருக்க 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. தனக்கு மேலும் 30 நாள் பரோல் தேவை என்று விண்ணப்பம் செய்து இருந்தார். அதன்படி நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1627).
by mohan
written by mohan
இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக பிறந்தார். இரிச்சர்டு பாயில் அயர்லாந்தில் உள்ள டூடர் தோட்டங்களில் துணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக 1588ல் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக்கு வந்தார். இரிச்சர்ட்டு பாயில் நில சுவானாக இருந்த காலத்தில் தான் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது தன் மூத்த சகோதரர்களைப் போன்று அயர்லாந்து குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டார். பாயில் தனியார் பாடசாலை மூலம் இலத்தின், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இவர் தனது எட்டாவது அகவையில் தாயை இழந்தார்.
பாயில் தந்தையின் நண்பரான சர்.ஹென்றி வோட்டன் இங்கிலாந்தில் உள்ள ஈட்டன் கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்காலத்தில் இராபர்ட்டு காரே என்னும் தனியார் பயிற்றுநரை ஐரிசு மொழியறிவை இராபர்ட்டு வில்லியம் பாயில் பெற்றுக் கொள்ளுவதற்கு அவரது தந்தை பணி அமர்த்தினார். இருப்பினும் இவருக்கு ஐரிசு மொழியில் ஆர்வம் ஏற்படவில்லை. மூன்று ஆண்டுகள் ஈட்டனில் கழித்த பிறகு பிரெஞ்சு பயிற்றுநருடன் வெளிநாடு சென்றார். 1641ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டினைப் பார்வையிட்டனர். அந்நாட்களில் வாழ்ந்த கலிலியோ கலிலீ என்பவரின் பெரு நட்சத்திரங்களின் முரண்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும்படி குளிர்காலத்தில் பிளாரன்ஸ் மாகாணத்தில் தங்கினார்.
பாயில் ஒரு இரசவாதி ஆவார். மேலும் உலோகங்கள் மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பி இவர் அதை அடைவதற்கான முயற்சியில் சோதனைகள் செய்தார். மேலும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒரு பிஸ்டனைக் கொண்டு வந்தனர் (நாம் போட்டுக் கொள்ளும் ஊசி போன்றது). அந்தப் பிஸ்டனை ஒருபுறம் அழுத்தும் போது உள்ளிருக்கும் வாயுவால் அழுத்தம் ஏற்பட்டு மீண்டும் பிஸ்டன் பழைய நிலைக்கு வர முயன்றது. ஆனால் அதனால் முடியவில்லை. எனவே வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானது அல்ல என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் நிரூபிக்க முனைந்தனர். பாயில் மட்டும் இந்தச் சோதனை சரியானதல்ல என்றார். பிஸ்டன் மிகவும் கடினமானதாக இருப்பதால் வாயுவால் திரும்ப அதே நிலைக்கு வைக்க முடியவில்லையே தவிர, வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானதாகவே இருக்கும் என்றார். சில நாட்களில் அப்படி ஒரு பிஸ்டனைத் தான் தயாரித்து தன் வாதத்தை நிரூபிப்பதாகவும் சவால் விட்டார்.
இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு ஆங்கில ‘U’ வடிவக் குழாய் ஒன்றை எடுத்து வந்தார். அதில் ஒருபுறம் மற்றொன்றை விட மூன்றடி உயரமாக இருந்தது. உயரமாக இருந்த பகுதி ஒல்லியாகவும், உயரம் குறைந்த பகுதி தடிமனாகவும் இருந்தது தடிமனாக இருந்த பகுதியின் மேற்புறம் அடைக்கப்பட்டிருந்தது. பாதரசத்தை இந்தக் குழாயின் ஒருவழியாக ஊற்றினார் பாயில். பாதரசம் இரு குழாய்களிலும் சிறிது மேலேறும் வரை ஊற்றப்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று அடைக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. பிஸ்டன் என்பது காற்றைப் பிடித்து வைக்கும் ஒரு உத்தி ஆகும். இப்போது இங்கும் காற்று பிடித்து வைக்கப்பட்டதால் இது ஒரு பிஸ்டன் என்றார் பாயில். இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் கொஞ்சம் பாதரசத்தை இந்தப் புறமிருந்து ஊற்றினார்.
இப்போது அந்தப் பகுதியிலிருக்கும் காற்று அழுத்தப்பட்டு இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு பாதரசம் ஏறியது. இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் பாதரசத்தைக் அந்தக் குழாயின் கீழிருக்கும் ஒரு வால்வு மூலம் வெளியேற்றினார். இப்போது மீண்டும் பாதரசம் பழைய இடத்திற்கே வந்து நின்றது. இதன் மூலம் காற்றின் அழுத்தம் சரிசமமானதே என்று நிரூபித்தார் பாயில். அதுமட்டுமல்ல, காற்றின் மேல் வைக்கும் எடைக்குத் தகுந்தவாறு அது கொள்ளும் கொள்ளளவும் எதிர்மறையாக மாறுகின்றது என்று கண்டறிந்தார். அதாவது மூன்று பங்கு எடையைத் தூக்கி வைத்தால், மூன்றில் ஒரு பங்கு இடத்துக்குள் காற்று நிரம்பி விடுகின்றது. இந்த விதியின் மூலமாகப் பலப் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
பாயில் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். பாயி்லின் விதி (Boyle’s law) என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இதனை 1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில்,
P ∞ 1/V, ( மாறாத வெப்பநிலையில்) அல்லது
PV = k, (ஓர் மாறிலி)
வெப்பநிலை T ஆகவும், வாயுவின் கன அளவு V1 ஆகவும் உள்ளபோது அழுத்தம் P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன் அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி
P1V1 =P2v2 = மாறிலி என்று எழுதலாம்.
தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் மூல நூலாகக் கருதப்படுகிறது. இராயல் சொசைட்டி என்னும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவராய் இருந்த பாயில் Fellow of the Royal Society (FRS) 1663ல் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் டிசம்பர் 31, 1691ல் தனது 64வது அகவையில் இலண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பாயில் விதி என்பது இவரது பெயரை ஒட்டி வழங்கப்படுகிறது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த பிரான்ஸ் அறிவியலாளர் ஜோசப் லூயி லாக்ராஞ்சி பிறந்த தினம் இன்று (ஜனவரி 25, 1736).
by mohan
written by mohan
ஜோசப் லூயி லாக்ராஞ்சி (Joseph Louis Lagrange) ஜனவரி 25, 1736ல் இத்தாலிய பெற்றோருக்கு ட்யூரின் என்ற ஊரில் பிறந்தார். செல்வம் பொருந்திய தாய் தந்தையருக்கு 11வது குழந்தையாகப் பிறந்து தான் ஒருவனே குழந்தைப் பருவத்தைத் தாண்டி ஆளாகியிருந்தும், செலவாளியான தந்தையின் செல்வம் ஒன்றும் தனக்கு மிஞ்சவில்லை. 17-வது வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது லாக்ராஞ்சியின் நாட்டமெல்லாம் பண்பாடு, இலக்கியம் இவைகளிலேயே இருந்தது. தற்செயலாக ஒரு சமயம் ஹாலியினுடைய ஒரு கட்டுரையில் கிரேக்கர்களுடைய வடிவியல் முறைகளைக் காட்டிலும் நியூடனுடைய நுண்கணிதமுறைகள் தாம் சாலச் சிறந்தவை என்று படித்தார். அந்த உந்துதலில் ஓரிரண்டாண்டுகளிலேயே பகுவியலில் அவர்காலத்தில் தெரிந்தவைகளையெல்லாம் தானே கற்றுக் கொண்டு, பிற்காலத்தில் 1788ல் வெளியாகப்போகிற தன் பகுநிலையியக்க வியலுக்கு விதைவிதைத்து முளையும் கண்டுகொண்டார். இந்த நூல் நிலையியக்கவியலுக்கு செய்த தொண்டும் மாற்றமும், நியூடனின் ஈர்ப்புவிதி வானவியலுக்கு செய்த புரட்சியை ஒத்தது.
டியூரின்னில் இருக்கும்போது டியூரின் விஞ்ஞானக்கழகத்தின் முதல் சஞ்சிகை வெளிவந்தது. லாக்ராஞ்சிக்கு அப்போது வயது 23. அப்போதே அச்சஞ்சிகையின் கட்டுரைகளையெல்லாம் சரிபார்த்து பிரசுரிக்கும் ஆசிரியர் பொறுப்பையெல்லாம் அவர் சுமந்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய சொந்தப் படைப்பாக ‘பெருமமும் சிறுமமும்’ (Maxima & Minima) என்ற கட்டுரையையும் அச்சஞ்சிகைக்களித்தார். அவ்வாராய்ச்சிக் குறிப்புகளில் அவர் தான் உண்டு பண்ணப் போகும் ‘மாறுபாடுகளின் நுண்கணிதம்’ (Variational Calculus) எப்படியெல்லாம் நிலையியக்கவியலை பிற்காலத்தில் மாற்றப்போகிறது என்பதை கோடிட்டு காண்பித்தார். இன்னும் நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு நியூட்டனின் வகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார். இது போதாதென்று ஒலியின் கணிதக் கோட்பாட்டில் ஒரு சிறப்பான திருப்பத்தை ஏற்படுத்தினார். ஒரேநேர்கோட்டிலுள்ள காற்றுத்துகள்கள் துகளுக்குத் துகள் தாவும் அதிர்வினால் எப்படி செயலாற்றும் என்பதை அலசுவதன்மூலம், நீர்ம (fluid) இயக்கவியலின் ஒரு பகுதியாகவே அதுவரை ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்த ஒலி இயலை மாற்றி, நெகிழ்திறமுள்ள துகள்களின் கூட்ட இயக்கவியலின் ஆதிக்கத்தில் ஒலி இயல் வரும்படிச் செய்தார்.
கணித இயலாளர்களினூடே பல ஆண்டுகளாக பரவலாக நடந்துகொண்டிருந்த ஒரு வாதப்பிரதிவாதத்திற்கு முடிவு கட்டும் முயற்சியில் வெற்றி பெற்றார். இப்பிரச்சினை அலைவதிர்வுக்குட்பட்ட ஒரு நூற்கயிறு அல்லது கம்பியைப்பற்றியது. இதன் சரியான கணித முறைப்படுத்தல் என்ன என்பது பிரச்சினை. 23வது வயதுக்குள் இத்தனையையும் சாதித்த லாக்ராஞ்சியை, அறிவியல் உலகும் அறிவியலாளர்களைப் போற்றி வளர்த்த அரசுகளும், அக்காலத்தில் உயர்மட்டத்தில் வைக்கப்பட்ட ஆய்லர், பெர்னொவிலி முதலிய கணிதமேதைகளுக்கு சமமாகக் கருதினதில் வியப்பொன்றுமில்லை.
பகுநிலையியக்கவியல் (The Mecanique analytique) என்ற அவருடைய வானளாவிய படைப்பு அவரது 19வது வயதிலேயே மனதில் கரு தோன்றி 58-வது வயதில் பிரசுரிக்கப்பட்டு இன்றும் நிலையியக்கவியலுக்கு இன்றியமையாத ஓர் அடிப்படை நூலாகக் கருதப் படுகிறது. இயற்கணித சமன்பாடுகள், வான நிலையியக்கவியல், எண் கோட்பாடு, மாறுபாடுகளின் நுண்கணிதம் நிகழ்தகவு, முதலிய துறைகளிலும் முதல்தரமான பங்களித்தவர்.
சந்திரனின் வட்டவிளிம்பிற்கருகிலுள்ள பகுதிகள் மறைந்து தோன்றுவது போன்ற அலையாடு தோற்றம் வானவியலில் ஒரு தலையாய பிரச்சினையாக இருந்தது. இம்மணுலகிலிருந்து பார்க்கும்போது எப்பொழுதும் திங்கள் ஏறக்குறைய ஒரே முகத்தைக் காண்பிப்பதேன்? நியூடனின் ஈர்ப்பு விதிகளிலிருந்து இதை உய்த்துணரத் தக்கதா? இப்பிரச்சினையின் வேர் ‘மூன்று கோளங்களின் பிரச்சினை’ என்று அன்றிலிருந்து இன்றுவரை ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினையே. திங்களின் அலையாடுதல் பிரச்சினையை விடுவித்ததற்காக லாக்ராஞ்சிக்கு 1764 ல் பிரெஞ்சு விஞ்ஞான அகடெமியினுடைய உயர்மட்ட பரிசு (Grand Prize) கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவ்வகடெமி மற்றுமொரு பிரச்சினையை விடுவிக்கச்சொல்லி அதற்கும் லாக்ராஞ்சிக்கே பரிசு கொடுத்தது. 1772, 1774, 1778 களில் இதே மாதிரி இன்னும் மூன்று பரிசுகளைத்தட்டிக்கொண்டார்.
முப்பதாவது வயதில் லாக்ராஞ்சி பெர்லினுக்கு அழைக்கப்பட்டு, அகேடெமியின் இயற்பியல்-கணிதவியல் பிரிவிற்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்விதம் அழைத்தவர் அக்காலத்தில் ‘ஐரோப்பாவிலேயே பெரிய அரசன் நானே’ என்று தன்னை பறைசாற்றிக்கொண்ட ஃபிரெடெரிக். இருபது ஆண்டுகள் லாக்ராஞ்சியிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. அகெடெமியில் அவருக்கு வேறு பாடம் நடத்தவோ பேசவோ எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அரசன் ஃபிரெடெரிக்கும் லாக்ராஞ்சியின் மேதையினால் மட்டுமல்லாது அவரது அன்பும் ஆதரவும் சார்ந்த பண்பினாலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த ஜோசப் லூயி லாக்ராஞ்சி ஏப்ரல்10, 1813ல் தனது 77வது அகவையில் பாரிசு, பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.
நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப் பொருள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதை இது எதிர்நோக்குகிறது. கோவிட்-19 தொற்று காலத்தில், தேர்தல்களை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டிலும் இது கவனம் செலுத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான்.
நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் 2020-21ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்குவார்.
டெல்லி அசோக் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், ராஷ்டிரபதி பவனில் இருந்து காணொலி காட்சி மூலம் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ‘ஹலோ வாக்காளர்கள்’ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவையும் அவர் தொடங்கி வைக்கிறார். சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள், பாதுகாப்பு மேலாண்மை, கோவிட் நேரத்தில் தேர்தல் மேயாண்மை, தேர்தல் விழிப்புணர்வு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
Source By: Wikipedia and Hindutamil.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வை அறிவித்துள்ளது. நீட் என்றாலே குழப்பம், பாதிப்பு என்றுதான் பொருள் போல.2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு மிக மிகத் தாமதமாக நடந்தேறி வருகிறது. இதில் அகில இந்திய இடங்கள்/ மத்திய மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள்/முதுகலை தேசிய ஆணைய பட்டயப் படிப்பு ஆகியவற்றில் நிரம்பாத உதிரி காலியிடங்களுக்கான கலந்தாய்வு மார்ச் 11 இல் இருந்து மார்ச் 16, 2022 வரை நடைபெறவிருக்கிறது. இது முடிவதற்கு முன்பாகவே மார்ச் 12 அன்று 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு என அறிவிக்கப்பட்டு இருப்பதுதான் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த தேர்வுக்கு பின்னால் கலந்தாய்வை முடிக்கிற மாணவர்கள் தங்களின் நிலை என்ன என்று தெரியாத நிலையிலும், கலந்தாய்வு – தேர்வு இரண்டையும் எதிர்கொள்ள இயலாத மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஓராண்டு வீணாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.இவ்வளவு தாமதமாக 2021 கலந்தாய்வை நடத்தும் போது 2022 தேர்வை ஒரு மாதம் தள்ளி நடத்தக் கூடாதா என்ற நியாயமான கோரிக்கையை எழுப்புகின்றனர்.இது அநீதி. மாணவர்களின் சிரமங்களை கிஞ்சித்தும் கணக்கிற் கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள முடிவு.எனவே உடனடியாக தலையிட்டு ஒரு மாத காலமாவது 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென ஒன்றிய சுகாதார அமைச்சர் மரு. மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன். எனமதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம்அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர்
by mohan
written by mohan
தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் மதுரை கப்பலூர் கண்ணன் காலனி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.இதனை பயன்படுத்தி மூன்று பேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அங்கிருந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்., ஒருவர் மட்டும் ஓடித் தப்பிக்க முயன்றபோது பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அந்த ஒருவரிடம் விசாரணை செய்து தப்பிச்சென்ற இருவரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட தனக்கன்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஜெய சேகர் என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதும்.,இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி மதுரை தோப்பூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து பித்தளை முருகன் வேல், மற்றும் பித்தளை பொங்க பானை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் கொண்டு திருடர்களைத் தேடி வந்த நிலையில் அந்தத் திருட்டை செய்தது ஒரே கும்பல் தான் என்பதும் தெரியவந்தது.தொடர்ந்து கொள்ளையர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்ததில் திருப்பரங்குன்றம் மொட்டமலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் மற்றும் சிவா (19), சேகர் (19) ஆகியோர் என தெரியவந்தது.கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில், தமிழக மக்கள்பொங்கல் பண்டிகையை இனிதே கொண்டாடும் வகையில் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைதமிழக மக்கள் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் அரிசி, வெல்லம், நெய், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, முந்திரி பருப்பு உள்பட 21 பொருட்கள் தொகுப்பு, முழு நீளக்கரும்பு வழங்கதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,89,784 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பாிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பரமக்குடி சீனியம்மாள் கூறுகையில்:-பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகைக்கு முன் பெற்றுக்கொண்டேன். பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில் 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 6ம் பகுதிக்கு உட்பட்ட 52வது வார்டில் மேல ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் .குடிநீர் விநியோகம் சரிவர கிடைக்காதவர்களுக்கு தடையில்லாமல் கிடைக்கவும், பாதாளச் சாக்கடை பிரச்சினையை சீர் செய்யவும் . குப்பை தொட்டியை பராமரித்து குண்டும் குழியுமாகவும் மிகவும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரவும். ஏழை-எளிய விதவை பெண்கள், மற்றும் முதியோர்களுக்கு முதியோர் பென்சன் கிடைத்திட பொது குடிநீர் குழாயை அதிகப்படுத்த அரசு நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திட ரேஷன் கடை மற்றும் விநியோகம் சீராக கிடைக்க தெருவிளக்குகள் சீரமைக்க தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு அளித்தால் அனைத்தும் செய்து தரப்படும் தெருவில் உள்ள மக்களுக்காக அடிப்படை உரிமைகள் மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதை பதிவு செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என்று விடுவிடாக சென்று நோட்டீஸ் வழங்கி வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்ச்சியில் பொருளாளர் சரவணன், மாவட்ட துணைசெயலாளர்கள் ராஜாமணி,எஸ்வின் பாபு, பொதுக்குழு உறுப்பினர், ஜெயராமன், பகுதி கழக செயலாளர்கள் மோகன், பத்மநாபன் ,தனபால், மாரியப்பன் மாணிக்கவாசகம், இப்ராஹிம், வார்டு வட்டகழக செயலாளர்பால்பாண்டி . சந்தோஷ் அல்லு, பாலாஜி, சாஜித், கார்த்திகேயன், பாலாஜி, அசோக், சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாரத் பெட்ரோலியம் பல்கில், ரூ 100க்கு பெட்ரோல் போட்டால் கூடுதலாக ரூ 5க்கு இலவசமாக பெட்ரோல் வாடிக்கையாளர் சேவைக்காக வழங்கப்படுகிறது:
by mohan
written by mohan
மதுரையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக, 18 பெட்ரோல் பங்க்குகளில் தரச் சான்று பெற்ற பெட்ரோல் பங்குகள் இயங்கிவருகின்றன.சான்று பெற்று இருந்தால், அங்கு விற்கப்படும் பெட்ரோலிய சுத்தமாகவும் அளவுகள் சரியானதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பாக, 2019 ல் தொடங்கி இந்த ஆண்டின் விழாவையொட்டிமதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பல்கில்ரூ.100-க்கு பெட்ரோல் வாங்கினால், ரூ 5-க்கு இலவசமாகவும்ரூ 500,க்கு ரூ 25 கூடுதலாக பெட்ரோல் வழங்கி வருகிறது.இதனால், இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி அனுப்பானடி காமராஜபுரம் வில்லாபுரம் அவனியாபுரம் ஜெயந்திபுரம் பகுதிகளில் ஏராளமானோர் அப்பள தொழிலில் ஈடுபட்டு வருகினறனர்.தென் இந்தியர்களின் அருசுவை உணகளில் முக்கிய இடம் பெறுவது அப்பளம்தான்.அந்த அப்பளம் தயாரிப்பில் தென் தமிழகத்தில் முன்னணியில் இருப்பது மதுரை மாவட்டம். இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட கம்பெனிகள், மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு உற்பத்தியாளர்கள்.அப்பளத் தொழிலில் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்
.இதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள்தான் வேலை செய்கின்றனர்.உளுந்தை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும். அப்பளத்திற்கு தனி சுவை.மேலும் உணவு தரக்கட்டுபாட்டு அமைப்பு மூலம் வழங்கப்படும் “Fassi் தரசான்று பெறப்பட்ட பிறகே விற்பனைக்கு செல்கிறது.உளுந்து மூடை 4,500 ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் அப்பளங்கள் கிலோ 120 முதல் 150 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது .இந்நிலையில் தற்போது கடைகளில் விற்கப்படும் கலர் .வடகங்கள்,சிப்ஸ் வகைகளில் அப்பத்தையும் சேர்ப்பதனால் சில குளறுபடிகள் ஏற்படுகிறது.சிப்ஸ்,வடகங்களில் கலர் சாயம் பூசப்படுகிறது. மற்றும் மைதா மாவு மூலப்பொருளாக கலக்கப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.மேலும் உணவு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் பெறப்படுவதில்லை.கடந்த சில நாட்களாக வடகம், சிப்ஸ் வகைகளில் குடல் போன்ற உணவுப்பொருள் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து அப்பளம் விற்பனை சரிந்துள்ளது. மேலும் அப்பளம் உடல் நலத்திற்கு தீங்கானது என செய்திகள மக்களிடை பரவுகின்றது.ஆகையால் இதற்கு உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உடனடியாக அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நலனில் தீர்வு காண வேண்டும்.கலர் சாயம், மற்றும் மைதா பொருட்களை தடைசெய்ய நடவடிக்கை எடுத்தால் பல தொழிலாளர்களின் வாழ்வு மலரும் என்று அப்பளத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் கடந்த 2 வருடங்களாக கொரான பெருந்தொற்றால் நலிவடைந்த இந்த அப்பளத் தொழில் தற்போது சீரடைந்துவரும் நிலையில் இது போன்ற தவறான செய்திகளால் மக்களிடையே அப்பளம் வாங்கும் எண்ணத்தை அழிக்கும் நிலை உள்ளது.ஆகையால் மாண்புமிகு தமிழக முதல்வர்,மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதரம் உயர வழிவகுக்க அப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காட்பாடிக்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.ஒடிஷாவை சேர்ந்த 3 பேர் கைது
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு தன்பாத்திலிருந்த ஆலப்புழாவுக்கு (வண்டி எண் : 13351)நேற்று முன்தினம் இரவு வந்தது. காட்பாடி இருப்புபாதை காவல்துறையினர் பயணிகளின் பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது எஸ் – 6 கோச்சில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தபோது ஒரு கிலோ எடை கொண்ட 12 கஞ்சா பண்டல்களை கைப்பற்றினர்.அதை கடத்தி வந்த ஓடிஷா சேர்ந்த சந்திரகன்னார் (26) சுனில்துமானியன் (27) மோனோஜ் பீய் (15) ஆகிய 3 பேரை கைது செய்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்போலியான பெயரில் ரிட் மனு தாக்கல்: போலீஸ் விசாரணை
by mohan
written by mohan
சென்னை உயர் நீதிமன்றம்மதுரை பெஞ்சில் போலியான பெயரில் ,ரிட் மனு தாக்கல் செய்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் பூர்ண ஜெயா ஆனந்த் .இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 10ஆம் தேதி உயர்நீதிமன்றகிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது விசாரணைக்கு வரும்போது, போலியானது என்று தெரியவந்தது. இவ்வாறு போலியான பெயரில் ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகளின்படி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு/ஊராட்சி/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலை/தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்/பதவி உயர்வு/ பணி நிரவல் கலந்தாய்வு மூலம் 24.01.2022 முதல் 23.02.2022 வரை மதுரை, ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.24.01.2022 அன்று நடைபெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 22 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.