நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டுத் தொடர் இலக்கிய கூட்டம் “கலைஞரின் கவிதை நயம்” எனும் தலைப்பில் நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் பத்தாவது கூட்டம் அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குமார கபிலன் இலக்கிய அறக்கட்டளை புன்னைச் செழியன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரின் கவிதை நயம்’ எனும் தலைப்பில் நிழல் இலக்கியத்தளம் கவிஞர் பிரபு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
கவிஞர் காந்திமதி வேலன், திருமதி பிரியா பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கு சாகித்ய அகாடமி வெளியிட்ட கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலினை எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம் வழங்கினார். கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கோ.கணபதி சுப்ரமணியன் தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர் ஜெயபாலன், நூலகர் அகிலன் முத்துக்குமார், நல் நூலகர் முத்துகிருஷ்ணன், பேராசிரியைகள் பொன் சக்திகலா, பிரியதர்ஷினி, ஆறுமுகச்செல்வி, பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.