Home செய்திகள் ராமநாதபுரத்தில் 2523 பேர் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில் 309 பேருக்கு பணி நியமன ஆணை…

ராமநாதபுரத்தில் 2523 பேர் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில் 309 பேருக்கு பணி நியமன ஆணை…

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.16 – தமிழுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு (ம) பயிற்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ராமநாதபுரத்தில் நடந்தது. தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அரங்குகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார்.

கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் அனைவரும் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெற வேண்டும் என் நோக்கில் நடந்த இச்சிறப்பு முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய முன் பதிவு செய்த 102 நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. 

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் படித்த ஆடவர், பெண்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி நம்மை தேடி வரும் நிறுவனங்களை. சென்று கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு தேர்வு செய்ய வேண்டும். சில நேரங்களில் நமது கல்வித் தகுதிக்கு இணையாக வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், முதலில் கிடைக்கும் வேலையை பயன்படுத்த வேண்டும். இதில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என எண்ணக்கூடாது என்றார். முகாமில் பங்கேற்ற 2523 பேரில் தேர்வான 309 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். தமிழ்நாடு மாநில வாழ்வாதார ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் , இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான், பள்ளி முதல்வர் தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com