13
இராமநாதபுரம், செப்.15- இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அருகே புதுவலசையில் வீடு கட்டி 20க்கும் மேற்பட்டோ வசிப்பதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்து முறையிட்டனர். இது தொடர்பாக கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார். இதனையடுத்து புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில்
வட்டாட்சியர் ஆய்வு செய்தார். அப்போது தேர்போகியில் அரசு புறம்போக்கு நிலம் கற்றுச்சுவர் அற்ற மேற்கூரை அமைத்து ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டது. அங்கு யாரும் வசிக்கவில்லை என தெரிந்தது. இதனால் அங்கு ஆக்கிரமிப்பு செய்தோருக்கு பட்டா வழங்க இயலாது என ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் அறிக்கை சமர்ப்பித்தார்.
You must be logged in to post a comment.