விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது, வழக்கறிஞர் அருள் மொழிக்கு பெரியார் ஒளி விருது, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராஜர் கதிர் விருது, பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, முனைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதே மில்லத் பிறை விருது சுப்பராயலுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படுகிறது.விருது வழங்கும் விழா விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது:-ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் விருது முதன் முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராஜர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோர்களுக்கு பாராட்டு பட்டயம், நினைவு கேடயம், ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபடும் தலித் இல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப் படுத்துவதிலும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் பிற சமூகத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும் சமூக நீதி, சமத்துவம், பண்மைத்துவம், மதசார்பின்மை, மொழி-இன உரிமைகள் போன்றவற்றை முன்னிறுத்தி பாடுபடும் சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இந்த விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.கடந்த 15 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயண சாமி, இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திபங்கர் பட்டாச்சார்யா உள்பட 99 சான்றோருக்கு இதுவரை விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.விருதுகளை பெரும் சான்றோர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்கள்.
Category:
செய்திகள்
காவல்துறைVSபோக்குவரத்து துறை மோதல்! அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்!- சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை..
by Askar
written by Askar
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே நடந்த விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளவர்களை நேற்று காலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ் வெளியிடப்பட்டு உள்ளது. முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் கவர்னருக்கும், அவரின் மனைவிக்கும் குல்லாவும், பர்தாவும் அணிவித்தால் அதனை கவர்னர் ஏற்றுக் கொள்வாரா?. இவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறை யாரை வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால், சென்று தங்கள் விளக்கத்தை கொடுத்து தான் வரவேண்டும். அதுதான் கடமை.காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக போலீசார் எனக்கு சம்மன் அனுப்பினால் நானும் சென்று பதில் அளிப்பேன். காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் மோதல் என்பது போன்ற பிம்பம் ஏற்பட்டு உள்ளது. பஸ்சில் டிக்கெட் எடுக்க மாட்டேன். நானும் அரசு ஊழியர் தான் என்று அவர் பேசியிருக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும்- என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நரபலி இல்லீங்க, அது நாய்ங்க! பழனி அருகே பரபரப்பை கிளப்பிய தோட்டம்! புதைக்கப்பட்டது நாய் என தெரிய வந்தது..
by Askar
written by Askar
நரபலி இல்லீங்க, அது நாய்ங்க! பழனி அருகே பரபரப்பை கிளப்பிய தோட்டம்! புதைக்கப்பட்டது நாய் என தெரிய வந்தது..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டி கிராமத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இறந்த உடல் புதைக்கப்பட்டதற்கான தடையும் இருந்துள்ளது. ஆடு மேய்க்க வந்த நபர்கள் தனியார் நிலத்தில் உடல் புதைக்கப்பட்டது போல தடயங்கள் தென்பட்டதால் கீரனூர் போலீசாருக்கும் மற்றும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு பழனி வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் தகவல் அறிந்து கிராம மக்கள் பலரும் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேல்கரைப்பட்டி கிராமத்தில் யாரும் இறக்காத நிலையில் உடலை புதைத்த தடயம் எப்படி வந்தது என்பது தெரியாததால் கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் விஷயம் பெரிதாகி பரபரப்பான நிலையில் விவசாய நிலத்தில் நாயின் உடலை புதைத்ததாக ஒருவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்து பிறகு புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று தோண்டி பார்த்தபோது நாயின் உடல் இருந்ததை உறுதி செய்தனர். பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் விவசாய நிலத்தில் கொண்டு சென்று புதைத்ததாகவும், மக்கள் சந்தேகம் அடைந்து பெரிது படுத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். பாபநாசம் படம் போல மனித உடல் இருக்கும் என நினைத்து போலீசார் விசாரணை நடத்தி தோண்டியபோது நாயின் உடல் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்திகள்உலக செய்திகள்கீழக்கரை செய்திகள்தேசிய செய்திகள்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்விளையாட்டு செய்திகள்
கீழக்கரையில் நாய்களை பிடிக்கக் கோரி மூவாயிரம் போஸ்ட் கார்டுகள் முதலமைச்சருக்கு அனுப்பிய பொதுமக்கள் !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றும் பொது மக்களுக்கு அச்சத்தில் இருப்பதாகவும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருவதாகவும் கூறி கீழக்கரை சமூக ஆர்வலர்கள் தொண்டு இயக்கங்கள் இணைந்து பொதுமக்களிடம் போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கைகளைப் பெற்று 3000 போஸ்டர் கார்டுகளை முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் நாய்களை கிழக்கே நகராட்சி முறையாக பிடித்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புகள் இணைந்து தபால் நிலையத்தில் போஸ்டர் கார்டுகளை வழங்கினர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கருத்தில் கொண்டு தமிழக முதல்வருக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு நாய்களை பிடித்து அகற்ற உத்தரவிட கோரி பொதுமக்கள் சார்பாக பெறப்பட்ட 3000 போஸ்ட் கார்டுகளை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொறுப்பாளர் சதக் இலியாஸ், நகர் மன்ற உறுப்பினர் சேக் ஹூசைன், சமூக ஆர்வலர்கள் முஹம்மது அஜிஹர், அபுபக்கர் சித்தீக் , நசுருதீன் , பாரூக் ராஜா முஹம்மது , பைசல் , பாரூக் , முகைதீன் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001008073-large.jpg?resize=1024%2C590&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001008068-large.jpg?resize=1024%2C560&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டிக்கெட்டா எடுக்க சொல்றீங்க! அரசுப் பேருந்துகளை ரவுண்டு கட்டி பழி தீர்க்கும் போலீசார்..
by Askar
written by Askar
அண்மையில் தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் பயணிப்பதற்காக ஏறிய காவலர் ஒருவர், நான் போலீஸ் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதற்கு நடத்துநர் நீங்கள் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் வாரண்டை கொடுங்கள். வாரண்ட் இல்லாமல் உங்களை அழைத்துச் செல்ல முடியாது. வாரண்ட் இல்லையென்றால் பயணச்சீட்டு எடுத்தாக வேண்டும் என்று கூறினார். நடத்துநர் மற்றும் காவலர் இடையேயான இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அரசுப் பேருந்துகளில் காவலர்கள் வாரண்ட் இல்லாமல் இலவசமாக பயணிக்க அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுப் பேருந்துகளை குறிவைத்து காவலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் இது நோ பார்க்கிங் ஏரியா இங்கு ஏன் பேருந்தை நிறுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியதற்காக ரூ.500, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூடுதலாக ரூ.500 அபராதம் விதித்தனர்.
இதே போன்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தியதற்காகவும் அரசுப் பேருந்துகள் திடீரென வழிமறித்து அபராதம் விதிக்கப்பட்டன. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அரசுப் பேருந்துகளை தணிக்கை செய்த போக்குவரத்து காவலர் ஓட்டுநர் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி 3 ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்துத்துறை மற்றும் காவல் துறையினர் இடையேயான மோதலால் இரு துறை அதிகாரிகளும் முறையாக பணியில் கவனம் செலுத்த இயலாது என்று குற்றம் சாட்டும் ஆர்வர்கள் இரு துறை அதிகாரிகளும் இது தொடர்பாக பேசி சுமூக தீர்வு எட்டும் பட்சத்தில் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 வாலிபர்கள் கைது..
by Askar
written by Askar
திண்டுக்கல் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 6 வாலிபர்கள் கைது..
திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி டாஸ்மாக் கடை அருகே திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப்(60) என்பவரை நேற்று இரவு மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்புஆய்வாளர்கள் பிரபாகரன், பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் டேனியல் ராஜா(20), ஞானபிரகாசம் மகன் அலெக்ஸ் பிரிட்டோ(20), பார்வையற்றோர் காலனி பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தமிழ்செல்வன்(18), நாராயணன் மகன் சிரஞ்சீவி(18), செல்வராஜ் மகன் காளீஸ்வரன்(20), மணிகண்டன் மகன் பிரவீன் குமார்(19) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்து தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்! விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்.
by Askar
written by Askar
வங்காள தேசம் நாட்டின் ஆளும் கட்சி எம்.பி. அன்வாரூல் அஷீம் அனார் கொலை செய்யப்பட்ட விதம் பதைபதைக்க வைத்துள்ளது. போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.வங்காள தேசம் நாட்டின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்வாரூல் அஷீம் அனார். இவர் அடிக்கடி கொல்கத்தா வருவதும், நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி கொல்கத்தா வந்திருந்தார். கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் உடன் தங்கியிருந்தார். பின்னர் மே 13-ந்தேதி முதல் காணாமல் போனார். அவர் கடைசியாக கொல்கத்தாவின் புறநகரில் உள்ள நியூ டவுனின் அடிக்குடிமாடி வளாகத்தில் தென்பட்டதாகவும், அதன்பின் கொலை செய்யப்பட்டு தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பக்கெட்டில் எடுத்துச் சென்று பல்வேறு இடங்களில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.போலீசார் விசாரணையில் அன்வாரூல் அஷீம் அனாரை சிலர் திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்திருப்பது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் மும்பை கசாப் கடையில் பணியாற்றிய ஜிகாத் ஹவல்தார் (24) என்பவரை கைது செய்தனர். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு சிலரால் கொல்கத்தா அழைத்து வரப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கொல்கத்தா வந்து மும்பையில் உள்ள கறிக்கடைகயில் வேலை பார்த்து வந்துள்ளார்.இவர் அன்வாரூல் அஷீம் அனாரை கொாலை செய்து தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி நகரில் பல பகுதிகளில் வீசியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட அக்தர்ருஷ்மான் என்பரையும் போலீசார் தேடிவருகின்றனர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவர் ஆவார். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.இதற்கிடையில் கொலை செய்வதற்காக 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.பெண் ஒருவர் மாய வலை வீசி அவரை சிக்கவைத்து அந்த அடிக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண்ணை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு பெண்ணுடன் எம்.பி. சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தால்தான் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனி அருகே தனியார் தோட்டத்தில் நரபலியா.? சம்பவ இடத்தில் போலிசார் தீவிர விசாரணை..
by Askar
written by Askar
பழனி அருகே தனியார் தோட்டத்தில் நரபலியா.? சம்பவ இடத்தில் போலிசார் தீவிர விசாரணை..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டியில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடுவில் இன்று காலை பூஜை செய்து மர்மமான ஏதோ ஒன்று புதைக்கப்பட்டு உள்ளதாக நிலத்தின் உரிமையாளர் கீரனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
புதைக்கபட்ட இடத்தின் அருகிலேயே தனியார் பள்ளி மாணவியின் சீருடையும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேறு ஏதாவது பூஜை செய்து மர்மமாக புதைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பழனி டிஎஸ்பி தனஜெயன்,பழனி வட்டாட்சியர் சக்திவேலன், நகர,தாலுகா இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நாளை காலை குறிப்பிட்ட இடத்தில் மருத்துவர்கள் குழுவினர் முன்னிலையில் குழியை தோண்டி ஆய்வு செய்ய உள்ளதாக டி.எஸ்.பி. தனஞ்ஜெயன் தகவல்.
தனியார் தோட்டத்தில் கொலை செய்து உடலை புதைத்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தனியார் தோட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து தொடர்பாக; சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது..
by Askar
written by Askar
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பெண் காவலா்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையா் கடந்த 12-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இ ந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் கமலம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
அதில் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். மேலும் சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி தெரிவித்துள்ளார். அதேசமயம் கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபகளும் ஒருமித்த ஆணை பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்திய விமானப்படை சார்பில் பெங்களுரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னி வீர்வாயு இசைக் கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைபெற இருக்கிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மற்றும் இசைக்கருவிகளில் வாசிக்க தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் 22.05.2024 முதல் 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைமுறை மற்றும் பிற விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். எனவே தென்காசி மாவட்டத்தை சார்ந்த இசைக்கலைஞர் ஆர்வலர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பனை மர ஓலையில் திருமண அழைப்பிதழ்; கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலர் திருமாறன்..
written by Abubakker Sithik
பனை மர ஓலையில் திருமண அழைப்பிதழ்; கவனத்தை ஈர்த்த தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் திருமாறன்..
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பனை மர ஓலையில் அழகாக வடிவமைத்து வழங்கி வருவது முதல் இரத்ததானம், விதைப்பந்து உள்ளிட்ட புதுமைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240524_170638_0000-large.jpg?resize=1024%2C576&ssl=1)
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள வெங்காடம்பட்டி பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பூ. திருமாறன். இவரது மகள் மருத்துவர் தமிழ் அருவி. நாகர்கோவில் மருத்துவர் பெசன் ஜாஸ்க்கும், தமிழ் அருவிக்கும் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி தென்காசி தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில், மிகப் பிரம்மாண்டமான இரத்ததான முகாம் இலஞ்சி ரதி மகாலில் நடைபெறுகிறது. 10 படுக்கைகள் இரத்த தானத்திற்கு தயாராக இருக்கும் வகையில் திருமாறன், தென்காசி அரசு மருத்துவமனை சூப்பிரண்டெண்ட் மரு.ஜெஸ்லின், ரத்த வங்கி மருத்துவர் பாபு ஆகியோர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இம்முகாமில் சுமார் 100 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு 400 நோயாளிகள் பயன்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்பவர்களுக்கு அரசு தரப்பிலும், திருமண வீட்டார் தரப்பிலும் என இரண்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், தாம்பூல பைக்கு பதிலாக விதைப்பந்து சுருக்குப்பை, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. வெற்றிலை பாக்கு, சாக்லேட் என்பதற்கு பதிலாக பூமி வெப்பமயமாதலை தடுக்க தலா 25 மர விதைகள் கொண்ட விதைப்பந்துகள் வழங்கப்படுகிறது. இத்திருமணத்தில், புதுச்சேரி மக்கள் முதல்வர் ரங்கசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன் பெங்களூர் ரா. சத்திய நாராயண ராவ் கெய்க்வாட், முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் வால்டர் தேவாரம், துணைவியார் பிரேமா தேவாரம், இங்கிலாந்து ரிச்சர்ட், லண்டன் விவியன், டாக்டர் மாதுரி, எமிலி, மலேசியா ஏ.ஜி.திலகன், கெர்லிங் எஸ்டேட் பூனாட்சி என்ற நாகப்பன், ரஜினி குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் காகிதத்திற்கு பதிலாக பனை ஓலையில் அழகாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மின் கட்டணம் கட்ட வில்லை! பாம்பன் சாலைப் பாலத்தை இருளில் மூழ்க விட்டது மின்சார வாரியம்! வாகன ஓட்டிகள் அவசர கோரிக்கை..
by Askar
written by Askar
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலின் மேல் பகுதியில் 1914 ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரெயில் பயணத்தை மட்டுமே நம்பி பயணித்து வந்தனர்.இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு கப்பல்கள் பேருந்து பாலம் கீழ் பகுதியில் தடையின்றி கடந்து செல்லும் வகையில் பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பேருந்து பாலத்தின் அழகை ரசிக்கும் வகையில் 181 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அனைத்து கம்பத்திலும் அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டது. ராமேசுவரத்திற்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பாலத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் அழகை தொலைவில் இருந்து பார்த்து ரசித்தனர்.இந்நிலையில் பாலத்தில் வழியாக ராமேசுவரம் செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண்டபம் தோணித் துறை பகுதியில் தடுப்பு அமைத்து வசூல் செய்யப்பட் டது. இதன் பின்னர் அந்த உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது. மேலும் பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தோணித்துறையில் இயங்கி வந்த சுங்க கட்டணம் வசூல் மையம் 2017-ல் அகற்றப்பட்டது.இதனைத்தொடர்ந்து, பாம்பன் பேருந்து பாலத்தின் பரமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் உயர்கோபுர விளக்கு உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மீண்டும் புதிய கம்பங்கள் மாற்றப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தத்தப் படவில்லை.தற்போது வரையில் ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து பாலத்தில் ஒரு நாள் கூட 181 விளக்குகளும் எரிந்தது கிடையாது. பெரும்பாலான நேரங்களில் பாலம் முழுமையாக இருளில் தான் காணப்படும். மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.அதே வேளையில் மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு பாம்பன் ஊராட் சியில் பணம் கட்ட நிதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமேசுவரம் நகராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைத்து அனைத்து வானகங்களுக்கும் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூல் செய்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வசூல் செய்து வருகின்றனர். பாம்பன் பேருந்து பாலத்தின் முழு பயனும் ராமேசுவரம் நகராட்சிக்கு மட்டுமே கிடைப்பதால் மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சியே செலுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.பாம்பன் பேருந்து பாலத்திற்கு மின் கட்டணம் செலுத்துவது, மின்பாக்கியை செலுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாம்பன் பேருந்து பாலத்தின் அனைத்து மின்விளக்கும் எரிவதற்கான நடவடிக்கையை காலதாமதம் இன்றி எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன்!- சீமான் பகிரங்கமாக சவால்..
by Askar
written by Askar
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பாஜக பெற்று இருந்தால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன். யார் பெரிய கட்சி என்று தெரிந்து விடும் இல்லையா. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது. தனியாக நீங்கள் எவ்வளவு வாக்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட முயற்சிப்பதா?; கேரள அரசிற்கு வைகோ கண்டனம்..
written by Abubakker Sithik
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட முயற்சிப்பதா?; கேரள அரசிற்கு வைகோ கண்டனம்..
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், கேரளா மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பத்தை ஒன்றிய அரசிடம் அளித்ததாகவும், இந்த விண்ணப்பம் மே 28-ஆம் தேதி மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. முல்லை பெரியாறு புதிய அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 10 பேர் அடங்கிய சிறப்புகுழு தயார் செய்துள்ளது. இதன்படி பழைய அணையை முழுமையாக இடித்துவிட்டு ரூ.1,300 கோடிமதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும். அணை கட்டத் தொடங்கிய 5 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். வண்டிப்பெரியாரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் புதிய அணையை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்றெல்லாம் கேரள மாநில அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் சார்பில், பல்வேறு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வுகள் நடந்தன. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழுவின் அறிக்கை 2012 ஏப்ரல் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. “முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை; நில நடுக்கம் ஏற்பட்டாலும முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது” என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது. 2014 மே 7 ஆம் தேதி அன்று அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியது. அத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடி என்ற அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவும், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர், அணை பலமாக உள்ளதால் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று அறிவித்தது. தமிழக அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது. ஆனால், கேரள அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறுஅணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2014 டிசம்பர் 3 ஆம் தேதி, கேரளாவின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், “முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே; அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று தனது முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதும் , திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளதும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரள மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி..
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஆலடி (65). இவர் முள்ளிப்பள்ளம் குருவித்துறை சாலையில் உள்ள தோப்பிற்கு காலையில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து ராஜேஸ் தாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல தேவை இல்லை! பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்த மத்திய அரசு..
by Askar
written by Askar
இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல தேவை இல்லை! பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்த மத்திய அரசு.
ஓட்டுனர் உரிமம் பெறும் முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதை அடுத்து, இதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இனி மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் எடுக்கும் நடைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.
புதிய நடைமுறைக்காக, ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் மையங்களுக்கான விதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது:
இனி ஓட்டுனர் உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க குறைந்தது 1 ஏக்கர் நிலம் தேவை.
கனரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை. இந்த மையங்களில் தகுந்த தேர்வு நடத்துவதற்கான விதிகள் இருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஐந்து ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், ‘பயோமெட்ரிக்’ மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்திருத்தல் அவசியம்.
இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி, குறைந்தது நான்கு வாரங்களும் அல்லது 29 மணி நேரம் இருக்க வேண்டும்.
அதேபோல், கனரக வாகனங்களுக்கான பயிற்சி ஆறு வாரங்கள் அல்லது 38 மணி நேரமாக இருக்க வேண்டும்.
தனியார் பயிற்சி மையங்கள் அரசு அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும்.
இந்த விதி மாற்றத்தின் வாயிலாக, இலகு மற்றும் கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; குடிபோதையில் குளிக்க அனுமதி இல்லை..
written by Abubakker Sithik
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; குடிபோதையில் குளிக்க அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..
குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி குளிப்பதற்கான தடை விலக்கப்பட்டுள்ளதாகவும், குடிபோதையில் அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அருவிகளில் குளிக்க செல்லும் போது சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குற்றால அருவிகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் இதர அருவிகளில் பெரு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதி மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள இதர சுற்றுலா பகுதிகளில் பொது மக்கள் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்து ஆணையிடப்பட்டது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு சென்னை வானிலை மைய அறிவிப்பில் மிக கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி 23.05.2024 முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடைகளை விலக்கி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பிரதான அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 24.05.2024 இன்று பிற்பகல் 4.00 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும். பழைய குற்றால அருவியில் 24.05.2024 முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படும். பழைய குற்றால பகுதியில் வாகன நிறுத்தத்திற்கான அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனம் நிறுத்தப்பட வேண்டும். ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது. இருப்பினும், அணைக்கட்டு பகுதிகளில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவி பகுதிகளில் குளிக்க செல்லும் போது, பிரதான அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சோப், சாம்பு, எண்ணெய் பயன்படுத்த கூடாது. அருவி பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கேரி பேக் பயன்படுத்திட அனுமதி இல்லை. குடி போதையில் எவரும் அருவி பகுதியில் குளிக்க அனுமதி இல்லை. காவல் துறை மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை பொது மக்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. குற்றாலம் அருவி பகுதியில் குளிக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியில், சென்னை வானிலை மைய அறிவிப்பு மற்றும் கனமழையினை பொருத்து அவ்வப்போது தேவையான மாறுதல்கள் செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏர்வாடி தர்கா ஆக்கிரமிப்பு அகற்றிய கீழக்கரை வட்டாட்சியர்.! குவியும் பாராட்டுக்கள்..!
by Baker BAker
written by Baker BAker
ஏர்வாடி தர்கா ஆக்கிரமிப்பு அகற்றிய வட்டாட்சியர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தர்கா பகுதியில் சர்வே எண் 502 , 504 இல் எந்த ஒரு கடைகளும் அமைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை மீறி சிலர் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து யாத்திரைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருவதாக வந்த புகாரியின் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாதவாறு கற்கள் அமைத்து சுற்றி கம்பிகள் வைத்து யாத்திரைகள் பொதுமக்கள் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 31-ம் தேதி மாலை தொடங்கி ஜூன் 1-ம் தேதி அதிகாலை நடக்க இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர்களிலிருந்தும் அதிகப்படியான யாத்திரைகள் கலந்து கொள்ள வருகை புரிவதால் இப்பகுதியை யாத்திரிகள் பயன்பெறும் வகையில் அமைத்துக் கொடுத்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமாருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் மாயா குளம் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள்மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003164-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003153-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003154-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003155-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003147-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003158-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003159-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003139-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003160-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1001003151-large.jpg?resize=1024%2C576&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..
by syed abdulla
written by syed abdulla
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..
ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து தரம் உயர்ந்த நிலக்கரி விலையில் விற்று அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதை லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வகையில் அதானி நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒன்றிய பாஜ ஆட்சியில் அதானி குழுமத்துக்கு அதிக சலுகைகள், பலன்கள் வழங்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் நிரூபணம் ஆகும் வகையில், அதானி குழுமத்தின் முறைகேடுகள் அவ்வப்போது அம்பலம் ஆகி வருகின்றன. இந்த வகையில் தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்கே அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடித்தது தொடர்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் அமைப்பு ஆவணங்களை திரட்டியுள்ளது.
இதனை லண்டனை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் ஆய்வு செய்து முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது. இது முறைகேடு என்பதையும் தாண்டி, சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் மாசு ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஏனெனில், தரம் குறைந்த நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும்போது, அதிக நிலக்கரி எரிக்கப்பட்டு காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. ஒரு கிலோவுக்கு 3,500 கலோரி எரியும் திறன் கொண்ட நிலக்கரி குறைந்த தரமுள்ள நிலக்கரியாகவும், 6,000 கலோரி கொண்ட நிலக்கரி உயர் தரமானதாகவும் கருதப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலமான 2014ம் ஆண்டு ஜனவரியில் அதானி ஒரு கிலோவுக்கு 3,500 கலோரி உள்ள தரம் குறைந்த நிலக்கரியினை இந்தோனேசிய நிறுவனத்திடம் வாங்கி அதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 6,000 கலோரி உயர்தர நிலக்கரி விலையில் விற்றுள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனம் பல மடங்கு லாபம் பெற்றுள்ளது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.
கடந்த 2013 டிசம்பரில் ஒரு டன் 28 டாலருக்கு வாங்கிய நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் 2014ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்தபோது, அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அந்த நிலக்கரியை ஒரு டன் 92 டாலருக்கு விற்றது அம்பலமாகியுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தனில் உள்ள பிடி ஜான்லின் சுரங்கக் குழுமத்தில் இருந்து இந்த நிலக்கரியை அதானி நிறுவனம் வாங்கியுள்ளது. ஜான்லின் சுரங்கக் குழும ஏற்றுமதி ஆவணங்களில், ஒரு கிலோவுக்கு 3,500 கலோரிகள் எரிதிறன் கொண்ட நிலக்கரியை பெறுவது தமிழ்நாடு மின் வாரியம் என்றும், அதானி இதில் இடைத்தரகராக உள்ளதாகவும் விலை ஒரு டன்னுக்கு 28 டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலக்கரியை ஒரு வாரம் கழித்து, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட சுப்ரீம் யூனியன் முதலீட்டாளர்கள் என்ற நிறுவனம் சிங்கப்பூரில் அதானி நிறுவனத்துக்கு ஒரு டன்னுக்கு 34 டாலர் என்ற விலைக்கு விற்று உள்ளனர். அதைத்தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஒரு டன் 92 டாலருக்கு விற்றது தெரிய வந்துள்ளது. மேலும், 2014ம் ஆண்டு முழுவதும் இதேபோல மேலும் 22 முறை கப்பல்களில் மொத்தம் 1.5 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தோனேசிய நிறுவனத்திடம் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை பெற்று, உயர் தர நிலக்கரி என்று தென் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. 2022ம் ஆண்டு தி லான்செட் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கிறது. மேலும், அனல் மின் நிலையங்களை சுற்றி சுமார் நூறு மைல் சுற்றளவுக்கு குழந்தைகள் இறப்பு அதிகரித்திருப்பதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களில் பெரும்பான்மையானவை வெளியிடும் மாசு, மனிதர்களால் வெளியேற்றப்படும் நுண் மாசுவில் சுமார் 15 சதவீதம் அளவு பங்கு வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதில் நைட்ரஜன் ஆக்சைடு 30 சதவீதம், சல்பர் டை ஆக்சைடு 50 சதவிகிதம் இருக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு எதிர்கட்சிகள் 2021 மற்றும் 2023ம் ஆண்டுக்கு இடையில், சந்தை விலையை விட அதிக விலையில் இறக்குமதி செய்த நிலக்கரிக்காக, இடைத்தரகர்களுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதானி குழுமம் வழங்கியதாக குற்றச்சாட்டினர்.
இதுதொடர்பாக அதானியிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எரிசக்தி துறையில் தன்னை பெரிய நிறுவனமாக அதானி குழுமம் முன்னிறுத்திக் கொள்ள முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் இந்த முறை கேடுகள் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நிதி அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவான வருவாய் புலனாய்வு இயக்குநரகம், 2016ம் ஆண்டில் நிலக்கரி விலை தொடர்பான விசாரணையை தொடங்கியது. 24 ஏற்றுமதிகளில் 22 இந்தியாவிற்கு அனுப்பப்படுவதாகவும், அனைத்து 22 ஏற்றுமதிகளிலும் ஒரு டன்னுக்கு சராசரியாக 86 டாலர் என்ற விலையில் தமிழ்நாடு மின் வாரியம் கொள்முதல் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. விலையானது ஆர்கஸின் மதிப்பீடுகள் படி உயர்தர, 6,000-கலோரி நிலக்கரிக்கான உள்ளூர் சந்தை விலைகள் மற்ற செலவுகள் உட்பட 81 முதல் 89 டாலர் வரை இருந்தது.
இந்த விலை மதிப்பீடுகள் படி, சராசரியாக 86 டாலருக்கு விற்கப்படும் ஒவ்வொரு டன்னுக்கும், அதானியும் அதன் இடைத்தரகர்களும் 46 டாலர் வரை லாபத்தைப் பகிர்ந்து கொண்டதை குறிக்கிறது. இது 22 பரிவர்த்தனைகளுக்கும் மொத்தம் 70 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்த குற்றச்சாட்டுகளைமறுத்துள்ள அதானி குழும செய்தித் தொடர்பாளர், நிலக்கரியின் தரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடத்திலும், சுங்க அதிகாரிகள் மற்றும் மின் வாரிய விஞ்ஞானிகளாலும் சோதிக்கப்படும். குறைந்த தரம் வாய்ந்த நிலக்கரி விநியோகம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது, முற்றிலும் அபத்தமானது என கூறினார்.
வருவாய் புலனாய்வு இயக்குநரக விசாரணையில் பயன்பாடுகளுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை உயர்த்துவதற்கு கடல்கடந்த இடைத்தரகர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பல ஏற்றுமதிகளில் சரக்குகளுக்கு இரண்டு செட் சோதனை அறிக்கைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன, ஒன்று குறைந்த கலோரி மதிப்பு , மற்றொன்று உயர்கலோரி மதிப்பு. சென்னையில் இயங்கும் அறப்போர் இயக்கம், 2018ம் ஆண்டு மாநிலத்தின் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு அளித்த புகாரில் “நிலக்கரி விலைப்பட்டியல் ஊழல்” என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மின் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது. இது சாமானியர்களுக்கான அதிக மின் கட்டணமாக நேரடியாக சாமானியர்களை பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
2012 மற்றும் 2016 க்கு இடையில் மின் வாரிய நிலக்கரி கொள்முதலில் மொத்தம் ரூ.6000 கோடி வீணாகியுள்ளதாகவும், இதில் பாதியை அதானி வழங்கியதால், அதானியால் மட்டும் ஏற்பட்ட இழப்பு ரூ3,000 கோடியாக இருக்கும் என்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக ஆவணங்களில் அதன் ஆய்வகத்தில் மற்றும் மூன்றாம் தரப்பு சோதனை நிறுவனங்களின் சான்றிதழ்கள் அடங்கும், இது 2014 கொள்முதல் ஆர்டரின் கீழ் அதானி வழங்கிய நிலக்கரி விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்ததாக மின் வாரிய விஞ்ஞானிகள் மற்றும் மூன்றாம் தரப்பு சோதனை நிறுவனங்களின் சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. இந்திய பவர் கிரிட்டில் பணிபுரியும் ஒருவர், தேவைக்கேற்ப உற்பத்தியை சமநிலைப்படுத்த நிலக்கரி இருப்பு மட்டுமே தொடர் கண்காணிப்பில் இருக்கும், இந்த நேரத்தில் நிலக்கரியின் தரம் பற்றிய எந்தவொரு கேள்வியும் தேவை இருக்காது என்று கூறினார்.
You must be logged in to post a comment.