கோடை காலம் முடிவடைந்தும் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர். மழை பொழிய வேண்டி கிராமங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூழ்வார்த்து வருண யாகம் செய்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.புதுப்பாளையம் அருகே உள்ள ஜப்திகாரியந்தல் கிராமத்தில் பெய்த மழையினால் அந்த கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் வடியாமல் தேங்கி காணப்படுகிறது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிவிடும். அதிக நாட்கள் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. சாலை வசதியும் கிடையாது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை’ என்றனர்.இதே போல கலசபாக்கம், போளூர், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-கலசபாக்கம் -187, வெம்பாக்கம் -16.60, செய்யாறு -26, வந்தவாசி -28, ஆரணி -35.20, தண்டராம்பட்டு -37, செங்கம் -40.40, சாத்தனூர் அணை -44.60, திருவண்ணாமலை -48.60, கீழ்பென்னாத்தூர் -61.60, சேத்துப்பட்டு -74.60, போளூர் -107.
Category:
செய்திகள்
உசிலம்பட்டியில் மழை வேண்டி மாசாணி அம்மன் கோவில் ஊர்வலம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் கிராமத்தில் மாசாணி அம்மன் கோவில் உள்ளது.குறிப்பிட்ட (நாடார்) சமுதாய மக்கள் மாசாணி அம்மன் கோவிலைக்கட்டி நிர்வகித்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆடி மாதக் கடைசியின் போது அப்பகுதி மக்கள் உள்ள ஊர்களில் மழை வேண்டி மாசாணி அம்மன் ஊர்வலம் நடைபெறும்.
.இதன்படி மதுரையிலிருந்து கிளம்பிய ஊர்வலம் உசிலம்பட்டி கீழப்புதூரை வந்தடைந்தது. பின்னர் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது.ஊர்வலத்தின் போது பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி சிலை ஊர்வலத்தில் பங்கேற்றனர்.இந்த சாமி ஊர்வலத்தின் போது மக்கள் தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொண்டால் அடுத்த அம்மன் ஊர்வலத்தின் போது அது நிறைவேறும் என்பது ஐதீகம்.மேலும் நீருக்காக யாரிடமும் கையேந்தக் கூடாது.தமிழ்;நாட்டில் மழை பெய்ய வேண்டும்.மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊர்வலம் நடைபெறுவதாக கோவில் நிர்வாகி ரங்கராஜ் தெரிவித்தார்.இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டத்திலிருந்து தற்போது பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர் வீச்சி உள்ளது. நேற்று இரவு முதல் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது. இன்று 18-ம் தேதி காலையிலிருந்து ஜலகாம்பாறை அருவிலிருந்து நீர் கொட்டி கொண்டு இருக்கிறது. அருகில் இருக்கும் முருகன் கோவிலில் அருகே வெள்ளம் ஆர்பரித்து ஓடும் காட்சி ரம்மியமாக உள்ளது.திருப்பத்தூர் பகுதியில் 73 மிமி மழை பதிவாகி உள்ளது. இதுவரலாறு காணாத மழை.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை அருகே செல்லும் வைகை ஆற்றுப்படுகையில் 11 மடையில் இருந்து தமிழக வனத் துறை அமைச்சரிடம் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி , மட்டப்பாறை ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கண்மாய்களை தமிழக அரசின் தமிழக முதல்வர் சிறப்பு திட்டமான குடி மராமத்து பணி 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் திட்ட பணியை கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தொடங்கிவைத்தார்.
இதனை நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல சி. சீனிவாசன நேரில் வந்து ஆய்வு செய்தார் . அப்போது அங்கிருந்த பிள்ளையார்நத்தம் கம்மாய் மற்றும் மட்டப்பாறை கம்மாய் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் பாரதரத்னா எம்ஜிஆர் காலத்தில் தொடங்கிய வைகை ஆற்றில் உள்ள 11 வது மடையில் இருந்து மழை காலத்தில் நேராகச் செல்லும உபரி் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை பெற்ற தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இம்மனு மீதான உரிய பரிசீலனை செய்யப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், தேன்மொழி சேகர், நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன்,திண்டுக்கல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதய குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, சேகர், நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி செயற்பொறியாளர் நீதிபதி,முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய துணைச் செயலாளர் நல்லதம்பி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொடைக்கானலில் 2-வது சீசன் துவக்க மாக பூத்து குலுங்கும் இளம் சிவப்பு ப்ரூனஸ் பூக்கள் ..சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டத்தில் மலை களின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மாதம் துவங்கி மே – ஜூன் மாதம் முடியும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதம் 2-வது சீசன் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும்
தற்போது தொடைக்கானல் மலை முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது. மேலும் கொடைக்கானலின் மய்யUகுதியில் அமைந்துள்ள நட்த்திரஏரியை சுற்றி பூத்துள்ள இந்த ப்ரூனஸ் மலர்கள் நடுவே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த இளம் சிவப்பு ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எம்.வாரியார்
நன்றி : செந்தில் முருகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் பேருந்துகளின் கட்டணம் கொள்ளை ..போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்குமா
by mohan
written by mohan
மதுரையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1500 லிருந்து அதிகபட்சம் 2500 ரூபாய் வரைக்கும் டிக்கெட் விற்பதாக புகார் எழுந்துள்ளது .. ஆன்லைனில் redbus இணையதளத்தில் அதற்கான தொகையை பார்க்கும்பொழுது நடுத்தர குடும்பத்தினர் எப்படி பயணம் செய்வது என குழம்பிப்போய் உள்ளார்கள் ..வட்டார போக்குவரத்து அலுவலகம் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக இந்த கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ..
மேலும் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பாதி பேருந்துகளுக்கு முறையான அனுமதி இல்லாமல் இயக்கப்படுவது ஆகும் ..திருவிழாக் காலங்களில் மற்றும் சீசன் நேரங்களில் ஸ்பேர் பஸ்ஸை எந்தவித பராமரிப்பும் இல்லாமலும் இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும்போது பயணிகளுக்கு இழப்பீடுகளை கொடுப்பது இதற்கு பொறுப்பு ஏற்பது யார் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ..இதனை களைய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தனியார் ஆம்னி பேருந்துகளை உரிய ஆவணங்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகின்றனவா என சோதித்து கட்டணக் கொள்ளையில் தடுக்குமாறு பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக., சார்பில் 156 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, சமூக சேவகர்களுக்கு விருது, சமூக நல்லிணக்க விழா நடந்தது. தொண்டி நாச்சியா மகாலில் நடந்த முப்பெரும் விழாவிற்கு தொண்டி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். மெளலவி தாஹிர் சைபுதீன் கிரா அத் ஓதினார்.
வட்டார ஐக்கிய ஜமாத் துணை தலைவர் ஏ.ஆர்.ஏ.ஹசன் அலி பாஜில் ஜமாலி, இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள் எல்.ஆர்.சி. சின்னதம்பி, ராஜா, கிறிஸ்துவ மக்கள் மன்றம் எப்.கிறிஸ்துவ தாஸ் முன்னிலை வகித்தனர். தமுமுக – மமக., தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, மமக., பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் கே.முஹமது கவுஸ், தமுமுக., மாநில செயலாளர் எம்.சாதிக் பாட்சா, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ஜே.கி துர், ஐமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் அல்ஹாஜ் எச்.முஹமது ஜலாலுதீன் அன்வாரி, தொண்டி புனித சிந்தாதிரை ஆலய பங்கு தந்தை சவரிமுத்து, தேசிய நல்லாசிரியர் திருவாடானை ப.உதயகுமார், தொண்டி கோபி ஆகியோர் பேசினர். தொண்டி தமுமுக – மமக., தலைவர் எஸ்.காதர் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரை சேர்ந்தவர் சண்முகம் மகன் ரவி 54. இவர் புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியாற்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருப்பத்தின் பேரில் பணி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் எஸ்.புதூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் தனது வீட்டின் பின்புறம் இருந்த வறண்ட நிலையில் இருந்த உரக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றின் உள்ளே தவறிவிழுந்தார். . உடனே பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு மிட்புபனியில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டு அருகிலுள்ள வா.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதுரைவீரன் மற்றும் ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கீரைத்துறை, சிந்தாமணி ரோடு பழைய சோதனை சாவடி அருகில் வாகன சோதனையின் போது காரில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக் விஜயகுமார் கணேஷ் பாபு ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து 5.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை கிளைகள் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.இந்தியாவின் 73 வது சுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் ஒரு அங்கமாக, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை கிளைகள் மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவ இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட செயலாளர் ஜே.எம். ஆரிப்கான் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர்கள் நசுருதீன், தினாஜ்கான், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 54 யூனிட் ரத்த தானம் வழங்கினர்.கீழக்கரை கிளை நிர்வாகிகள் சுல்தான், சித்கக், ஷபீக், முஷரப், அன்வர்தீன், சீனி, லாபிர்ஹுசைன்,அஸ்லம், கமர்தீன், ஹபீப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். 14.8.19 அன்று புதுமடத்தில் (25யூனிட்) 15.8.19 அன்று இராமநாதபுரத்தில் (27 யூனிட்) நடைபெற்ற இரத்ததான முகாம்களில் 52 யூனிட் இரத்தம் தானம் வழங்கப்பட்டது. 19.8.19ல், தங்கச்சிமடம், 20.8.19ல் பரமக்குடியிலும் இரத்ததான முகாம நடைபெற உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனிதர்கள் மத நல்லிணக்கம் கடைபிடிக்க வேண்டும் கீழக்கரையில் நவாஸ் கனி எம்.பி., அறிவுரை
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம், வடக்கு தெரு சமூக நல அமைப்பு ( நாசா), இஸ்லாமி கல்வி சங்கம், முஸ்லிம் பொது நல சங்கம், முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற கழகம் (மைபா), கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட கீழக்கரை சமூக நல அமைப்பில் சார்பில் பக்ரீத் பெருநாள் சந்திப்பு கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிதழ்ச்சி வள்ளல் சீதக்காதி சாலை ஹூசைனியா மகாலில் நடைபெற்றது. கீழக்கரை அனைத்து சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜமாத் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முகமது சாலிஹ் ஹூசைன் வரவேற்றார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி காயல்பட்டினம் இஸ்லாமிய அழைப்பாளர் ஜகரியா, கோவை இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷைக் சதக்கத்துல்லா உமரி , இஸ்லாமிய கல்வி சங்கத் தலைவர் முகமது தவ்ஹீத் ஜமாலி ஆகியோர் பேசினர். முகமது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அகமது ஹூசைன் ஆரிப் தொகுத்து வழங்கினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பேசியதாவது: நல் நடத்தைகள் மூலம் ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்படுகின்றனர். ஜாதி, மதம் கடந்து நற்செயல்களால் அடையாளம் காணப்படும் மனிதன் தன்னை மேலும் பண்படுத்தி பிறருக்கு உதவுபவராக மிளிர வேண்டும். அவர் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை தொடர் பேணி வந்தால் சமூகத்தில் உயர்ந்த நிலை அடையாளம். சமூக நல்லிணக்க விழாக்களில் கலந்து கொண்டு இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டைகாப்போம்இவ்வாறுபேசினார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும், சாயல்குடி அருகே குதிரை மொழி உவர் நீர் நன்னீராக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த தமிழக அரசிடம் வலியுறுத்துவேன். கீழக்கரையில் மீன் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பரிந்துரைப்படும் என்றார். தமுமுக., முன்னாள் மாநில செயலாளர் சலீமுல்லா கான், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.மத நல்லிணக்கம், மனித நேயம் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு இஸ்லாமிய அழைப்பாளர்கள் காயல்பட்டினம் ஜகரியா, கோவை அஷ்ஷைக் சதக்கத்துல்லா உமரி விளக்கம் அளித்தனர். இஸ்லாம் மார்க்கம் தொடர்பாக சிறந்த கேள்விகள் எழுப்பிய ஆண்கள், பெண்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை சார்பில்இருதயம், புற்று நோய், சர்க்கரை நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் கேணிக்கரையில் நடைபெற்றது இம்முகாமில் மருத்துவ பரிசோதனைகள், இருதய நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள், ஆஞ்சியோகிராம் பரிசோதனை, ஆஞ்சியோபிளாஸ்ட், ஸ்டெண்ட் சிகிச்சை, இருதய வால்வு சுருக்கத்திற்கு பலூன் சிகிச்சை, பேஸ்மேக்கர் கருவி பொருத்துதல், இருதயத் துவாரங்களை கருவி கொண்டு மூடுதல், புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சைகள், கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை கீமோதெரபி சிகிச்சை,(அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ்) சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்செந்தில் செல்வானந்த் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலாளர் பிரபு,மாவட்ட மகளிர் அணி செயலாளர் கோகிலா,மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் மதிசூடன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மணிகண்டன்,நகர் செயலாளர் கணேசமூர்த்தி, நகர் துணைச் செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவின் 43 – ஆம் ஆண்டு ஜெயந்தி விழா முன்னிட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
by mohan
written by mohan
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவின் 43 – ஆம் ஆண்டு ஜெயந்தி விழா முன்னிட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சக்தி அம்மாதலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டு மாணவ – மாணவியர் 500 பேருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகையை வழங்கினாா்.அமெரிக்க பக்தை வின்சைனைடர் ஸ்ரீபுரம் அறங்காவலர் சவுந்தராஜன் நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, தங்க கோவில் இயக்குநர் சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார். தற்போது பொதுமக்களின் நலன் கருதி இராமநாதபுரம் ஓம் சக்தி நகர்,நேரு நகர் 9வது தெருவில் வரும்19/08/2019 திங்கட்கிழமை காலை 11மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமையில் நடைபெறும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் முகைதீன் திறந்து வைக்கின்றார்.இந்த விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி கிளிதாண் பட்டறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 348-வது ஆராதனை விழா நடைபெந்றது.சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை சிறப்பு பூஜை,சொற்பொழிவு யாக பூஜை அன்னதானம் நடைபெற்றது ஏரள மான Uத்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகி மோதிலால் மற்றும் Uக்தர்கள் செய்து இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளி 10, 11, 12 மாணாக்கர், ஆசிரியர்களுக்கு பாராட்டு
by mohan
written by mohan
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018 – 19 கல்வி ஆண்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் , இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவியர், நூறு சதவீத தேர்ச்சிக்கு நன்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு உச்சிப்புளி பேட்மின்டன் கிளப் சார்பில் பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது. கிளப் தலைவர் கே.ஆர்.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் விகேஎம் செல்வகுமார், உறுப்பினர்கள் ரவீந்திரன், ஜாஹீர், அனுராஜ், முருகானந்தம், திருமேனி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெல்ஃபேர் கட்சி கீழக்கரை நகர் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது .கீழக்கரை நகர பொறுப்பாளர் ஹமீது தலைமை தாங்கினார் ,சென்னை மாவட்ட தலைவா் முஸம்மில் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார் .எதிர்கருத்தை எடுத்துரைக்கும் சுதந்திரமும், எதிர் கருத்தாளர்களுக்குமான பாதுகாப்பு சுதந்திர இந்தியாவில் பறிபோன அவலம் குறித்த கருத்துரை வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை சமூக அமைப்புகள்,சமுதாய நல்லிணக்கத்திற்கு கலங்கரை விளக்கமாக நடைபெற்ற சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று (17/08/2019) கீழக்கரை ஹூசைனிய்யா மஹாலில் கீழக்கரையில் பல சமூக தொண்டுகளை செய்து வரும் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (N A S A), இஸ்லாமிய கல்வி சங்கம், முஸ்லிம் பொது நல சங்கம், முஸ்லிம் வாலிபர் முன்னேற்றம் சங்கம் (M Y F A), கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு மற்றும் கலந்துறையாடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் வரவேற்புரையை சட்ட விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் நிகழ்தினார்.அனைத்து சமூக,சமுதாய அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தன் சிறப்புரையில் பேசிய அவர் இப்படிப்பட்ட சிறப்பு மிகு நிகழ்ச்சிகளால் சமூக நல்லிணக்கம் மேம்பாடு அமைவதோடு நாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்ற தலைப்பில் காயல்பட்டினம் ஜகரிய்யா,சதக்கத்துல்லாஹ் உமரி சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை தலைவர் கலைவாணி பேசுகையில், “சமுக நல்லிணக்கத்திற்கு எங்கள் அறக்கட்டளை எடுத்துக்காட்டாக திகழ்கின்றது எங்கள் அறக்கட்டளையின் முதன்மைச்செயலாராக சமூக பணி செய்வது தஹ்மீதா பானு என்ற முஸ்லிம் பெண் ஆவார். எங்கள் அறக்கட்டளையில் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் முஸ்லிம் பிரமுகர்களை அனுகி உதவி செய்ய கேட்டு கொள்வதாகவும், தன் மேல் உள்ள நம்பிக்கையில் முஸ்லிம் அறக்கட்டளையை சேர்ந்த அன்பர்கள் தொடந்து உதவி செய்து வருவதாகவும் இதில் கீழக்கரையை சேர்ந்த சத்திய பாதை கல்வி தர்ம அறக்கட்டளை நிறுவனர் செய்யது ஆப்தீன் முக்கியமானவர்” என்றார். விழாவில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் தமுமுக மூத்த தலைவர் சலீமுல்லாகான் மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வின் நன்றியுரையை இஸ்லாமிய கல்வி சங்க தலைவர் முஹம்மது தவ்ஹீத் ஆலீம் ஆற்றினார். நிகழ்ச்சி தொகுப்புரையை முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் அஹமது ஹூசைன் ஆசிப் செய்தார்.
நிகழ்ச்சியில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பயனுள்ள கேள்விகளை கேட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிறைவில் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளித்து சிறப்பிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் ” – பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !
by mohan
written by mohan
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்,தாங்களே களத்தில் இறங்கி , தாங்கள் வாழும் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பணியில் நாளில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,ஆசிரியை முத்துமீனாள் ஆகியோரின் ஆலோசனையின்படி மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஒவ்வொரு தெருவாக சென்று, வீடுகள் மற்றும் தெருக்களில், கொசு உற்பத்திக்கு சாதகமாக உள்ள, பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்ற, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில், மாணவர்களே களத்தில் இறங்கி, தேவையற்ற பொருட்களை அகற்றினர். மாணவர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
by mohan
written by mohan
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்டம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் கிராமசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தாங்கள் பங்கேற்ற கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், கழிவறை, சாய்வுதளம், நூறு நாள் வேலை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கூட்டத்தில் எழுப்பி விவாதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி கிராமத்தில் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையிலும், சித்துவார்பட்டி கிராமத்தில் ஒன்றிய தலைவர் சிவா தலைமையிலும், புத்தூர் கிராமத்தில் கிளை செயலாளர் ராஜாராம் தலைமையிலும், ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு கிராமத்தில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி தலைமையிலும், சித்தரேவு கிராமத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையிலும், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் கே.கீரனூர் கிராமத்தில் கிளைத்தலைவர் தண்டபாணி தலைமையிலும், பொருளூர் கிராமத்தில் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி தலைமையிலும், நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பஞ்சு தலைமையிலும், ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கட்டசின்னான்பட்டி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையிலும் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
கிராம சபைகளில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.