திருவண்ணாமலை நகரில் உள்ள புதுத்தெரு ஏழாவது தெருவில் வசிக்கும் குமார் என்பவர் மகன் சதீஷ்குமார் மற்றும் சேட்டு என்பவரது மகன் சிவா ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலாள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஸன் மேல் நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சதிஷ்குமார் மற்றும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிவா ஆகிய இரண்டு பேருக்கும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் காய்ச்சல் குணமடையததால் தி.மலை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் இன்று அனுமதித்துள்ளனர்.மருத்துவர்கள் சோதித்ததில் சதிஷ் மற்றும் சிவா ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
Category:
செய்திகள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் சென்னை பெசன்ட் நகர் தேவலாயங்களில் கொடி ஏற்றம் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மற்றும் பெசன்ட் நகர் தேவாலயங்களில் கொடி ஏற்றம் துவங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவிற்கு பல நாடுகளிலிருந்து Uக்தர்கள் வருவார் கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.77.23 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒருகிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கிகூறப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களிலும் ஆக. 21 முதல் 31 வரை, தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இதுவரை 265 கிராமங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5,600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.மீதமுள்ள கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் ஆய்வு
செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் மீது தீர்வு காண அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்நிலை புனரமைப்பு பணிகளில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்” என்பதை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் திறந்த வெளி மலம் கழித்தலற்ற முழு சுகாதார ஊராட்சிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரித்து பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கலாம். தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிப்பு அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது. பொதுமக்கள்,
வணிகர்கள் , வியாபாரிகள், உணவு விற்பனையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பிளாஸ்டிக் பொருட்களை
தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன், மாவட்;ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணக்கண்ணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கோபு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல்
உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு துறை பணியில் சேர சிறப்பு பயிற்சி விழிப்புணர்வு கருத்தரங்கு
by mohan
written by mohan
இந்திய கடலோரக் காவல் படை மற்றும் கடற்படை பணியில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சேருவதற்கானபயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் தமிழ்நாடு மீன் வளத் துறை சார்பில் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கூட கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.மண்டபம் மீன் வளத் துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின் தலைமை வகித்தார். பாதுகாப்பு அகாடமி இயக்குநர் ஏ.சுரேந்திரன் கூறுகையில் விழுப்புரம், கடலூர், சீர்காழி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு அமைப்புகளான கடலோரக் காவல், கப்பற்படையில் நேவிக்(பொதுப்பணி), மாலுமி உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வில் பங்கேற்பது தொடர்பாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி இப்பயிற்சியில் சேர விரும்பும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 17- 22 வயது, குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம், பார்வை திறன் 6/6- 6/9 உடைய இளைஞர்கள் கல்வி தகுதி அடிப்படையில் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். இவர்களுக்கு சென்னையில் 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் அடிப்படையில் இந்திய கடலோரக் காவல், கப்பற்படை, விமானப் படை ஆகியவற்றில் பொது பிரித, மாலுமி ஆகிய பணிகளுக்கான எழுத்து, உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு எளிதில் சேர வாய்ப்புண்டு என்றார்.
இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் , பாம்பன், மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் , மீனவ இளைஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மீன் வள ஆய்வாளர்கள் ரகுமத்துல்லா கான் (ராமேஸ்வரம் ), சகுபர் சாதிக் (மண்டபம்), மீன்வள சார் ஆய்வாளர் தர்மதுரை, மீன் வள மேற்பார்வையாளர் சர்புதீன் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயனி ஒருவரை சூழ்ந்து தாக்கிய நடத்துனர்கள்
by mohan
written by mohan
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடத்துநர் மற்றும் பயணிக்கு இடையே கடுமையான மோதல் ஒருவரை ஐந்துக்கும் மேற்பட்ட நடத்துனர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியை கண்ட கூடி நின்ற மற்ற பயணிகள் அவர் தவறே செய்திருந்தாலும் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தது தவறு என்று கூறினர்.இந்நிலையில் தாக்கிய நடத்துனா்கள் காயம் அடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக தேனி, போடி, கேரளா, திண்டுக்கல், திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லுவதற்காக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில் உசிலம்பட்டியின் ரவுன்டானா பகுதியான தேவர்சிலை அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகனை சாலையிலே வழிமறித்து சோதனையில் ஈடுபடுகின்றனர். இதனால் பின்னால் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்தை இயக்கும் வான ஓட்டிகள் பெரிதும் சிரமபட்டுவருகின்றனர். பெரும்பாலும் சரக்கு வாகனங்களை சோதனை செய்வதலில் ஆர்வம் காட்டாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையே வழிமறிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
போக்குவரத்தை சரிசெய்யும் போலீசாரே போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்து போலீசார் வாகனசோதனை செய்யாமல் வேறு இடத்தில் சோதனை மேற்கொண்டால் நெரிசலை தவிர்க்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அராஜகம் செய்யும் தலைமை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
by mohan
written by mohan
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நீண்ட காலமாக நிலவி வந்த மருத்துவர் பற்றாக்குறை நீங்கி தற்சமயம் சுமார் 12 மருத்துவர்கள் வரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவை இப்பகுதி பொதுமக்களின் மருத்துவத் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாய் உள்ளது. இருப்பினும் இங்கு மேல் அதிகாரிகளின் அதிகாரங்களைக் காட்டிலும் இங்கு தலைமை செவிலியராய் பணிபுரியும் சந்திரா என்பவரது அதிகாரம் மேலோங்கியுள்ளது. இவரின் செய்கையால் இம்மருத்துவமனையில் பணிபுரியும் இடை நிலை ஊழியர் முதல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வரை பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். பொதுமக்களின் வரிப்பணம் கொண்டு அமைக்கப்பட்ட பொதுமக்கள் அமரும் இருக்கைகளை எந்த அறிவிப்பின்றி மேல் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் அப்புறப்படுத்தியுள்ளார். மேலும் மருத்துவமணைக்கு மருத்துவ தேவையை எதிர்பார்த்து வரும் பொதுமக்கள் அவசர சிகிச்சை பிரிவு அருகே சற்று இளப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளையும் அப்புறுப்படுத்தியுள்ளனர். அதே போல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எல்லா இருக்கைகளும் அகற்ற திட்டமிடபட்டுள்ளதாக செவிலியர் சந்திரா இருப்பதாக மருத்துவ மனை வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் இம் மருத்துவமனையில் பிரசவ பிரிவு, (ம) பிரசவ பண்டுவ பிரிவில் அதிக அளவில் ஊழல் நடைபெற்று வருகின்றது. இது குறித்து தலைமை செவிலியர் மீது இணை இயக்குநர் சரஸ்வதியிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரக்கூடிய நிர்வாகமே அதை இடித்து தரைமட்டமாக்கி பல மரணங்கள் நிகழ காரணமாக இருக்கப் போகும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அதிகார போதையில் ஜாதி வெறியோடு செயல்படும் செவிலியர்களின் கண்காணிப்பாளர் சந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டும் அல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி பல முறைகேடுகளை செய்துவரும் இவரை வேறு மாவட்ட மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்யவும், இவரின் மீது சுகாதார துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் சுங்கச்சாவடியில் துப்பாக்கிசூடு நடத்தி தப்பியோடிய 5 நபர்களை உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சுங்க கட்டணம் தர மறுத்து ஊழியர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர்களில் 5பேர் தப்பியோடிய நிலையில் அவர்கள் தேனியை நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார்கள் மடக்கிபிடிப்பதற்கான உஷார் நிலையில் இருந்தனர். அப்போது உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் காரில் வந்துகொண்டிருந்தபோது போலீசாரை கண்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஆட்டோவில் ஓட முயன்றனர். உடனே போலீசார் ஆட்டோவை நோக்கி பின்தொடர்ந்து மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரனை நடத்தியதில் என்னூரைச் சேர்ந்த தனசேகரன், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஹரிகிருஷ்ணன், வேலூரைச் சேர்ந்த துளசிராஜன், மற்றும் மதுரையைச் சேர்ந்த ரகுபதி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 கள்ள துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்று துறையில் பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி திருநெல்வேலி மாவட்டத்தின் தொன்மையையும் பண்பாட்டினையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களின் பெருமைகளையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதன் மூலம் மாணவ மாணவிகள் வரலாற்றை அறிந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைமாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த மருதுபாண்டி(27) இவர் மீது கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் தனது வீட்டின் அருகே உள்ளவர்களிடம் தகராறு செய்து சிறை சென்று மீண்டும் பெயிலில் வெளிவந்தவர் பரமேஸ்வரி என்ற பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியதாக அந்தப் பெண் கொடுத்த புகாரில் காடுபட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரைமாவட்டம் மேலூர் பேருந்து நிலைய பகுதிகளில் புதுப்பட ‘சிடி’ விற்பதாக மேலூர் போலீஸாருக்கு வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர் ..அதன்பேரில் புதுப்பட ‘சிடி’ விற்றதாக கஸ்தூரிபாய் நகர் நிஜாம் (40), அபுபக்கர் சித்திக் (47) ஆகிய இரண்டு பேரிடம் இருந்து 97 புதுப்பட ‘சிடி’ களை சாா்பு ஆய்வாளா்.சண்முக பாண்டியன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி அரியமங்கலம் சேர்ந்தவா் சசிகுமார்..இவா் தன் நண்பா்களுடன் காாில் சென்ற போது மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் சோதனைச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டுனர் சசிக்குமாருக்கும் நடைபெற்ற மோதலில் வாகன ஓட்டுனர் வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுட்டு சுங்கச்சாவடியில் தாக்குதல் நடத்தினார்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் சுற்றி வளைத்து சசிகுமாரை மடக்கி திருமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்தனர்.. தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு வருகிறார். மேலும் காரில் தப்பிய வர்களை தேடும் பணியில் காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட், வணிக வளாகம், மளிகைக் கடைகள், உரக்கடை , பேக்கரிகள், பொட்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தமிழக அரசால் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பாலித்தீன் கப், போன்றவர்கள் இருக்கிறதா என நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் திடீரென ஆய்வு செய்தனர்.நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விவசாயிகள் சிலர் பாலிதீன் பைகளில் மல்லிகைப்பூ, ஜாதிப்பூ அரளிப்பூ உள்ளிட்ட பூக்கள் அடைத்த பைகளை கொண்டு வந்திருந்தனர்.
இந்தப் பைகளையும், பூக்களையும் உடனடியாக அதிகாரிகள் பறிமுதல் செய்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலிதீன் போன்றவைகளில் பூக்களை அடைத்து விற்பனை செய்வது தவறான செயலாகும், இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபட்டால் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் விவசாயிகள் பொதுமக்கள் வணிகர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடனடியாக இது போன்ற பொருட்களை விற்க முன் வரக் கூடாது என எச்சரிக்கை செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில வணிக கடைகளில் சுமார் 100 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டு வந்து அங்கிருந்து தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதவியாளர் தங்கராசு, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் , சுகாதார மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மண்டபம் பேரூராட்சி 12 வார்டு பகுதி களஞ்சியம் நகர் ஆகும்.இங்கு பல வீடுகளில் சமீப காலமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.மின் பழுதை சீர் செய்ய மின் வாரிய ஊழியர்களை தொடர்புகொண்டால் யாரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதில் சொல்வதில்லை.அப்படியே பேசினால் பொதுமக்கள் மீது எரிந்து விழுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் கூறுகையில் இந்த பகுதியில் கடந்த 3 நாட்கள் மின்சாரம் இல்லை,
எங்கள் ஊரில் லயன் மேன் இல்லை அதனால் வேறு நபர்கள் வேலை செய்தும் மின்சாரம் சரியாக வரவில்லை. மறுபடியும் போன் செய்தபோதும் யாரும் வரவில்லை.மின்சாரம் இன்றி நாங்கள் அவதிபடுகிறோம்.எங்கள் பகுதியில் வசித்துவரும் பள்ளி.கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மின்சாரமின்றி எப்படி வீட்டில் படிக்க இயலும்.மின்வாரியத்தினரின் இந்த மந்தமான செயலால் எங்கள் பகுதி மக்கள் பல விதத்திலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளோம்.ஆகவே உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி மக்களின் குறைதீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆரணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து விழாக்குழுவினர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
by mohan
written by mohan
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது.ஆரணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து விழாக்குழுவினர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினர். ஆரணி தனியார் திருமண மண்டபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, ஜெயபிரகாஷ், சாலமோன் ராஜா, ரேகாமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வரவேற்றார்.ஆலோசனை கூட்டத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் பேசுகையில், “விநாயகர் சிலை வைத்து பூஜை செய்பவர்கள் காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது பேரூராட்சி, ஊராட்சி மன்றங்களில் அனுமதி பெற வேண்டும். 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அங்கு முதலுதவிக்கான மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் மற்றும் மணல் நிரப்பிய வாளிகள் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் விழாக் குழுவைச் சேர்ந்த பொறுப்பாளர்களே 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியை கவனிக்க வேண்டும்.வருகிற 4-ந் தேதி பகல் 2 மணியளவில் விநாயகர் சிலைகளை அண்ணா சிலை அருகே கொண்டு வந்துவிட வேண்டும். அங்கிருந்து ஊர்வலமாக செல்ல வேண்டும். ஒரு சிலைக்கு பின்னால் ஒரு சிலைவரவேண்டும். முந்திச் செல்லும்போது பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கப்பட வேண்டும்” என்ற அறிவுரைகளுடன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், தரணி, பார்த்தசாரதி, மன்னர்மன்னன் உள்பட போலீசாரும், விழாக்குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினா்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாிடம் கோாிக்கை மனு
by mohan
written by mohan
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.வி.அம்பேத்குமார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் “ சட்டமன்றத்தில் பேரவை தலைவரால் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கூட்டம் குறித்த காலக்கெடுக்குள் நடைபெறுவதும் இல்லை, ஆய்வு மேற்கொள்வதும் இல்லை” என்று கூறியிருந்தனர்.
பின்னர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தின் மூலமாகவும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள பணிகளின் விவரங்களை கேட்டறிந்து உள்ளோம். அதேபோன்று சட்டமன்றத்தில் பேரவை தலைவரால் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுக்கள் இதுவரை இந்த மாவட்டத்தில் எந்தெந்த பணிகளை ஆய்வு செய்துள்ளார்கள் என்ற விவரத்தையும் கலெக்டரிடம் கடிதம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ளோம். இதுவரை மக்கள் நலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள எந்த குழுவும் வரவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் எங்களிடம் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் என்னென்ன செயல்பட்டு வருகிறது என்ற விவரத்தை தெரிந்து கொண்டதோடு, பொதுமக்கள் எங்களிடம் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம்.
நமது மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் குழுக்கள் எவை? அந்த குழுக்களில் யார், யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தையும் கலெக்டரிடம் கேட்டுள்ளோம். விரைவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு கூட்டம், ஆய்வு பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழக அரசு குடிமராமத்து என்ற பெயரில் பொதுமக்கள் பங்கேற்புடன் பணி செய்வதாக சொல்லி அரசின் பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை, பொதுமக்களை கொண்டு செய்யாமல் அ.தி.மு.க.காரர்களும், அ.தி.மு.க.வை சார்ந்த ஒப்பந்ததாரர்களும் பணிகள் செய்வதால் பல இடங்களில் உள்ளூர் மக்கள், மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் முறையாக அப்பணிகள் பொதுமக்களை கொண்டு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டுக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
by mohan
written by mohan
உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் பானுகோபன் தலைமையில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவதற்கும் , அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் விழா கமிட்டியினர், பொதுமக்கள், இளைஞர்களிடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் விதம், சிலைகள் வைக்கும் இடம், வெடி வெடிப்பது, ஒலி பெருக்கி உபயோகிப்பது, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வது போன்ற பல்வேறு கட்டுபாடு, விதிமுறைகளை உசிலம்பட்டி கோட்டாட்சியர் பானு கோபன் எடுத்து கூறினார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி காவல் துணை கண்கானிப்பாளர் ராஜா, வட்டாட்சியர் செந்தாமரை, எஸ்ஐ சிவபாலன், மனிமொழி, விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறையினர், அனைத்து கிராம விஏஓக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை ஒன்றியம், சு. பாப்பம்பாடி கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு 200க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சு.பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, இதுநாள் வரை 100 நாள் வேலை வழங்கவில்லை என இப்பகுதி கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புதன் அன்று, மக்கள் ஒன்றுதிரண்டு அனைவருக்கும், வேலை வழங்கிட கேட்டு, அகில இந்திய வி. தொ. ச வட்டார செயலாளர் ஜெயராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகலநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி,தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கே வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் கே.வெங்கடேசன் நிர்வாகி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . தொடர்ந்து கோரிக்கை மனுவை வட்டர வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பேரூராட்சி சார்பாக கடைகளில் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் அபராத தொகையாக 5300 ரூபாய் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டது, திடீர் ஆய்வால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனா்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி இரவு நேரங்களில் 20க்கு மேற்பட்ட டிராக்டர்களில் செங்கல் சூலைகளுக்கு ஏரியில் இருந்து செம்மண் கொள்ளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனா். தொடர் கொள்ளை சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு தொிவித்தனா்.
You must be logged in to post a comment.