கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பயிற்சி பட்டறை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மனையியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பில் உலகளாவிய படைப்புத்திறன் பயிற்சி பட்டறை கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.கல்லூரி முதல்வரும், துறை தலைவருமான முனைவர்எஸ்.சுமையா தலைமை வகித்தார்.ஆடை வடிவமைப்பு துறை உதவி பேராசிரியர் ஆர்.லட்சுமி வரவேற்றார்.நவீன முறையில் ஆடைகள் வடிவமைப்பு, புதிய தொழில் நுட்ப முறையில் ஆடை அலங்காரம் குறித்து மாணவிகளுக்குஇந்தியா, இலங்கை இன்ஸ்டுடூட் ஆப் டிசைன் இயக்குநர் நதிம் செயல் விளக்கம் அளித்தார். மாணவிரபீபா சுலைஹா நன்றி கூறினார். பயிற்சி பட்டறை ஏற்பாடுகளை பேராசிரியைகள் செய்தனர்.
You must be logged in to post a comment.