இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த முனியாண்டி,60. இவரது மனைவி பாண்டியம்மாள், 55. கணவன், மனைவிக்கு இடையே நேற்றிரவு குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் , முனியாண்டியை கொலை செய்துவிட்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். க இக்கொலைக்கான காரணம் குறித்து போவீ சார் விசாரித்து வருகின்றனர்.
Category:
மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே மென்னந்தி நாகாச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 33. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமியை (26) காதலித்தார். இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆகாஷ், கனிஷ்கா என 2 குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இடையே கடந்த ஓராண்டாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கணவன், அவரது தாயார், சகோதரி ஆகியோர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக 1 பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சிவகாமி, 10 நாட்களுக்கு முன் புகார் அளித்தார். இந்நிலையில் மென்னந்தியில் தாய் வீடு சென்ற சிவகாமியை கயிற்றால் கழுத்தை நெரித்து ராஜா கொலை செய்து விட்டு தப்பினார். பரமக்குடி டிஎஸ்பி சங்கர் சம்பவ இடத்தில் விசாரித்தார். சிவகாமி உடலை சத்திரக்குடி போலீசார் கைப்பற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் முழுவதும் நேற்று முன்தினம் ( 03/7/2019) மாலை 6:30 மணியளவில் மின்சாரம் விட்டு விட்டு வந்தது. இரவு 7 மணி அளவில் பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, நகர் பகுதி முழுவதும் மின் சாரம் தடை பட்டது. ராமநாதபுரத்தில் திடீர் மின் வெட்டால் இரவு முழுவதும் பொதுமக்கள் துாங்கமுடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். ராமநாதபுரத்தில் அடிக்கடி மின் தடைபடுவதால் பொதுமக்கள் இடையே வழிப்பறி, திருட்டு பயம் நிலவுகிறது. ராம நாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. டீசலுக்காக ஜெனரேட்டர் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். இரவு முழுவதும் மின்சாரம் தடை தொடர்ந்ததால் ஓட்டல்கள் விரைவாக மூடப்பட்டன. கிரைண்டர், மிக்ஸி இயக்க முடியாததால் சமையலுக்கு ஓட்டல்கள், வீடுகளிலும் மக்கள் தவித்தனர். ஜூலை 3 இரவு 7 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை 14 மணி நேர மின் தடையால் தடையால் பல ஓட்டல்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு மீண்டும் வந்த மின்சாரம் சில மணி நேரம் மட்டும் நீடித்தது. வருவதும், போவதுமாக போக்கு காட்டிய மின்சாரம் இரவு 6 மணியளவில் தடைபட்டு விடிய, விடிய ஓய்வெடுத்துக் கொண்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போன், சிம்னி விளக்கு வெளிச்சம், மெழுகுவர்த்தி ஒளியில் படித்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வழுதுாரில் இருந்து ஆர்.எஸ்., மடை துணை மின் நிலையத்திற்கு செல்லும் வழியில் 110 கே.வி., லைனில் ஒரு இடத்திலும், ஆர்.எஸ்.மடை., காவனுார் இடையே ஒரு இடத்திலும் ஜூலை 3 ஆம் தேதி இரவு 7 மணியளவில் பழுது ஏற்பட்டது. பழுதை கண்டறிய பல மணிநேரமானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளது. காவனுார் மின்நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்., மடை வரை பாலிமர் டிஸ்க் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவடைந்தால் இது போன்ற பழுது குறையும் என்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடைபடுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். ஒரு மின் பாதையில் பழுது ஏற்பட்டால், மற்றொரு மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மாற்று திட்டங்களை செயல்படுத்த மின் வாரியம் முன் வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் சேவையே என் முதல் பணி…கீழக்கரை வருவாய் ஆய்வாளர் சாரதா சிறப்பு பேட்டி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை வருவாய் ஆய்வாளராக சிறப்பாக பணி செய்து வருபவர் திருமதி சாரதா B.Com பட்டதாரியான இவர் மக்கள் சேவையே தனது முதல் பணி என்று சிறப்பாக பணி ஆற்றி வருகின்றார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக சிறப்பாக பணி புரிந்த இவரை அரசு கீழக்கரை வருவாய் ஆய்வாளராக பணியமர்த்தியது. வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்த நாள் முதல் அனைத்து தரப்பு மக்களின் சான்றிதழ்கள், அரசு நிதி சம்பந்தப்பட்ட மனுக்கள்,வருவாய் சான்று, இருப்பிட சான்று, மற்றும் சாதி சான்றுகளை முறையாக நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மனுக்களை வட்டாச்சியருக்கு உடனடியாக பரிந்துரை செய்கின்றார்.
இதன் மூலம் இப்பகுதி மக்களின் நன் மதிப்பை பெற்று வருகிறார். இவர் கணவர் இராமநாதபுரம் மாவட்ட நீதி மன்றத்தில் சிறந்த வழக்கறிஞராக இருக்கின்றார்.
நமது கீழை நியூஸ் இணைய தள பக்கத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “கீழக்கரை பொதுமக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட எந்த தேவைகள் இருப்பின் என்னை நேரில் அணுகி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். நான் பொதுமக்களின் நியாயமான, உண்மையான மனுக்களை பரிசினை செய்து சான்று வழங்க பரிந்துரை செய்வேன்.என்னிடம் சான்றிதழ் பெற பொதுமக்கள் யாரையும் அணுக வேண்டாம். பொதுமக்கள் வேலை நேரத்தில் என் அலைபேசியில் தொடர்ப்பு கொண்டு நேரில் என் அலுவலகத்திற்கு வந்து வருவாய் சம்பந்தப்பட்ட மனு மீது தீர்வு காணலாம் பொதுமக்களுக்கு உதவ காத்து இருக்கின்றேன். பொது மக்கள் சேவையே என் முதல் பணியாகும்” என்றார். வருவாய் ஆய்வாளர் அவர்களின் அலை பேசி எண்:-9944871665.
இவர் பணி சிறக்கவும், அவருடைய பணி கீழக்கரை மக்களுக்கு பயனுள்ளதாக அமையவும் கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் 07/07/2019அன்று MYFA நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் 07/07/2019 – ஞாயிறு அன்று புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் சங்கம் (MYFA) சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை நூரானியா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் மீனாட்சி மிஷன் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரம்பலூரில் ஜூன் 29 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு முடிவின்படிபிரதமரின் கிஸான் சமான் திட்ட பணிக்கான கால அவகாசம், நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் காலிப் பணியிடங்களை வெளி முகமை மூலம் நியமனத்தை கைவிட வேண்டும்.டாஸ்மாக் மேலாளர் பணி நியமனத்தை துணை ஆட்சியர் நிலையில் வருவாய்த்துறை மூலம் தொடர வேண்டும்.ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியமர்த்தும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலர் காசிநாத துரை, ராமநாதபுரம் வட்ட பொருளாளர் சிவக்குமார், வட்ட கிளை துணைத் தலைவர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த விஷாரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது.தகவல் அறிந்த மின்சாரத்தை தடை செய்தது.உடனடியாக ஆற்காட்டில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியகுளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல்.அரசு நடவடிக்கை எடுக்குமா.
by mohan
written by mohan
தேனி மாவட்டம் பொியகுளம் பகுதி ஆற்றுப்படுகைகள் அதிகம் என்பதால் இங்கு இயற்கை கனிம வளங்கள் அதிகம்.இதனைப் பயன்படுத்தி சில கும்பல்கள் மணல்-கிராவல் போன்ற இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகின்றன.மணல் கடத்தல் புகார் தொடர்ந்து வந்தாலும் நடவடிக்கை என்பது மெத்தனமாகவே இருந்து வருகின்றது நேற்று இரவு லட்சுமிபுரம் பகுதிக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் ஜேசிபி, மற்றும் டிப்பர் லாரிகளுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட கனிம வள அதிகாரி விஜயகுமாருக்கும், தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கும் தெரிய வர ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி, மற்றும் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் இது தொடா்பாக கைலாசபட்டியைச் சோ்ந்த சுரேஷ் (எ) குண்டாஸ் சுரேஷ்-வரதராஜன் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.விசாரணையில் குண்டாஸ் சுரேஷ் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல், கிராவல் போன்ற இயற்கை வளங்களை குண்டர்களின் துணையுடன் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதாகவும் இது குறித்து கேள்வி கேட்கும் அதிாாிகள் செய்தியாளா்களை லாாி ஏற்றி கொல்லமுயன்றதாகவும் கூறப்படுகிறது.எனவே அரசு இவரது அடைமொழி பெயருக்கு ஏற்றாா் போல் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென மூக ஆர்வலர்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.
சாதிக் பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலின் முன்னாள் இணை ஆணையரும் தற்போது திண்டுக்கல் இந்து சமய அறநிலைய துறையில் அதிகாரியாக பணிபுரிபவருமான அனிதா மதுரை சரக காவல் துறை தலைவரிடம் பச்சையப்பன் மீது அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பேரையூர் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையில் போலிசார் பேரையூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலின் சிலை மாயமானது தொடர்பாக இந்து அறநிலைத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் சங்கர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வேலூர் தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.இன்று பகல் இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் – 5ம் தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.அதன்படி இம்மாதம் ஜூலை 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கம். கடைசி நாள் ஜூலை 18
வேட்பு மனு பரிசீலனை ஜூலை 19 மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் ஜீலை 22 தேர்தல் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 5, வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9இன்று 4 – தேதி முதல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்துமக்கள்கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலைகண்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது
காவல்துறையினருக்கு நன்றி !சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்பட பல கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்தும் பல்வேறு குற்றசெயல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பச்சையப்பன் மீது இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் திருமதி வனிதா அவர்களின் புகாரின் படி வழக்குபதிவு செய்து 4-7-2019 அதிகாலையில் பச்சையப்பனை கைது செய்த மதுரை மாவட்டம் சாப்டூர் காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட இந்துமக்கள்கட்சி சார்பாக நன்றி!நன்றி!! நன்றி!!!அரசன் அன்றே கொல்லுவான்!தெய்வம் நின்றே கொல்லும் என்பதற்க்கும் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்க்கும் இதுவே சாத்தியம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனாதை இல்லத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்… கனவு காணுங்கள் வெற்றியடையலாம் என்பதற்கு ஒரு உதாரணம்….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சிறு வயதில் குடும்ப வறுமை காரணமாக அனாதை இல்லத்தில் வளர்ந்த அப்துல் நாசர் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இவரின் ஐந்து வயதில் தந்தை மரணித்து விட இவருக்கு மூத்த மூன்று சகோதரிகளையும் காப்பாற்ற அண்டை வீடுகளில் கூலி வேலை செய்தும் போதிய வருமானம் இல்லாமல் தவிக்க, தனது மகனுக்காவது வயிராற உணவு கிடைக்கட்டும் என்று இவரது தாய் தீர்மானித்து அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளார்.
தலசேரி தாருல் ஸலாம் யதீம்கானாவில் ஆரம்ப கல்வியும், திருச்சூர் இஸ்லாமிக் ஆர்பனேஜ் கல்லூரியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற அப்துல் நாசர், யதீம்கானா உதவியுடன் பிரண்ணன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து பகுதி நேர வேலை செய்து கொண்டே கோழிக்கோடு பரூக் கல்லூரியில் சேர்ந்து எம.ஏ, தேர்ச்சி பெற்று, பி.எட்., மற்றும் முதுகலை சோசியல் ஒர்க் படிப்பும் தேர்ச்சி பெற்றவர். ஆரம்பத்தில் கேரள சுகாதார துறையில் ஆய்வாறராக பணியில் சேர்ந்த அப்துல் நாசர் 2006 ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியை துவங்கியவர்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி 2015 ல் கேரளாவில் சிறந்த துணை ஆட்சியருக்கான விருதை பெற்றவர். 2013, 2017 ம் ஆண்டுகளில் மத்திய அரசின் ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தார். தற்போது கேரள அமைச்சரவை சிபாரிசின் பேரில் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் அப்துல் நாசர்.
சிறு வயதில் 1982ம் அனாதை இல்லத்தில் வளரும் போது ஆய்வுக்கு வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் காந்தை பார்த்து மனதுக்குள் தானும் வளர்ந்து இதேபோல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை வளர்த்தேன் என்று பெருமையுடன் கூறுகிறார.
செய்தி தொகுப்பு…அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்..கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
by mohan
written by mohan
சென்னை தலைமை செயலகத்தில் ரூ 159 கோடி மதிப்பிலான 500 புதிய பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பஸ்கள் உள்ளிட்ட 500 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. விழாவில் துணை முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கும்பகோணத்தில் தாராசுரத்தில் தனியாருக்கு சொந்தமான இந்தியன் பெட்ரோல் பங்கில்.. 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கும்பகோணத்தில் தாராசுரத்தில் தனியாருக்கு சொந்தமான இந்தியன் பெட்ரோல் பங்கில்2 லட்சம் கொள்ளை 4 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணத்தில் தாராசுரம் அருகே இந்தியன் பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் போட வந்துள்ளனர் அப்பொழுது பங்கில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார் அவர் பணம் இருக்கும் மேசையை சாற்று வைத்துவிட்டு பெட்ரோல் போட்டுள்ளார் அப்பொழுது ஐந்து பேரில் ஒருவன் மட்டும் பின் பக்கமாக சென்று மேசையிலிருந்த ரொக்கப்பணம் 2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினான் இந்தத் திருட்டை குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார் அதனைத் தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய்சந்திரன் உத்தரவின்படி கிழக்கு ஆய்வாளர் மகாதேவன் குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை இருப்பினும் தப்பி ஓடியவர்கள் அடையாளம் தெரிந்த அதே பகுதியை சேர்ந்த நபர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தை போலீசாரின் விரைவான நடவடிக்கை காரணத்தினால் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் சென்று அங்குள்ள இரு நண்பர்களின் உதவியோடு இருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கருவக்காட்டு மறந்திருந்த 5 நபர்களும் காவல்துறையினர் கண்டதும்தப்பி ஓட முயன்றனர் நந்தகோபாலன் பாலு அரவிந்த் விக்னேஷ் பிரகாஷ் ஆகிய ஐந்து நபர்களை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர் தொகை முழுவதையும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் இரு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
செய்தி தொகுப்பு.அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்.கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் காதல் ஜோடி வெட்டி கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த சோலைராஜ்(24)என்பவர், அதை பகுதியை சேர்ந்த ஜோதி(21)ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இன்று காலை சோலைராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் இரட்டை கொலை சம்பவத்தால் குளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர். கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (04/07/2019) நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விவேகானந்தா நினைவு நாளை ஒட்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் விவேகத் துறவி விவேகானந்தர் பற்றி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று03/07/2019 மாலை முதல் சுமார் ஏழுமணி இருந்து சமூக வலைத்தளங்கள் முடங்கியதுஉலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சமூக வலை தளங்கள் ஒரு நிமிடம் வேலை செய்யவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை இரண்டற கலந்துவிட்டன.இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயங்காமல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சினை தற்போது நிலவி வருகிறது.இதனால் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சாதாசிவம்(14) அருகில் உள்ள கம்பன் விதியாலயா தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் அருகில் உள்ளவர்கள் மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது மாணவன் இறந்தவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். முறையான போலிசார் விசாரனை தேவை என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மத்திய சிறையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கைதி ரமேஷ் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்று கடந்த 2017-முதல் மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தான்.சிறைக்கு வெளியே உள்ள விவசாய தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு சிறைக்கு செல்லும் போது ரமேஷ் தப்பி ஓடினான்.பாகாயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைதியை தேடி வருகின்றனர்’
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி வெட்டி படுகொலை செய்து உடலை கண்மாயில் வீச்சு . உடலை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய கொலையாளிகளுக்கு போலீஸார் வலை வீச்சு .
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார் மனைவி லட்சுமி இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் நேற்று காலை தனது மனைவிடம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றவர் காலை வரை வீடு திரும்பவில்லை. சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் மனைவி லட்சுமி தனது கணவர் காண வில்லை என்று புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கலிலுள்ள செங்கமலப் பட்டி பஞ்சாய்த்துக்குட்பட்ட உறிஞ்சி குளம் கண்மாயில் 30 வயது மதிக்க தக்க ஒரு ஆண் சடலம் வெட்டு காயங்களுடன் கிடைப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்க்கு தகவல் வந்துள்ளன சம்பவ இடத்திற்க்கு சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் ஆய்வு மேற்க்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் செந்தில்குமார தான் என்று போலீஸார் உறிதி செய்தனர் மேலும் செந்தில்குமார் எக்காரணத்திற்க்கு கொலை செய்தனர் என்றும் முன்பகை காரணமா? அல்லது தவறான முறையில் பெண் விஷயமா ? என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு சிவகாசி கிழக்கு போலீஸார் வலைவீச்சு தேடிவருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.