இன்று03/07/2019 மாலை முதல் சுமார் ஏழுமணி இருந்து சமூக வலைத்தளங்கள் முடங்கியதுஉலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சமூக வலை தளங்கள் ஒரு நிமிடம் வேலை செய்யவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை இரண்டற கலந்துவிட்டன.இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயங்காமல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சினை தற்போது நிலவி வருகிறது.இதனால் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.