உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டியில் 20ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி கிராமத்தினர் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி நடைபெற்றது
இந்த கபடி போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கு ஒரு பிரிவு, பெரியவர்களுக்கு ஒரு பிரிவான தனித்தனியாக நடத்தப்பட்டது.இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய விளையாட்டான இந்த கபடி போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.போட்டி தொடங்குவதற்கு முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
You must be logged in to post a comment.