செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் ( 59) விவசாயி.இவர் அதே கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவரது விவசாய நிலத்தில் இன்று காலை ஏர் ஓட்ட சென்றார். ஏர் ஓட்டி முடித்த பிறகு விவசாய நிலத்தின் வழியாக ஏர் ஓட்டிய மாட்டுடன் வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தார்.அப்போது விவசாய நிலத்தில் தாழ்வாக அறுந்து தொங்கிய மின்சார ஒயர் எதிர்பாராத விதமாக சம்பத் மீது பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து சம்பத்தின் மகன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து சம்பத்தின் உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாயி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Category:
மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை நகரில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மலையில் இருந்து காலை சுமார் 10 மணி அளவிலும் , காந்தி சிலையில் இருந்து ஹிந்து முன்னணியின் சார்பில் மாலை 3 மணி அளவிலும் ஊர்வலம் புறப்பட்டது.இதில் ஏராளமான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும் கலந்துகொண்டு விநாயகர் சிலைகளைதாமரைக்குளத்தில்கரைத்தனர்.திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தாமரைக்குளத்தில் கொண்டு சென்று விஜர்சனம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை தேனி மலையிலிருந்து நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை தாமரை குளத்தில் கரைத்தனர்.இதில் ஏராளமான சிலைகள் அணிவகுத்து வந்தன.மேலும் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியில் உள்ள ஏராளமான ஏரிகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.விநாயகர் சிலைகள் அணிவகுத்துச் சென்றபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்திருந்தனர். பிஜேபி நகரத் தலைவர் செந்தில்முருகன், சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, எஸ்சி அணி மாவட்ட தலைவர் பட்டறை முருகேசன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.ஹிந்து முன்னணியைச் சேர்ந்த நகர பொதுச்செயலாளர் துரைராஜ், மாவட்டச் செயலாளர் செந்தில், மாவட்டச் செயலாளர் அருண்குமார், சிறப்பு அழைப்பாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 மற்றும் 76 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின் விளக்கு எரியவில்லை ..இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாகவும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இருட்டை பயன்படுத்தி கொள்ளையர்களும் வழிப்பறி செய்பவர்களும் மிகவும் சௌகரியமாக உள்ளது காவல்துறை எவ்வளவுதான் பாதுகாப்பு போட்டிருந்தாலும் அதையும் மீறி இருட்டை பயன்படுத்தி சில இடங்களில் கொள்ளை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது பொதுமக்கள் சிலர் கூறுகையில் மாநகராட்சி மின்சார ஊழியர்கள் சிலர் மின் விளக்கை மின் இணைப்பை தொடர்ந்து துண்டித்து கொள்ளையர்களுக்கு துணைப் இருக்கிறார்களா என சந்தேகம் எழுப்புகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி மணிமண்டபம் ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக மேலூர் போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று விசாரணை செய்ததில் பூமிநாதன் மற்றும் அபிபுல்லா ஆகிய இருவரையும் கைது செய்து,அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ- 14,200 பறிமுதல் செய்து மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தீவிர வாகன சோதனையால் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு
by mohan
written by mohan
விபத்துகளை குறைக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்உத்தரவிட்ருந்தார். அதனை தொடர்ந்து ஒரு வாரமாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வழக்குபதிவு செய்து வந்தனர் . காவல்துறையினரின் அதிக கெடுப்பிடியை தொடர்ந்து தற்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதைப்போல் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களும் அதிகரித்துள்ளனர். இதனால் விபத்து வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடலில் சூறைக்காற்று படகு மூழ்கியது மாயமான ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை தேடும் பணி மாயம்
by mohan
written by mohan
இராமேஸ்வரம் அருகே நடராஜபுரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் ஆக.29 ஆம் தேதி கடலூர் சென்றனர். அங்கு பைபர் படகு வாங்கினர். பின்னர் படகு மூலம் கடலூரில் இருந்து 10 பேரும் இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர். மல்லிபட்டினத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் நிலவிய திடீர் சூறைகாற்றால் படகு மூழ்கியது இதில் படகில் இருந்த 10 பேரும் நடுக்கடலில் மூழ்கினர். அதில் ராஜா மகன் காளிதாஸ், முனியாண்டி மகன் செந்தில்வேல் ஆகியோரை உள்ளுர் மீனவர்கள் மீட்டு மல்லிபட்டினம் கடற்கரையில் சேர்த்தனர். முனியாண்டி மகன் நாகசாமி 47, ஆண்டி மகன் ரஞ்சித்குமார் 23 , காந்தி மகன்கள் தரகுடியான் 25, மதன் 26, ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் 20, ராமகிருஷ்ணன் மகன் கந்தகுமார் 23, சண்முகம் மகன் முனீஸ்வரன் 24, ராஜ் மகன் உமாகாந்த் 19 ஆகியோர் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சக மீனவர்களால் மீட்கப்பட்ட காளிதாஸ், செந்தில்வேல் ஆகியோர் சிகிச்சைக்காக மல்லிபட்டினம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மருத்துவமனையில் மின் அறையில் புகை பிடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு .
by mohan
written by mohan
மதுரை அரசு இரஜாஜி மருத்துவமனையில் 227 வார்டு பெண்கள் பிளாஷ்டிக் அருவை சிகிச்சை பிரிவு அருகே உள்ள மின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை வந்துள்ளது இதனை தொடர்ந்து நோயாளிகள் தகவல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர், 227 வார்டில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர் பின்பு செய்தியாளரை சந்தித்த தென் மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவணன் கூறுகையில் தீ விபத்து நடந்த இடத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை எனவும், நோயாளிகளுடன் இருந்தவர்கள் யாரேனும் புகை பிடித்திருக்கலாம் அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ்- பாக்யலட்சுமி தம்பதியரின் மகன் கார்த்தீஸ்வரன்,13. இவர் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் ஸ்விட்ச்சை கார்த்தீஸ்வரன் மதியம் போட முயன்றார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் தந்தை ரமேஷ் புகாரின்படி உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பீபீ குளம் அருகே நள்ளிரவு 12 15 மணியளவில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் .ஆட்டோ கவிழ்ந்தது.இதனைப் பாா்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 வாகனத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைவாக வந்த 108 அவரை பரிசோதித்த போது ஓட்டுனர் நிகழ்விடத்திலேயே ஏற்கனவே இறந்துவிட்டார் விட்டார் என தகவல் தெரிவித்தனர் .ஆட்டோ அவர் மேலே விழுந்ததால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சிகிச்சை பலனின்றி இறந்த மகளின் உடலை, கண்ணீருடன் தந்தை கையில் சுமந்து சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகள் கோமலா. 7 வயது நிரம்பிய கோமலாவிற்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவந்து சேர்த்தார் சம்பத்.
அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கோமலா, சிகிச்சை பலனின்றி நேற்று (3ம் தேதி) உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இறுதிச்சடங்கு செய்வதற்காக மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சம்பத்தால் வாடகைக்கு வாகனம் எடுத்து மகள் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை. இதனால், மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித்தர கேட்டிருக்கிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 2 மணி நேரம் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருந்தார் சம்பத். யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில், மகளின் சடலத்தை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். பலர் நிராகரித்த நிலையில், மனிதாபிமானம் கொண்ட ஒரு ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் கோமலாவின் உடலை ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுசென்றார்.கையில் பணம் இல்லாததால், உயிரிழந்த தனது மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தந்தை கண்ணீர் மல்க அனைவரிடமும் கெஞ்சிய சம்பவம், அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
தெலுங்கானா மாநிலத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தில் வெகுவிரைவில் வரும் மாநில செயலாளர் சீனிவாசன் பேச்சு
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியில் ஆயிரம்பேர் இணைப்பு விழா நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் பழனிச்சாமி,மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் ராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:இன்றைக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடக்கின்ற 1000 பேர்கள் இணைப்பு விழாவை காணும் போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வரும் என்பதில் எந்த விதத்திலும் ஐயமில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கும் , பெண்களுக்கும்,அடித்தட்டு மக்களுக்கும் பல்வேறுவகையான நலத்திட்டங்களை வழங்கி மக்களின் நலத்தை பாதுகாத்திட பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சி பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலை காரணமாகத்தான் பொதுமக்கள் வாக்காளர்கள் விவசாயிகள் இளைஞர்கள் அனைவரும் ஓட்டுக்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொருத்த அளவுக்கு நாட்டு மக்களுக்கு தேவையான சிறப்பான கல்வி, சிறப்பான மருத்துவம் , சுகாதாரமான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பணியாகும். ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்று யாரேனும் நினைத்தால் நிச்சயமாக கிடைக்காது எனவே தனக்கென்று நினைக்காமல் நமக்கு என்று இருப்பவர்களே பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை தொண்டனாக இருப்பார் என பேசினார். ஆயிரம் பேர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பரசுராமன், மாவட்ட நிர்வாகி கிருஷ்ணகுமார், ஒன்றிய நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சிவா, குமார்,நகர கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாயல்குடி அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் : போலீசார் விசாரணை
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தெற்கு மூக்கையூர் கடற்கரையில் வி.வி.ஆர்.நகரை சேர்ந்த பாக்கியராஜ் 40, என்பவருக்கு சொந்தமான 4 கிலோ எடையிலான ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி வலை இன்று பகலில் கொள்ளை போனது .மீனவர் பாக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சபுரா காதர்அம்மாள் 32. அதே பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன் 53. பள்ளி வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை சபுரா காதர்அம்மாளை கைகளால் சைகைகாட்டி, கொலை மிரட்டல் விடுத்தும், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை மீது ஆசிரியர் விஸ்வநாதன் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆங்கில ஆசிரியர் சபுரா காதர் அம்மாள்அளித்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமல் பட்டிசையத் பாபா பாபகதூர் அவுலியாதர் காஷெரிப்பில் மாதாந்திர தொழுதையும் பின்பு ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாட்டை வாணியம்பாடி சையத் பிர்தோஷ் பாத்திமா, சையத் அகமது பாஷா சார்பில் செய்யப்பட்டது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனிதநேயம் காத்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அமீரக காங்கிரஸ் மற்றும் கீழக்கரை நகர் காங்கிரஸ் சார்பில் பாராட்டி ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.
by mohan
written by mohan
மனிதநேயம் காத்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அமீரக காங்கிரஸ் மற்றும் கீழக்கரை நகர் காங்கிரஸ் சார்பில் பாராட்டி ஊக்குவிப்பு பரிசு வழங்கப்பட்டது.நேற்றைய முன் தினம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்த சிறுவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு துரித வேகத்தில் கொண்டு சென்ற ஓட்டுநர் ஜாஸ் அவர்களுக்கு அமீரக காங்கிரஸ் சார்பில் அதன் பொருளாளர் கீழை ஜமீல் பாராட்டு தெரிவித்தார்.
இன்று (4-9-19) தமுமுக இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா முன்னாள் மாவட்டச் செயலாளரும் மூத்த தமுமுக தலைவருமான ஸலீமுல்லாஹ்கான், மாநிலச் செயலாளர் தொண்டி ஸாதிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் நஸீர்கான் பொன்னாடை போர்த்தினார். அமீரக காங்கிரஸ் சார்பாக ஊக்குவிப்பு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் மமக தலைவர் முஜீபு தலைமையில் கீழக்கரை நிர்வாகிகள், இராமநாதபுரம் தமுமுக நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு புதுவை காங்கிரஸ் முதல்வர் அவர்கள் மூலம் நல்ல சிகிச்சைக்கு உதவி செய்வதாக தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணி ஆலோசகர் அமீர்கான் தெரிவித்தார்.
செய்திகள் : அபூ அவ்ன்.
படங்கள் : முஜிபு, கீழக்கரை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல்வரின் வெளிநாட்டு பயணம் உறுதியாக வெற்றியாக அமையும்: கமுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேட்டி
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடந்த திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளும், அளித்த பதில்களும் (விரிவாக)
அப்புறம் என்ன சொல்லுங்க. எது. சரியா சத்தம் போட்டு சொல்லுங்க.எதிர் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்களே. அது எதிர் கட்சிகளின் நிலை. அவர்கள் அப்படி தான் பேசுவார்கள். அப்புறம். கேளுங்க. அவ்வளவு தானா. ஸ்டாலினை ஐ. நா சபையில் பேசக் கூப்பிட்டதாக அவுங்களாகவே சொல்லிக்கிட்டு இருக்காங்களே. யாரார். திமுக., தலைவர ஐ.நா சபையில பேச அழைச்சதா திமுக காரங்க சொல்லிட்டு இருக்காங்களே. அவர் ஐ.நா சபைக்கு போய் பேசுறதுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது. வேற .வெளிநாட்டு பயணம் எப்படி இருக்கு. உறுதியாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மாண்புமிகு முதலமைச்சரின் உறுதியாக வெற்றியுடன் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, ராமநாதபுரம் நகர் செயலாளர் அங்குச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த பெண் யானையின் பெயர் ருக்கு.கடந்த 1988-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி பிறந்தது. 1995-ம் ஆண்டு யானை ருக்குக்கு 7 வயதான போது, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை ருக்குவை வழங்கினார்.23 ஆண்டுகளாக தினசரி அதிகாலையில் நடக்கும் கோ பூஜை, கஜ பூஜையில் யானை ருக்கு பங்கேற்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியது.கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் வாகன உற்சவங்களுக்கு முன்பு யானை ருக்கு, மாட வீதிகளில் வலம் வருவதும் வழக்கம். மேலும், மகா தீப விழாவில், கொப்பரையை யானை ருக்கு ஆசீர்வதித்த பிறகே, 2,668 அடி மலை உச்சிக்கு தூக்கி சென்று மகா தீபம் ஏற்றுவர்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கம் போல் பக்தர்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு திருமஞ்சன கோபுரம் அருகே உள்ள 5-ம் பிரகாரத்தில் யானை ருக்கு ஓய்வெடுக்க சென்றது.அப்போது, யானை ருக்கு அருகில் 4 நாய்கள் சண்டை போட்டு குரைத்து கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு நாய், யானையின் காலை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன யானை ருக்கு வேகமாக ஓடி அங்கிருந்த இரும்பு தடுப்புச் சுவரில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், இடது கண் மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு யானை ருக்கு சுருண்டு விழுந்துள்ளது. வழக்கமாக பரிசோதனை செய்யும் டாக்டர் வெங்கடேஸ்வரன் வரவழைக்கப்பட்டு யானை ருக்குவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் யானை பரிதாபமாக இறந்தது. கோவில் அருகே யானை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து கோவிலுக்கு புதிய யானை வழங்க தொழிலதிபர்கள் பலர் முன்வந்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் யானை வாங்குவது தொடர்பாக முடிவு செய்யாமல் இருந்தது.இந்த நிலையில் தற்போது கோவிலுக்கு புதிய யானை வாங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் பெங்களூரு சென்று முகாமிட்டுள்ளனர். அங்கு சில யானை குட்டிகளை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கீரைத்துறை, வசித்து வரும் நாகமுருகன் என்ற ஆஷா மதுரை மாநகரில் கஞ்சா தொழில் செய்துவந்ததால் அவரது சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி அவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
.செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக பணியாற்றுபவர் தலைமையாசிரியர் மதன்பிரபு. இவர் தன்னுடைய பிள்ளைகளை போல் அனைத்து மாணவ, மாணவிகளையும் பராமரித்த வருகிறார். மாணவர்களின் நலன் கருதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் தலைமையாசிர் மதன்பிரபு.
பொதுவாக குழந்தைகளுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாததையே பார்த்திருப்போம். ஆனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவ குழந்தைகளிடம் விவசாயத்தை பற்றி கேட்டால்போதும் அதனை பற்றி அத்தனையும் தெளிவாக விளக்குவதுடன் மினிவிவசாயத்தையே செய்துவிடுவார்கள். அந்த அளவிற்கு விவசாயத்தை மாணவர்களிடம் விளக்கி காண்பித்தள்ளார். இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றும் மதன்பிரபு மாணவர்களை விவசாய நிலங்களுக்கே அழைத்துசென்று நாற்று நடுதல், ஏர்தழுவுதல், நாற்றாங்கல் அமைக்கும் முறை, பயிர்களை பாதுகாக்கும் முறை, தண்ணீர் பாய்ச்சும் முறை போன்றவைகளை மாணவர்களுக்கு பயிற்சியுடன் செய்து காண்பித்துள்ளார். இதனால் மாணவர்கள் விவசாயத்தை பற்றி முழுமையாக தெளிவாக புரிந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் பள்ளிக்கூடத்தில் காலையில் மாணவர்களின் இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் வகுப்பறையில் மாணவர்களை தினமும் 5 நிமிடங்கள் வாய்விட்டு சிரிக்க வைத்து மனதில் இருக்கும் கசப்புக்களை போக்கி சந்தேசமான முறைக்கு வருவார்கள். அதற்கு பிறகு மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்தகொள்வர். அதனைதொடர்ந்து தோப்புக்கரனம் போடும் பழக்கத்தை கொண்டுவந்தார். மாணவர்கள் அனைவரும் சுமார் 5 நிமிடங்கள் காதுகளை பிடித்து கொண்டு தோப்புகரனங்கள் போடவைப்பர்.இந்த தோப்புகரனம் போடுவதால் கை,கால் நரம்புகளில் இருக்கும் தசைகள் சுருக்கம இல்லாமல் கை,கால் பகுதிகள் வேகமாக சுழன்று அதன் வேலைகளை செய்யும். இதனால் இந்த தோப்புகரனம் போடுவதாக தலைமையாசிரியர் மதன்பிரபு தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இடைவேளைக்காக காலையில் 11 மணியளவில் மணி அடிப்பர். அப்போது மாணவர்கள் அனைவரும சுமார் அரைலிட்டர் தண்ணீரையாவது குடிக்கவேண்டும் என கூறி பள்ளியில் நடைமுறைபடுத்தி அந்த செயல்களை செய்து வருகிறார். இந்த செயல்முறை கேராளவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த பள்ளியில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறையால் மாணவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கடைபிடித்து தண்ணீர் குடித்து வருகின்றனர். இந்த நடைமுறை பள்ளியில் பயிலும மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்துகொள்ளும் விதமாக ஒன்றிய தொடக்க பள்ளிகளிலேயே முதன்முறையாக தொடுதிரை மூலம் ஸ்மார்ட் வகுப்பறையை ஆரம்பித்தனர். இதன் மூலம் மாணவர்கள் யூடூப் மூலம் மாணவர்கள் அவர்களே சென்று அவர்களுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் வளர்ச்சிபெறுவதாக தலைமையாசிரியர் மதன்பிரபு கூறியுள்ளார்.
சமீப காலங்களாக திருடர்கள் பள்ளியிலேயே புகுந்து பணிபுரியம் ஆசிரியர்களின் நகைகளை பறித்து செல்லம் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தமிழ்நாட்டிலேயே அரசு உதவிபெறும் தனியார் தொடக்க பள்ளியில் முதன்முறையாக மாணவர்களின் பாகாப்பு குறித்தும், ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்தும் பள்ளி வளாகம், வகுப்பறைகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளனர்.மாணவர்களின்மேல் தனி அக்கறைகாட்டி அவர்களின் படிப்புக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபுவை போலவே அனைத்து தலைமையாசிரியரும் இருக்கவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்புகளாகும்.
இந்நிலையில் தமிழக அரசு இவரின் சேவையை ஊக்கப்படுத்தும் வகையில் 2019 மாநில நல்லாசிரியா் விருது (டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது )வழங்கி கௌரவித்துள்ளது.இதனை ஆசிாியா் தினமான செப் 5 ல் தமிழக முதல்வா் திருக்கரங்களால் பெற உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை அருகே தாவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 38. இவரது மனைவி பஞ்சவர்ணம், 39. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி உணவில் வைத்து பஞ்சவர்ணத்தை கொல்ல விஷம் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். இதையறிந்த பஞ்சவர்ணம் , தன்னை கொல்ல வைத்திருந்த விஷத்தை ஆக.31 மதியம் ராமசாமிக்கு கொடுத்த உணவில் பஞ்சவர்ணம் கலந்தார். விஷம் கலந்த உணவை சாப்பிட்ட ராமசாமி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ராமசாமியை மீட்டு ராம்நாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க iப்படுகிறது. ராமசாமி புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் கொலை முயற்சி வழக்கு பதிந்து பஞ்சவர்ணத்தை கைது செய்தார்.
You must be logged in to post a comment.