தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பில் செப்.29 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.முஹம்மது அயூப்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி, துணைத்தலைவர் பசீர், துணைச்செயலர்கள் தினாஜ்கான், நஸ்ருதீன், சித்திக், ஜஹாங்கீர், சீனி முன்னிலை வகித்தனர். மாநில செயலர் நெல்லை பைசல் சிறப்புரையாற்றினார்.இராமநாதபுரத்தில் செப்.29ல் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டை வெற்றிபெற செய்தல்,காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து 370 வது ஏ பிரிவை நீக்கி காஷ்மீர் மாநில மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்தல்,இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Category:
மாவட்ட செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் சதுர்த்தி 16-ம் ஆண்டு விழா முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதிமுக பொறுப்பாளர் எஸ்.குமரன் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செல்லி அம்மன் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனர் சரவணன் ,தினேஷ் குமார், தேவராஜ், வினோத்குமார், ஸ்ரீபதி, ஜெயக்குமார், தேவேந்திரன் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடகம் மூலம் நன்னெறி கல்வி வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்.. கைகளால் பிறருக்கு உதவி செய்வேன் ..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் ……
by mohan
written by mohan
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கல்வியோடு நற்பண்புகளையும் கற்றுத்தரும் நாடகங்கள் நடித்து காண்பிக்கப்பட்டது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நாடக ஆசிரியர் செல்வம் மாணவர்களுக்கு நாடகம் மூலம் நற்பண்புகளை விளக்கி நடித்து காண்பித்தார்
.கால்களால் நல்ல பாதையில் நடப்பேன்,வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்,கைகளால் பிறருக்கு உதவி செய்வேன்,கண்களால் நல்லதையே பார்ப்பேன்,காதுகளால் நல்லதயே கேட்பேன் என்று கூறி மாணவர்களை நாடகம் நடிக்க வைத்து ,உறுதிமொழி சொல்ல சொன்னார்.உண்மையாக இருக்கவே வேண்டும்,எந்த செயலாக இருந்தாலும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்,யாராவது கீழே விழுந்தால் பார்த்துக்கொண்டு போகக்கூடாது ,உதவி செய்யவேண்டும் போன்ற விஷயங்கள் நாடகம் மூலம் வலியுறுத்தப்பட்டது.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 93 வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் முத்துப்பட்டி ஆவணியாபுரம் பிரதான சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து அதை சுற்றி வாழைமட்டை மற்றும் பெரிய அளவிலான பாறாங்கற்கள் மூன்றும் வைக்கப்பட்டுள்ளது .இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது .. பொதுமக்கள் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீனாவில் நடைபெற்ற உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்குயிடையேயான விளையாட்டு போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி காவல் நிலைய பெண் காவலர்கிருஷ்ணரேகா உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் , ஹெப்டாதலன் போட்டியில் தங்கப்பதக்கம் , 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் மற்றும் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்த மேற்படி பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில் சிகிச்சை உரிய நேரத்தில் உதவிய தமுமுக.,
by mohan
written by mohan
இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த நயினா முகமது மகன் அமீருல், 13. புற்றுநோய் பாதிப்பால், அவனது முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் உணர்ந்து எட்டு மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனது உறவினர்கள், தமுமுக.,விடம் உதவிக்கரம் கோரினர்.
இதை தொடர்ந்து நோய் பாதித்த சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரி துரிதமாக செல்ல தமுமுக.,வினர் இராமநாதபுரம் – புதுச்சேரி இடையே அனைத்து பகுதிகளிலும் உள்ள தமுமுக., முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்2 சமூக வலைத்தளங்களில் தகவல் பதிவு செய்கனர். இத்தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் – புதுச்சேரி போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோரினர். பல்வேறு சமூக அமைப்பு ஆர்வலர்கள் சாலைகளில் இதர வாகனங்கள் குறுக்கிட வண்ணம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிறுவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கடக்கும் பகுதி குறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் பகிர்ந்து, போலீசார் உதவியுடன் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் இடையூறு இன்றி குறித்த நேரத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை அடைய உதவினர்.ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் வழியாக 366 கி.மீ., தூரத்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை துரிதமாக ஓட்டி வந்த தமுமுக., ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாஸ், தடையின்றி ஆம்புலன்ஸ் செல்ல உதவியோருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளன. 366 கி.மீட்டரை போக்குவரத்திற்கு இடையே கடக்க 8 மணி நேரம் பிடிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையை அடைந்தால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என சினிமாக்களில் டாக்டர்கள் கூறுவதை கேட்டு பட ஹீரோ தான் இது போன்று சாமர்த்தியாக செயல்படுவதை பார்த்துள்ளோம். இது சினிமா அல்ல. நிஜமாக நடந்த சம்பவத்தில் தன்னம்பிக்கையுடன் துரிதமாக செயல்பட்ட ஜாஸ் உள்ளிட்ட தமுமுக.,வினர் நிஜ ஹீரோக்களெ
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஆனபிறகும் கூட சம்பளம் வழங்காததால் மத்திய அரசாங்கம் மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆகஸ்ட் மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கிட வேண்டும்.கொடுக்கக் கூடிய சம்பளம் மாதாமாதம் ஒன்றாம் தேதி வழங்கி விடவேண்டும்.பேசிப் பேசிப் பார்க்கும் ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.என்று சம்பளம் வழங்காத பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது.தேசிய தொலைபேசி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை தேனிமலைப் பகுதியில் செயல்பட்டு வரும் “ஆற்காடு லூத்தரன் திருச்சபை” கடந்த 28 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மதவெறி விஷமிகள் சிலர் திருச்சபையின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருச்சபையின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.மேலும் அதே பகுதியில் உள்ள “ரோமன் கத்தோலிக்க குழந்தை இயேசு ஆலயம்”கேட்டின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.சத்தம் கேட்டு ஆலயத்திற்கு உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபொழுது மதவெறி விஷமிகள் ஓடிவிட்டனர்.இதனால் அப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆற்காடு லூர்தரன் திருச்சபை சார்பில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேவாலயத்தை சேதப்படுத்திய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த முறையில் கல்வி பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரூபி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ச.வெங்கடேசன்க்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது .இதை வருகின்ற 5ஆம் தேதி மாலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு மாளிகையில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கீழக்கரையில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக அமைந்திருக்கும் மதுக்கடைக்கு(கடை எண் 6842,6843) எதிராக பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்துள்ளது கீழக்கரை நகர் எஸ்டிபிஐ.அதன் ஒரு பகுதியாக கடந்த 1/9/2019 அன்று இரு மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கீழக்கரை நகர் டிஎஸ்பி மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.,
இதனைத்தொடர்ந்து இன்று(3/9/19) கீழக்கரை நகர் காவல் ஆய்வாளர் நகர் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் துணைத்தலைவர் ஹாஜா அலாவுதீன், சலீம் இணைச்செயலாளர்கள் சுபைர் ஆப்தீன், முர்ஸ்லீன் நகர் செயற்குழு உறுப்பினர்கள் காதர், அஸ்ரப், அய்யூப் மற்றும் இவர்களுடன் தொகுதி துணைத்தலைவர் சித்தீக் மரியாதை நிமித்தமாக காவல் ஆய்வாளரை சந்தித்தனர்,ஆய்வாளர் கூறியதாவது.,
எஸ்டிபிஐ கட்சி மதுக்கடைக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு முதலாவதாக வாழ்த்துக்கள் . மது இல்லாத கீழக்கரையை உருவாக்குவோம் என்றும் அதற்கு எஸ்டிபிஐ யும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.மேலும் கீழக்கரையில் நிலவிவரும் கஞ்சா விற்பனையும் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்., சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உபயோகம் பெருகிவரும் இந்த நிலையில் அதனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் சிறார்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களால் வரும் விளைவுகள் சம்பந்தமாக எஸ்டிபிஐ மற்றும் காவலர்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.,இன்னும் கீழக்கரையில் பிரதான சாலைகளில் பள்ளி நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது .அதனை சரிசெய்யும் விதமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்கள், அதற்கு எஸ்டிபிஐ கட்சியும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நகர தலைவர் கூறி அவர்களது பணி சிறக்க கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் பாத்திமா இன்டிடியூட் ஆப் கேட்டரிங் தாளாளரும், அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனமான முகமது ஏ.சலாவுதீனுக்கு, தேசிய ஒருமைப்பாடு கலாசார அகாடமி, குளோபல் அமைதி பல்கலை., சார்பில் உலக அமைதி கருத்தரங்கு சென்னை மைலாப்பூரில் நடந்தது. இதில் கேட்டரிங் பாடத்திட்டத்தில் மாணவ, மாணவியரை திறம்பட உருவாக்கிய திறமையை பாராட்டி இராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது அ.சலாவுதீனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஜெர்மன் ஜான் பீட்டர், இங்கிலாந்து ராயல் பிரசன்ட் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். டாக்டர் பட்டம் வெற்ற முகமது அ.சலாவுதீனை பாத்திமா கேட்டரிங் இன்ஸ்டிடியூட் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் ராமகிருஷ்ணாபுரம் மீனவர் காலனியை சேர்ந்த நம்புவேல் மகன் முருகன். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீன்பிடி ஒப்பந்த கூலியாக துபாய் நாட்டில் அமேரியா பகுதிக்கு சென்றார்.துபாய் அமேரியா கடல் பகுதியில் 2.12.2017 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்துவிட்டார். இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப் பட்டு பிரேத பரிசோதனைக்காக துபாய் குபத் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது . நம்புமுருகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக் கோரி அவரது தாயார் முனியம்மாள் 4.12.2017 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், இராமேஸ்வரம் மீன் துறை இயக்குனர் ஆகியோருக்கு மனு கொடுத்தார். மத்திய, மாநில அரசுகள் அவரது உடலை கொண்டுவர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இறந்த மீனவரின் இறப்புச் சான்று, பிணக் கூராய்வு சான்று ஆவணங்களை கூட பெற்றுத்தரவில்லை.இதனால் நம்பு முருகனின் தாயார் முனியம்மாள் (69) அரசு எவ்வித நிவாணரம் பெற முடியாமல் அலைந்து வருகிறார்.இந்நிலையில் நம்பு முருகன் வெளிநாடு செல்ல கந்து வட்டிக்கு பணம் வாங்கி சென்றுள்ளார்.துபாய் சென்று அவர் தொழில் செய்த காலத்தில் அனுப்பிய பணம் முழுவதும் அவரது தாயார் கந்துவட்டி கும்பலுக்கே கொடுத்து விட்டார். அசல் தொகையை விட பன்மடங்கு வட்டி, பெற்றுக்கொண்ட கந்துவட்டி கும்பல், முனியம்மாளை தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டி வருகின்றனர், கடந்த 27.8.2019 அன்று கந்துவட்டி கும்பல் இராமகிருஷ்ணாபுரம் மீனவர் காலனி நம்புமுருகன் வீடு சென்று வீட்டை காலி செய்யக் கோரி முனியம்மாளை மிரட்டினர்.இதுகுறித்து 28.8.2019 அன்று தனுஷ்கோடி காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் செய்து 30.8.2019 அன்று விசாரித்தனர், விசாரணையின் போது சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் கந்துவட்டி கும்பலுக்கு சாதகமாக பேசினர்.காவல் நிலையத்திற்கு உள்ளே, முனியம்மாளை கந்துவட்டி கும்பல் மிரட்டியுள்ளனர்.தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் நம்பு முருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து,கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து முனியம்மாளை பாதுகாக்க தவறிய தனுஷ்கோடி காவல் நிலையத்தை கண்டித்து,இன்று ( 3.9.2019) அன்று முனியம்மாளை “தமிழக அரசிடம் ஒப்படைக்கும்” போராட்டம். இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முனியம்மாளுக்கு அரசு கிடைக்கவும், அவரது மகன் நம்பு முருகன் இறப்பு சான்று கிடைக்க நடவடிக்கை கோரி வட்டாட்சியர் ஜபாரிடம் மனு கொடுத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதியமதுபான கடை (டாஸ்மார்க்) திறக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளி மாணவிகள் செங்கம் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலசபாக்கம் அருகே தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் ( 30), இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று02.09.19 வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள ஊதிரம்பூண்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தேவனாம்பட்டு ஏரிக்கரை வளைவில் எதிரே தேவனாம்பட்டு காலனியைச் சேர்ந்த வசந்த் (20) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த குமார் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கலசபாக்கத்தை அடுத்த காப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (50), விவசாயி. இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள கூட்ரோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி வந்த கார் குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்துகள் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலையில் கத்தியால் வெட்டி கடத்தப்பட்ட இடைத்தரகர் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
by mohan
written by mohan
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் நேற்று 01.09.19 முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. பொதுப் பணித்துறை அலுவலகம் அருகே ஆட்டோ சென்றபோது, அதில் இருந்து ஒருவர் திடீரென குதித்து ஓடினார். பின்னால் காரில் வந்த சிலர் அவரை துரத்திக்கொண்டு சென்றனர்.பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்திற்குள் புகுந்த அவரை, துரத்தி சென்றவர்கள் கத்தியால் வெட்டி காரில் கடத்தி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் கொடுத்த காரின் எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அந்த கார், தூசி அருகே உள்ள சுருட்டல் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். உரிமையாளரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் மோகன்ராஜ் ( 30) என்பவர் காரை வாங்கிச்சென்றது தெரியவந்தது.
இதற்கிடையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த மோகன்ராஜ் தூசி போலீசில் சரண் அடைந்தார். பின்னர் அவரை,கைது செய்து திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மோகன்ராஜின் தந்தை மணி, சேலத்தை சேர்ந்த இடைத்தரகறான கவுரிசங்கரிடம் ரூ.3½ லட்சம் கொடுத்து பொக்லைன் எந்திரம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். கவுரிசங்கர், பணத்தை பெற்றுக்கொண்டு பொக்லைன் எந்திரத்தை வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். மோகன்ராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி திருவண்ணாமலைக்கு கவுரி சங்கரை வரவழைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம், கடத்தி செல்லப்பட்ட கவுரிசங்கர் எங்கு உள்ளார் என்று கேட்டறிந்தனர். தொடர்ந்து மோகன்ராஜ் கூறிய இடத்திற்கு போலீசார் சென்று கட்டி வைத்திருந்த கவுரிசங்கரை மீட்டனர். அவரது முகத்தில் வெட்டு காயம் இருந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் ஏரிக்கரையில் வேர்கள் அறக்கட்டளை வாணியம்பாடி டெவலப்மெண்ட் Society சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கிராமிய காவல் ஆய்வாளர் கணேசன் VAO சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் நிகழ்சியை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் செய்து இருந்தனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்திற்கு புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.பிறகு வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபிலை சந்தித்து வாழ்த்து பெற்றார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் ராக சேகரன் 60 .இவர் வத்தலக்குண்டு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார் .குளத்துப் பட்டி பிரிவரு கே வந்த போது அணைப்பட்டியிலிருந்து அய்யம்பாளையம் சென்ற கார் எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகரன் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். வந்த லக் குண்டு இன்ஸ் பக்டர் பிச்சை பாண்டியன் வழக்கு பதிந்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகிறார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நடந்த கார் விபத்தில் .சூப்பர் குட் பிலிம்ஸ் ஆஸ்தான போட்டோகிராபர் ஸ்டில்ஸ் சிவா தேனி உத்தமபபாளையத்தில் சாலை விபத்தில் மரணம்.
நடிகர் தவசி படுகாயம்.. இவா் வருத்தப்படாத வாலிபர் சங்கம்கருப்பன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன் (02.09.19) திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம், தேவி நகரில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் ஏராளமான குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.. மேலும் சில முக்கியமான பிரச்சனைகளை சட்டமன்றத்திலும் பேசி தீர்வு காண்பேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்து சென்றாா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.