தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாராளுமன்ற தோ்தல் காரணமாக தோ்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் பரவின. அதனால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 10-ந்தேதி பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் எந்தவித கால தாமதமும் ஏற்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Category:
மாவட்ட செய்திகள்
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்! – எஸ்டிபிஐ மாநில தலைவரின் மே தின வாழ்த்துச் செய்தி..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின (மே தினம்) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உழைக்கும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் நமது நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நாட்டின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் ஏராளமான தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலையையும், எட்டு மணி நேர ஓய்வையும், எட்டு மணி நேர உறக்கத்தையும், தொழிலாளர் உரிமைகளையும் போராடிப் பெற்ற வெற்றியை மே தினம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.
தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான முயற்சியை மதிப்பதும், அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரிவிப்பதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பதுமே ஆகும்.
ஆனால், தொழிலாளி வர்க்கத்தை ஒப்பந்த மயமாக்குதல், தொழிற்சங்க உரிமை பறிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களின் பணி நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தற்போது ஆளும் அரசுகளால் சன்னஞ் சன்னமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டும், அந்நிய முதலீடுகளுக்கு ஏதுவாகவும் தொழிலாளர் சட்டங்களில் அரசுகள் மாற்றம் செய்து வருகின்றன.
தனியார்மயத்தை ஊக்குவிப்பதாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கைகளாலும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அவர்களுக்கு வேலை உறுதியற்ற தன்மையும் நிகழ்கிறது. இதனால் தொழிலாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
ஆகவே, மேதினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
COVISHIELD தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும்: AstraZeneca நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் அளித்த அதிர்ச்சி தகவல்..
by Askar
written by Askar
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.
பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய நாட்டில் மிக இளம் வயதில் திடீரென இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே இந்த நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனத்தின் ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? பாதிப்புகள் என்னென்ன.?
by Askar
written by Askar
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? பாதிப்புகள் என்னென்ன.?
யார் யார் வருகிறார்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிற புள்ளி விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிக கூட்ட நெரிசல், போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம்.
ஒரே குடும்பத்தில் தனி தனி வாகனங்களில் வருபவர்கள் ஒரே வாகனத்தில் வருவார்கள் இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கையும் சற்று குறையும். அரசு பேருந்து, ரயில்களில் கூட்டங்கள் அதிகரிக்கும்.
வசதி உள்ளவர்கள் இந்த சிரமங்களை தவிர்க்க அங்கு ஒரு சிறிய இடத்தையாவது வாங்கிக் கொள்வார்கள் . இதன் மூலம் ஊட்டி, கொடைக்கானலில் நிலத்தின் மதிப்பு கூடலாம்.
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் சிரமங்கள் என்ன?
இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறும்.
மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சில சமூக விரோதிகள் Green Tax என்று அனைத்து வாகனங்களிடமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் அரசாங்கத்திற்கும் செல்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகலாமாக அனைவருக்கும் தெரிந்து நடைபெரும் இந்த கொள்ளையை தடுக்க யாரும் முன்வைரவில்லை. இதை முதலில் தடுக்க வேண்டும். E Pass நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த E Pass நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இதுபோன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
இதற்கு பதிலாக;
காரமடை – கல்லாறு- மேட்டுப்பாளையம் By Pass திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது,
லவ்டேல் – HPF இந்த பகுதியில் ஊட்டி நகருக்குள் செல்லாமல் ஒரு மற்றுபாதை சீராக்கப்படலாம்.
மசினகுடி – கோத்தகிரி சாலை ஊட்டி நகருக்குள் செல்லாமல் மாற்று பாதை ஒழுங்குபடுத்தப்படலாம்.
சட்ட விரோதமான கட்டடங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. நீதிமன்றத்தின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த பலனும் ஏற்பட வாய்ப்பில்லை.
பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். தமிழக அரசு இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இதே போல கொடைக்கானலிலும் அடிப்படை வசதிகளையும் மாற்று பாதைகளையும் உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தலாம் இதை ஒழுங்குபடுத்த காவல்துறையும், வருவாய் துறையும் இணைந்து சரியான திட்டமிடுதலை மேற்கொண்டால் தான் சரியான தீர்வாக இருக்குமே தவிர E Pass கொடுப்பதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது..
நமது சிறப்பு நிருபர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியருகே கோவில் திருவிழாவில் 500 ஆட்டுகிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரமாண்டமான அன்னதான விருந்து..
by Askar
written by Askar
பழனியருகே கோவில் திருவிழாவில் 500 ஆட்டுகிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரமாண்டமான அன்னதான விருந்து..
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் . பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு பெரியதுரையான் கோயில் சித்திரைத்திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300கோழிகள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது. இன்று கிடாய் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டது. பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு வெட்டப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களை பயன்டுத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டன. இன்று மதியம் சமைக்கப்பட்ட உணவகளை, அருள்மிகு பெரியதுரையான் கருப்பசாமி கங்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துகின்றனர். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பெண் ரயில்வே கார்டை தலையில் வெட்டி செல்போன், மற்றும் பர்சை பறித்து, திருடர்கள் அட்டகாசம்:
by Askar
written by Askar
மதுரையில் பெண் ரயில்வே கார்டை தலையில் வெட்டி செல்போன், மற்றும் பர்சை பறித்து
, திருடர்கள் அட்டகாசம்:
மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி (28)கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரயில்வே காலனியில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் திண்டுக்கலிருந்து திருநெல்வேலி செல்லும் காலி ரயில் பெட்டிகளின் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார்.ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்து கொண்டிருந்த போது திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர் ரயில்வே பெண் கார்டு கையிலிருந்த கை பையை பறிக்க முயன்று உள்ளார்கள்.அவர் தர மறுத்ததையடுத்து கத்தியால் தலையில் வெட்டி காயத்தை ஏற்டுத்தி பையை பறித்து சென்றனர். பையில் செல்போன் மற்றும் 500 ருபாய் பணம் இருந்துள்ளது.
தகவல் அறிந்த இரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவரை மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து வழிப்பறியில் ஈடுப்பட்டவர்களை விசாரித்து தேடி வருகின்றனர்.
.வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மே 1 முதல் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக் கிளைக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை! அவசர வழக்குளை மட்டும் விசாரிக்க நீதிபதிகள் நியமனம்..
by Askar
written by Askar
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை ஐகோர்ட்டில் மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என்.செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.இதேபோல ஐகோர்ட் மதுரை கிளையில் மே 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ம் தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2024 ஆம் ஆண்டுக்கான விசிக_விருதுகள்:நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!”காயிதேமில்லத் பிறை விருது” எஸ்.என். சிக்கந்தர், (மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா) திருமாவளவன் அறிவிப்பு..
by Askar
written by Askar
2024 ஆம் ஆண்டுக்கான விசிக_விருதுகள்:
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!
“காயிதேமில்லத் பிறை விருது” எஸ்.என். சிக்கந்தர், (மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா) திருமாவளவன் அறிவிப்பு..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச்
சிறப்பித்து வருகிறோம்.
2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.
முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும்,
பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2024-ஆண்டுக்கான
விசிக-விருதுகள் பெறும்
சான்றோர் பட்டியல் பின்வருமாறு:
அம்பேத்கர் சுடர் –
திரு. பிரகாஷ்ராஜ்,
திரைப்படக் கலைஞர்
பெரியார் ஒளி-
வழக்கறிஞர் அருள்மொழி,
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
மார்க்ஸ் மாமணி- ய
திரு.இரா. முத்தரசன்,
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
காமராசர் கதிர் –
பேராயர் எஸ்றா சற்குணம். தலைவர், இந்திய சமூக நீதி இயக்கம்
அயோத்திதாசர் ஆதவன்-
பேராசிரியர் ராஜ்கௌதமன்
காயிதேமில்லத் பிறை-
திரு எஸ்.என். சிக்கந்தர்,
மேனாள் மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
செம்மொழி ஞாயிறு –
திரு எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்
விசிக விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர்- தலைவர், விசிக.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது..
by Askar
written by Askar
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது..
முதல்வரின் பாதுகாப்பு விதிமீறல் ,கஞ்சா உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் போலீஸார் பாஜக நிர்வாகியை கைது செய்தனர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடுமுறை பயணமாக கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை இன்று காலை மதுரை வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக வந்த பாஜக நிர்வாகி சங்கர பாண்டியன் முதல்வரின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஐ பி சி (IPC) விதிகளின் படி மூன்று பிரிவுகளிலும் கஞ்சா வழக்கு ஒன்றும் மொத்தம் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகி சங்கர பாண்டியனை அவனியாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
by Askar
written by Askar
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்.
மே 7 முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.
உள்ளூர் மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்.
இ-பாஸ் நடைமுறை குறித்து இந்தியா முழுவதும் விளம்பரம்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்திரிகையாளர்கள், பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்ட தடையா..? முறைப்படுத்துமா சென்னை பெரு நகர காவல்துறை.? “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கோரிக்கை..
by Askar
written by Askar
WJUT
WORKING JOURNALISTS
UNION OF TAMILNADU
பத்திரிகையாளர்கள், பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்ட தடையா..? முறைப்படுத்துமா சென்னை பெரு நகர காவல்துறை.?
“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கோரிக்கை..
இது சம்பந்தமாக “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா. பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த 27-04-2024 அன்று வெளியீட்டுள்ள செய்தி வெளியீடு எண்.89/04/2024 பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS அல்லது MEDIA என்ற அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை இந்திய அளவில் நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு, அரசின் செய்தித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வாகன அடையாள ஸ்டிக்கர்களை வழங்கி வருகிறது.
ஊடகங்களில், பத்திரிகைகளில் பணிபுரியும் அனைவருக்கும் அரசின் வாகன அடையாள ஸ்டிக்கர்கள் வழங்குவதில்லை, நடைமுறையில் அது சாத்தியமும் இல்லை என்றிருக்கக் கூடிய நிலையில் காவல் துறையின் செய்தி வெளியீடு நமக்கு மிகப்பெரிய குழப்பங்களையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றுவோர் அவரவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்துள்ளனர்.
பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை உரிய ஆவணங்கள் அடிப்படையில் அல்லது எங்களைப்போன்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் மூலமாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஆய்வு செய்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
இரவு நேரப்பணி, விபத்து, இயற்கை பேரிடர் என பல சூழல்களில், செய்தி சேகரிக்கும் பணியின் போது வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் பத்திரிகையாளர்கள் என்று அடையாளம் காண்பதற்கு காவல்துறைக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் உதவியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
முறைகேடாக ,தவறாக, போலியாக, பத்திரிகை ஊடக அடையாளத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உறுதியாக இருக்கிறது.
மாறாக சரியான திட்டமிடல் இல்லாமலும் தெளிவில்லாமலும் இப்படி ஒரு முன்னெடுப்பு எடுக்கப்படும் போது உண்மையான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
பத்திரிகை, ஊடகங்களுக்கு தொடர்பில்லாதவர்கள், சமுக விரோதிகள் ஊடகம் PRESS என்று போலியாக பயன்படுத்துவதை சட்டப்படி உறுதியாக தடுக்க வேண்டும் என்பதில் “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” உறுதியாக இருப்பதுடன் அரசுடன், காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு தரவும் தயாராக உள்ளோம்.
இந்த நடவடிக்கைக்கு வாகன தணிக்கை உள்ளிட்ட செயல்பாடுகளை முறையான திட்டமிடலுடன் செயல்படுத்தி போலியாக எவரும் பத்திரிகை ஊடக அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டுக் கொள்கிறோம்.
காவல் துறை-பத்திரிகையாளகர்கள் மத்தியில் எப்பொழுதும் நல்லுறவு தழைக்க வேண்டும் எனவும்”தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” விரும்புகிறது என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இவன்:
ஜெ.அஸ்கர்
மாநிலச் செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
by Askar
written by Askar
பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது;
ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பலத்த காற்றால் தடுமாறிய ஹெலிகாப்டரை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்ப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..
தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக் கிழமை பழைய குற்றாலம் சாலையில் உள்ள கே ஆர் டைகர் ரிசாட்சில் நடைபெற்றது. இதில், கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வசந்தம் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட தலைவராகவும், மேலகரம் பொறியாளர் கீதம் கன்ஸ்ட்ரக்ஷன் சங்கரநாராயணன் மாவட்ட செயலாளராகவும், ஆலங்குளம் சஞ்சய் பில்டர்ஸ் சிவகுருநாதன் பொருளாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களுடன் உடனடி தலைவராக முத்துக்குமார், துணைத் தலைவர்களாக சண்முக செல்வன், மாரியப்பன், இணைச் செயலாளராக இணைப் பொருளாளர் பாலகப்பிரமணியன், அப்துல்காதர் ரிபாய் செய்தி மற்றும் மக்கள் தொடர்பாளராகவும், இணை அமைப்பாளராக சங்கா ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
கே.ஆர். பில்டர்ஸ் ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கோவில்பட்டி ராகவன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். சண்முக செல்வன் பொறியாளர் உறுதிமொழி ஏற்றார். உடனடி முன்னாள் தலைவர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மண்டல தலைவர் மாரிமுத்து, முன்னாள் தலைவர்கள் தில்லை நடராஜன், காதர் பாஷா, முத்து மாரியப்பன் ஆகியோருடன் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஏற்புரை வழங்கினார். மாநிலத் தலைவர் நெல்லை ராஜேஷ் தமிழரசன், மாநில துணைத்தலைவர் சேலம் விஜயா பானு, மாநில செயலாளர் ராஜபாளையம் ஆர் எஸ் காந்தி மாநில துணைப் பொருளாளர் சார்ஜ் ஜோசப், சிவகாசி மண்டல தலைவர் நாகராஜன், திருநெல்வேலி மண்டல செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2024 2026 ஆம் ஆண்டிற்கான புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..
by Askar
written by Askar
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பகவதி அம்மாள் தீர்ப்பு அளித்தார். நிர்மலா தேவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுவிடுத்துள்ளனர்.
முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் கைதாகினர். பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகினர். நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமியை குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் இருந்து வந்துள்ளார். நிர்மலா தேவி, கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர் கல்வித்துறையில் உள்ள முக்கிய நபர்களுக்கு பாலியல் ரீதியாக மாணவிகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார் என சில மாணவிகள், நிர்மலா தேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர் மூலம், கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர்.
பின்னர், 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்றன.
இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என இறுதி செய்து, குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகையில் 3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், கரோனா ஊரடங்கால் வழக்கு தொடர்பான விசாரணை தாமதமானது.
மேலும், இந்த வழக்கில் முந்தைய விசாரணையில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளிக்க இருந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், 29ஆம் தேதி நிர்மலா தேவி உட்பட 3 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இந்த நிலையில், இன்று 3 பெரும் ஆஜரானதால் இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி தீர்ப்பு அளித்துள்ளனர். நிர்மலா தேவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் குற்றவாளி இல்லை என்று அவர்களை விடுவிடுத்துள்ளனர்.
நிர்மலாதேவிக்கு இன்று தண்டனை விவரத்தை அறிவிக்கக்கூடாது என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். தமது தரப்பில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூற ஒரு வாய்பளிக்குமாறு நிர்மலா தேவி வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். தீர்ப்பளித்த அன்றே தண்டனை விவரம் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விவரம் அறிவிப்பது தொடர்பாக பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை! தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு..
by Askar
written by Askar
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை! தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் செல்வதால் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.00 மணிக்கு புறப்பட்டு தற்போது மதுரை விமான நிலையத்திற்கு 10.10 மணிக்கு வருகை புரிந்தார்.
தொடர்ந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் கொடைக்கானல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்திலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் தனது குடும்பத்துடன் ஓய்வு பயணம் என்பதாலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள காரணத்தாலும் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையதிலிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் மு க ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்து கார்களில் புறப்பட்டு சென்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்! வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் பரபரப்பு..
by Askar
written by Askar
நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் கொடைக்கானல் வருவதை ஒட்டி அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு பரபரப்பான போஸ்ட்ர் நிலக்கோட்டை தாலுகா பகுதியில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக ஒட்டப்பட்டுள்ளது.
போஸ்டரில் எழுதியுள்ள வாசகங்கள், தமிழக அரசே! தமிழக அரசே!
தூண்டாதே! தூண்டாதே!
கள்ளரின மக்களை போராடத் தூண்டாதே!
எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படும் கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் அதிகாரத் தோரனையில் கள்ளர் கல்விக் கழகம் மற்றும் கள்ளர் காமன்பண்டு நிலங்களை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கு கையகப்படுத்திடும் மற்றும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கலவித்துறையோடு இணைக்கும் ஏகாதிபத்திய முடிவையும் உடனடியாக கைவிடு!
வெளியிடு! வெளியிடு!
மறுப்பு அறிக்கை உடனே வெளியிடு!
இதற்கான 2023 ம் ஆண்டு நடைபெற்ற தொடர் போராட்டங்கள் மறக்கப்பட்டதா?! மறுக்கப்படுக்கிறதா?!
சீண்டாதே! சீண்டாதே! ஒட்டுமொத்த
கள்ளரின மக்களின் உணர்வுகளை சீண்டாதே!. என்ற வாசகங்களுடன் கொடைக்கானல் செல்லும் நெடுஞ்சாலையோரங்களில் தமிழக முதல்வர் வருகை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை பகுதிகளில் குப்பை மேடுகளில் அடிக்கடி பற்றி எரியும் “தீ” குப்பைகளை கொட்டவும், அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..
by Askar
written by Askar
நிலக்கோட்டை பகுதிகளில் குப்பை மேடுகளில் அடிக்கடி பற்றி எரியும் “தீ” குப்பைகளை கொட்டவும், அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில், நிலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குற்றவழக்குகளில் பிடிக்கப்பட்ட கார்,வேன்,இருசக்கர வாகனங்கள் மாட்டுவண்டி என ஏராளமான வாகனங்கள் வத்தலக்குண்டு மதுரை சாலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியின் பின்புறம் இப்பகுதி குடியிருப்பு மக்கள் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று (28/04/2024) மாலை 5-மணி அளவில் திடீரென வாகனங்கள் நிறுத்திய பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியதால் எதிரில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் தகவல் அறிந்து உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் நிலக்கோட்டை காவல் துறையினரே ஈடுபட்டனர் தனியார் தண்ணீர் வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,ஆனாலும் ஒரு சில வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல்வேறு வாகனங்கள் தீயில் எரிந்தது.
திடீர் தீ குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு நாளை தமிழக முதல்வர் வருகையையொட்டி நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினர் கொடைக்கானல் சென்றுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறையால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
நிலக்கோட்டை பகுதிகளில் குப்பைகள் கொட்டும் இடங்களில் அடிக்கடி தீ பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.
ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை கொட்டுவதற்கும் அதை அகற்றுவதற்கும் முறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
by Askar
written by Askar
இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் வசந்த கிருஷ்ணன் என்பவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வசந்த கிருஷ்ணனின் மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..
by Askar
written by Askar
பழனியில் முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படி பாதை ,மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை மூலமாக மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும் ,ஆண்டிற்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ,இந்நிலையில் ரோப்கார் சேவை இன்று ஒரு நாள்(29/04/2024) நிறுத்தப்பட்டு புதிய கம்பி வடம் பொருத்தப்படும் ,மேல் ரோப்கார் நிலையத்தில் சாப்ட்டுகள், மற்றும் பெட்டிகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும், மேலும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில் ,பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது..
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ! மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து உயர்கல்வி வழிகாட்டல் -2024-க்கான “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில். உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி என்பது 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க தேவையான கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் நோக்கமாகும். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் உயர்கல்வி படிக்க வேண்டும். உயர்கல்வியால் மட்டும் தான் சரியான வேலைவாய்ப்பை பெற்றிட பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் இலட்சியம் மற்றும் கனவு கண்டிப்பாக இருக்கும். அந்த நிலைப்பாட்டை வெற்றியடைய செய்யும் காலம் என்பது 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில் தான் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கான நிலை உருவாகும். இந்த காலக்கட்டத்தை தவறவிடாமல் பயன்படுத்தி தங்கள் இலட்சியத்திற்கும், திறமைக்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும். உயர்கல்வி படிப்பதற்கான அத்துணை வழிகாட்டுதல்களையும் அரசு செய்து வருகிறது. எனவே தங்களுக்கு உரிய காலத்தை தவறவிடாமல் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். காலம் தவறி தனக்குரிய இலட்சியம் நிறைவேறவில்லை என்று பின்னர் வருத்தப்படாத அளவிற்கு உரிய காலத்தில் உரிய கல்வியை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிக்குமார், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.