ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்த நிலையில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலை பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை பள்ளி நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர் முன்னதாக பள்ளிநிர்வாக செயலாளர் நாகரெத்தினம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பார்த்து உணர்ச்சி பொங்க நன்றியினை தெரிவித்தார்.
Category:
மாநில செய்திகள்
உயிருக்கு போராடிய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ! கண்ணீர் மல்க உறவினர்கள் நன்றி தெரிவித்த நிகழ்வு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனைவி சாரதி இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி தாயை மருத்துவர் தினேஷ் முகில் மற்றும் நந்தினி மற்றும் செவிலியர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் போராடிய தாயும் சேயும் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மீன் மார்க்கெட் திடீர் ஆய்வு ! கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ தேளி மீன்களை பறிமுதல் செய்து அதை அளித்த நிலையில் இன்று ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில வியாபாரிகள் லாப நோக்கில் நீண்ட நாட்களாக கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை பினாயில் ஊற்றி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் இதுபோன்ற முறைகேடான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சோதனையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் , ஜெயராஜ் , தர்மர் , மீன்வள ஆய்வாளர் அபுதாஹிர் , மீன்வள சார்பு ஆய்வாளர் அய்யனார் , கடல் அமலாக பிரிவு சார்பு ஆய்வாளர் குருநாதன் , காவலர் காதர் இப்ராகிம் ,மீன்வள மேற்பார்வையாளர் நடேஷ் , சரத் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி..
by Askar
written by Askar
நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி..
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது.
குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ED மனு தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றம்சட்டப்பட்டவரை ED காவலுக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை; நகராட்சி தலைவருக்கு பாராட்டு..
written by Abubakker Sithik
தென்காசி நகராட்சிக்கு அஞ்சலில் வந்த மக்கள் கோரிக்கை; நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு..
தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் அட்டை மூலம் வந்த மக்கள் கோரிக்கையின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவரை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தென்காசி நகராட்சி தலைவராக ஆர். சாதிர் இருந்து வருகிறார். தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வாறுகால்களை தூய்மைப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என அஞ்சல் அட்டை மூலம் தென்காசி நகராட்சி தலைவருக்கு கோரிக்கை அனுப்பி இருந்தார். இந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து தென்காசி நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தென்காசி நகராட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்து வெற்றிவேல் எழுதியுள்ள கடிதத்தில், மதிப்பிற்குரிய சேர்மன் அவர்களுக்கு வணக்கம். 2 வாரங்களுக்கு முன்பு தென்காசி இந்தியன் வங்கி முன்புறம் காந்தி சிலை செல்லும் வழியில் இருக்கும் சந்தில் வாறுகால்களின் சுகாதாரச்சீர்கேடு பற்றிய எனது கடிதத்திற்கு மதிப்பு அளித்து உடனடியாக அதனை சுத்தப்படுத்த ஆணையிட்ட தங்களின் பண்பை எண்ணி வியக்கின்றேன். ஒரு சாதாரண அஞ்சல் அட்டைக்கும் எங்கள் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களின் மீதான எனது மதிப்பினை பலப்படுத்தியுள்ளது. மிகவும் உயர்த்தியுள்ளது. அந்த வழியாக ஒரு நாளைக்கு பல முறை செல்கின்ற பாதசாரிகளில் நானும் ஒருவன். இந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் இன்றியமையாதது என்பது உள்ளிட்ட தூய்மை குறித்த விழிப்புணர்வு பல பகுதிகளுக்கும் பரப்ப வேண்டும். ஒரு தெருவில் ஒரு சிலராவது விழிப்புணர்வுடன் இருந்தால் எமது நகரம் தூய்மை நகரம் ஆகும் என்ற நம்பிக்கையுடன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் கொட்டப் போகும் கனமழை! 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன், அதாவது மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், வடமாவட்டங்கள் சில இடங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும் கனமழை பெய்யக் கூடும்.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசி, கோவை, நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையையும், கன மழை பெய்யக்கூடிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் ஆய்வு மையம் விடுத்து இருக்கிறது.
இதன் அடிப்படையில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மழைக்கால முன்னெச்சரிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பத்தூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய 26 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம், கனமற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர்கள் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி, பேரிடரை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தை முழுமையாக செயல்படச் செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கனமழையால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள வேண்டும்.மேலும், மாவட்ட ஆட்சியர்கள் ஏதேனும் நிகழ்வுகள் இருந்தால் அது குறித்து உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் தேலி மீன் பறிமுதல் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ஜெயராஜ் முன்னிலையில் நேற்று நள்ளிரவு வாகன சோதனை நடைபெற்றது . அப்போது அவ்வழியாக உச்சிப்புளி நோக்கி சந்தேகப்படும்படி சென்ற சரக்கு வாகனத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு லிங்க வேல் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் உச்சிப்புளி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் தேலி மீன் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அபுதாகிர், ஐயப்பன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லிங்கவேல் ஆகியோர் இணைந்து அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் தேள் மீன் சுமார் 800 கிலோவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் பரமக்குடி அடித்த மஞ்சூரில் இருந்து உச்சிப்புளிக்கு கோரி தீவனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மீனை பட்டினம்காத்தான் மேம்பாலம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர். மேலும் இதுபோன்ற ஆப்பிரிக்கன் தேலி மீனை பொதுமக்கள் வாங்கி உணவுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், இதனால் புற்றுநோய், தோல்நோய், குழந்தையின்மை, இதய நோய் போன்ற நோய்கள் வரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கள்ளழகர் கோவில் மலைப்பாதை திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி..
மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கள்ளழகர் திருக்கோவில். மலைமீது முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் மலைப்பாதையில் பாலம் வேலை நடைபெறுவதால் இன்று ஒரு நாள் பக்தர்கள் மலை மீது வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
ஒரு சிலர் மலை மீது சிரமத்துடன் நடந்தே பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பால் மலைமீது ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் மலை மீதுள்ள முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் மலை மீது உள்ள சுவாமிகளை தரிசனம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அடிவாரத்தில் காத்திருக்கும் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் விருது விழா !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் தனியார் மஹாலில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சேர்மன் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா முன்னிலை வகித்தார். இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா ஆகியோர் உரை ஆற்றினர். முன்னாள் ஆல்ரவுண்டர் மாரீஸ்வரன், சத்தியேந்திரன், மகேந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா, இலங்கை வீரர் சீக்குகெ பிரசன்னா, மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் வீரக்கோடி தனுஷ்க ஜீவக்க, பிங்கார சர்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்றுநர் காமகே அசெல பெரேரா ஆகியோர் விருது வழங்கினர். கிரிக்கெட் போட்டிகளின் தேசிய நடுவர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். டயுள்யு சி ஏ கிரிக்கெட் அகாடமி நிர்வாகி வாஹித் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை; பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பின்வரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்ட முழுவதும் 15.05.2024. 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய மூன்று தினங்கள் ஆரஞ்சு Alert என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், தெரியாத ஆழமும் நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். மேற்சொன்ன காலங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மழையினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி வேளாண்மை கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய ஆஃப்கள் வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமானவும் ஒரு ஊடகமாகவும் மாறியுள்ளது . விவசாயிகளுக்கு பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும் மருந்துகளையும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள் விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி புரிகிறது . இந்த ஆப்பை நாம் அன்றாட பயன்படுத்தும் மொபைலின் மூலம் எந்த ஒரு பணம் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல் டவுன்லோட் செய்யலாம்என்றும் விவசாயிகளுக்கு இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு அதன்மூலம் பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..
by Askar
written by Askar
யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..
பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார்.
வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு.
இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, தற்போது திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..
written by Abubakker Sithik
இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்..
இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் (தேர்தல் அதிகாரி) எஸ். ராஜலிங்கம். திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவரது தந்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளாராக பணியாற்றியவர். தாய் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு மற்றொரு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்-ஆக வெற்றி பெற்று உத்தர பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேச மக்களிடையே திறமையான அதிகாரியாக பேசப்பட்டு வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம், வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான தென்காசி ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இந்திய பிரதமர் மோடி மற்றும் தேர்தல் அதிகாரி தென்காசி ராஜலிங்கம் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை தென்காசி மாவட்ட வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், ஸ்ரீகோமதியம்பாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் சென்னை உத்தரவுக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், DON BOSCO TEAM. Mass Movement for Transformation (MMT) and Nuture Bhel) என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல்வழிகாட்டுதலுடன் தொழில் சார்ந்த படிப்பும் (professional course) மற்றும் காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எல்லா ஆவணமும் இருக்கு எதுக்கு ஃபைன்! சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்..
by Askar
written by Askar
எல்லா ஆவணமும் இருக்கு எதுக்கு ஃபைன்! சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்..
சென்னை: அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருந்த போதிலும் ஏன் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே கடந்த 6 ஆம் தேதி போக்குவரத்து தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வாசுதேவன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய சரக்கு வாகனம் ஒன்று பள்ளி பாடப்புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த சரக்கு வாகனத்தை மறித்த டிராபிக் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதிக்க முயன்றனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரக்கு வாகனத்தின் டிரைவர் எந்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று கேட்டு போலீசிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் டிராபிக் போலீஸ் அணிந்த சீருடையில் அவருடைய பெயர் பேட்ஜ் இல்லை. இதனால், நீங்கள் போலீஸ்தானா.. உங்களின் ஆவணத்தை காட்டுங்கள் என்று ஓட்டுநர் போக்குவரத்து போலீசிடம் கேட்டார்.
தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது பிறகு எதற்கு அபராதம் விதிக்கிறீர்கள். வேலிட் லைசன்ஸ் இருக்கு. வேலிட் புக் இன்சுரன்ஸ் இருக்கு.. எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கு.. அப்புறமும் அப்ஸ்ட்ரகஷன் என்று அபராதம் போடுகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஐஜி அலுவலகத்தில் புகாரளிப்பேன் என வாக்கு வாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், போலீசாரிடம் வாக்கு வாதம் செய்த டிரைவர் செந்தமிழன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆவணங்களை காட்டாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் செந்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறப்பு கவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் செந்தமிழன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டமின் இணைப்புகள் இருந்தால் அவற்றைஇணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
by Askar
written by Askar
ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட
மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை
இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது; அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்த தமிழக அரசு, இப்போது அதை மீறுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,‘‘அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும். ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அதிக இணைப்புகள் இருந்தால் அவற்றில் ஓர் இணைப்பு 1டி கட்டண விகிதத்திற்கு மாற்றப்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.
ஒரே பெயரில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் நுகர்வோருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அவ்வாறு இணைக்கப்படும் போது ஒரு வீட்டைத் தவிர, குறிப்பிட்ட வளாகத்தில் உள்ள மற்ற அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும். அதுமட்டுமின்றி, ஏதேனும் ஓர் இணைப்பு 1டி கட்டணப் பிரிவுக்கு மாற்றப்பட்டால், அந்த இணைப்புக்கு யூனிட்டுக்கு ரூ.8.15 கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன், நிலையான கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூ.204 வசூலிக்கப்படும். இது வழக்கமான மின் கட்டணத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதை தவிர்க்க முடியாது. சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அத்தகைய வீடுகள் அனைத்தும் ஒருவருக்கு சொந்தமானது என்பதால் அனைத்து வீடுகளுக்குமான மின் இணைப்புகளும் ஒருவர் பெயரில் தான் இருக்கும். சில இடங்களில் வீடுகளின் உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான வீடுகளை தங்களின் வாரிசுகளுக்கு பிரித்து வழங்கினாலும் கூட பலரும் மின் இணைப்பின் பெயரை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஆனாலும், அந்த வீடுகளில் குடி இருப்பதும், மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் தான். அவ்வாறு இருக்க அனைத்து வீடுகளுக்கான மின் இணைப்பையும் ஒன்றாக இணைத்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வழக்கமாக செலுத்த வேண்டிய ரூ.1125 கட்டணத்திற்கு பதிலாக ரூ.3464 கட்டணம் செலுத்த வேண்டும். இது 3 மடங்குக்கும் கூடுதலான தொகை. இது நுகர்வோரை சுரண்டும் செயல் என்பதில் ஐயமில்லை.
2022&ஆம் ஆண்டில் நிறைவில் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. ஒவ்வொருவரின் பெயரிலும் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கணக்கெடுத்து அவை அனைத்தையும் இணைப்பதற்காகவும், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தவும் தான் அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி விளக்கமளித்த அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘‘ஒருவர் எத்தனை மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மின் இணைப்புகள் இணைக்கப்படாது. இது தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளை மின்சார நுகர்வோர்கள் நம்ப வேண்டாம்’’ என்று விளக்கம் அளித்திருந்தார்.
அதேபோல், ஒரு வளாகத்துக்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும் என திருவெறும்பூர் தமிழ்நாடு மின்சார வாரியம் பயனாளி ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்புகள் தொடர்பாக விளக்கமளித்த மின்வாரியம்,‘‘கடந்த சில நாள்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் இணைக்கவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து பதியப்பட்டு வருகிறது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்’’ என்று பொதுமக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.
ஆனால், அதன்பின் ஓராண்டு மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளில் மின்சார வாரியம் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இது தமிழக மக்களுக்கு செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம். அதிலும், குறிப்பாக தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பேச்சு பேசிய தமிழக அரசும், மின்சார வாரியமும், தேர்தலுக்குப் பிறகு தங்களின் கோரமான உண்மை முகத்தை காட்டுவதை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏற்கனவே, சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டிய தமிழக அரசு, இப்போது மின்னினைப்புகளை இணைக்கத் துடிப்பது பெரும் பாவம்.
எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே வளாகத்தில் இருந்தால் அவற்றை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, இப்போதுள்ள முறையே தொடர அனுமதிப்பதுடன், மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தேதிகளையொட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்..
by Askar
written by Askar
தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளும் இயக்க எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம்..
by Askar
written by Askar
சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள்,பொதுச் செயலாளர்கள் கூட்டம்..
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் இன்று (மே.14) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே, அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, முஹம்மது பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபூபக்கர் சித்தீக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் மீளாய்வு நடைபெற்றது.
ஜனநாயகத்தை காக்கும் வகையில் தமிழக முழுவதும் பரவலாக தங்களது வாக்குரிமை நிறைவேற்றிய வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முஹம்மது முபாரக் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜூன் 04 அன்று வெளியாகும் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜூன் 21 எஸ்டிபிஐ கட்சியின் துவக்க தினத்தை மக்கள் நல திட்டங்களோடு மாநில முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சார பேச்சுக்களுக்கு கண்டனம்:
ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்குப் பொருந்தாத வெறுப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கும், அதனை கட்டுப்படுத்தாத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கும் இந்த செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிடும் கீழ்த்தரமான நிலைக்கு பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம்.
தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்பு பேச்சுகளை, மதரீதியான விழிப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தடுத்து நிறுத்தி, தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயலற்றத் தன்மையை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான ஆரோக்கியமற்ற வெறுப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
எஸ்டிபிஐ கட்சியின் மக்கள் அரசியலின் 16ஆம் ஆண்டு துவக்க தினம்:
பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்கிற கொள்கை முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சிக்காக போராடிவரும் எஸ்டிபிஐ கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. கட்சி கொடி ஏற்ற நிகழ்ச்சிகள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், ஆதரவற்றோருக்கான நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல், ரத்ததான முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுடன் கட்சி துவக்க தினத்தை கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டது.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:
தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழக முழுவதும் பரவலாக போதைப் பொருட்கள் பயன்பாடும் அது தொடர்பான
குற்றச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறிவருவது கண்கூடாகத் தெரிகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றுதல் என்கிற நடவடிக்கையை தாண்டி, அதன் பயன்பாடு, அதன் மூலம் நடைபெறும் குற்றச் செயல்களை தடுத்தல், அதன் காரணமாக குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாகவே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை அரசு தடுக்க முடியும்.
ஆகவே, போதையின் பிடியிலிருந்து தமிழக இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் புழக்கத்தில் மிக முக்கிய பங்கை டாஸ்மாக் வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆகவே எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவரும் மதுவிலக்கை அமல்படுத்தி, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஒரு பொறுப்புள்ள அரசாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் பரவலாக நிகழும் மின்வெட்டு பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட வேண்டும்:
கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பரவலாக ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்களை இயக்க முடியாத சூழலும் நிலவுகின்றது. ஆகவே தமிழக அரசு இதனை கவனத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரிசெய்திட வேண்டும் என இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்:
தமிழகத்தில் பரவலாக குடிநீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் காரணமாக உயர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆகவே குடிநீர் பிரச்சினையை சரிசெய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பை அதிகரிக்க மராமத்துப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..
by Askar
written by Askar
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..
கடந்த 1991 மே 21ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. அத்தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசு கருதுகிறது.
“இலங்கை உள்நாட்டுப் போட்டில் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டபோதும், தனி ஈழம் என்ற கொள்கையை அது இன்னும் கைவிடவில்லை. தனி ஈழம் அமைப்பதற்கான பிரசாரமும் நிதிதிரட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து ரகசியமாக இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், உயிர்தப்பிய விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகள் இலங்கையிலும் அனைத்துலக அளவிலும் அவ்வமைப்பை மீண்டும் கட்டமைப்பதற்குத் தேவையான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அவ்வியக்கத்திற்கு ஆதரவானோர் மக்களிடம் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றனர்.
“இந்தியாவிலும், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இது இந்திய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று இந்திய உள்துறை அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரளாவில் அடிச்சு வெளுக்க போகும் “கன” மழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..
by Askar
written by Askar
கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அதேசமயம் திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மே 15 ஆம் தேதியும், பட்டினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, மாலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 16 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, இடுக்கி, மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 17 ஆம் தேதி மற்றும் மீண்டும் திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மே 18 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.