மாநில செய்திகள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..
“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.
கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம். சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா?? என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலையில் செய்தியாளர் தாக்குதல்: புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்…
மக்களை பாதுகாக்கும் மகத்தான பணி காவல் துறை பணி ஆனால் இது போன்று அராஜக செயலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து ஊடகவியலாளர்களை தமிழக காவல் துறையினர் தாக்குவதும் இதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்ப்பதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி அமலில் இருக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஊடகங்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்களை திருப்தி படுத்த வேண்டியது அரசின் கடமை ஆனால் செய்தி சேகரிக்கும் தளத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை தாக்குவது ஜனநாயக படுகொலையாகும்.
ஊடகங்களை தனக்கு சாதகமாக செய்தி வெளியிடவேண்டும் என நினைப்பதும் குறைகளை சுட்டிக்காட்டுவோர் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்க மேலும் ஒரு சுதந்திரப்போராட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களை கொண்டு செல்லும் சூழலை தவிர்க்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்.
சன் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடரும் பத்திரிக்கையாளர் தாக்குதல்- சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம், ஆளுநரிடம் புகார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரணமின்றி கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் விடுதலை.. சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சரமாரி கேள்வி கனை…
கடந்த 26.06.2018 செவ்வாய்க்கிழமை அன்று பகல் 12 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன் மற்றும் வாகன ஓட்டுநர் ரசாக் மூவரையும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் திடீரென சிறைப்பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட செய்தியாளர் அனுப் தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன் ஆகியோர் தங்களது அடையாள அட்டையை காண்பித்தும் காவல்துறையினர் எதையும் பொருட்படுத்தவில்லை. சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் காவல்துறை உயரதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி அழுத்தம் தந்ததன் பேரில் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள், மிரட்டல்கள், பொய் வழக்கு பதிவு செய்யப்படுதல் ஆகியவை அதிகரித்து வருவது பெரும் கண்டனத்துக்குரியது.
இந்த நிலையில் கீழ்கண்ட கேள்விகளுக்கு காவல்துறை பதில் தரவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது :-
1.செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள்?
2.அரசு வழங்கிய செய்தியாளர் அங்கீகார அட்டையைக் காண்பித்தும் பத்திரிகையாளர் மீது மிரட்டலும் ,அடக்குமுறையும் ஏன்?
3.தொடர்ந்து காவல்துறை பத்திரிகையாளர்களை மிரட்டுவது ஏன்?
4.பத்திரிகையாளர், காவல்துறை மோதல்களை தடுக்க,குறைக்க ஆக்கப்பூர்வமாக எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
இன்றைய சூழலில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பில் பல்வேறு விதமான இடையூறுகள், தடைகளை சந்தித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது, தாக்குவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது பத்திரிகை சுதந்திரத்தை இன்னும் படுகுழியில் தான் தள்ளும்.
மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், தமிழக காவல்துறை தலைவர் டி.கே.எஸ்.இராஜேந்திரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி பணிகள் நடைபெறுவதுண்டு. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் உள்ள மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம், அண்ணா அம்பேத்கர் நகரை சேர்ந்த பாஸ்கரின் மனைவி பார்வதி(45) என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சுவாமி விவேகானந்தா நகரில் பணி புரிந்து வந்தார். அங்குள்ள குளம் தூர் வாரும்போது, இன்று மதியம் திடீரென மயங்கி கீழே விழுந்து பலியானார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேலையில், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜாரெத்தினம் மைதானத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை பேரணியாக நடைபெற்றது. இந்த பேரணியில் பணி நிரந்திரம் உள்ளிட்ட இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 450 பேருக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் பல இடங்களில் பா.ஜ.க தலைவரை கண்டித்து பமகவினர் ஆர்ப்பாட்டம்..
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையை கண்டித்து பாமக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.ராஜா தலைமை தாங்கி கோஷங்கள் எழுப்பினார். மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் காட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் அன்புமணி ராமதாசை மரவேட்டி என்று விமர்சித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து வேலூர் கிழக்கு மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியிலும் 50 க்கும் மேற்பட்ட பாஜக வினர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.10 கோடி மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
மதுரை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.10 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு 6000 பேருக்கு முறைக்கேடாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த முறைகேடு சம்பந்தமாக மதுரையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் 6,777 பேருக்கு பேட்ஜ் வழங்கி ரூ.10.16 கோடி ஊழல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2015ல் வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்த கல்யாண்குமார் உட்பட 6 பேர், 11 ஓட்டுநர் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சட்டவிரோதமாக பத்திரிக்கையாளர்களை அடைத்து வைத்ததை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அழைப்பு..
கடந்த 26/06/2018 அன்று மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் முருகன் ஆகியோர் திருவண்ணாமலை போலிஸாரால் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததை கண்டித்து 28.06.18 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒன்று கூடி காவல்துறை ஆணையரை சந்திக்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அனைத்து பத்திரிக்கை துறை அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு’ விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் துவக்கம்…
‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” விழாவினை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (27.06.2018) தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பேசியதாவது: தமிழ்மொழியின் வரலாறும், தமிழ் மக்களின் கலாச்சாரமும் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒப்பிடுகையில் நமது தமிழ் மொழியானது மிகச் சிறந்த இலக்கண வளமும், இலக்கிய வளமும் நிறைந்த மொழியாக விளங்குகின்றது. ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து ‘பிரசிடென்சி ஆப் மெட்ராஸ்” என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்” என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும் என தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கோரிக்கை முன் வைத்தார்கள்.
அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம் 1967ஆம் ஆண்டு அப்போதைய ‘சென்னை மாகாணத்திற்கு’ ‘தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின் 50வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்மொழியின் சிறப்பினையும், நமது கலாச்சாரத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக” கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் தமிழ்வளர்ச்சித் துறை சார்பாக, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். மாநில அளவில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000/- மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.10,000/- மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50வது ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் போட்டி, பரிசு என்பதை கடந்து நமது மொழியின் பெருமையினை மனதிலேந்தி தமிழ்வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பேசினார்.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வெ.குமார், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் நிறுவன முதல்வர் முனைவர்.சு.சோமசுந்தரம், இராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.அ.வள்ளியம்மை,இராஜா கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.க.காளீஸ் பிரபு உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் முரளியை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, இ.ஆ.ப உத்தரவிட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம், செய்யாறு மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரனை நாற்காலியில் தாக்கிய புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவை மாநகராட்சிக்கு 26 ஆண்டுகளுக்கு குடி தண்ணீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரியும், தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு (சூயஸ்) தாரை வார்த்த கோவை மாநகராட்சியை கண்டித்து அலுவலக முற்றுகை போராட்டம் சமூக நீதிக் கட்சி பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் சிரவை கணேசன் சத்தி இராசேந்திரன், சத்தி சேகர், அலெக்ஸ், தண்டபாணி மாநகர பொருப்பாளர் இரவிச்சந்திரன் விக்னேஷ் புறநகர் பொருப்பாளர் ஆறுச்சாமி தடா.நாகராசன் மற்றும் ஈரோடு மாவட்ட பொருப்பாளர் கோபால், அய்யப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு முற்றுகையிட முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து ரயில் நிலையத்திலுள்ள அண்ணாமலை மண்டபத்தில் தங்க வைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முன்னாள் மத்திய அமைச்சார் சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில் வேலூர் அருகே 3 கூலிப்படையினர் கைது..
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஜமீன் தேசிய சாலையில் காரில் தப்பிச்சென்ற 3 கூலி படையை சேர்ந்த கொலையாளிகளை தேசிய சாலை ரோந்து போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.
சிவமூர்த்தி கார்மண்ட் கம்பனியில் பணி புரியும் பூவனேஸ்வரிக்கும், சிவமூர்த்திக்கும் கள்ளக்காதல் என அறியப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மூர்த்தி கூலி படையை வைத்து கடத்தி கொலை செய்துள்ளனர்.
அக்கொலையை செய்து விட்டு தப்பி வந்த 3 பேரையும் சாலை ரோந்து போலிஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் கோயம்பத்தூர் பகுதியே சேர்த்த சகாதேவன் மகன் மணிபாரதி வயது 22, செல்வராஜ் மகன் கொளதமன் வயது 22, கண்மணி மகன் விமல் வயது 35 அகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் என தகவல். தற்போது திருப்பூர் போலீஸார் 3 கொலைக் குற்றவாளிகளை ஓசூர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதுயுகம் படைக்கும் சேலம் இளைய சமுதாயம்.. அரசு பள்ளியை மேம்படுத்தும் இளைஞர்கள்..
சேலத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை போன்று மாற்றியமைத்து ஏழை எளிய மாணவ மாணவிகளின் படிப்பை மேம்படுத்த சேலம் இளைஞர் குழு என்ற அமைப்பினர் முன்வந்துள்ளனர்.
அதன் முதல் கட்ட பணியாக கடந்த 24-06-2018 அன்று சேலம் மாநகராட்சி பள்ளிக்கு புதிதாக கழிவறைத் தொட்டி இலவசமாக தாங்களே அமைத்துக் களப்பணி ஆற்றியுள்ளனர். மேலும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளியைப் போன்று மாற்றியமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தங்களை இப்பணியில் முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள இந்த இளைய சமுதாயம் நிச்சயமாக போற்றுதலுக்குரியவர்கள், வாழத்தப்பட வேண்டியவர்கள் மற்றும் இது போன்ற செயல்பாடுகள் ஊக்கப்படுத்துதல் அவசியமாகும்.
மேலும் இப்பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூறியதாவது, “இந்த பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும், இன்னும் சிறப்பாக செய்ய முடியும்” என்றனர்.
சேலம் இளைஞர் குழு அமைப்பினரின் ஏழை எளிய மக்களுக்கான இந்த கல்விப்பணி பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இப்பணியில் வருங்கால சந்ததியினர் ஒவ்வொருவருக்கும் படிப்பினைகள் உள்ளது.
You must be logged in to post a comment.