மாநில செய்திகள்
தனுஸ்கோடிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுவர்கள் கடலில் விழுந்து பலி.. இருவரின் உடலை தேடும் பணி தீவிரம்…
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடலில் குளித்த போது பலி இருவர் உடலலை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் போலீஸ்சார் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் செலுகை கிராமத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆனந்தன், பூமிநாதன், ஜெகநாதன் ஆகியோர் குடும்பத்துடன் பள்ளி விடுமுறை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
இதனையடுத்து இவர்கள் தனுஸ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு பிற்பகல் சென்று அங்கு இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் குடும்பத்துடன் குளிந்துக்கொண்டு இருந்த போது கடலில் ஏற்ப்பட்ட சூழற்சி காரணமாக இன்பதமிழன் (15) சுவேதா (11); இனிதா (12) ஆகியோர் கடல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்த உறவினர்கள் இவர்களை மீட்க சென்ற போது இவர்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து பெண்கள் அழுது கூக்குரல் இட்டதில் அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அவர்களை மீன்பிடிக்கும் கயிறை பயன்படுத்தி மீட்ட நிலையில் மூன்று பிள்ளைகளை மீட்க முடியமால் தேடி வந்த நிலையில் இன்பதமிழனை மட்டும் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இன்பதமிழன் உயிரிழந்தார். இதனையடுத்து சுவேதா மற்றும் இனிதாவை மீனவர்கள், தீயனைப்புதுறையினர் மற்றும் போலீஸ்சார் ராமேஸ்வரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இறந்த சுவேதா தந்தை பூமிநாதன் மாயமான இரண்டு பிள்ளைகளையும் கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். குழந்தைகளை இழந்தவர்கள் அழுது கதறியது பார்ப்பவர் நெஞ்சை பதறவைத்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் தனியார் உணவகத்தின் 6ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இலவச மருந்துவ முகாம்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“உழைப்பாளர்களுடன் கலந்துரையாடல்” – தவ்ஹீத் ஜமாத் மே தின சிறப்பு நிகழ்ச்சி..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 1.5.2017 செவ்வாய்கிழமை உழைப்பாளர் தினத்தன்று “உழைப்பாளர்களுடன் கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதர,சகோரிகளான துப்புரவுப்பணியாளர்களை அழைத்து இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையில் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற கேள்வி- பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
இதில் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்ட மாநில செயலாளர் இ.பாரூக் அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டார்கள் அதில் 25 நபர்களுக்கு விருப்பத்தின் பேரில் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்து கீழக்கரை தெற்குகிளை தலைவர் பதுருஜமான் அவர்கள் கூறியதாவது, “துப்புரவுபணி என்பது அது ஒரு தொழிலே தவிர பிறப்பின் அடிப்படையில் இல்லை வெளிநாடுகளில் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் அங்கு அவர்கள் உழைப்பாளர்களாக பார்க்கப்படுவதோடு கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்கள். அத்துடன் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அடியோடு ஒழித்து கட்டியுள்ளதையும் அனைவரும் ஒரு தாய்,தந்தையிலிருந்தான் பிறந்தோம் என்பதை உலகிற்கு பறைசாற்றும் முகமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறினார்.
சமூக நல்லிணக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதாக அமைந்த இந்நிகழ்ச்சி கிளை துணை செயலாளர் சித்தீக் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் இக்ரமுல்லாஹ், துணைத்தலைவர், ஜகுபர்சாதிக் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தட்டச்சு பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அமுல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்… வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை..
இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுனர் குழு அமைக்க வேண்டும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் கடந்த 2017, 18ம் ஆண்டுகளில் அரசு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இராமேஸ்வரம் கோசுவாமி மடம் டிரஸ்ட் மகாலில் நடந்தது.
இராமநாதபுரம் மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகியுமான ராஜா என்.குமரன் சேதுபதி மற்றும் ராணி லட்சுமி குமரன் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராஜா பரிசு வழங்கி பாராட்டினார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி எல்ஐசி நாராயணன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் இளங்கோவன் 2017-18ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். அதை தொடர்ந்து பொருளாளர் விஜயகுமார் வரவு செலவு கணக்கினை சமர்பித்து ஏகமனதான ஒப்புதலை பெற்றார். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுநர் குழு அமைத்தல், ஆங்கிலம் மற்றும் தமிழ்தட்டச்சு புகுமுக இளநிலைத் தேர்வினை ஏனைய நிலைத் தேர்வுகள் போல் ஆகஸ்ட் பருவ தேர்வு மட்டுமல்லாது பிப்ரவரி பருவத் தேர்விலும் நடைபெற செய்ய வேண்டும், தட்டச்சு தனியார் பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் முழு விவரத்தினையும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் வலைதளத்தில் வெளியிட செய்ய வேண்டும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வாளர்கள் பட்டியலை சம்பந்தபட்டவர்களுடைந வரிசை எண் அளித்து உடனடியாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் வலைதளத்தில் வெளியிட செய்ய வேண்டும், தட்டச்சு பொறிகளின் உற்பத்தி இல்லாத நிலையில் அரசுத் துறைகளில் உபயோகிக்காமலுள்ள தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப் பொறிகளை மாணவர் நலன் கருதி தேவையுடையவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கையாக தீர்மானம் பொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வக்ஃப் போர்டு தலைவராக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தேர்வு.. சரித்திரம் திரும்புமா?? மாறுமா??.. கீழக்கரை பிரமுகர்கள் வாழ்த்து ..
தமிழ்நாடு வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் இன்று அதிமுக கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றியை வாழ்த்தி தமிழகத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் மற்றும் கீழக்கரை பைத்துல்மாலின் துணை தலைவருமான ரஃபீக் சாதிக் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வக்ஃபு போர்டு பதவி என்பது அமைச்சர் அந்தஸ்த்துக்கு சமமான பதவியாகும். இஸ்லாமிய சமுதாயத்தின் அமானித சொத்துக்களை பராமரிக்கும் பணியாகும். இப்பதவியில் தடம் பதித்தவர்களும் உண்டு, தடம் புரண்டவர்களும் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் புதிய சேர்மனின் தமிழ்நாடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு எந்த அளவு நன்மை பயக்கும் என்பதை??
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (29/04/2018) திருச்சி ஆரோக்கியா கல்வி அறக்கட்டளை சார்பாக சமுதாய சேவையில் உள்ளவர்களை கௌரவிக்கும் வண்ணம் “சிகரம் 2018” விருது வழங்கப்பட்டது.
கீழக்கரையைச் சார்ந்த அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி.ஷேக் ஆகிய இருவருக்கும் “சிகரம் 2018” என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவில் கீழக்கரையில் சினர்ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.ஹுசைன் பாஷாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் பாண்டியராஜன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வேலை தேடும் சாமானிய மனிதன் முதல் வேலை தேடும் பட்டதாரிகள் வரை நாடிச் செல்லும் நிறுவனம்தான் “கீழக்கரை கிளாசிஃபைட்”, உச்சரிக்கும் பெயர்தான் எஸ்.கே.வி சேக்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 50 லட்சம் மதிப்பிலான உயர்தர பீடி இலை மூடைகள் பறிமுதல்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடரும் பாலியல் தொல்லை..ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி கீழ நகராட்சியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமியா பள்ளியில் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..
இராமநாதபுரம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியின் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் இன்று (22/04/2018) மாலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா ஆறாம் வகுப்பு மாணவி ஃபஜீஹா மற்றும் ஆயிஷா ராபிஃஹா ஆகியோரின் கிராத்துடனும் UKG மாணவி ஃபாத்திமா சானாவின் வரவேற்புரையுடனும் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இபுராஹிம் தலைமை வகித்தார், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினாராக மாவட்ட நீதிபதி கயல்விழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும், பட்டங்களும் வழங்கினார். இந்நிகழ்வின் பட்டமளிப்பு உரையை UKG மாணவி அர்சியா பர்வீன் வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்ச்சி, யா தைபா என்ற அரபு நிகழ்ச்சி, கதம்பம் நிகழ்ச்சி, அரேபிய நடனம் மற்றும் தமிழேன்டா என்ற மாணவர்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜன்னத் ரிஜ்னா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மேபெள் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.