மாநில செய்திகள்
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கியக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் 100 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது இலக்கிய கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அருண்பாரதி, புன்னைச் செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘கலைஞரின் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் நாறும்பூநாதன் தனிச் சொற்பொழிவாற்றினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். பேராசிரியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நூற்றாண்டு விழா கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன், தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர்கள் ஜெயபாலன், தச்சை மணி, மீனாட்சிபுரம் நூலகர் அகிலன் முத்துக்குமார், எழுத்தாளர் மு.வெ.ரா, புன்னைச் செழியன் புகைப்படக் கலைஞர் துரைராஜ் மற்றும் சண்முக சுப்பிரமணியன், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், மேகலிங்கம், வழக்கறிஞர் தீன், காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் முறையில் இருவருக்கு கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர், இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.6 இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், சென்னை அப்பலோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்கத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலர் நாராயணன் முன்னிலை வகித்தார்.
இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை கட்டணமின்றி செய்யப்பட்டது. மேல்சிகிச்சைக்காக 4 குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனர். அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள் ஹரிதா, விஜய், கார்த்தி ஆகியோர் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவ கழகத்தின் நிதி செயலர் டாக்டர்.ராசிகா, டாக்டர்.அடிப் அப்துல்லா, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேரா. கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
துணை ஆளுநர் அருண் பிரசாத், முன்னாள் தலைவர்கள் அசாருதீன், தமிழ் செல்வன், சோமசுந்தரம், தமிழ்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விவசாயபோராட்ட களத்தில் மரபு நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிய விவசாயசங்கத்தினர்..
உசிலம்பட்டி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 33வது நாளான இன்று மரபு நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், கரும்பு மற்றும் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாற்றில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்., தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,இன்று 33வது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் விவசாய சங்கத்தினர் தமிழர்கள் இழந்த நெல் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்ச்சியாக பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி தங்கசம்பா மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட மரபு நெல் விதைகளை வந்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி- ஈசன் விவசாய சங்க நிறுவனத்தலைவர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோயில் பிரசாத சர்க்கரை பொங்கலில் இரண்டரை இன்ச் ஆணி: அதிர்ச்சியில் பக்தர்கள்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள வடகரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரத் செயலாளர் ஷாஜித் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நகரத் துணை செயலாளர் சேக் முகம்மது அலி அனைவரையும் வரவேற்றார். நகரத் தலைவர் அப்துல் பாசித் துவக்க உரை நிகழ்த்தினார்.
பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், வர்த்தக அணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி , மண்டல தலைவர் சுல்பிகர் ஆகியோர் உரையாற்றினா். நகர நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் சிக்கந்தர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட், பேக் மற்றும் கல்வி உபகரணங்கள், யூனிபார்ம், கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் காஜா செரீப் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி விழா நடைபெற்றது…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
1,800 கிலோ ரேஷன் அரிசி, 120 லிட்டர் பாமாயில் பறிமுதல்.. விசாரணை் தீவிரம்..
ராமநாதபுரம், ஆக.4 –
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் கோகிலா தலைமையில் வருவாய் துறையினர் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக (03/98/2023) நேற்றிரவு 7:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த தகவல்படி ஆர்.எஸ்.மங்கலம் சிலுகைவயல் மேல் கரை ஊரணி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ வீதம் 36 மூடைகளில் இருந்த ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 120 லிட்டர் பாமாயில் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி அருகே மேல பெருங்கரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பாலமுருகனை (27) கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பிடிபட்ட 8 நீளம் உள்ள ஐந்து சாரைப்பாம்புகள்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பொன்னையா என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் 5 சாரைப்பாம்புகள் இருப்பதாக பாம்பு பிடி வீரர் சினேக் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் பாபு தலைமையிலான அவரது குழுவினர் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் சுமார் 8 அடி நீளம் உள்ள ஐந்து சாரை பாம்புகளை போராடி பிடித்துள்ளனர்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கிணற்றில் இறங்கி பாம்பை பிடித்து பாம்பு பிடி வீரர் சினேக் பாபு குழுவினரை வடக்கம்பட்டி கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர். அதனை தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஐந்து சாரைப்பாம்புகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதிக்குள் அவிழ்த்து விடப்பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா..
இன்று26.01.2022. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் வரவேற்புரை ஆற்றினார்.
ஜமாத் தலைவர் தேசியக்கொடியினை ஏற்றினார்.பள்ளி ஆலீம் அவர்கள் குடியரசு தினம் பற்றி சிறப்புரை யாற்றினார். ஊர் பிரமுகர்களும்.இளை ஞர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பள்ளி உதவியாசிரியை நன்றி கூறினார்.சிறப்பு அழைப்பாராக ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ன மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
58 கிராம இளைஞா்கள் சங்க குழுவிற்கு சிறந்த சேவை பணிக்கான மாவட்ட ஆட்சியா் விருது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம இளைஞா்கள் சங்கம் சௌந்திர பாண்டியன் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.கொரோனா முதல் அலையின் போதே தமிழகத்திலேயே முதன்முறையாக கிராமம் தோறும் கபசுர குடிநீா் வழங்குதல் கொரோனா தாக்கத்தின் போது கா்ப்பிணிப் பெண்கள் பயன் பெறும் வகையில் பிரத்யோக இலவச உதவி எண் உருவாகக் காரணமாக இருந்தது மற்றும் உசிலம்பட்டி பகுதியிலுள்ள ராஜக்காபட்டி மானுாத்து கிராம கண்மாய்களை சீரமைத்ததோடு மட்டுமல்லாமல் 15 வருடங்களாக வறண்டு கிடந்த உசிலம்பட்டி கருக்கட்டாண்பட்டி கண்மாய்களை பொதுமக்களிடம் நன்கொடை பெற்று கண்மாய்களை குறைந்த செலவில் சீரமைத்து உசிலம்பட்டி நகரப்பகுதியின் குடிநீா் பஞ்சத்தை போக்கியதோடு மட்டுமல்லாமல் அதன் வரவு செலவு விபரங்களை பொதுமக்கள் பாா்வைக்கு ப்ளக்ஸ் பேனராக வைத்து மற்ற இளைஞா்களுக்கு முன்மாதிாியாக திகழ்ந்துள்ளனா்
. இவா்களின் பொதுநல சேவையை பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியாின் பாிந்துரையின் போில் 58 கிராம இளைஞா்கள் சங்க குழுவிற்கு சிறந்த சேவை பணிக்கான மாவட்ட ஆட்சியா் விருது குடியரசுதின விழாவன்று வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியா் அனிஷ் சேகா் இவ்விருதினை சௌந்திரபாண்டியன் குழுவினற்கு வழங்கினாா்.இவா்களின் சேவையை ஆட்சியாின் நோ்முக உதவியாளா் ராஜ்குமாா் வெகுவாகப் பாராட்டினாா்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்போலியான பெயரில் ரிட் மனு தாக்கல்: போலீஸ் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றம்மதுரை பெஞ்சில் போலியான பெயரில் ,ரிட் மனு தாக்கல் செய்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் பூர்ண ஜெயா ஆனந்த் .இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 10ஆம் தேதி உயர்நீதிமன்றகிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது விசாரணைக்கு வரும்போது, போலியானது என்று தெரியவந்தது. இவ்வாறு போலியான பெயரில் ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக “ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம்” நிகழ்ச்சி…
கீழக்கரையில் 18/1/22 அன்று மாலை புது தெருவில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு நகர் சார்பாக ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் sdpi கட்சியின் கொடியை புது தெரு கிளை பொருளாளர் தமீம் ஏற்றினார். தொகுதி தலைவர் பீர் முகைதீன் தலைமை தாங்கினார்
கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற்புரையாற்றினார். மேற்கு நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தொகுத்து வழங்கினார். மேற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் மாநில பேச்சாளர் மவுலானா ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார். இறுதியாக மேற்கு நகர் துணை தலைவர் முஹம்மது ஜலீல் நன்றி உரையாற்றினார். இதில் தொகுதி மற்றும்கிழக்கு மேற்கு நகர் கிளை நிர்வாகிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வுமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சகோதர சகோதரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் டால்பின் பார்க் இந்திய சிறு பத்திரிகையாளர்களின் தமிழ்நாடு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, அகில இந்திய சிறு பத்திரிகையாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில அலுவலக திறப்பு விழா, மக்கள் விசாரணை பத்திரிகையின் பத்தாம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் அதில் இந்திய சிறு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் தேசிய தலைவர் சிவசங்கர் திரிபாதி, அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய செயலர் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் ஆர்த்தி திரிபாதி , அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் ஸ்ரீராம் ஜி அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள். விழாவில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய தலைவர் திரிபாதி ஜி சார்பாக அவரது ஆங்கில உரையை தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர், ஆர்த்தி திரிபாதி வாசித்தார்கள்.
அவரது உரையின் முக்கிய சாராம்சம்.1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கம் இன்றளவும் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியான பல ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி சிறு பத்திரிக்கையாளர்களை பாதுகாத்து வருகிறது. இச்சங்கமானது சிறு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற சவாலான பிரச்சினைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து விரைவாகத் தீர்வுகளை கண்டு வருகிறது. சிறு பத்திரிகைகளின் முன்னேற்றம்தான் இச் சங்கத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2015 -16 இல் மத்திய அரசின் விளம்பரத்துறையான டி.ஏ.வி.பி கொண்டுவந்த புதிய விளம்பர கொள்கை பல சிறு-குறு பத்திரிகையாளர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்ற வகையில் இருந்தது. இச்சங்கம் அதனை முன்னெடுத்து மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி, அவற்றில் சிறுபத்திரிகைகள் பாதிக்காத வகையில் தளர்வுகளைக் கொண்டுவந்துதது. கொரானா காலத்தில் இறந்த இளம்க்ஷ பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ரூபாய் 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்தது. கொரானா காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கக்கோரி 30 மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் மற்றும் ஈமெயில் வழியாக தெரிவிக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் ஏற்பட்ட காகித விலை செலவினம் அதிகரித்தது குறித்தும் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில் பத்திரிக்கை பதிப்பிப்பதற்கான செலவினங்கள் ஆன அச்சக காகித விலை, உயர்வு. மை,வேதியியல் பொருட்கள், மின்சாரம், போக்குவரத்து, வேலையாட்கள் கூலி உயர்வு, என அனைத்து நிலைகளிலும் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த காலகட்டங்களில் டி. ஏ. வி. பி.மூலம் கொடுக்கின்ற அரசு விளம்பர வருவாய் சிறு பத்திரிக்கைகளுக்கு பூஜ்ஜியமாக இருந்ததையும் சுட்டிக் காட்டியது, தேசிய தின விளம்பரங்களான ஜனவரி 26,ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேசிய விழா விளம்பரங்கள் சிறுபத்திரிகைகளில் வழங்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார். ஏற்கனவே ஜி.எஸ்.டி. யால் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அரசின் விளம்பர கட்டணத்தை 3 முதல் 4 மடங்கு உயர்த்த வேண்டும் என்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் கேட்டுக்கொண்டார். மேலும் டி.ஏ.வி. பி. மற்றும் ஆர். என். ஐ . ஆல் நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற காலதாமதத்தை உடனடியாக போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். விழாவில் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய செயலர் சிவசங்கர் திரிபாதி அவர்களும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் ஆர்த்தி திரிபாதி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையையும், நினைவுப் பரிசையும் வழங்கி கௌரவித்ததோடு, மக்கள் விசாரணை பத்திரிக்கையில் 10 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த பத்திரிகையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். விழாவிற்கு கல்வி டுடே பத்திரிகையின் ஆசிரியர், AISNA சங்கத்தின் தமிழக தலைவர் ராமசுப்ரமணியன்,முன்னிலைவகுத்தார். ,மக்கள் விசாரணை பத்திரிகையின் ஆசிரியர், சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஆ.மவுரியன் தலைமை ஏற்றார்.விழாவிற்கான ஏற்பாடுகளை AISNA இன் பொருளாளர் வி.அருணாச்சலம், செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் ரமேஷ் குமார், பொதிகை சங்கர், மக்கள் விசாரணை பத்திரிக்கையின் இணைய ஆசிரியர் ஆ.தே.முருகையன், துணை ஆசிரியர் ஏசி குமார், அலுவலக நிர்வாகிகள் சிவசங்கர் ,சுரேஷ், சச்சின் உட்பட பலரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில், 200க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள், வீடியோக்கிராபர்கள், செய்தியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தேசிய விவசாயிகள் தினம் (Indian Farmer’s Day) இன்று (டிசம்பர் 23).
பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதைப் போன்றே அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார்.
தேசிய விவசாயிகள் தினம் (Indian Farmer’s Day) உழவர்களின் நலனுக்காகவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங் அவர்களின் பிறந்த நாளே தேசிய உழவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய உழவர் நாளன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது.
சவுத்ரி சரண் சிங், ஜமீன்தாரி முறை ஒழிப்பு’, ‘கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிரியேட் அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் விற்பனைத் துறை அதிகாரி பொன்னம்பலம் கூறுகையில், “விவசாயத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது. விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆவதைத் தடுக்க வேண்டும். இதற்கென தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் காலம் வரவேண்டும்” என்றார். நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தட்டிமேடு ஜெயராமன் கூறுகையில், “தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன. விவசாயத்தை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்” என்றார்.
Source By: Wikipedia, Hindutamil, Vikatan.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விமர்சையாக நடைபெற்ற கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் சார்பில் 40-வது ஆண்டு ரூபி ஜுப்லி புத்தக வெளியீட்டு விழா..
விழாவில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர், பைத்துல்மால் துணைத் தலைவர் முகைதீன் தம்பி, நிர்வாகி ரபீக் சாதிக், மேலத்தெரு சங்க செயலாளர் சதக் அன்சாரி, வடக்கு தெரு ஜமாஅத் நிர்வாகி அக்பர் கான், ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் தாளாளர் சிராஜ்தீன், வடக்குத்தெரு ஆபித் அலி, முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே. முகம்மது காசிம், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், தாசிம்பீவி மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன், வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் உசேன், தெற்குத்தெரு ஜமாத் நிர்வாகி நிஸ்பர், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தில்லையேந்தல் ரகுமான், ரோட்டரி நிர்வாகிகள் ஹசனுதீன், சுந்தரம், கெஜி, கீழக்கரை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், , சதக்கத்துன் ஜாரியா பள்ளி நிர்வாகி ஜமாலுதீன், ஆசிரியர் (ஓய்வு)ஆபிதா, ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஹமீது நிஷா மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகளும், அனைத்து சமுதாய நிர்வாகிகளும், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் செயற்கை குடிநீர் பஞ்சத்தை உருவாக்க முயலும் பொதுப்பணித் துறையினர்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியைப்பாதிக்குமா ???
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி 24 வார்டுகளை உள்ளடக்கியதாகும்.கிட்டத்தட்ட 31 ஆயிரம் வாக்காளர்களையும் 60 ஆயிரம் பொதுமக்களும் வசிக்கும் பகுதியாகும்.உசிலம்பட்டி நகருக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்மாய் மற்றும் கருக்கட்டாண்பட்டி கண்மாய்களாகும் .இக்கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே உசிலம்பட்டி நகர் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் நிரம்பி உசிலம்பட்டி நகருக்கு குடிநீர் பஞ்சம் வராது..இதில் 60ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்பட்டி கண்மாய் நீண்ட வருடங்களாக தூர் வாரப்படாமல் சீPமை கருவேல மரங்கள் முளைத்துக் கிடைத்து இருந்தது.இச்சமயங்களில் உசிலம்பட்டி நகரில் நிலத்தடி நீர் மட்டம் 1500அடிக்கு கீழ் சென்ற வரலாறும் உண்டு.இந்நிலையில் சிலதனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பில் கண்மாய் தூர்வாரப்பட்டாலும் வருணபகவான் கைகொடுக்காததால் மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வறட்சியே நிலவியது.
இந்நிலையில் தூர்வாரும் பணியை கையிலெடுத்த சௌந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராம இளைஞர் குழுவின் இளைஞர்கள் குறைந்த நாளில் குறைந்த செலவில் தூர்வாரி சீரமைத்து சீமைக்கருவேலமரங்களை அகற்றினர்.இவ்வேளையில் வருணபகவான் கைகொடுக்க மற்றும் 58 கிராம கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற இரண்டு நீராலும் கண்மாய் ஓரளவு நிரம்பியது.இதனால் 1000 அடிக்கு போர் போட்டு மோட்டார் மாட்டி தண்ணீர் இல்லை என்ற வீடுகளில் 300அடிக்கும் மேல் போரில் தண்ணீர் உள்ளது என்ற நிலை உருவானது.இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் மக்கள் தண்ணீர் கேட்டு தினந்தோறும் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்த நிலை மாறி தற்போது தண்ணீருக்காக போராடுவது அரிதான விஷயமாகி விட்டது.கடந்த 4 வருடங்களுக்கு முன் வீதி தோறும் காட்சிப்பொருளாக காட்சியளித்த அரசால் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங்குகளில் இன்று அமுதசுரபி போல் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் தங்கள் பணியை கவனித்துக் கொண்டு உள்ளனர்.
பின்னர் உசிலம்பட்டி நகரப்பகுதிகளின் நிலத்தடிநீர் மட்டத்திற்கு ஆதராமான மற்றொரு கண்மாயான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைக்கும் பணியில் இறங்கினர்.கிட்டத்தட்ட 10 அடி ஆழத்திற்கு கண்மாயில் புதைந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சீமை கருவேல காடாக இருந்த மரங்களையும் அகற்றி வரத்து கால்வாய்களையும் சீரமைத்தனர்.இதில் இவ்விரு கண்மாய்களுமே மழைநீராலும் 58 கிராம கால்வாயில் வரும் தண்ணீரால் மட்டுமே நிறையும்.
இந்நிலையில் கருக்கட்டாண்பட்டி கண்மாய்க்கு 58 கிராம கால்வாய்த்திட்டம் மூலம் 4 நாட்களுக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 25சதவிகித கண்மாய் கூட நிரம்பவில்லை.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது எங்களுக்கு வந்த உத்தரவு அப்படித்தான் உள்ளது எனக் கூறியுள்ளனர்.ஆனால் சில கிராமங்களுக்கு 10 நாட்;;;;களுக்கு மேல் தண்ணீர் விடப்பட்டுள்ளது குறித்தும் சீகைக்கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள கண்மாய்களுக்கு முழுக்கண்மாய் நிரம்பும் அளவு தண்ணீர் விடப்பட்டது குறித்;து இளைஞர்கள் சுட்டிக்காட்டிய பொழுது உங்;களுக்கு பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என அலட்சியமாக பதில் கூறியுளளனர்.
இதுபற்றி சமூகஆர்வலர் கூறுகையில் முழுவதுமாக சீரமைத்து உள்ள கருக்கட்டாண்பட்டி கண்மாயில் இன்னும் சில நாட்கள் கூடுதலாக தண்ணீர் விட்டாலே கண்மாய் நிரம்பி ஒரு வருடத்திற்கு உசிலம்பட்டி நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் வராது.ஆனால் சீகைக்கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் விடும் அதிகாரிகள் யாருக்காகவோ கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இளைஞர்களின் சாதனையை மறைக்க வேண்டுமென்ற நோக்கில் மதுரை ஆட்சியருக்கும் உண்மைத் தகவல்களை மறைத்து வழங்;கி வருகின்றனர்..இதனால் உசிலம்பட்டி நகரப்பகுதிகளில் இன்னும் சில மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்ப்படும் அபாயம் உள்ளது.விபரீதத்தை உணராமல் செயற்கை குடிநீர் பஞ்சம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது.குடிநீர் பஞ்சம் உருவானால் மக்களிடம் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகுவது உறுதி.அது இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் உசிலம்படடி நகராட்சித்தேர்தலில் எதிரொலிக்கும் .திமுக வேட்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் கையில் எடுப்;பர்.பண்மா தண்ணீரா எனக் கேட்டால் நீங்களே எதை தேர்வு செய்வீர்கள் என முடிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாராகும் விளாச்சேரி குடில் பொம்மைகள்.ரூ30 முதல் ரூ5 ஆயிரம் மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு தயார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது.இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் கிறிஸ்மஸ் குடில் பொம்மைகள் தயாரிப்பு வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது.கடந்த காலங்களில் கொரான தொற்று காரணமாக விற்பனை சரிவிலிருந்தது.பொம்மை தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தற்பொழுது கொரான தொற்று கட்டுப்பாடுகளில் தளர்வு கிடைத்ததையடுத்து விற்பனைகள் சுமாராக நடைபெற்று வருவதாகவும் தயாரித்த பொம்மைகள் தடையில்லாமல் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.30 ரூபாய் பொம்மை முதல் ஐந்தாம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொம்மைகள் வரை இங்கு தயார் செய்யப்படுகிறது.கிறிஸ்துமஸ் குடில் 18 பொம்மைகள் கொண்ட ஒரு செட் 250 ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிறிஸ்மஸ் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மும்பை போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கிறிஸ்மஸ் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூரத்திலிருந்து பார்த்தால் பச்சைப்பசேலன்று மரங்கள் வளர்ந்து பார்க்க பசுமையாய் காட்சியளிக்கின்றன கண்மாய்.அருகில் சென்று பார்த்தால் ஒன்றுக்கும் உதவாத சீமைககருவேல மரங்கள் கண்மாய் முழுவதும் வளர்நதுள்ளன.இவற்றை அகற்றி கண்மாயை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் தன்னார்வ இளைஞர்கள்..இது பற்றிய செய்தி தொகுப்பைக் காணலாம்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கருக்கட்டாண்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் 600க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தின் அருகில் சுமார் 16 ஏக்கரில் பரப்பளவில் கண்மாய் உள்ளது.இககண்மாயில் கருக்கட்டாண்பட்டி மட்டுமல்லாது அருகிலுள்ள மாமரத்துப்பட்டி மாதரை வில்லாணி ஒத்தப்பட்டி ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும்.மற்றும் உசிலம்பட்டி நகரப்பகுதிகளுக்கு குடிநீருக்கு ஆதரமாக விளங்குகிறது.இக்கண்மாய் கடந்த 30வருடங்களாக பராமரிக்கப்படாமல்; பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்தும் சீமைக்கருவேல மரங்கள் ஆலமரம் போல் வளர்ந்து புதர் மண்டிக் காணப்பட்டது.இரவு நேரங்களில் பெண்கள் கண்மாய் பகுதியில் செல்லவே பயப்படும் அளவுக்கு மரங்கள் வளர்ந்து அடர்வனக் காடாய் காட்சியளித்தது.இக்கண்மாயை சீரமைக்க வேண்டுமென கிராமமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் பலனில்லை.உசிலம்பட்டிப் பகுதியில்; கண்மாய் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைத்து வரும் 58 கிராம கால்வாய் இளைஞர் குழுவிற்கு கருக்கட்டாண்பட்டி இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து அறிநத சௌந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராமகால்வாய் இளைஞர் குழுவினர் கண்மாயை சீரமைப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் முறையாக அனுமதி பெற்று கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைக்கும் பணியில் இறங்கினர்.
முதற்கட்டமாக 58 கிராம கால்வாய்த்திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி கண்மாயிலிருந்து; கருக்கட்டாண்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரும் 1.5கி.மீ நீளமுள்ள வரத்துக் கால்வாய் பாதைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்தனர்.பின் சமூகஆர்வலர்கள் நிதியுதவியுடன் கண்மாயில் ஆலமரமாய் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களையும் 10அடிஆழத்திற்கு கண்மாயில் புதைந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றினர்..அதன் பின் நிதியுதவி வழங்கிய தன்னாவலர்களை அழைத்து கண்மாய் சீரமைப்புப் பணிகளை காண்பித்து அவர்களை கௌரவப்படுத்தியோடு மட்டுமில்லாமல் அவர்கள் கைகளிலானே கருக்கட்டாண்பட்டி கண்மாயில் 250க்கும்; மேற்பட்ட 20அடி மரங்களை கண்மாய் கரையில் நட்டு வைத்தனர்..மேலும் வழக்கம் போல் தங்கள் இளைஞர் குழு நேர்மையை மக்களுக்கு உணர்த்தும்; வகையில் கண்மாய் சீரமைக்க நிதியுதவி வழங்கியவர்களின் பட்;டியல் தொகை மற்றும் சீரமைக்க உண்டான வரவு செலவுகளை பிளக்ஸ் பேனராக கண்மாள்கரை ஓரத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.தற்போது கண்மாயை சீரமைத்ததோடு தங்கள் பணி முடிந்து விட்டது என ஒதுங்கி விடாமல் கண்மாய்கரையில் வைத்த மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக வலை அமைத்து தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரித்து வருகின்றனர்.ஏற்கனவே உசிலம்பட்டி ராஜக்காபட்டி உள்பட பல கண்மாய்களை இந்த 58 கிராம கால்வாய் இளைஞர் குழுவினர் சீரமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..
எதற்கெடுத்தாலும் அரசைக்குறை சொல்வதை விட்டு விட்டு அரசின் உதவியுடன் இளைஞர்கள் நினைத்தால் நமக்குநாமே எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த இளைஞர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.