தமிழக அரசால் இன்று பல பகுதிகளில் பணியாற்றி வரும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் , பணி இடமாற்ற உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காண கீழே உள்ள க்ளிக் செய்யவும்..
Category:
தேசிய செய்திகள்
தொடரும் லாரி ஸ்டிரைக் : கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காவிட்டால் மேலும் சில சங்கங்கள் பங்கேற்க திட்டம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்காவிட்டால் போராட்டத்தை கைவிட போவதில்லை என லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளன. டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் முக்கிய 3 கோரிக்கைகளில் ஒன்றாகும். இவற்றை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய தரை வழி வாகன போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 5 லட்சம் சரக்கு லாரிகளில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. மோட்டார் காங்கிரஸ் சங்கம், பால், பெட்ரோல், மருந்து பொருட்கள் ஏற்றிச் செல்லும் 2 லட்சம் லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. இதில் பால் மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆலோசித்து வருகின்றனர். கோயம்பேடு லாரி சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் – அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை மனு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக மாவட்டத்திற்கான விமான நிலையம் உள்ளது. இந்த குறையை போக்கும் எண்ணத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு புதிய விமான நிலையம் வேண்டி தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதுவரை எந்த அமைச்சரும் எடுக்காத முயற்சியை அமைச்சர் மணிகண்டன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உடனிருந்தார்.
இதற்கான கோரிக்கை மனுவை மத்திய தொழில், வணிகம் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ.சுரேஷ் பிரபு ஜியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். இந்த கோரிக்கை மனு ஏற்கப்படும் பட்சத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தொழில் ரீதியாக பல முன்னேற்றம் ஏற்படும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்திட ரு.11 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்திட ரு.11.26 கோடி மதிப்பில் 396 புதிய குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் 107 இடங்களில் ஆர்ஓ பிளாண்ட் அமைக்கப்பட உள்ளன என தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலர் கக்ஷட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கக்ஷட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அரசு முதன்மை செயலளர் பி.சந்திரமோகன் முன்னிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் நடராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடன் தெரிவித்ததாவது:
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கக்ஷட்டம் நடந்தது. மாவட்டத்தில் தற்போதுள்ள வறட்சியான சுழ்நிலையில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வினிேயாகம் செய்திட ஏதுவாக நடபாண்டு நிதியாண்டில் இதுவரை ரு.11.26 கோடி மதிப்பில் 396 குடிநீர் திட்டபணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 187 பணிகள் நிறேவற்றப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் நிலத்தடி நீர் உப்புத் தன்மை கொண்டதாக உள்ள கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 107 இடங்களில் உப்பநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 33 இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் திருவாடானை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தீவிர ஆய்வு செய்யப்பட்டு ஆயிரத்து 200 அடிக்கு கீழ் நல்ல குடிநீர் கிடைப்பதை கண்டறிந்து அவ்விடங்களில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வினிேயாகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்திடும் வகையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரு.70 லட்சம் மதிப்பில் 99 ஊரணிகளும், நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரு.20.15 கோடி மதிப்பில் 53 கண்மாய்களிலும், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.2.66 கோடி மதிப்பில் 76 ஊரணிகள், 77 கண்மாய்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரு.31.20 கோடி மதிப்பில் 64 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளன. மேலும் மாவட்டத்தில் சற்றுலா வளர்ச்சியினை மேம்படுத்திடும் விதமாக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரு.15.86கோடி மதிப்பிலும் ராமாயண சர்க்யுட்ட திட்டத்தின் கீழ் ரு.6 கோடி மதிப்பிலும் மேம்பாட்டு பணிகளுக்கு புர்வாங்க பணகள் முன்னேற்றத்தில் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் அரசு சட்டக்கல்லுாரி துவங்கப்பட்டு தற்போதைய சுழ்நிலையல் தற்காலிக கட்டடத்தில்செயல்பட்டு வருகின்றது. இக்கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக போதுமான அளவு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டமான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபால் தகவல் தொழில்நுட்பத்துறை முலம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப புங்கா அமைக்கப்பட உளளது.ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் புதிய அரசு கலைக்கல்லுாரி அமைத்திட வேண்டும் எனவும், ராமநாதபுரம் நகர்பகுதியில் அரசு அலுவலர்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அமைதிட்ட வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தகவல்தொழில்நுட்ப புங்கா அமைத்திடவும், ராமேஸ்வரம் பகுதியில் புதிய கலைக்கல்லுாரி அமைத்திடவும் ராமநாதபுரம் பகுதியில் புதிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டிடவும் தேவையான இவசதியினை தேர்வு செய்து தயார் நிலையில் இருந்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மழைக்காலத்தில் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு முன்னதாக அமைச்சர் சமுக நலத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்களையும், தமிழ்நாடு முதலமைச்சரரின் இண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு முதிர்வு தொகையாக ரு.13.70 லட்சம் மதிப்பிலான காசோலையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட 11 ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடத்தில் மொத்தம் ரு.26.75 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹென்சிலீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன்,ராமநாதபுரம் ஆர்டிஓ (பொறுப்பு) அமிர்தலிங்கம் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்: நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மாவோயிஸ்ட் பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஆனைக்கட்டி வழியே தமிழகத்துக்கு வர உள்ளதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோவை மாவட்டம், தமிழ -கேரள எல்லையில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் புகைப்படங்கள் எல்லையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி மலைகிராம மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) 19-06-2018 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் இன்று நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று வெளியிட்ட செய்தி…
http://keelainews.com/2018/06/16/tnroa-officials/
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியர் சுஜாத் புகாரி படுகொலையை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரை சார்ந்த ‘ரைசிங் காஷ்மீர்’ நாளிதழின் ஆசிரியர் சுஜாத் புகாரி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இச்செயலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் இருந்து கண்டனம் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலைநில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் முன்பு இன்று 18/06/2018, சுமார் 03.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு, மனிதாபிமானமற்ற செயல் – மேதா பட்கர் குற்றச்சாட்டு, வீடியோ பதிவு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ள சமூகவியல் செயற்பாட்டாளர் மேதாபட்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது 1988 ஆம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் எத்தனை தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கினாலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து வருவதாக புகார் தெரிவித்தார்.
தற்போது உள்ள தமிழக அரசிற்கு மக்களின் பிரச்சினைகள் கூட தெரியவில்லை என குற்றம்சாட்டியுள்ள மேதா பட்கர் இந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என தெரிவித்தார்.
நர்மதா அணை கட்டும் பணியின்போது மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட மோடி தற்போது பிரதமராக உள்ள மோடி அதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த வன்முறையை காரணம் காட்டி 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துடு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்: நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை (18-ம் தேதி) முதல் லாரி உரிமையாளர்கள் நாடுமுழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பாக அகில இந்திய தரைவழி போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது, “நாடு முழுவதும் 80 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. தினமும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 5 மாதங்களில் டீசல் ரூ.7.45 விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல் மற்ற துறைகளில் அமல்படுத்தியுள்ளது போல் பெட்ரோல், டீசலும் ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் லிட்டருக்கு சுமார் ரூ.20 வரை குறையும். மேலும், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும், நீண்ட காலமாக சுங்கக் கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும். மேற்கண்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம்.
இதுதொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால், இதுவரையில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, ஏற்கெனவே அறிவித்தபடி, நாளை காலை 6 மணி முதல் நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகளும் ஓடாது. இதில், தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது. ஆனால், தண்ணீர், பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் வழக்கம்போல் ஓடும். இவ்வாறு அவர்கள் கூறினர்._
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறைவாசிகளுக்கு விருந்தளித்து அவர்களோடு பெருநாள் கொண்டாடும் திருச்சி மாவட்ட தமுமுகவினர்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் 30 நாட்களிலும் திருச்சி சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளுக்கு தேவையான சஹர் சாப்பாடும், இப்தார் நோன்பு திறப்பதற்கு தேவையான பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் அனைத்தும் திருச்சி மாவட்ட தமுமுகவினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
பெருநாள் தினத்தன்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாவட்ட தலைவர் சகோதரர் முஹம்மது ரபிக் மற்றும் மாவட்ட செயளாலர் மஞ்சக்குடி பாபு அவர்களின் தலைமையிலான குழு, மட்டன் பிரியாணியை சமைத்து சிறையில் உள்ள ஆண் சிறை கைதிகள் மற்றும் பெண் சிறை கைதிகள் 2550 பேருக்கு விருந்து அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வை வழக்கமாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் தமுமுகவினர் சிறைச்சாலையில் பெருநாளைக் கொண்டாடினர். மேலும் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைத்து இஸ்லாமிய சிறை கைதிகளும் பெருநாள் கொண்டாடும் விதமாக அனைவர்களுக்கும் புத்தாடை வழங்கி மகிழ்ந்தனர்.
மேலும் அங்குள்ள சிறை பள்ளிவாசலை புணரமைத்து அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். இந்நிகழ்வின் போது விருந்தளித்த தமுமுக சகோதரர்களுக்கு சிறைவாசிகள் தங்களின் குடும்பத்தவர்களை கண்டதைப் போல எண்ணி ஆரத்தழுவி கட்டி அணைத்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். சமய நல்லிணக்கம் போற்றும் விதமாக அனைத்து மத சிறை கைதிகளுக்கும் பிரியாணி வழங்கியதை சிறை கண்கானிப்பாளர் வெகுவாக பாராட்டினர். இந்த மனிதநேய பணியாகத்தான் உங்கள் தமுமுகவின் இந்த செயல் அமைந்துள்ளது என்று கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதாதமிழகம்? – ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்றைய நிலைக்கு ஒருவர் பத்து பைசாகூட இல்லாத பஞ்சபராரியாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான மனிதன் எனில் இன்றைய தேதிக்கு அவரது விலை சுமார் ஐந்து கோடி ரூபாய். வாயைப் பிளக்க வேண்டாம். வாயின் விலையே ஏழெட்டு லட்சங்களைத் தாண்டுகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சர்வதேச உடல் உறுப்பு கள்ளச் சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு நுரையீரலின் விலை ஒரு கோடியே 85 லட்ச ரூபாய். கல்லீரல் 94 லட்சம். சிறுநீரகம் 93 லட்சம். ஒரு ஜோடி கண்கள் 14 லட்சம். எலும்புக் கூடு 5 லட்ச ரூபாய். ரத்தம் ஒரு லிட்டர் 43 ஆயிரம் ரூபாய். தோல் ஒரு சதுர செ.மீட்டர் 85 ரூபாய். சிறு எலும்புகள் மற்றும் தசைநார் 4 லட்ச ரூபாய். இப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது!
உடல் உறுப்பை அளிக்கும் சாமானியனுக்கு இவ்வளவு விலை கிடைக்குமா என்றெல்லாம் அப்பாவியாகக் கேட்கக் கூடாது. சர்வதேச சந்தை நிலவரத்தை மருத்துவ மாஃபியாக்கள் நிர்ணயிக்கிறார்கள் எனில் சாமானியனின் சந்தை நிலவரத்தை அவரது குடும்பச் சூழலே நிர்ணயிக்கிறது. கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிகபட்சமாக 93 லட்சத்துக்கு விலை போகும் சிறுநீரகத்தை ஐம்பதாயிரத்துக்குக் கொடுத்தவர்களும் / கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா, சீனா, இந்தோனேஷியா இவையெல்லாம் உடல் உறுப்புகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகள். கசாப்புக் கடைகள் என்றும் சொல்லாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாங்குவதில் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் மட்டுமின்றி கள்ளச்சந்தை விற்பனையிலும் முன்னணியில் இருக்கிறது தமிழகம். நீண்ட காலமாக இந்தப் பேச்சுகள் மேலெழுந்தாலும், தற்போது தேசிய உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநர் விமல் பண்டாரி, இதுதொடர்பாகக் குற்றம் சாட்டியிருப்பது விவகாரத்தை வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த இதய மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 25 சதவீதம் பேரும், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 33 சதவீதம் பேரும் வெளிநாட்டினர். அதாவது, நான்கில் ஒரு பங்கு மற்றும் மூன்றில் ஒரு பங்கு. இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளில் 31 இதயங்களும், 32 நுரையீரல்களும் வெளிநாட்டினருக்கே பொருத்தப்பட்டிருக்கின்றன. இது விமல் பண்டாரியின் குற்றச்சாட்டு மட்டும் அல்ல, இதுதொடர்பில் கேரள முதல்வரும் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒவ்வொன்றுமே கண்காணிக்கப்படுகின்றன; கணக்கில் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் கண்காணிப்பும் கிடையாது, கணக்கும் கிடையாது. ஆனாலும், இந்தியாவில் மூன்றரை லட்சம் நோயாளிகள் இதய மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகத்துக்காகக் காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம். ஆனால், ஆண்டுக்கு ஆறாயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே சட்டப்படி கிடைக்கின்றன. அதில் 3,500 அறுவைசிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. தமிழகத்தில் சிறுநீரகம் பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் எப்போதுமே சராசரியாக நான்காயிரம் பேர் நிறைந்திருக்கிறார்கள். இப்படித் தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையே இருக்கும் இடைவெளியே உடல் உறுப்பு மாஃபியாக்கள் கொழுப்பதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
சுமார் 5,200 பேர் தமிழகத்தில் உடல் உறுப்புகள் கேட்டுக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் அளித்ததிலிருந்தே இதன் முறைகேடுகளைப் புரிந்துகொள்ளலாம்.
இதுபோன்ற அறுவைசிகிச்சைகள் ஆறு மணி நேரத்தில் முடித்துவிட வேண்டும். குறைந்தகால அவகாசத்தால் வசதியற்றவர்கள், காத்திருப்புப் பட்டியலில் முன்னால் இருந்தாலும் பணம் ஏற்பாடு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், அதைவிட பல மடங்கு கூடுதலாகக் கொட்டிக்கொடுக்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தியே முறைகேடுகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை மையங்கள், மருத்துவமனைகள், மார்ச்சுவரிகள், காவல் நிலையங்கள் உட்பட இதுதொடர்பான தகவல்களை அளிக்க ஏராளமான புரோக்கர்கள் இருக்கிறார்கள். துப்பு சொல்வதுபோல ஒவ்வொரு தகவலுக்கும் ஒவ்வொரு விலை. விபத்துகளில் மனித உயிரைக் காப்பாற்ற நடக்கும் முயற்சிகளைவிட விபத்துகளைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளை வியாபாரம் செய்ய நடக்கும் முயற்சிகளே அதிகம். வெளிப்படையாகச் சொல்லப்போனால், மருத்துவத் துறையில் பலரும் மனிதர்களையும் அவர்கள் தம் உடல் உறுப்புகளையும் பணமாகத்தான் பார்க்கிறார்கள்.” என்கிறார்கள்.
இந்தியாவில் உடல் உறுப்புப் பரிமாற்றம், தானம் அடிப்படையிலேயே நடக்க வேண்டும். நெருங்கிய உறவினர் மற்றும் உறவினர் அல்லாதவர்களும் தானம் அளிக்கலாம். நெருங்கிய உறவினர் தானம் அளிக்கும்போது அறுவைசிகிச்சை நடக்கும் மருத்துவமனையின் நிபுணர் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். உறவினர் அல்லாதவர் தானம் அளிக்கும்போது மாநில அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தானம் பெறக் கூடாது. தானமாக அளித்தற்காகப் பணமோ வேறு ஆதாயங்களோ அளிப்பது, பெறுவது தண்டனைக்குரிய குற்றம். இதற்காக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.20 லட்சம் முதல் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கலாம். ஈரான் உள்ளிட்ட சில நாடுகளே இதனை வணிகமாக அங்கீகரித்துள்ளன. நமது நாட்டிலும் இதைச் சட்டபூர்வ வணிகமாக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்களும் உண்டு. ஆனால், இந்தியா போன்ற சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் கொண்ட நாட்டில் இதை வணிகம் ஆக்குவது ஏற்கெனவே அற உணர்வுகள் அருகிவரும் நமது மருத்துவத் துறையை மென்மேலும் வீழ்ச்சியடையவே செய்யும்!
நன்றி:- தி இந்து நாளிதழ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலையில் இருந்து மினி லாரி விழுந்த விபத்தில் 7 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மினி லாரி ஒன்றில் மாங்காய் ஏற்றிக்கொண்டு 13 பேர் வேலூர் வந்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான, வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலைப்பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில், காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
TNROA – தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
TNROA – (Tamilnadu Revenue Officials Association) தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19-06-2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
இன்று 16.06.18 சனிக்கிழமை தூத்துக்குடி யில் TNROA மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகள் குறித்தும், அரசின் நிலைபாட்டை குறித்தும் மிகவும் விரிவாக விவாதத்தினை முடித்து இறுதியில் 19.06.18 செவ்வாய் முதல் ஏற்கனவே திட்டமிட்டு கள பணியாற்றியும், பிரச்சாரத்தையும் முடித்துள்ள நிலையிலும், அரசிடமிருந்து எவ்விதமான அசைவும் இல்லாத நிலையில் வாழ்வாதார/நீண்ட நாள் கோரிக்கைகளுக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களையும் இழுத்து மூடி அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் முழுமையாக பங்கேற்கும் என அறிவித்துள்ளனர்.
மேலும் இக்காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 19.06.18 முதல் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தலித் சிறுவர்கள் கிணற்றில் குளித்தது குற்றமா?, வைரலாகி வரும் வீடியோ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொத்தன்குளம் கிராமத்தில் ‘ஸஹர் உணவு’ சமைத்து விருந்து தந்த கீழக்கரை இளைஞர்கள்
by keelai
written by keelai
கீழக்கரையில் புனித ரமலான் மாதத்தை ஒட்டி நன்மையான விசயங்களை போட்டி போட்ட வண்ணம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் தான் என்ற வட்டத்திற்குள் நின்ற விடாமல் தேவையுடையவர்களுடைய கண்டறிந்து அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சார்ந்த இளைஞர்கள் உத்திரகோசமங்கை அருகில் உள்ள கொந்தன்குளம் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு சஹர் நேர சாப்பாடு ஏற்பாடு செய்து விருந்து கொடுத்தனர்.
இவ்விருந்தில் அவ்வூர் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடனும் சந்தோசத்துடனும் விருந்தில் கலந்து கொண்டனர். மேலும் சின்னக்கடை இளைஞர்களே அந்த கிராமத்து மக்களுக்கு இறுதி வரை உணவுகளை பறிமாறினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தோழர் பெ. மணியரசன் மீதான தாக்குதலை கண்டித்து அறிக்கை! – மக்கள் அதிகாரம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கடந்த 10-6-2018 ஆம் தேதி இரவு தஞ்சையில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்த தோழர் பெ. மணியரசன் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சமூக விரோதிகள் வம்படியாக அவரது கையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து வாகனத்திலிருந்து சாலையில் விழுந்து காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினார்.
திருட்டுக்காக நடந்த குற்றம் என்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசு தரப்பில் தனிப்படை அமைக்கபட்டுள்ளது என வழக்கம் போல் முதல்வர் சொல்லியுள்ளார். நடந்த தாக்குதல் திருட்டுக்காக நடக்கவில்லை என்பதை சம்பவத்தை கூர்ந்து பார்த்தால் புரியும்.
காவிரியில் இந்த ஆண்டும் ஜுன் 12 டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மழை கொட்டி தீர்க்கிறது ஏன் முடியாது? என அறிக்கை விட்டார் தோழர் பெ.மணியரசன். மேலும் கோவையில் புதிய தலைமுறை விவாதத்தை பா.ஜ.க. ஆர்எஸ்.எஸ் தரப்பினர் நடத்தவிடாமல் தடுத்ததுடன் அமீர் மீதும், ஊடகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்ததையும் கண்டித்தார். இவைகள்தான் தாக்குதலுக்கு காரணம்.
போராடுபவர்கள் மீது பொய் வழக்கு, போராட்டத்தில் பங்கேற்றால் தேசிய பதுகாப்பு சட்டம், 144 தடை உத்திரவை மீறி ஸ்டெர்லைட்டை மூடு என்றால் துப்பாக்கிசூடு படுகொலை, இந்துத்துவாவை எதிர்ப்பவன் தேசதுரோகி என்கின்றன மோடி – எடப்பாடி அரசுகள். இத்தகைய அபாயகரமான சூழ்நிலைமையோடு தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதை பொருத்திப் பார்க்க வேண்டும். எனவே தோழர் பெ.மணியரசனை தாக்கியவர்களை மட்டுமல்ல, ஏவியவர்களையும் கைது செய்ய வேண்டும்.
மேலும், போராடும் தமிழக மக்களும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளும், அறிவுத் துறையினரும் ஒன்றுபட்டு இத்தகைய சதிவேலைகளை இனங்கண்டு, முளையிலேயே கிள்ளியெறிய போராட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
காவிரி உரிமை மீட்பு குழுத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது, என பத்திரிகை அறிக்கை வழக்கறிஞர். சி.ராஜுமாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழநாடு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வட்ட மேசை நிகழ்ச்சியில் பல் வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் ஊடகதுறையின் சுதந்திரத்தை நெறிக்கும் விதமாக புதிய தலைமுறை மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
காவல்துறையின் இச்செயலை கண்டித்து பல் வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்ப பெறக்கோரி ராமநாதபுரம் செய்தியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தனபாலன் தலைமை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி செயலாளர் ஜோதி தாசன், தினகரன், ரமேஷ் ஆகியோர் பேசினர். பொருளாளர் மகேஸ்வரன், இணை செயலாளர் ரகு/ துணை செயலாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், ஆரிப் ராஜா, பரமேஸ்வரன், ராமு உள்பட மாவட்டத்திலிருந்து பல்வேறு செய்தியாளர்கள் திரளாக பங்கேற்று தங்கள் எதிர்ப்புகளை கோஷங்களாக எழுப்பினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை என்று தமிழக மற்றும் பாண்டிசேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று 12/06/2018) உச்சிபுளியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து விமானபடை தளத்தில் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில்லான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி அலோக் பட்நாயக் கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்தல் குறித்த ஆலோசனைகள் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கடற்பிராந்திய அதிகாரி அலோக் பட் நாயக், மீனவர்கள் நமது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி எல்லை தாண்டுவது கிடையாது என இந்திய கடற்படை முற்றிலும் மறுப்பதாக கூறினார், மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க ஆறு மாதத்திற்கு ஒரு முறை சர்வதேச கடல் எல்லையில் இந்திய இலங்கை கடற்படையினர் கூட்டாக பாதுகாப்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நடுக்கடலில் ஏற்படும் சட்டவிரோத நடவடிக்கைகள்,கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆவணங்கள் இன்றி இலங்கை செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது.இந்திய மீனவர்கள் ஜி.பி.எஸ் கருவியை பயன்படுத்தி எல்லை தாண்டாமல் மீன்பிடிக்க வேண்டும் என கூறினார். கடற்படை மற்றும் கடலோர காவல்படை சார்பாக மீனவர்களிடம் எல்லை தாண்டாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.நவீன விமான இறங்கு தளம் அமைக்க உச்சிப்புளி கடற்படை விமான தளத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்கான இடத்தை வழங்குவது மாநில அரசு கையில் தான் உள்ளது,இந்திய கடல்வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்கள் தடுக்க 24மணிநேரமும் ரோந்து பணி நடைபெறும் என தெரிவித்தார். பாதுகாப்பு ஆலோசனை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், டி.ஐ.ஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஐ என் எஸ் பருந்து விமான தள கமாண்டர் குல்தீப் தங்சாலே, மற்றும் இந்திய கடற்படை,மண்டபம் கடலோர காவல் படை,கடலோர காவல்படை குழுமம், மாவட்ட கண்காணிப்பாளர், உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுகுளத்தூரில் இருசக்கர வாகனக்காப்பகம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபகாலமாக வாகனங்களின் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் பரமக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கடலாடி, கமுதி , சாயல்குடி போன்ற வெளியூர் மக்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலைக்கு செல்ல முதுகுளத்தூர் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இதனால் தங்களது இருக்கர வாகனங்களை பாதுகாப்பாக விட்டு செல்ல இருக்கர வாகனக் காப்பகம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனக்காப்பகம் இன்றி மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் பள்ளி மற்றும் அரசு அலுவலக நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வியாழக்கிழமை வாரச்சந்தையன்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறையினர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனை சீர் செய்ய பஸ் நிலையம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான 36 (5) சர்வே எண் கொண்ட இரண்டரை சென்ட் (1090 சதுரடி ) இடம் பயன்பாடில்லாமல் உள்ளது, இந்த இடத்தில் இரு சக்கர வாகனக்காப்பகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலை தடுப்பதுடன், பேருராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைக்கும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.
ஆகையால் காவல் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்களின் உதவியுடன் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை சரி செய்து இரு சக்கர வாகனக்காப்பகம் அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன் – 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்த நிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். அதனால், அவர் அப்பகுதி மக்களின் பாராட்டுக்குரியவரானார். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கபீல்கான் கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு, 7 மாதங்கள் சிறையில் இருந்த அவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காஷிப் ஜமீல் நேற்று இரவு கோரக்பூரில் ஹுமாயூன் பூர் பகுதிக்கு வந்தபோது, இரு சக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார்கள். இதையடுத்து, ஜமீல் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் கபீல்கான் ட்விட்டரில் இன்று கூறுகையில், ”முதலில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் சகோதரர் ஜமீல் உடலில் இருந்து 3 துப்பாக்கிக் குண்டுகளை வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்துவிட்டோம். தற்போது அபாயக் கட்டத்தை தாண்டி, ஐசியுவில் இருக்கிறார். அவரைக் கொல்வதற்காக 3 முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்றப்பட்டுவிட்டார். யார் சுட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், முதல்வர் ஆதித்யநாத் தங்கிஇருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில், கோரக்நாத் கோயில் அருகேதான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. என் சகோதரருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க போலீஸார் காலதாமதம் செய்து இருக்கிறார்கள், 3 மணிநேரம் கழித்தே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இதுதான். எங்களுக்குப் பக்கபலமாக அல்லாஹ் இருக்கிறார். நான் எந்தவிதமான மிரட்டலுக்கும் நான் பணிந்து செல்லவோ, வளைந்து கொடுக்கவோ மாட்டேன்” என கபீல்கான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கோரக்பூர் போலீஸ் எஸ்பி. சலாப் மாத்தூர் கூறுகையில், ”அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்” எனத் தெரிவித்தார்.
நன்றி:- இந்து நாளிதழ்..
You must be logged in to post a comment.