சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ல் தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஐ தேசிய இளைஞர்களின் நாளாக (National Youth Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு ஜனவரி 12ல் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) ஜனவரி 12, 1863ல் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார். மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை. சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதர சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார். இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர்.இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும்.தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார். 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது.உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 ஜனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.விவேகானந்தரின் பொன்மொழிகள்.• உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.• கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
• உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.• செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.• வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.• உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.• சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.• எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.• நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!• இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
• இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.• வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.• சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.• என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.• நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்• உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!• நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்புவிவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் 11 பகுதிகளாக வெளியிடப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. உலகப்புகழ் பெற்ற பல சொற்பொழிவுகளை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் ஜூலை 4, 1902ல் தனது 39வது அகவையில் கல்கத்தா, பேலூரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் இல்லம் போன்ற விவேகானந்தர் நினைவிடங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்திகள்
கீழக்கரை முழுவதும் ஏற்பட்டுள்ள சுகாதார கேடு சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு நகரத் தலைவர் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
அனைத்து தெருக்களிலும் உள்ள குப்பைகள் சாக்கடைகள் வாறுகால் மூடிகள் நாய்கள் சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது நகராட்சி நிர்வாகம் சரி செய்யாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் களம் காண்ப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் தொகுதி துணை தலைவர் அஹமது நதீர் நகர் செயலாளர் அஷ்ரப் துணைத் தலைவர் முஹம்மது ஜலீல் தாஜுல் அமீன் சுல்தான் சிக்கந்தர் சுக்குர் சாதிக் அலி ஃபாருக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வைக்கோல் மினி லாரி மீது மின்கம்பி உரசியதில் மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை.இவர் தன்னுடைய தோட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில் வைக்கோல்களை வாடிப்பட்டியைச் சேர்;ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.இதில் முத்துப்பாண்டி வைக்கோல்களை ஏற்றுவதற்காக மினிலாரியுடன் (டாடா ஏசி) குப்பணம்பட்டிக்கு வந்துள்ளார்.தோட்டத்தில் வைக்கோல் ஏற்றி விட்டு பிரதான சாலைக்கு வரும் போது சாலையில் மின்கம்பி மினிலாரி மீது உரசியதில் லாரி திடீரென தீப்பற்றி மளமள எரிந்தது.இதில் மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.சம்பவமறிந்த கிராமத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவமறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக செங்கம் கிழக்கு ஒன்றியம் சார்பாக மேல்பென்னாத்தூர் கிராமம், மாரியம்மன் கோயில் அருகே நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.பாஜக நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் மாரியம்மன் கோயில் அருகே பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணவேணி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாநில எஸ்டி அணி செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், ஒன்றிய பொதுச் செயலாளர் முனியப்பன், அரங்கநாதன், அறிவு சார் பிரிவு மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜதமயந்தி, மெட்டில்ராணி, சந்திரா, ஒன்றிய மகளிர் அணித்தலைவர் சுமதி, விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், முத்து, கார்த்தி, சதீஷ், கோவிந்தராஜ், கோவிந்தராசன், ஜெயநாத், சதீஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, லதா உள்ளிட்ட மகளிர் புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை மாவட்ட பொது செயலாளர் சேகர் காவி துண்டு அணிவித்து வரவேற்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரப்பட்டு கிராமத்தில் பொங்கல் இலவச வேட்டி சேலைகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு கிராமத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு பொங்கல் வேட்டி , சேலைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் மற்றும் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி .சுந்தரபாண்டியன் வழங்கினார்பொங்கல் விழாவையொட்டி காரப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடைபெற்றது . கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் தலைமை வகித்து வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட கழக துணை செயலாரும் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவருமான சி .சுந்தரபாண்டியன் , மற்றும் செங்கம் தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன், முன்னிலை வகித்தனர்.காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் என்கிற லட்சுமணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு 360 பயனாளிகளுக்கு பொங்கல் வேட்டி , சேலை வழங்கி பேசியதாவது:பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதலமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பிப்ரவரி கடைசி உச்சத்தை தொடும் என்கின்றனர் மருத்துவர்கள். தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள் , ஓமைக்ரான் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார்.இந்நிகழ்வில் திமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், முன்னால் கவுன்சிலர்கள் சுதகார் , K. பழனி புதுப்பாளையம் வருவாய் ஆய்வாளர் சரன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரசாத், கிராம உதவியாளர் சம்பத் , ஊராட்சி செயலாளர் அருணகிரி மற்றும் வருவாய் துறை அரசு அதிகாரிகள் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட , ஒன்றிய , நகர , கிளை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகள் பங்கேற்றனர் மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் , ஒன்றிய கவுன்சிலர் களும் ஊர் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு எஸ்வந்த்பூரிலிருந்து ஹட்டியா செல்லும் விரைரயிலில் உள்ள பதிவு செய்யப்பட்ட கோச் ஒன்றில் கழிவறையில் 3 பைகளில் இருந்த 15 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையை தற்போது மீண்டும் மஞ்சப்பை பரோட்டாக்கள் கலக்கி வருகின்றன. மஞ்சப்பை வடிவில் போடப்படும் பரோட்டாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. மஞ்சப்பை எப்படி இருக்குமோ அதே வடிவத்தில் பரோட்டாக்களை மாஸ்டர்கள் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளன. அழிந்துவரும் மஞ்சப்பை பழக்கத்தை மீண்டும் கொண்டுவர முதல்வர் மீண்டும் மஞ்சப்பை என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார், அதனை வரவேற்கும் பொருட்டு மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள உணவகத்தின் புதிய முயற்சியாக மீண்டும் மஞ்சப்பை புரோட்டா மற்றும் பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கி ஊக்குவிக்கின்றனர்.மதுரையில் உள்ள சுப்பு அசைவ உணவகத்தை சகோதரர்கள் ஆன நவநீதன் (47), குணா (28) ஆகிகடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உணவகங்களில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு பார்சல் வாங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கியும் முகங்களை வழங்கியும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இதே போன்று மதுரையில் கடந்த ஆண்டில் மாஸ் வடிவிலான பரோட்டா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் மதுரை சாலை அடிக்கடி விபத்து: சாலைகளை செப்பனிட பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை அலங்காநல்லூர் இருந்து மதுரை செல்லும் சாலை. கடந்த ஆட்சி காலத்தில் புதிதாக போடப்பட்டது. ஒரு வருடம் முன்பாக இந்த சாலை பெயர்ந்து விட்டது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிகமாக ஆபத்துக்கு விழுந்து ஆபத்து உள்ளாகின்றனர். ஆகவே, தற்போது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் சீர்செய்து பேட்ச் ஒர்க் என்று சொல்லக்கூடிய சின்ன சின்ன பள்ளங்களை மூடி வருகின்றனர். ஆனால் ,ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள இடத்தை, நெடுஞ்சாலைத்துறையினர் மூடவில்லையாம். ஆகவே, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து விபத்துகள் நடைபெறாமல் இருக்க சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கோச்சடை நடராஜ் நகரை சேர்ந்த சுரேஷ் இவரது மகள் மாதங்கி வயது 22 பிபி குளத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிப்பை முடித்து மேற்படிப்புக்காக மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்காக படிப்பினை படித்துக் கொண்டிருந்தார் மருந்து சம்பந்தப்பட்ட ஆய்வுக்காக இவர் மற்றும் அவரது தோழியும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பணியை முடித்துவிட்டு மானகிரி அருகே வரும் பொழுது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது இதில் பலத்த காயமடைந்த மாதங்கி அங்கிருந்த பொதுமக்களால் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் சிகிச்சை பலனில்லாமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவிருந்த நிலையில்,அன்றைய தினம் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்தார்மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதிஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடகரை பகுதியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு கொரோனா டெஸ்ட்; சுகாதாரத்துறை அதிரடி..
அச்சன்புதூர் அருகே உள்ள வடகரை பகுதியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் அபதாரம் விதித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அதன்படி முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி சோப்பு போட்டு பொதுமக்கள் தங்களது கைகளை கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர்செங்கோட்டை சாலையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபதாரம் விதித்து கொரோனா பரிசோதனையும் செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முக கவசம் அணியாமல் வந்த பலர் அ்ங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அவர்களையும் சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களிடம், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது பற்றியும், அதை தடுக்க முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையநல்லூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் இலவச இ-சேவை முகாம் நடத்தினர். இதில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ரஹ்மானியாபுரம் 6-வது வார்டு எஸ்டிபிஐ கட்சி மக்கா நகர் கிளை சார்பாக இலவச இ-சேவை முகாம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக SDTU தென்காசி மாவட்ட தொழிற்சங்க தலைவர் I.ராஜா முகமது கலந்து கொண்டார். மக்கா நகர் பகுதியில் அதிகமான மக்கள் வெளியூரை சேர்ந்தவராக இருப்பதால் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் பொருட்களை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மக்கா நகர் கிளை சார்பாக இலவச இ- சேவை முகாம் நடத்தப்பட்டது.இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.மேலும் இது போன்ற இ-சேவை முகாம் மீண்டும் நடைபெற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்.இந்த நிகழ்வில் கிளை தலைவர் ஷாபா சேக், கிளை செயலாளர் தாஜ்தீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு முகாம் நிறைவுற்றது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம்T.கல்லுப்பட்டி வட்டாரம்அரசு உயர்நிலைப் பள்ளி கோபிநாயக்கன்பட்டி பள்ளியில் நடைபெற்றது , m. செங்குலம் ஊராட்சி பகுதியில்ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகர்சாமி, ஞானசேகர், தேவி, தலைமயில், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முரலிராஜ் , மருத்துவ அலுவலர் பண்டிசெல்வி,முத்துதுறைகண்ணன்மற்றும்மருத்துவர்கள்,மற்றும்,செவிலியர்கள்,சுகாதார ஆய்வாளர்கள்,ஊராட்சி செயலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் சுகாதார ஆய்வாளர் பெரியசாமி முகாம் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விபத்துகளை தடுக்க – நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வு அறை. மதுரை எஸ்.பி. திறந்து வைத்தார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் மதுரை – யா.ஒத்தக்கடையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பல்க் -ல் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறையை இன்று வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் திறந்து வைத்தார்., இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் மண்டல சில்லரை விற்பனை தலைவர் எஸ்.மகேஸ், விற்பனை மேலாளர் கே.என்.செந்தில்குமார், ப்ளீடு மார்கெட்டிங் மேலாளர் ஜெகன்நாதன், விற்பனை துணை மேலாளர் சைத்தன்யா, யா.ஒத்தக்கடை கோகோ மேலாளர் ஆர்.சேகர் உள்ளிட்டோர் உடனிருத்தனர்.வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கர்., கேக் வெட்டி வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்., மேலும் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள், மாஸ்க் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார்.நெடுந்தொலைவில் இருந்து வாகனங்கள் ஓட்டி வரும் போது ஏற்படும் களைப்புகளை இது போன்ற ஓய்வு அறைகளில் சற்று ஓய்வு எடுத்தாலே சுறுசுறுப்பாக பயணிக்க ஏதுவாக இருக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்திய இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்ததோடு, நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்கும் முயற்சிக்கு பாராட்டுகள் என தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செம்பட்டி பஸ் நிலையம்3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பச்ச மலையான் கோட்டை ஊராட்சியில் உள்ள செம்பட்டி பஸ் நிலையம் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது. இந்த செம்பட்டி பஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பழனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், பெரியகுளம், தேனி, பொள்ளாச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு முக்கிய பகுதியாக இருப்பதால் இந்த பஸ் நிலையம் வருடம் தோறும் ஏலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் முன்னிலையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் திமுக மற்றும் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்குள் சிண்டிகேட் என்று சொல்லக்கூடிய கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக மிக குறைந்த அளவிலேயே ஏலத்தில் எடுத்தனர். இதை அறிந்த பத்திரிகையாளர் மற்றும் மூட கவிஞர்கள் சேகரித்துக் கொண்டிருந்த போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மற்றும் போலீசார் ஏலத்தில் நடக்கும் நிகழ்ச்சியை செய்தி எடுக்கக் கூடாது என்று கூறி வெளியே போகச் சொல்லி அவமரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் உடனடியாக ஜனநாயக கடமையாற்ற தடுத்தால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று போர்க்கொடி தூக்கி ஏலம் நடக்கும் இடத்தில் ஓரமாக நின்று போராட்டம் செய்தனர். அரசியல் கட்சியினர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே பேரம் பேசி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக ஏலத்தை நடத்தி முடித்தனர். இதனால் பல லட்ச ரூபாய் ஊராட்சிக்கு வரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இப்பகுதி பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி முகாமினை (10.01.22) திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 4038 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதாரத்துறையில் உள்ள களப்பணியாளர்கள், பேரூராட்சி,ஊராட்சி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளபெரியவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி முகாம் 10.01.22 திங்கள் கிழமை துவக்கி வைக்கப்பட்டது. மேலும், 2 டோஸ் முழுமையாக செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் பூர்த்திசெய்தவர்கள் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகவே தகுதியான நபர்கள் தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணுடன் சென்றுமுன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.தி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), மாவட்ட செயலாளாகள் பொ.சிவபத்மநாதன் (தெற்கு),செல்லத்துரை (வடக்கு), மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சு.தமிழ்ச் செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், தென்காசி ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல்லா, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.வெங்கட்ரங்கன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்),(பொ) மரு.போஸ்கோராஜ், அரசு தலைமை மருத்துவமனைகண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், அரசு அலுவலர்கள் உட்பட முன்களப் பணியாளர்க பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாநில அளவில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர்; காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு..
மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளரை காவல்துறை துணைத் தலைவர் பாராட்டினார். கடந்த 19.12.2021 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் அவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான ஆணழகன் போட்டிக்கு தேர்வு செய்யபட்டார். பின்னர் மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வா.உ.சி அரங்கத்தில் 02.01.2022 அன்று நடைபெற்றது. இதில் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 7 நபர்களையும் பின்னுக்குத்தள்ளி குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின் குமார் அபிநபு IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். முதலிடம் பிடித்த காவல் ஆய்வாளருக்கு காவல்துறை துணை தலைவர் தனது பாராட்டுக்களை தெரிவித்ததோடு,மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கி முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 11, 1786).
ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் (Joseph Jackson Lister) ஜனவரி 11, 1786ல் ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் லண்டனில் உள்ள யார்க்சைர் என்ற இடத்தில் பிறந்த கடைசி மகனாக பிறந்தார். நவீன அறுவை சிகிச்சையின் தந்தையாகிய ஜோசப் லிஸ்டரின் தந்தை ஆவார். அன்னையின் பெயர் மேரி. ஜோசப்பிற்கு சிறு வயதிலேயே, கண்ணாடிப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 1800களில் பள்ளிப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன், தனது 14 ஆவது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் மதுபான விற்பனையைக் கவனித்து வந்தார். அதில் அவர் சிறப்பாகச் செயல்பட்டதால் நான்கு ஆண்டுகளுக்குப்பின், அதன் பங்குதாரராகவும் ஆனார். தனது 32 ஆவது வயதில், 26 வயதுள்ள இசபெல்லா என்பவரை மணந்தார். பிறகு 1821ல் தனது மைத்துனருடன், கப்பல் வணிகத்துக்குப் புறப்பட்டார். இவர்களுக்கு மேரி, ஜான், இசபெல்லா சோபியா, ஜோசப், வில்லியம் ஹென்றி, ஆர்தர் ஹூக் ஆகிய ஐந்து மக்கள் பிறந்தனர்.
நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், கலங்கலாகத் தெரிந்தது வந்தன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இயற்கையில் கண்ணாடிப் பொருட்களில் ஆர்வமுடைய ஜாக்சன் உருப்பெருக்கியின் ‘அபரேஷன்’ (aberration) எனப்படும் உருவம் மங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டினார். ஒரு நுண்நோக்கியை 1826ல் உருவாக்கி அதில் ஆடிகள் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும், தொலைவிலுள்ள பொருட்களையும் பார்க்க வகை செய்தார். நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயிரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது.
முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்டவர், மற்றவர்களுக்குக் காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் ஆவார். ஜாக்சன் லிஸ்டர் உருவாக்கிய நுண்ணோக்கி இலண்டன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1832ல், இங்கிலாந்தின் வேந்தியக் கழகத்தில் (fellowship of the Royal Society) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1846ல் தனது மகன் ஜான் இளவதிலேயே இறந்தபின் இவரும் இவருடைய மனைவி இசபெல்லாவும் ஆறு ஆண்டுகள் அப்டன் என்ற இடத்தில் தனியாக வசித்தனர். இவரது மற்றொரு மகனான வில்லியம் ஹென்றியும் தீராத நோயினால் 1864ல் இறந்தார். முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் அக்டோபர் 24, 1869ல் தனது 84வது அகவையில் அப்டனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற பிப். 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இன்று முகூர்த்தக்கால் நிகழ்வு வினை முத்தாலம்மன் கோவிக் அருகே நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்கும். மேலும் வெளிநாட்டவர்கள் பலர், ஜல்லிக்கட்டுக்கு வந்து, இந்த வீர விளையாட்டை கண்டு ரசிப்பர். வெளிநாட்டவர்களை, மதுரை சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர், மதுரையிலிருந்து கார்கள் மூலம் அழைத்து வரும் முறையானது நடைமுறையில் வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை ,விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வரதட்சணை கொடுமை செய்வதாக மகளுடன் தாய் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.
மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா, இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், 6 மாதங்களாக மணிகண்டன் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக பல முறை புகார் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக் கூறி கௌசல்யா தனது தாயாருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது, கௌசல்யாவின் தாய் அழகம்மாள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து அவருக்கு முதலுதவி வழங்கினர்.இதனைத் தொடர்ந்து, தீக்குளிக்க முயற்சி செய்த தாயார் அழகம்மாள் மற்றும் அவரது மகள் கௌசல்யா ஆகியோரை போலீசார் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.மதுரை ஆடசியர்அலுவலகத்தில் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், திடீரென ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.