Home செய்திகள் மாநில அளவில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர்; காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு..

மாநில அளவில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளர்; காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு..

by mohan

மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த குற்றாலம் காவல் ஆய்வாளரை காவல்துறை துணைத் தலைவர் பாராட்டினார். கடந்த 19.12.2021 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் அவர்கள் முதலிடம் பிடித்து மாநில அளவிலான ஆணழகன் போட்டிக்கு தேர்வு செய்யபட்டார். பின்னர் மாநில அளவிலான ஆணழகன் போட்டி பாளையங்கோட்டை வா.உ.சி அரங்கத்தில் 02.01.2022 அன்று நடைபெற்றது. இதில் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 7 நபர்களையும் பின்னுக்குத்தள்ளி குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின் குமார் அபிநபு IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். முதலிடம் பிடித்த காவல் ஆய்வாளருக்கு காவல்துறை துணை தலைவர் தனது பாராட்டுக்களை தெரிவித்ததோடு,மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வெல்ல தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com