இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மணல் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், இன்று அதிகாலை திடீர் ரோந்து பணி சென்றார். அப்போது மணல் ஏற்றி கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த முயன்றார். மணல் கொள்ளையர் டிராக்டரை நிறுத்தாமல் சென்றனர். தாசில்தார் அரசு வாகனம் மூலம் விரட்டிச் சென்று மணல் ஏற்றி சென்ற டிராக்டரை பிடிக்க முயன்றார். டிராக்டரை விட்டு டிரைவர் உள்ளிட்டோர் தப்பிச் சென்றனர். மணலுடன் டிராக்டரை கீழக்கரை தாலுகா அலுவலகம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருப்புல்லாணி போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸார், வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எமனேஸ்வரத்தில் கைத்தறி துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தினம்: 21 பேருக்கு ரூ.11.11 லட்சம் நலத்திட்ட உதவி..
இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் கைத்தறி துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தின நிகழ்வு நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தார்.
நெசவாளர்களுக்கான பொது மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் 1905 அன்று தேசிய இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவு கூறும் பொருட்டு சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறி துறை பங்களிப்பை உணர்த்தும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பாரம்பரிய மிக்க கைத்தறி உடைகளை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் உடைகள் வடிவமைக்கப்பட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப கதராடை வழங்குவதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எமனேஸ்வரம் என்றால் மக்கள் மத்தியில் கதர் பட்டு நினைவு தான் வரும். அந்த அளவிற்கு கதராடைகளின் உற்பத்தி நிறைந்த பகுதியாக இப்பகுதி இருந்து வருகிறது. கதராடையின் பெருமை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மிக இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறதெனில் நெசவாளர்களின் உழைப்பே ஆகும். நெசவாளர்களின் வளர்ச்சிக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கும் வகையில் கைத்தறி உடைகளை வாங்கி நெசவாளர்களின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
பயனாளிகள் 16 பேருக்கு முத்ரா கடனுதவி திட்டம் மூலம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்திற்கான கடனுதவி, மத்திய அரசின் சமர்த் நெசவு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி முடிதத மாணவர்களுக்கு சான்றிதழ், சேமிப்பு, பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பயனாளிகள் 5 பேருக்கு ரூ.3,11,808/- மதிப்பில் நலத்திட்ட உதவி என பயனாளிகள் 21 பேருக்கு ரூ.11,11,808 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். கைத்தறி துறை உதவி இயக்குநர் ரெகுநாத், பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜீவரத்தினம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நெசவாளர் கூட்டுறவு சங்க சங்கத்தலைவர் சேஷய்யன், செயலாளர் ருக்மாங்கதன், கைத்தறித்துறை ஆய்வாளர் ரத்தின பாண்டியன், கைத்தறி கண்காணிப்பு அலுவலர் லட்சுமி வெங்கட் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆரம்பப்பள்ளி, வழிபாட்டு தலம் அருகே டாஸ்மாக் கடை: அகற்றக்கோரி மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு…
இராமநாதபுரம், ஆக.7 –இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஆரம்பப்பள்ளி மற்றும் வழிபாட்டு தலம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு இன்று மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம், உரப்புளி, சாயல்குடி, கேணிக்கரை பகுதியில் 2, பிள்ளையார்கோவில், தலைமை அஞ்சல் நிலையம், சக்கரக்கோட்டை முனியய்யா கோயில் டி. பிளாக் உள்பட 8 இடங்களில் இருந்த மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், சக்கரக்கோட்டை தொடக்கப்பள்ளி, முனியய்யா கோயில், காஸ் சிலிண்டர் கிட்டங்கி அருகே உள்ள டாஸ்மாக் (எண்:6969) கடையை அப்புறப்படுத்துவதற்கு மாற்றாக இதே பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்த பட்டியல் படி கடையை (எண் 6969) மூடக்கோரி சக்கரக்கோட்டை அப்துல் கலாம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடை முன் கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில்
சக்கரக்கோட்டை அப்துல் கலாம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.7- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டிவலசை ஊராட்சி தோரையன் வலசை, செட்டி தோட்டம் பகுதியில் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2009 ஆம் ஆண்டு வரை கிராம மக்கள் பயன்படுத்திய பொது பாதை ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது பாதைக்கு ஒதுக்கிய
அரை சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் சுவர் எழுப்பி ஆக்கிரமித்துள்ளார். இதனால், இறந்தோர் உடலை எடுத்துச் செல்லவும், திருவிழா காலங்களில் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். இது சம்பந்தமாக கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை. பொதுப்பாதையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒழுக்கமில்லா கல்வி காகித பூ போன்றது அது மணம் தராது.. கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரசிரியர் பேச்சு..
இராமநாதபுரம், ஆக.7- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நன்னெறி கல்வி மற்றும் தீனியாத் அமைப்பு சார்பில் ஒழுங்குமுறை நுட்பம், நேர்மையான அணுகுமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
கல்லூரி அரபிக் துறை தலைவர் கல்லூரியின் நன்னெறி கல்வி மற்றும் தீனியாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்மொகைதீன் அப்துல் காதர் வரவேற்றார்.
திருச்சி ஜமால் முஹமது கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் அமிருதீன் ஹசானி பேசுகையில், செல்வந்தர் பலர் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு நிம்மதி இழந்து வாடுகின்றனர். உயர்கல்வி கற்றோரும், உயர் பதவி வகிப்போரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததால் சமூகத்தில் தாழ்நிலையை அடைந்து விடுகின்றனர். செல்வம், அந்தஸ்து குறைந்த நிலையில் உள்ளோர் தங்கள் ஒழுக்கமான வாழ்க்கையால் உயர் நிலையை அடைகின்றனர். மாணவர்களாகிய நீங்கள் நேர்மை, சமூக பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவு, திறமையால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும். ஒழுக்கமில்லா கல்வி காகித பூ போன்றது. அது மணம் தராது. ஒழுக்கமில்லா கல்வி பயில்வதால் எவ்வித பயனுமில்லை. என்வே தான் சமுதாயத்தில் சிறந்த முன்னோர் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி தேடினர் என்றார். இயற்பியல் துறை பேராசிரியர் ஈவன்ராஜ் நன்றி கூறினார். அனைத்து துறை மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்; ஈடுபட்டு வரும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், கரும்பு மற்றும் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாற்றில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்., தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
34 நாட்களாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தி.விலக்கிலிருந்து டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனர்.முன்னதாக உசிலம்பட்டி தேவர்சிலை முன் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காரியாபட்டி ஒன்றியத்தில் பசுமை கிராம திட்டம் அச்சங்குளத்தில் துவங்கப்பட்டது…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பு..வாகன உரிமையாளர்கள் புலம்பல்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வைகை ஆற்றில் தவறி விழுந்த நபர்! தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நகர்மன்ற தலைவருக்கு பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்த மாணவ மாணவிகள்..
தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் தனது சொந்த செலவில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்ற தென்காசி நகர்மன்ற தலைவருக்கு மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி 10வது வார்டு பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் குழந்தைகளை மதுரை நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் நகர செயலாளர் சாதிர் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து 100 மாணவ மாணவிகள் தென்காசியில் இருந்து மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு தங்கள் கல்வி பயணத்தை மேற்கொண்டனர்.
கல்வி பயணத்தை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், முன்னதாக உலகமே வியக்கும் வகையில் தமிழக அரசால் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவிகள் இந்த கல்வி பயணத்தின் மூலம் தங்களுக்கான அறிவு பாதையை தேடி செல்லுங்கள் என நகர் மன்ற தலைவர் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். தனது சொந்த செலவில் கல்வி பயணத்தை ஏற்பாடு செய்த நகர் மன்ற தலைவருக்கு மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்து தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர பொருளாளர் சேக்பரீத், துணை செயலாளர் பால்ராஜ், பால் துரை, சுலைமான், ஜபருல்லா, சண்முகநாதன், முகைதீன் பிச்சை, ரிசவு மைதீன்,மைதீன், சன் ராஜா, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கியக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் 100 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது இலக்கிய கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அருண்பாரதி, புன்னைச் செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘கலைஞரின் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் நாறும்பூநாதன் தனிச் சொற்பொழிவாற்றினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். பேராசிரியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நூற்றாண்டு விழா கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன், தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர்கள் ஜெயபாலன், தச்சை மணி, மீனாட்சிபுரம் நூலகர் அகிலன் முத்துக்குமார், எழுத்தாளர் மு.வெ.ரா, புன்னைச் செழியன் புகைப்படக் கலைஞர் துரைராஜ் மற்றும் சண்முக சுப்பிரமணியன், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், பள்ளித் தாளாளர் ரவிச்சந்திரன், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், மேகலிங்கம், வழக்கறிஞர் தீன், காஜாமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் முறையில் இருவருக்கு கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல்…தமுமுக, மமக தங்கச்சி மடம் பொதுக்கூட்டம்..
இராமநாதபுரம்,ஆக.7- இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக, மமக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஊழல், முறைகேடுகளை கண்டித்து தங்கச்சிமடத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லா கான் தலைமை வகித்தார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் கைது,
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிப்பு, மணிப்பூர் கலவரம் குறித்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், ஊடகவியலாளர் தி.செந்தில்வேல், திராவிடர் கழகதுணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் பேசினர். தமுமுக, மமக மாவட்ட தலைவர் எஸ். இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் கே.அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் எம்.ஆசிக் சுல்தான், மமக மாவட்ட பொருளாளர் எஸ்.ஹமீது சபீக் உள்பட பலர் பங்கேற்றனர். தமுமுக சேவையில் மாணவர் 50 பேர் இணைந்தனர். மண்டபம் ஒன்றியம் (ம) தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
செய்தியாளர்:- முருகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை உப மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: நாளை (ஆகஸ்ட் 8) மின் தடை…
இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் பட்டணம்காத்தன் உப மின் நிலையம் ராம்நாடு உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஆக.8) நடை பெற உள்ளது. இதனால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், தேவிபட்டினம், கழனிகுடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம்.
காட்டூரணி, ஆர்.கே.நகர், எம்ஜிஆர் நகர், ரமலான் நகர், மேலகோட்டை, மாடக் கொட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகிபுரம், பழங்குளம், நாகநாதபுரம், இந்திரா நகர்,
பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
பட்டணம்காத்தான் துணை மின் நிலையம் பாரதி நகர் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ( ஆக.8) நடை பெற உள்ளது. இதனால், பாரதி நகர், நேரு நகர், மகா சக்தி நகர், புளிக்காரத்தெரு, குமரையா கோயில், ஆசிக் கிளினிக், ஜிஎஸ்எம் மால், மற்றும் ஓவிஎஸ் மஹால் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம் டவுன் 1, டவுன் 2 மின் பாதைகளில் நாளை (ஆக.8) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது. இதனால் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றிய பகுதிகள், தாயுமான சுவாமிகோயில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றிய பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியபகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ராமநாதபுரம் நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7, 2018)…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை, வேளாண்துறை வல்லுனர் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7, 1925).
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் தேசிய கீதம் இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர், இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வானிலை காரணமாக கோவையில் தரையிறங்கிய ஹைதராபாத் – மதுரை இன்டிகோ விமானம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், ஆக.6 இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், சென்னை அப்பலோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்கத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலர் நாராயணன் முன்னிலை வகித்தார்.
இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை கட்டணமின்றி செய்யப்பட்டது. மேல்சிகிச்சைக்காக 4 குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்டனர். அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள் ஹரிதா, விஜய், கார்த்தி ஆகியோர் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவ கழகத்தின் நிதி செயலர் டாக்டர்.ராசிகா, டாக்டர்.அடிப் அப்துல்லா, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேரா. கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
துணை ஆளுநர் அருண் பிரசாத், முன்னாள் தலைவர்கள் அசாருதீன், தமிழ் செல்வன், சோமசுந்தரம், தமிழ்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயின் கிளைக் கால்வாய் சிதிலம்.. மண் ஓடையாக காட்சி.. சீரமைக்க கோரிக்கை..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாய்., அனைப்பட்டியிலிருந்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலம், அய்யணார்குளம், குப்பணம்பட்டி வழியாக திருமங்கலம் வரை செல்கிறது., இதில் 10க்கும் மேற்பட்ட கிளைக் கால்வாய்கள் மூலம் நீர் எடுக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக திறக்கப்பட்டு வருகிறது.,
இந்நிலையில் 4ஆம் நம்பர் கிளைக் கால்வாய் நாட்டாபட்டியில் பிரிந்து வின்னகுடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம் வழியாக செல்லம்பட்டி, முண்டுவேலன்பட்டி வரை செல்கிறது.,
இந்த கால்வாய் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில் அமைந்துள்ளது., சிமெண்ட் கால்வாயாக உள்ள இந்த கிளைக் கால்வாய் சிதிலமடைந்து மண் ஓடையாக மாறி காணப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் விரிசல்களும், முட்புதர்களும் அடர்ந்து காணப்படும் இந்த கால்வாயை வரும் மழைக்காலத்திற்குள் சீரமைத்து கடைமடை பாசன பகுதி வரை நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,
You must be logged in to post a comment.