மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் A 2822 எண் கொண்ட கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை மதுரை திருநகர் பூங்கா அருகே அமைந்துள்ளது இந்த கடையில் இன்றைய தினம் காலை அதே பகுதியை சேர்ந்தவர் எனது குடும்ப அட்டையை பயன்படுத்தி சீனி வாங்கியுள்ளார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த சீனியை தன் வீட்டில் உபயோகப்படுத்தும் பாத்திரத்தில் சீனியை கொட்டியுள்ளார் அப்பொழுது சீனி கட்டி கட்டியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் தன்னைப்போல் தன் வீட்டின் அருகே உள்ள பலரும் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார் இது போன்ற நிலை தொடரக் கூடாது என்றும் இது சீனியா இல்லை கல்லா என்று பொதுமக்கள் புலம்பினர் தமிழக முதல்வர் அவர்கள் இதுபோன்று தரமற்ற பொருட்களை வினியோகம் செய்யும் ரேஷன் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட
Category:
செய்திகள்
அவனியாபுரம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பைக் திருட்டு சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
by mohan
written by mohan
மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ள தனியார் குடியிருப்பு பகுதிக்குள் கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் மதுரை அவனியாபுரம் அருகே உள்ள சௌபாக்கியா நகர் அருகே வாசுகி தெரு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் 41 வயது காமாட்சி சுந்தரம். இவர் நேற்று இரவு தனது வேலை வேலையை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் விலையுயர்ந்த யமஹா இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார் இந்த நிலையில் இன்று காலைஅவர் பைக் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்., உடனடியாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டார். அதில் யாரோ ஒரு வாலிபர் குடியிருப்பு பகுதிக்குள் உள்ளே வந்து அவருடைய பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.இதுகுறித்து காமாட்சி சுந்தரம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது குறிப்பாக பழங்காநத்தம் அரசரடி காளவாசல் ஆரப்பாளையம் வசந்த நகர் மாடக்குளம் பசுமலை பொன்மேனி விளாங்குடி பெரியார் பேருந்து நிலையம் தெப்பகுளம் முனிச்சாலை தெற்கு வாசல் அண்ணா நகர் சிம்மக்கல் உள்ளிட்ட நகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் விகாளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல்கல்லூரியில் இயந்திர வியல் துறை பேரவை சார்பில் தேசிய அளவிலான தொழிற்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
by mohan
written by mohan
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல்கல்லூரியில் இயந்திர வியல் துறை பேரவை சார்பில் தேசிய அளவிலான தொழிற்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது’கல்லூரி முதல்வர்டாக்டர் அருளரசு தலைமை. தாங்கினார். துணை பேராசிரியர் முரளிதர் வரவேற்றார்.கல்லூரி துணை முதல் வர் ஸ்ரீராம்பாபு, இயந்திரவியல் துறை தலைவர் பிரவீன்ராஜ், உதவி பேராசிரியர் சுஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக இந்த பொறியியல் கல்லூரி முன்ன மாணவரும் சென்னை தனியார் சிமெண்ட் கம்பெனி திட்டமேலாளர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். துறைசார்ந்த மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். முடிவில் துறை மாணவர்கள் செயலாளர் பிரதீப் நன்றி கூறி னார்.
கே.எம். வாரியார்
வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதிக்கு மகளிர் கல்லூரி வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கேஎம்.காதர் மொகிதீன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முஸ்லிம் மாணவிகள் உயர் கல்வியை தொடர்ந்திட சென்னை, லால்பேட்டை, நாகூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் கல்லூரி துவங்கிட தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபைக்குச் சொந்தமான நிலத்திற்கு 1969 முதல் பட்டா வழங்குவதில் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. அதற்குரிய பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடத்த திட்டமிட்டிருக்கும் பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பரிசீலனை செய்திட தமிழ்நாடு முதலமைச்சரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேட்டுக் கொண்டார். அண்டை நாடான இலங்கை மக்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்பட இருக்கும் நிவாரண நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் ரூபாய் 5 இலட்சத்திற்கான வரையோலை மற்றும் மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலரை தமிழ் நாடு முதலமைச்சரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார். மேலும், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் மூன்றாம் பாகம் நூலை தமிழ்நாடு முதலமைச்சரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வழங்கி வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், பத்திரிகையாளர் திருச்சி ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் இறுதி வார குரூப்-2 மாதிரி தேர்வு; பரிசுகள் வழங்கல்..
by mohan
written by mohan
செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர். மேலும் போட்டித் தேர்வு பயிற்சியின் போது மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் எட்டாவது முறையாக ஆகாஷ் அகாடமியின் உதவியோடு விழுதுகள் அறக்கட்டளையுடன் இணைந்து இறுதிவார குரூப்-2 மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் 140 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இறுதி வார பரிசளிப்பு விழாவில் ஆகாஷ் அகாடமி நிறுவனர் ஆகாஷ் மூர்த்தி,விழுதுகள் சேகர், வருவாய் அலுவலர் முத்துக்குமார், வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் பா சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு செங்கோட்டை நகர்மன்றத் தலைவி ராமலட்சுமி, நகர்மன்றத் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்வின் முடிவில் நூலகர் ராமசாமி பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி தலைமை மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணி நடந்தது. மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மரு. இரா.ஜெஸ்லின் துவக்கி வைத்தார். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் 13-வது வார்டு தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது. இதில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தலைமையில் முதல் மூலிகைச்செடி நட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உறைவிட மருத்துவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தென்காசி 13 வார்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், கரிசல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாபு வேலன், தென்காசி அரசு மருத்துவமனை QPMS பணியாளர்கள் கலந்து கொண்டனர். மூலிகை தோட்டம் அமைக்கும் பணி “பசுமை தென்காசி” முஸ்தபா, பசுமை இலத்தூர் அமைப்பைச் சேர்ந்த கனகராஜ், உதயக்குமார்,கவியரசு, சதீஸ்குமார் ஆகியோர் உதவியுடன் நடந்தது. இறுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துறையூர் மே 12: துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணிதத் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் கருத்தரங்கு கூட்டம் (12/05/2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர் முனைவர் P.S.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் எண்களின் அமைப்பு மற்றும் கணிதத்தேற்றங்கள் உருவான விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இயற்கணித எண்களின் கோட்பாடுகள் உருவான விதம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.இந்நிகழ்வின் தொடக்கத்தில் கணிதத் துறை தலைவர் திருமதி P.பாக்கியலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. பொன். A.R பெரியசாமி அவர்கள் துவக்க உரை வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின் செயலர் பொன். இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கி பெருமைசேர்த்தார். அதனைத்தொடர்ந்து சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு M.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வாழ்த்துறை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியின் நிறைவுவிழா மதியம் 3.30 மணி அளவில் தொடங்கப்பட்டது. நிறைவுவிழாவில் கல்லூரியின் தலைவர் திரு பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கணிதத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.இந்நிகழ்வின் முடிவில் கணிதத்துறை பேராசிரியர் C.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கி பெருமை சேர்த்தார். இக்கருத்தரங்கு கூட்டத்தை கணிதத் துறையின் தலைவி, பேராசிரியை P.பாக்கியலெட்சுமி அவர்கள் ஏற்பாடு செய்தார்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870).
by mohan
written by mohan
இராதானாத் சிக்தார் (Radhanath Sikdar) அக்டோபர் 1813ல் பிறந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வங்காள கணித இயல் அறிஞர். கொல்கத்தாவில் உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கப்படும் பழைய இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். வங்காளத்துப் பெண்கள் கல்வியில் சிறப்பதற்காகவும், நல்லுரிமைப் பெற்று விளங்குவதற்காகவும் மாசிக் பத்திரிக்கா என்னும் இதழைத் தொடங்கினார். 1840ம் ஆண்டு மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தில் சேர்ந்தார். 1852 ஆம் ஆண்டு எவரெஸ்ட்டின் (கொடுமுடி-15) உயரத்தை முதன்முதலாக சுமார் 8,848 மீட்டர் என்று கணித்தார். இதற்குப் பிறகே எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிகப்பெரியதென உலகத்தின் பிற ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1831 ஆம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட் கோள முக்கோண முறையில் (Spherical Trigonometry) குறிப்பிட்டத் திறமையுள்ள ஒரு நல்ல இளம் கணிதவியலாளரைத் தேடும்போது, இந்து மதக் கல்லூரியின் அப்போதைய கணித ஆசிரியர் திரு. டைலர் டைட்லர் அவர்களின் மாணவர் ராதாநாத் சிக்தரை கண்டறிந்தார். அப்போது ராதாநாத்தின் வயது 19. அதன் பின்பு ராதாநாத் சிக்தார் 1831-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாபெரும் முக்கோணக் கணக்கீட்டுக் குழுமத்தில் (Great Trigonometry Survey) இணைந்தார். அப்போது இவரது மாத ஊதியம் இந்திய ரூபாய் 30. இவரது புவி அளவியல் திறமையை அறிந்த குழுவினர் டேராடூன் அருகே உள்ள சிரோஜிக்கு இவரை அனுப்பினர். இவரது அணுகுமுறையானது வழக்கமான புவிப்பார்த்தச் செயல்முறைககளிலிருந்து (மாஸ்டரிங் முறை) மாறுபட்டு, சொந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் உள்ளிடக்கிய புது வகையான அணுகுமுறையாக இருந்தது.
சிறப்பான செயல்பாட்டின் காரணமாக திரு.எவரெஸ்ட், ராநாதாத் சிக்தரை துணை கலெக்டராக ஜிடிஎஸ் பிரிவிற்கு மாற்றினார். 1843 ஆம் ஆண்டு திரு. எவரெஸ்ட் பணி ஓய்வு பெற்றதையடுத்து ராதாநாத் சிக்தர் நிர்வாக இயக்குனர் ஆனார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராதாநாத் சிக்தரை தலைமைக் கணித அதிகாரியாக கல்கத்தா மாநகருக்குப் பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் பாரமானியமுக்கத்தின் அளவீடுகளாக நடைமுறையிலிருந்தவற்றை மாற்றியமைக்கத் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைப் (உதாரணமாக, 32 டிகிரி பாரன்ஹீட் மாற்று கணக்கீடுச் சூத்திரம்) பயன்படுத்தினார்.
இவர் தலைமையில் டார்ஜிலிங் அருகே பனி மூடிய மலைகள் அளவிடும் பணி கேணல் வாஹ் கேட்டுக்கொண்டபடித் தொடங்கியது. ஆறு வெவ்வேறு கண்காணிப்பு அளவீடுகளின்படி இன்றைய எவரெஸ்ட் சிகரமே உலகின் உச்சம் என ராதாநாத் சிக்தரால் அன்று பரிந்துரை செய்யப்பட்டு, சில வருடங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பனி சிகரத்திற்குப் பெயரிடப்படும்போது உள்ளுர் பெயர் முன்னுரிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், கேணல் வாஹ் இதற்கு விதிவிலக்குக் கொடுத்தார். தன்னுடைய முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த திரு. எவரெஸ்ட்டின் நினைவாக பெயரிடப்பட வேண்டும் என இராதானாத் சிக்தார் தெரிவித்தார். இதன் காரணமாக ராதாநாத் சிக்தாரின் பணி மற்றும் உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை.
எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த இராதானாத் சிக்தார் மே 17 , 1870ல் தனது 57வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஏப்ரல் 10, 1802ல் சென்னையிலே தொடக்கப்பட்ட மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தின் நினைவாக, இந்திய அஞ்சல் நிறுவனம், ஜூன் 27, 2004ல் சென்னையில் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது. இதில் இராதானாத் சிக்தார் படமும், நைன் சிங்கு (இவரும் நில அளவீட்டில் முன்னணியில் பங்களித்தவர்) படமும் இடம் பெற்றிருந்தன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக மாறிவிட்டது – உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) (மே 17).
by mohan
written by mohan
உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது. 1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது. உலக தகவல் சமூக நாளின் முதன்மையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். அறிவின் வளர்ச்சியும் தேவையும் புதியன கண்டுபிடிக்கும் நோக்கத்தை வளர்த்தன, குகைகளில் தங்கி வாழ்ந்த ஆதிமனிதன் குகைகளில் தீட்டியசித்திரங்கள், தனது எண்ணம் மற்றும் சிந்தனையை மற்றவர்க்குத் தெரிவிக்கும் கருவியாகவே அமைந்திருந்தது. தொடர்பு முறை ஒலி எழுப்புதல், சைகை மொழி, வரிவடிவ முறையாக முன்னேறியது முதல் நான்காம் தலைமுறை நுட்பங்கள் வரையிலான பாய்ச்சல், தொலைத் தொடர்புத்துறையில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம். நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.
தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது. கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875ம் ஆண்டில் ஏப்ரல் 6 ஆம் நாள் அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் நாள் ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம், முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள், செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும்.
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பேறுகளாகும். 1865ல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (International Telecommunication Union (ITU)) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 5 பில்லியனைத் தாண்டியிருந்ததாக என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது
அண்மைக்காலத்தில் கணினி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணினிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெட் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில், தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, டெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.
எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது. ஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது.. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம்.
அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்திகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. ‘நெவிகேடர்” மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும். இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது. நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறிவியல் வளர்ச்சியின் வழியாகவே நாம் அதைக் கைப்பற்றியிருக்கிறோம் என்பது மிகப்பொருந்தும்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பயன்பாட்டைக் கொண்ட அலைபேசிகள் பேசுவதற்கு மட்டும் என இருந்த நிலை மாறிவிட்டது. தற்போதைய ஸ்மார்ட் அலைபேசிகள் ஒரு கணினியை உள்ளடக்கி வலம் வருகிறது. உள்ளங்கைகளுக்குள் உலகில் நடைபெறும் ஒவ்வொன்றையும் உடனே காண இயல்கிறது. நேரடியாக முகம் பார்த்துப் பேச முடிகிறது. தொலைத் தொடர்பு நுட்பம், தற்போதைய காலத்தின் மின்னணு நுட்ப வளர்ச்சியில், வானில் செயற்கைக்கோள் வழியாகவும் நிகழ்த்தப்படுகிறது. இணையத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பது சமூக வலைதளங்களாகும். முகநூல், வலைப்பக்கங்கள், வாயிலாக கண் இமைக்கும் நேரத்தில் தகவல்கள் பதியப்பட்டு ஒட்டு மொத்த உலகிற்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றது. அன்றாட சமூக நிகழ்வுகள் பிரச்னைகள் சமூக வலைதளங்களால் அணுகப்படுகிறது.
அதேநேரம், தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலைதொடர்பில் செய்தியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம். எனினும் இத்தகைய தளங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதும், பதிவுகள் இடுவதும் அவசியம். தனிப்பட்ட பதிவுகள் இடுதலில் விழிப்புணர்வும், பிறர் மனம் புண்படும்படியான கருத்துக்கள் தவிப்பதும், 180 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை கொண்டு இயங்கும் சமூக வலைதளங்கள் போன்ற தொலைத்தொடர்பு பகுதிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என்பது உறுதி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தத நோயெதிர்ப்பு முறையின் தந்தை, இங்கிலாந்து நாட்டு மருத்துவர் அறிவியலாளர் எட்வர்ட் ஜென்னர் பிறந்த தினம் இன்று (மே 17, 1749).
by mohan
written by mohan
எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner) மே 17, 1749ல் இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி நகரில் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு மிகச் சிறந்த அடிப்படை கல்வி கிடைக்க வழிசெய்தது. ஜென்னர் வோட்டனிலும் சிரென்செஸ்டரிலும் பள்ளிக் கல்வியைப் பெற்றார். இச்சமயத்தில் தான் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆர்வமேற்பட்டது. தனது பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்குச் சேர்ந்தார். ஏழாண்டுகள் பெற்ற இப்பயிற்சியின் காரணமாக ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் தேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை ஜென்னருக்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. ‘கௌபாக்சு’ எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை.
எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க ‘கௌபாக்சு’ நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர். ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத் தொடங்கினார். சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தார். இதனிடையில் 1770ல் புனித ஜார்ஜ் மருத்துவமனையில் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும் உடற்கூறு அறுவையாளராகவும் பணியாற்றினார். ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான பணியின் காரணமாக இங்கிலாந்தின் இராயல் கழக உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பயற்சிக்குப் பின் 1773ல் தனது சொந்த ஊரான பெர்க்கிலி திரும்பினார். அங்கும் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார். இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள் குஞ்சுகளுக்கு 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார். மற்ற பறவைகளின் கூட்டில் வைக்கப்படும் குயில் குஞ்சின் முதுகில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாகவே அது மற்ற பறவைக் குஞ்சுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவரது ஆய்வு 20 ஆம் நூற்றாண்டில் குயிலின் வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் வெளிவந்த பின்னரே உண்மையென ஒத்துக் கொள்ளப்பட்டது. 1788ல் ராயல் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எட்வர்சு ஜென்னர் 1788 மார்ச் மாதம் கேதரின் கிங்ஸ்கோட் என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். இவர் குளுசெஸ்டெர்சையர் என்ற இடத்திலுள்ள கிங்க்ஸ்கோட் பூங்கா உரிமையாளரான ஆந்தோனி கிங்ஸ்கோட் என்பவரின் மகளாவார். 1792ம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவப் பட்டம் பெற்றார். குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். மார்பு முடக்குவலி (angina pectoris) பற்றி முதலில்ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் ஜென்னரைச் சேரும். ஹிபர்தீன் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வலியால் பாதிக்கப்பட்ட இதயத் தமனிகள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி முறை 1721 இலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் இதில் நோயைக் கட்டுப்படுத்தி முழுதுமாக போக்க முடியவில்லை. லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில் பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கணவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார். ஆனால் இம்முறையில் 60 % மக்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 60% மக்களில் 20% பேர் இறந்து போயினர். சிர்க்கான்சிய மக்களிடமிருந்த இம்முறையை துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
1765ல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர் பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை அவரால் அளிக்க இயலவில்லை. பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796ம் ஆண்டு மே 14-ஆம் நாள் தனது தோட்டக் காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கௌபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கௌபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.
சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் சிறுவனின் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்த தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. டூட்டிங்கில் புனித ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி நூலகத்திலுள்ள சுவரில் ஜேம்பிப்சும் இடம்பெற்றுள்ளார். அதன்பின் மேலும் பல ஆய்வுகளைச் செய்து தனது முடிவுகளை 1798ம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
எட்வர்டு என்னருக்கு முன்னர் 1770களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஐந்து கண்டுபிடிப்பாளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி, ரெண்டெல், பிளெட்) கௌபாக்சு நோயிலிருந்து தடுப்பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசியினை தானும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது. பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை ஐரோப்பாவெங்கும் பரவியது. ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து எட்வர்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். மூன்று வருடங்கள் இடைவிடாது பயணித்து அமெரிக்கா, பிலிப்பைன்சு, மக்காவ், சீனா, செயின்ட் ஹெலனா தீவு ஆகிய நாடுகளில் ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்தினார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் விரைவாக பரவியது.
எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது. மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802ம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808ம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார். அம்மை நோயைத் துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.
மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்குப் பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980ம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. 1810ம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவத் தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். ஜனவரி 23, 1823ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமடையும் முன்பே இரண்டாவது முறையும் பக்கவாத நோய் தாக்கியது. பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக எட்வர்ட் ஜென்னர் ஜனவரி 26, 1823ல் தனது 73வது அகவையில் இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பெற்றோர் கூட்டம் முறையே முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது.தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரேமானந்தம் கணேசன் முனைவர் திருப்பதி முறையே முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றினர்.கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினர். துணை முதல்வர் பார்த்தசாரதி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி சிறப்புரையாற்றினர். மாணவர்களின் படிப்பு, விளையாட்டு, வேலைவாய்ப்பு, தகுதி மேம்பாட்டு பயிற்சி தேவை பற்றி பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பெற்றோர்களின் கருத்துக்களுக்கு விளக்கமும் வழங்கினார்.மாணவர் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இரகு, மாரிமுத்து, முனைவர் காமாட்சி ஆகியோர் முறையே முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தில் நன்றி உரை ஆற்றினர். முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தை முறையே நாகராஜ் முனைவர் குமாரசுவாமி மற்றும் வேல்முருகன் இனிதே தொகுத்து வழங்கினர்.முனைவர் சந்திரசேகரன் பெற்றோர் கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
by mohan
written by mohan
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வருடந்தோறும் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை பொருட்காட்சி நடைபெறவில்லை. இந்தாண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது. இப்பொருட்காட்சியை, செய்தி – மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொருட்காட்சியில், தமிழக அரசின் துறை சார்ந்த சாதனை விளக்க அரங்குகள், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவைகள் இடம் பெற்றுள்ளது, தமிழக அரசின் 27 அரசுத்துறை அரங்குகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உயர் வெப்ப மிகுகடத்து திறன் (High-temperature superconductivity) கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம் இன்று (மே 16, 1950).
by mohan
written by mohan
யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் மே 16, 1950ல் பெட்னோர்ஸ் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் நியூயன்கிர்ச்சனில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பியானோ, ஆசிரியர் எலிசபெத் பெட்னோர்ஸ் ஆகியோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவராக பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் மத்திய ஐரோப்பாவில் சிலேசியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் இரண்டாம் உலகப் போரின் கொந்தளிப்பில் மேற்கு நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர் அவரை கிளாசிக்கல் இசையில் ஆர்வம் காட்ட முயன்றனர். ஆனால் அவர் நடைமுறையில். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வேலை செய்ய அதிக விருப்பம் கொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளியில் அவர் இயற்கை அறிவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவர் சோதனைகள் மூலம் வேதியியலில் கவனம் செலுத்தினார்.
1968 ஆம் ஆண்டில், பெட்னோர்ஸ் வேதியியல் படிப்பதற்காக மன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வேதியியல் மற்றும் இயற்பியலின் இடைமுகத்தில் கனிமவியலின் துணைத் துறையான படிகவியல் என்ற மிகக் குறைந்த பிரபலமான பாடத்திற்கு மாறுவதற்கு விரும்பினார். 1972 ஆம் ஆண்டில், அவரது ஆசிரியர்களான வொல்ப்காங் ஹாஃப்மேன் மற்றும் ஹார்ஸ்ட் பாம் ஆகியோர் கோடைகாலத்தை ஐபிஎம் சூரிச் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வருகை தரும் மாணவராகக் கழிக்க ஏற்பாடு செய்தனர். இங்குள்ள அனுபவம் மேலும் அவரது வாழ்க்கையை வடிவமைக்கும்: இயற்பியல் துறையின் தலைவரான தனது பிற்கால ஒத்துழைப்பாளரான கே. அலெக்ஸ் முல்லரை அவர் சந்தித்தது மட்டுமல்லாமல், ஐபிஎம் ஆய்வகத்தில் பயிரிடப்பட்ட படைப்பாற்றல் மற்றும் சுதந்திரத்தின் சூழ்நிலையையும் அவர் அனுபவித்தார்.
1974 ஆம் ஆண்டில் சூரிச்சிற்கு ஆறு மாதங்களுக்கு தனது டிப்ளோமா வேலையின் சோதனைப் பகுதியைச் செய்தார். இங்கே அவர் பெரோவ்ஸ்கைட்டுகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பீங்கான் பொருளான SrTiO3 இன் படிகங்களை வளர்த்தார். பெரோவ்ஸ்கைட்டுகளில் ஆர்வமுள்ள முல்லர், தனது ஆராய்ச்சியைத் தொடரும்படி அவரை வற்புறுத்தினார். மேலும் 1977 ஆம் ஆண்டில் மன்ஸ்டரிடமிருந்து முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, பெட்னோர்ஸ் ஹெய்னி கிரானிச்சர் மற்றும் அலெக்ஸ் முல்லரின் மேற்பார்வையில் ETH சூரிச்ல் (சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) முனைவர் பட்டம் பெற்றார்.
1982 ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஐபிஎம் ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு, அவர் முல்லரின் சூப்பர் கண்டக்டிவிட்டி குறித்த ஆராய்ச்சியில் சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டில், பெட்னோர்ஸ் மற்றும் முல்லர் மாறுதல் உலோக ஆக்சைடுகளிலிருந்து உருவான மட்பாண்டங்களின் மின் பண்புகள் குறித்து முறையான ஆய்வைத் தொடங்கினர். மேலும் 1986 ஆம் ஆண்டில் அவர்கள் ஒரு லந்தனம் பேரியம் காப்பர் ஆக்சைடுல் சூப்பர் கண்டக்டிவிட்டியைத் தூண்டுவதில் வெற்றி பெற்றனர். ஆக்சைட்டின் முக்கியமான வெப்பநிலை 35K ஆகும். இது முந்தைய சாதனையை விட முழு 12K அதிகமாகும். இந்த கண்டுபிடிப்பு எல்.பி.சி.ஓ போன்ற கட்டமைப்புகளைக் கொண்ட கப்ரேட் பொருட்களின் உயர் வெப்பநிலை சூப்பர் கண்டக்டிவிட்டி மீது கூடுதல் ஆராய்ச்சியைத் தூண்டியது. விரைவில் பி.எஸ்.சி.சி.ஓ (107K) மற்றும் ஒய்.பி.சி.ஓ (92K) போன்ற சேர்மங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது.
பீங்கான் பொருட்களில் சூப்பர் கண்டக்டிவிட்டி கண்டுபிடிப்பதில் அவர்கள் செய்த முக்கிய இடைவெளிக்காக 1987 ஆம் ஆண்டில், பெட்னோர்ஸ் மற்றும் முல்லர் ஆகியோருக்கு கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் பெட்னோர்ஸ் ஒரு ஐபிஎம் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925).
by mohan
written by mohan
நான்சி கிரேசு உரோமன் (Nancy Grace Roman) மே 16, 1925ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார். இவரது தாயார் இசையாசிரியர் ஜார்ஜியா சுமித் உரோமன். தந்தையார் இர்வின் உரோமன். உரோமன் பிறந்த்தும் அவரது தந்தையின் பணிக்காக குடும்பம் ஓக்லகோமாவுக்கு இடம்பெயர்ந்தது. பின்னர், உரோமனும் அவரது பெற்றோரும் அவுசுட்டன், நியூஜெர்சி, மிச்சிகானுக்குத் தொடர்ந்து இடம்பெயர்ந்தனர். 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாழ்சிங்டன் டி. சி. நகரில் வாழ்ந்தார். இவர் தனது அறிவியல் ஆர்வத்தைப் பெற்றோரே ஊட்டியதாக்க் கருதுகிறார். தன் பணிக்கு அப்பால், அமெரிக்கப் பல்கலைக்கழக மகளிர் கழகத்தில் முனைவாகச் செயல்பட்டு விரிவுரைகளுக்கும் இசைக் கச்சேரிகளுக்கும் சென்றார். உரோமன் தன் பதினொறாம் அகவையிலேயே வானியலில் ஆர்வம் கொள்ளத் தொடங்கி ஒரு வானியல் குழுவையும் உருவாக்கியுள்ளார். இவரும் இவரது வகுப்பு மாணவரும் ஒன்றாகச் சேர்ந்து வாரம் ஒருமுறை நூல்களைப் படித்து விண்மீன்குழுக்களைப் பற்றிப் பயின்றுள்ளனர். இவரது அர்வத்தைத் தடுக்க முயன்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே வானியலில் தேர்ச்சிப்பெற முடிவு செய்துவிட்டார். இவர் பால்டிமோரில் உள்ள வெசுட்டர்ன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து விரைவுப் பாடத்திட்டத்தில் சேர்ந்து மூன்றாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
உரோமன் 1946ல் சுவார்த்மோர் கல்லூரியில் சேர்ந்து வானியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் அங்கு படிக்கும்போது சுப்பிரவுல் வான்காணகத்திலும் பணி செய்தார். இதற்குப் பிறகு தன் வானியல் முனைவர் பட்டத்துக்காக சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1946ல் சேர்ந்தார். அங்கு அவர் ஆற்றாண்டுகள் தங்கி, யெர்க்கேசு வான்காணகத்திலும் டெக்சாசில் உள்ள மெக்டொனால்டு வான்காணகத்திலும் பணிபுரிந்தபடி, டபுள்யூ.டபுள்யூ. மார்கனிடம் ஆராய்ச்சி உதவியாளராகவும் இருந்தார். அந்த ஆராய்ச்சி இருக்கை நிலையானதாக இ;ல்லாததால் இவர் அங்கு பயிற்றுநராகச் சேர்ந்துப் பின்னர் பேராசியரின் உதவியாளராகவும் இருந்தார். அக்காலத்தில் பெண்கள் ஆராய்ச்சியில் ஈடுபட உரிய காலம் தரப்படாததால் பல்கலைக்கழக வேலையைத் துறந்தார். இவர் 1980 முதல் 1988 வரை சுவார்த்மோர் கல்லூரியில் மேலாளர்களில் ஒருவராகத் தொடர்ந்தபோதும் தன் ஆராய்ச்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். சூரியனை வட்டணையில் சுற்றும் வான்காணகப் படிமத்துடன் நான்சி உரோமன் சிகாகோ பல்கலைக்கழக யெர்க்கேசு வான்காணகம் விட்டகன்றதும் நாவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் சேர்ந்து கதிர்வானியல் திட்டத்தில் பணிபுரியலானார். இங்கு வெப்பம்சாரா கதிர்வீச்சு வாயில்களின் கதிர்நிரல்களிலும் புவிவடிவ அளக்கைப் பணியிலும் ஈடுபட்டார். இதில் இவர் நுன்னலை கதிர்நிரலியல் பிரிவின் தலைமையை ஏற்றார்.
ஆரி யூரேவின் விரிவுரையைக் கேட்டுக்கொண்டிருந்த்போது ஜேக் கிளார்க் இவரிடம் வந்து எவராவது அங்குள்ளவர்களில் நாசாவில் விண்வெளி வானியல் திட்டத்தில் சேர ஆர்வமுடன் உள்ளனரா எனக் கேட்டுள்ளார். அந்த இருக்கைக்கு இவர் மட்டுமே ஏற்பு தெரிவித்துள்ளார். நாசாவில் விண்வெளி அறிவியல் அலுவலகத்தில் முதல் வானியல் தலைவராகச் சேர்ந்துள்ளார். இவ்ர் அந்த்த் திட்டத்தை வடிவமைத்து விண்வெளி முகமையில் செயல் அலுவலர் பதவியை ஏற்ற முதல் பெண்மணியும் இவரேயாவார். இவர் அப்பணி தொடர்பாக நாடு முழுவதும் சுற்றி அனைத்துப் வானியல் துறைகளுடனும் விவாதம் நடத்தினார். அப்போது அவர்களிடம் திட்டம் உருவாக்கத்தில் உள்ளதாகவும் அதில் மேலும் எவற்றை சேர்க்கலாம் என வினவியுள்ளார். இவர் நாசாவில் வானியலுக்கும் சூரிய இயற்பியலுக்கும் தலைவராக 1961 முதல் 1963 வரை பணியாற்றினார். வானியலுக்கும் பொது சார்பியலுக்க்ம் தலைவராக இருந்தமை உட்பட, இவர் நாசாவில் பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் நாசாவில் பணிபுரிந்தபோது, பல்வேறு திட்டங்களை உருவாக்கி உரிய பாதீடுகளும் பெற்று அறிவியல் பங்களிப்பாளரையும் அணிதிரட்டினார். இவர் வட்டணையில் சுற்றிவரும் மூன்று சூரிய நோக்கீட்டகங்களையும் மூன்று சிறிய வானியல் செயற்கைக்கோள்களையும் ஏவும்பணியில் பங்கேற்றுள்ளார். இவை சூரிய, வான்வெளி, விண்வெளி நோக்கிடுகளுக்காக புற ஊதாக்கதிர், X-கதிர் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தினார். இவர் ஆழ்சு திக்சனுடன் இணைந்து ஒளி, புற ஊதாக்கதிர் அளவீடுகளைப் பயன்படுத்திய வட்டணையில் சுற்றிவரும் வான்காணகங்களை ஏவும்பணியையும் மேற்பார்வையிட்டுள்ளார். மேலும் இவர் புவிப்புற அளக்கைச் செயற்கைக்கோள்களை ஏவுதலிலும் ஈடுபட்டுள்ளார். அதோடு, இவர் வானியல் ஏவூர்தித் திட்டம், உயர் ஆற்றல் வான்காணகங்கள், சார்பியல் ஈர்ப்புச் செம்பெயர்ச்சியை அளப்பதற்கான சுகவுட் ஆய்கலத் திட்டம் போன்ற சிறிய திட்டங்களையும் விண்ணாய்வகத் திட்டம், ஜெமினித் திட்டம், அப்பொல்லோத் திட்டம் வான்வெளி ஆய்வகத் திட்டம் ஆகியவற்றின் செய்முறைகளையும் திட்டமிடலிலும் பங்கேற்றுள்ளார். இவர் ஜேக் ஓல்ட்சுடன் இணைந்து சிறு வானியல் செயர்கைக்கோளிலும் பரோபிரிட்ஜுடன் இணைந்து விண்வெளித் தொலைநோக்கியிலும் பணிபுரிந்துள்ளார்.
இவர் கடைசியாக, அபுள் தொலைநோக்கித் திட்டக் குழுவை உருவாக்கித் தானும் அதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணியாற்றியுள்ளார். இவர் அத்திட்டத்தைத் தொடக்கநிலையில் திட்டமிடலிலும் அதன் செயல்பாட்டுக் கட்டமைப்பினை வரையறுப்பதிலும் பெரும்பங்காற்றியுள்ளார். இவரது இந்த பங்களிப்புக்காக “அபுள் தொலைநோக்கியின் அன்னை” எனப் பராட்டப்படுகிறார். இவருடன் விண்வெளி முகமையில் பணிசெய்த நாசாவின் நடப்பு முதன்மை வானியலாளர் இவரைப் பற்றி “அபுள் தொலைநோக்கியின் அன்னை” என வியந்து பாராட்டுகிறார். அபுள் தொலைநோக்கியில் வேலைசெய்யும் இன்றைய இளந்தலைமுறை வானியலாளர்கள் இவரது பணியை மறந்துவிட்டனர், என எடு வீலர் மேலும் கூறுகிறார். இந்த இணைய ஊழியில் பெரும்பாலானவை மறக்கப்பட்டதை எண்ணி வருத்தப்படவேண்டியுள்ளது. இணையமும் கூகிளும் மின்ன்ஞ்சலும் வருவதற்கு முந்தைய பழைய காலத்திலேயே நான்சி அபுள் விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்தை ஏற்கவைத்து, வானியலாரை அணிதிரட்டி,அதற்கான அரசின் பாதீட்டைப் பெறவும் வழிவகுத்துள்ளார்.
இவர் நாசாவில் இருபத்தியோராண்டுகள் பணிக்குப் பிறகும் 1997 வரை தொடர்ந்து கோடார்டு விண்வெளி பரப்பு மையத்தின் வேலைகளுக்கு ஆதரவு நல்கிய ஒப்பந்தக்கார்ர்களுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவர் ஓ.ஆர்.ஐ. குழுமத்துக்கு 1980 முதல் 1988 வரை அறிவுரைஞராகப் பணிஒபுரிந்துள்ளார். மற்ற பெரும்பாலான பெண் அறிவியலாரைப் போலவே இவரும் ஒரு பெண் அறிவியலாளராகப் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளார். இவர் வானியல் பணி ஆற்றுவதையே சுற்றியிருந்தவர் விரும்பவில்லை. இவரது தளராத ஊக்கத்திக் குலைத்தனர். மேலும் அப்போது நாசாவில் இவரைப் போல மேலண்மை இருக்கையில் இருந்தவர் மிகச் சிலரே. பெண்களுக்கு ஏற்படும் மேலாண்மைச் சிக்கல்களை அறிய இவர் மிச்சிகனிலும் பென்சுடேட்டிலும் நிகழ்ந்த “மேலாண்மையில் பெண்கள்” பயிற்சித் திட்ட்த்தில் கலந்துகொண்டார். அந்த திட்டங்கள் பெண்களின் ஆர்வங்களைப் பேசினவே தவிர, மேலாண்மையில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை அலசவில்லை எனத் தன் 1980 ஆண்டைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது தொடக்க கால வெளியீடுகள் இவர் யெர்க்கேசு, மெக்டொனால்டு வான்கானகங்களில் வேளை செய்த பிறகு, 1955 ஆண்டில் வானியற்பியல் இதழில் குறைநிரப்பு வரிசையாக வெளியாகின. இவை உயர்விரைவு விண்மீன்கள் வரிசைத் தொகுப்பு அட்டவணை சார்ந்தனவாக அமைந்தன. இவர் ஏறத்தாழ, 600 உயர்விரைவு விண்மீன்களை ஆய்வு செய்து அவற்றின் பான்மைகளை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதினார். அப்பான்மைகள் “ஒளிமின் பருமைகளின் கதிர்நிரல் வகைகள், வண்ணங்கள், கதிர்நிரலியல் இடமாறு தோற்றப் பிழைகள் என்பனவாகும். நீரகமும் எல்லியமும் அடங்கிய விண்மீன்கள் உயர்தனிமங்கள் அடங்கிய விண்மீன்களைவிட வேகமாக நகர்வதைக் கண்டுபிடித்தார். பொதுவாக அமையும் எல்லா விண்மீன்களும் ஒரே காலத்தவயல்ல என்பதையும் கண்டுபிடித்தார். இதை விண்மீன்களின் தாழ்விரவல் கதிர்நிரல்கள் கொண்ட நீரக வரிகளை வைத்து கண்டுபிடித்து நிறுவினார்.
வலிமையான வரிகள் கொண்ட விண்மீன்கள் பால்வழி மையம் நோக்கி இயங்குவதையும் பிற விண்மீன்கள் பால்வெளித் தளத்துக்கு வெளியே விலகி நீள்வட்ட வடிவத்தில் இயங்குவதையும் கண்ணுற்றார். இவர் 1875 ஆண்டு இருப்பில் இருந்த விண்மீன்குழுக்களின் இருப்புகளைக் கண்டறிந்து அதைப் பற்றி எழுதி வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் அவற்றின் இருப்புக்களை கண்டறியும் முறையை விளக்கியுள்ளார். இதை பேரியல் அர்சா விண்மீன் குழு பற்ரிய தன் முனைவர் பட்ட ஆய்வுரையிலும் குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்த நான்சி கிரேசு உரோமன் டிசம்பர் 25, 2018ல் தனது 93வது அகவையில் மேரிலாந்து, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்பியலில் வெப்பவியல், கிரீன் ஹௌஸ் விளைவு மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர் ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் நினைவு நாள் இன்று (மே 16, 1830).
by mohan
written by mohan
ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் (Jean Baptiste Joseph Fourier) மார்ச் 21, 1768ல் யோன் டெபார்டெமென்ட், பிரான்சில் ஒரு தையல்காரரின் மகனான பிறந்தார். அவர் தனது ஒன்பது வயதில் அனாதையாக இருந்தார். ஃபூரியர் ஆக்செர் பிஷப்புக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த அறிமுகத்தின் மூலம், செயின்ட் மார்க் கான்வென்ட்டின் பெனடிக்டைன் ஆணை மூலம் கல்வி கற்றார். இராணுவத்தின் விஞ்ஞானப் படைகளில் தகுதியற்றவராக இருந்ததால் கமிஷன்கள் நல்ல பிறப்பிற்காக ஒதுக்கப்பட்டன. கணிதம் குறித்த இராணுவ விரிவுரையை ஏற்றுக்கொண்டார். பிரெஞ்சு புரட்சியை ஊக்குவிப்பதில் அவர் தனது சொந்த மாவட்டத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். உள்ளூர் புரட்சிகர குழுவில் பணியாற்றினார். பயங்கரவாதத்தின் போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 1795 ஆம் ஆண்டில், எக்கோல் நார்மலுக்கு நியமிக்கப்பட்டார்.
ஃபோரியர் நெப்போலியன் போனபார்ட்டுடன் 1798ல் விஞ்ஞான ஆலோசகராக தனது எகிப்திய பயணத்தில் சென்றார். மேலும் இன்ஸ்டிட்யூட் டிஜிப்ட்டின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் கடற்படையால் பிரான்சில் இருந்து துண்டிக்கப்பட்டு, பிரெஞ்சு இராணுவம் அவர்களின் போர் ஆயுதங்களை நம்ப வேண்டிய பட்டறைகளை ஏற்பாடு செய்தார். கிழக்கில் பிரிட்டிஷ் செல்வாக்கை பலவீனப்படுத்தும் நோக்கில், கெய்ரோவில் நெப்போலியன் நிறுவிய எகிப்திய நிறுவனத்திற்கு பல கணித ஆவணங்களை அவர் வழங்கினார். 1801ல் பிரிட்டிஷ் வெற்றிகள் மற்றும் ஜெனரல் மெனூவின் கீழ் பிரெஞ்சுக்காரர்களின் சரணடைதலுக்குப் பிறகு, ஃபோரியர் பிரான்சுக்குத் திரும்பினார்.
1801 ஆம் ஆண்டில், நெப்போலியன் கிரெனோபில் ஐசரே துறையின் ஃபோரியர் ப்ரிஃபெக்டை ஆளுநராக நியமித்தார். அங்கு அவர் சாலை கட்டுமானம் மற்றும் பிற திட்டங்களை மேற்பார்வையிட்டார். இருப்பினும், ஃபோரியர் முன்னர் நெப்போலியன் பயணத்திலிருந்து எகிப்துக்கு வீடு திரும்பியிருந்தார். தனது கல்வியில் எக்கோல் பாலிடெக்னிக் பேராசிரியராக தனது கல்விப் பதவியை மீண்டும் தொடங்கினார். ஐசரே திணைக்களத்தின் தலைவர் சமீபத்தில் இறந்துவிட்டதால், குடிமகனான ஃபோரியரை இந்த இடத்திற்கு நியமிப்பதன் மூலம் எனது நம்பிக்கையை வெளிப்படுத்த விருப்பினர். எனவே நெப்போலியனுக்கு உண்மையுள்ளவராக இருந்த அவர், ப்ரிஃபெக்ட் பதவியை ஏற்றுக்கொண்டார். கிரெனோபில் இருந்தபோதுதான் அவர் வெப்பத்தைப் பரப்புவது குறித்து பரிசோதனை செய்யத் தொடங்கினார். 1807 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி பாரிஸ் நிறுவனத்திற்கு திட உடல்களில் வெப்பத்தை பரப்புவதில் அவர் தனது கட்டுரையை வழங்கினார். டி எல்ஜிப்டே என்ற நினைவுச்சின்ன விளக்கத்திற்கும் அவர் பங்களித்தார்.
1822 ஆம் ஆண்டில், ஃபோரியர் ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் டெலாம்ப்ரேவுக்குப் பிறகு பிரெஞ்சு அறிவியல் அகாடமியின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். 1830 ஆம் ஆண்டில், அவர் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1822 ஆம் ஆண்டில், ஃபோரியர் தியோரி அனலிட்டிக் டி லா சலூரில் வெப்ப ஓட்டம் குறித்த தனது படைப்பை வெளியிட்டார். இதில் அவர் நியூட்டனின் குளிரூட்டும் விதியின் அடிப்படையில் தனது காரணத்தை அடிப்படையாகக் கொண்டார். அதாவது, அருகிலுள்ள இரண்டு மூலக்கூறுகளுக்கு இடையில் வெப்ப ஓட்டம் அவற்றின் வெப்பநிலையின் மிகச் சிறிய வேறுபாட்டிற்கு விகிதாசாரமாகும். இந்த புத்தகம் 56 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரீமேன் (1878) என்பவரால் தலையங்கம் ‘திருத்தங்களுடன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த புத்தகம் பல தலையங்க திருத்தங்களுடன் டார்பூக்ஸ் திருத்தியது மற்றும் 1888 இல் பிரெஞ்சு மொழியில் மீண்டும் வெளியிடப்பட்டது.
இவர், கணிதவியலில் ஃபூரியே தொடர் என்னும் கருத்துக்களை உருவாக்கி புகழ்பெற்றவர். இந்த சமன்பாடு, பரிமாண பகுப்பாய்வுக்கு பொருந்தும் என்றால், ஒரு சமன்பாடு சரியானதாக இருக்கும் என்றும் கருதினார். 1820 ஆம் ஆண்டில், பூமியின் அளவு மற்றும் சூரியனின் தூரம் போன்றவற்றை கணக்கிட்டு கூறினார். வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அப்போது எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுங்குடில் விளைவு அவசியம். பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ளும். இதுதான் கிரீன் ஹௌஸ் விளைவு என்றார்.
இந்த வேலையில் மூன்று முக்கியமான பங்களிப்புகள் இருந்தன, ஒன்று முற்றிலும் கணிதம், இரண்டு அடிப்படையில் உடல். கணிதத்தில், தொடர்ச்சியான அல்லது இடைவிடாத ஒரு மாறியின் எந்தவொரு செயல்பாடும் மாறியின் பெருக்கங்களின் தொடர்ச்சியான சைன்களில் விரிவாக்கப்படலாம் என்று ஃபோரியர் கூறினார். கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்த முடிவு சரியானதல்ல என்றாலும், சில இடைவிடாத செயல்பாடுகள் எல்லையற்ற தொடரின் கூட்டுத்தொகை என்று ஃபோரியரின் கவனிப்பு ஒரு திருப்புமுனையாகும். ஃபுரியர் பல்லுறுப்புக்கோவைகளின் உண்மையான வேர்களைத் தீர்மானிப்பதும் கண்டுபிடிப்பதும் ஒரு முடிக்கப்படாத வேலையை விட்டுவிட்டார். இது கிளாட்-லூயிஸ் நேவியர் என்பவரால் திருத்தப்பட்டு 1831ல் வெளியிடப்பட்டது. இந்த படைப்பில் மிகவும் அசல் விஷயங்கள் உள்ளன. குறிப்பாக, 1820ல் வெளியிடப்பட்ட பல்லுறுப்புறுப்பு உண்மையான வேர்கள் பற்றிய ஃபோரியரின் தேற்றம். 1807 மற்றும் 1811 ஆம் ஆண்டுகளில் பிரான்சுவா புடான் தனது தேற்றத்தை சுயாதீனமாக வெளியிட்டார். இது ஃபோரியரின் தேற்றத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது (ஒவ்வொரு தேற்றமும் மற்றொன்றுக்கு இணையானது). 19 ஆம் நூற்றாண்டில், சமன்பாடுகளின் கோட்பாடு குறித்த பாடப்புத்தகங்களில் வழக்கமாக வழங்கப்பட்ட ஒன்றாகும்.
1830 ஆம் ஆண்டில், அவரது உடல்நிலை குறைந்துவிட்டது. ஃபோரியர் ஏற்கனவே எகிப்து மற்றும் கிரெனோபில், இதயத்தின் அனூரிஸத்தின் சில தாக்குதல்களை அனுபவித்திருந்தார். பாரிஸில், அவர் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கான முதன்மைக் காரணத்தை தவறாகப் புரிந்து கொண்டார். மே 16 25, 1830ல் தனது 62வது அகவையில் பாரிஸ், பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1849 ஆம் ஆண்டில் ஆக்செரில் ஒரு வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால் அது இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதங்களுக்காக உருகப்பட்டது. கிரெனோபில் உள்ள ஜோசப் ஃபோரியர் பல்கலைக்கழகம் அவருக்கு பெயரிடப்பட்டது. ஈபிள் கோபுரத்தில் பொறிக்கப்பட்ட 72 பெயர்களில் இவருடைய பெயரையும் பொறித்து சிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு, எண்.57 ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த வாரம் மண்டலம் 4 வார்டு எண்.43 முனிச்சாலை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை திடலில் சிறப்பு தூய்மைப் பணியினை, மேயர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.இந்த சிறப்பு தூய்மைப்பணிகள் ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதி, வேளாளர் தெரு, பிள்ளைமார் தெரு, சோனையார் கோவில் தெரு. ஆரப்பாளையம் மெயின் ரோடு. டி.டி.ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், புது ஜெயில் ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில், சுமார் 86 தூய்மை பணியாளர்கள், 15 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 30 பொறியியல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், இப்பணியில் 4 கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் இயந்திரம், 2 ஆட்டோ கொசு புகைப்பரப்பும் வாகனம், 2 ஜே.சி.பி. இயந்திரம், 2 ரோபோ வாகனம், 1 கழிவுநீர் உறிஞ்சு வாகனம், 2 மண் அள்ளும் இயந்திரங்கள், 4 பேட்டரி வாகனங்கள், 5 தூய்மைப்பணி இலகுரக வாகனங்கள், 2 டிராக்டர்கள்;, 4 டிரை சைக்கிள்கள் உள்ளிட்ட தூய்மை வாகனங்கள் சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்பணியின் மூலம் ஒவ்வொரு வீடு வீடாக மக்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், முக்கிய பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மணல்களை அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடித்தல், வாய்க்கால்கள் தூhர்வாருதல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் சிறப்பு தூய்மைப் பணியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, வாசுகி, சரவணபுவனேஸ்வரி, சுவிதா, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், உதவிப் பொறியாளர் கனி, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், கவிதா உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,தமிழக அரசின் அரசாணை (நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் கடிதப்படி,புத்தர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 16.05.2022 (திங்கட்கிழமை) அன்று இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.மேற்கண்ட நாட்களில், ஆடு, மாடு, கோழி, மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது.மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரப் பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு.
by mohan
written by mohan
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், 897 பயனாளிகளுக்கு 8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில்: “மதுரை மாவட்டத்தில் ஒராண்டில் 1 இலட்சம் பேருக்கு 300 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.தமிழகம் முழுதும் நலத்திட்டங்கள் செயலடுத்தப்பட்டு வருகிறது.அதிமுக அரசு விட்டு சென்ற 6 இலட்சம் கோடியை சமாளித்து நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.தமிழக முதல்வர் எப்போதும் மக்களை மட்டுமே நினைத்து அவர்களுக்காக பாடுபட்டு வருகிறார், பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகைகளை பெற்று தர வேண்டும், அண்ணாமலை மக்களுக்காக ஆக்கபூர்வமான பணிகளை செய்ய வேண்டும், முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார், பொது மக்களிடம் யாரும் லஞ்சம் கேட்டால் உடனடியாக காவல்துறையை அழைக்கலாம் என, முதல்வர் அறிவித்து உள்ளார்.அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒன்றிய அரசு எய்ம்ஸ்க்கு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை, தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது, தமிழக அரசுக்கு கடன்கள் உள்ள நிலையிலும் 1 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.மத்திய தொகுப்பிலிருந்து வர வேண்டிய மின்சாரம் வராத காரணத்தால் தமிழகத்தில் மின் தடை ஏற்படுகிறது” என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பியேர் கியூரி பிறந்த தினம் இன்று (மே 15, 1859).
by mohan
written by mohan
பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859ல் பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது.
ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் (Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின.
அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன், குவார்ட்சு கடிகாரஙக்ள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது. முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று ‘கியூரி விதி’ என்று அழைக்கப்படுகிறது.
மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் கியூரி புள்ளி (Curie Point) எனப்படுகிறது. 1895ல் சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் “கதிரியக்கம்”(Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட ‘படிக மின் அழுத்தமானி’ மிகவும் பயன்பட்டது.
பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம் துகள்களிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல் குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர். கதிரியக்கத் தன்மையுடைய பொருள்களிலிருந்து கதிரியக்கம் வெளியேறுவதையும் முதலில் கண்டு பிடித்தனர். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில் சில நேர் மின்தன்மை உடையன என்றும் , சில எதிர்மின்தன்மை உடையன என்றும், சில நடுநிலை மின்தன்மை உடையன என்றும் கண்டறிந்தனர். இவையே ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் (Alpha, beta and gamma rays) எனப்பட்டன. கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7×10^10 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910ல் ‘கதிரியக்கத் துறை காங்கிரஸ் ‘(Radiology Congress) என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் ஏப்ரல் 20, 1898ல் மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர். மேடம் மேரி கியூரி ஒரு இயற்பியல், வேதியியல் விஞ்ஞானி. உலகத்தின் முதல் பெண் அறிவியலாளர். கதிர்வீச்சு என்ற அறிவியல் கோட்பாட்டில் முக்கிய விளைவுகளை அறிமுகப்படுத்தியவர். அவர் கண்டுபிடித்த ரேடியம் (Radium) புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது. ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதே சமயம் ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கவும் முடியும் எனக் கண்டறிந்தனர். இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். மேலும் ரேடியம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. பாக்டீரியா மற்றும் நுண்ணிய கிருமிகளை அழிக்கக்கூடியது, விதைகள் முளை விடுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது, சில தோல் நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது.
கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல், மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர். 1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம், பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது. . டேவி மெடல், மேட்டூசி மெடல், எலியட் க்ரஸன் பதக்கம் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். ஏப்ரல் 19, 1906ல் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
You must be logged in to post a comment.