Home செய்திகள் செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் இறுதி வார குரூப்-2 மாதிரி தேர்வு; பரிசுகள் வழங்கல்..

செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் இறுதி வார குரூப்-2 மாதிரி தேர்வு; பரிசுகள் வழங்கல்..

by mohan

செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர். மேலும் போட்டித் தேர்வு பயிற்சியின் போது மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் எட்டாவது முறையாக ஆகாஷ் அகாடமியின் உதவியோடு விழுதுகள் அறக்கட்டளையுடன் இணைந்து இறுதிவார குரூப்-2 மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் 140 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இறுதி வார பரிசளிப்பு விழாவில் ஆகாஷ் அகாடமி நிறுவனர் ஆகாஷ் மூர்த்தி,விழுதுகள் சேகர், வருவாய் அலுவலர் முத்துக்குமார், வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் பா சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு செங்கோட்டை நகர்மன்றத் தலைவி ராமலட்சுமி, நகர்மன்றத் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்வின் முடிவில் நூலகர் ராமசாமி பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!