Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சட்ட விரோதமாக மணல் கடத்தல்: டிராக்டரை விரட்டி பிடித்த தாசில்தார்…

சட்ட விரோதமாக மணல் கடத்தல்: டிராக்டரை விரட்டி பிடித்த தாசில்தார்…

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மணல் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதன்படி கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், இன்று அதிகாலை திடீர் ரோந்து பணி சென்றார். அப்போது மணல் ஏற்றி கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த முயன்றார். மணல் கொள்ளையர் டிராக்டரை நிறுத்தாமல் சென்றனர். தாசில்தார் அரசு வாகனம் மூலம் விரட்டிச் சென்று மணல் ஏற்றி சென்ற டிராக்டரை பிடிக்க முயன்றார். டிராக்டரை விட்டு டிரைவர் உள்ளிட்டோர் தப்பிச் சென்றனர். மணலுடன் டிராக்டரை கீழக்கரை தாலுகா அலுவலகம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருப்புல்லாணி போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸார், வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com